என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ராமேசுவரத்தில் இன்று குவிந்த சுற்றுலா பயணிகள்
- தொடர் விடுமுறையையொட்டி ராமேசுவரத்தில் இன்று குவிந்த சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
- புனித தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
ராமேசுவரம்
ெதன்தமிழகத்தின் பிர சித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமாக விளங்கும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்ேதாறும் ஆயி ரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
இங்குள்ள அக்னி தீர்த்தகடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது.
இதன் காரணமாக ராமே சுவரத்தில் நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் காணப் படும். குறிப்பாக அமா வாசை, விடுமுறை நாட்களில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகரித்து காணப்படும்.
இந்த நிலையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமையான இன்று வழக்கத்தைவிட பக்தர்கள், சுற்றுலா பயணி களின் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
அதிகாலை முதலே அக்னி தீர்த்தகடலில் பெண்கள் உள்பட ஏராள மானோர் புனித நீராடி பின்னர் கோவிலில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல் ராமேசு வரத்தில் உள்ள தனுஷ் கோடி, அரிச்சல் முனை, அப்துல்கலாம் நினைவு மண்டபம் போன்ற பகுதி களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்