என் மலர்

    நீங்கள் தேடியது "rameshwaram"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இராமநாதசுவாமி கோவில் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
    • இத்தலத்தில் இராவணனைக் கொன்ற பாவம் தீர இராமன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை.

    இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் இராவணனைக் கொன்ற பாவம் தீர இராமன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை.

    தல வரலாறு

    இராமன் சீதையை மீட்க இராவணனிடம் போர் புரிந்து கொன்றான்.இராவணனை கொன்ற பாவத்தினை நீக்க இராமன் மணல்களால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார். எனவே இராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இந்நகருக்கு இராம ஈஸ்வரம் என்று பெயர் ஆனது. மக்கள் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றனர்.

    கோவில் அமைப்பு

    தென்னிந்திய கோவில்களைப் போலவே இக்கோயிலும் நான்கு பெரிய மதில்களால் சூழப்பட்டது. கிழக்கிலிருந்து மேற்காக 865 அடி நீளமும், வடக்கிலிருந்து தெற்காக 657 அடி நீளமும் கொண்டு, கிழக்கு மற்றும் மேற்காக இரண்டு பெரிய கோபுரங்களைக் கொண்டது. உலகிலேயே நீளமான பிரகாரங்கள் கொண்டுள்ள இக்கோயிலின், கிழக்கு மற்றும் மேற்கு வெளிப் பிரகாரங்களின் நீளம் தனித்தனியே 400 அடிகள், வடக்கு மற்றும் தெற்கு வெளிப்பிரகாரங்களின் நீளம் தனித்தனியே 640 அடிகள் ஆகும். கிழக்கு, தெற்கு உட்பிரகாரங்களின் நீளம் முறையே 224 அடிகள் மற்றும் வடக்கு, தெற்கு உட்பிரகாரங்களின் நீளம் முறையே 352 அடிகளாலும். மொத்த பிரகாரங்களின் நீளம் 3,850 அடி ஆகும். வெளிப்பிரகாரங்களில் மட்டும் 1200 தூண்கள் உள்ளன.

    திருக்கோயிலில் உள்ள 22 தீர்த்தம்:

    வ.எண் தீர்த்தங்கள் விபரம்

    1 மகாலட்சுமி தீர்த்தம்

    2 சாவித்திரி தீர்த்தம்

    3 காயத்திரி தீர்த்தம்

    4 சரஸ்வதி தீர்த்தம்

    5 சங்கு தீர்த்தம்

    6 சக்கர தீர்த்தம்

    7 சேது மாதவர் தீர்த்தம்

    8 நள தீர்த்தம்

    9 நீல தீர்த்தம்

    10 கவய தீர்த்தம்

    11 கவாட்ச தீர்த்தம்

    12 கெந்தமாதன தீர்த்தம்

    13 பிரமஹத்தி விமோசன தீர்த்தம்

    14 கங்கா தீர்த்தம்

    15 யமுனா தீர்த்தம்

    16 கயா தீர்த்தம்

    17 சர்வ தீர்த்தம்

    18 சிவ தீர்த்தம்

    19 சாத்யாமமிர்த தீர்த்தம்

    20 சூரிய தீர்த்தம்

    21 சந்திர தீர்த்தம்

    22 கோடி தீர்த்தம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    30 தீர்த்தங்களை பக்தர்களுக்கு அர்ப்பணிப்பதற்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகிற 12-ந்தேதி ராமேசுவரம் வருகிறார். #TNGovernor #Banwarilalpurohit
    ராமேசுவரம்:

    தென்னிந்தியாவில் புண்ணியஸ்தலமாக கருதப்படும் ராமேசுவரத்துக்கு நாள் தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.

    இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது. மேலும் கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடினால் நன்மை பயக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

    அண்மையில் ராமேசுவரம் தீவு முழுவதும் பல்வேறு இடங்களில் 30 தீர்த்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவைகள் கோவில் நிர்வாகம் சார்பில் புனரமைக்கப்பட்டுள்ளன.

    இதனை பக்தர்களுக்கு அர்ப்பணிப்பதற்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகிற 12-ந்தேதி ராமேசுவரம் வருகிறார். கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் அவர் பின்னர் தீர்த்தங்களை திறத்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.

    கவர்னர் வருகையையொட்டி மாவட்ட போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினர். #TNGovernor #Banwarilalpurohit
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    முகேஷ் அம்பானியின் மகள் இஷா திருமணம் வருகிற 12-ந்தேதி நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழை ராமேசுவரம் கோவில் சன்னதியில் வைத்து சாமி தரிசனம் செய்தனர். #MukeshAmbani
    ராமேசுவரம் :

    ரிலையன்ஸ் நிறுவனங்களின் அதிபரான முகேஷ் அம்பானி, அவருடைய மகன் ஆனந்த் அம்பானி ஆகியோர் சாமி தரிசனம் செய்வதற்காக ராமேசுவரம் கோவிலுக்கு வந்தனர். முன்னதாக குருவாயூர் கோவிலுக்கு சென்ற அவர்கள் அதன்பின்னர் மதுரை வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் முகாமில் வந்திறங்கினர்.

    ராமேசுவரம் கோவிலில் அவர்களை கோவில் இணை ஆணையர் மங்கையற்கரசி, குருக்கள் ரவி பர்வே ஆகியோர் மாலை கொடுத்து வரவேற்றனர். பின்பு விநாயகர் சன்னதியில் 22 புனித தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டு அவர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து சுவாமி சன்னதி-அம்மன் சன்னதிகளில் விசேஷ பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. முகேஷ் அம்பானியின் மகள் இஷா திருமணம் வருகிற 12-ந்தேதி நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழை சன்னதியில் வைத்து சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் அம்மன் சன்னதியில் திருக்கோவில் சார்பில் அவருக்கு ராமலிங்க பிரதிஷ்டை படம், ராமர் படம், பிரசாதம் வழங்கப்பட்டன. பார்வையாளர்கள் புத்தகத்தில் முகேஷ் அம்பானி குறிப்பு எழுதினார்.

    தனது குடும்பத்தினர் பெயர்களில் 5 உறைகளில் தலா ரூ.11,000 வீதம் வைத்து கோவிலுக்கு நன்கொடை வழங்கினார். மேலும் அவர் கோவிலுக்கு என்ன செய்ய வேண்டும்? என்று இணை ஆணையரிடம் கேட்டார். அதற்கு இணை ஆணையர், கோவிலின் 2-ம் பிரகாரத்தின் ஒரு பகுதி திருப்பணி நிறைவடையாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து உடனடியாக அந்த பிரகாரத்தை கட்டித்தருவதாக முகேஷ் அம்பானி தெரிவித்தார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். #MukeshAmbani

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 1200 பேரை இலங்கை கடற்படை விரட்டியடித்தது. #Fishermen #SriLankaNavy

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 1200 மீனவர்கள் 265 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட ரோந்து படகுகளில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர்.

    தமிழக மீனவர்களிடம் “நீங்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள். உடனே இங்கிருந்து செல்லுங்கள்” என்று எச்சரித்தனர்.

    அச்சத்தில் நடுங்கிய மீனவர்கள் படகுகளை திருப்பிக்கொண்டு கரைக்கு திரும்ப ஆயத்தமானார்கள். அப்போது இலங்கை கடற்படையினர் திடீரென்று ராமேசுவரம் மீனவர்களின் மீன்பிடி வலைகளை அறுத் தெறிந்தனர். படகுகளையும் சேதப்படுத்தினர்.

    “வலைகளை அறுத்து எங்கள் பிழைப்பை கெடுக்காதீர்கள்” என்று கெஞ்சினர். ஆனால் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து வலைகளை சேதப்படுத்தினர். பின்னர் உடனே இடத்தை காலி செய்யுங்கள் என்று விரட்டியடித்தனர்.

    ராமேசுவரம் மீனவர்களும் உயிர் பிழைத்தால் போதும் என நினைத்து படகுகளை திருப்பிக் கொண்டு இன்று அதிகாலை கரை திரும்பினர்.

    இலங்கை கடற்படையின் நடவடிக்கையால் தங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விட்டது எனறு மீனவர்கள் தங்கள் வேதனையை தெரிவித்தனர். #Fishermen #SriLankaNavy

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ராமேஷ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடம் பகுதியில் வீட்டுக்கு செப்டிக் டேங்க் கட்ட குழி தோண்டிய மீனவர் வீட்டில், பெட்டி பெட்டியாக பழைய தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    ராமநாதபுரம்:

    ராமேஷ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடம் பகுதியில் இருக்கும் அந்தோனியார் புரத்தைச் சேர்ந்த மீனவர் எடிசன். இன்று பிற்பகலில் தனது வீட்டுக்கு செப்டிக் டேங்க் கட்ட அவர் குழி தோண்டியுள்ளார். 5 அடி தோண்டியதும் பெட்டி பெட்டியாக பழைய தோட்டாக்கள் கிடைத்துள்ளது.

    இதனை அடுத்து, போலீசாருக்கு எடிசன் தகவல் கூறியுள்ளார். இதனை அடுத்து, போலீசார் அங்கு வந்து குழியை மேலும் தோண்டி பழைய தோட்டாக்களை கைப்பற்றினர். மேலும், சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி ஓம் பிரகாஷ் மீனா பார்வையிட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் 4-வது நாளாக பலத்த சூறாவளி வீசுகிறது. இதனால் ரெயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்படுகிறது.
    ராமேசுவரம்:

    வங்க கடல் பகுதியில் தென்மேற்கு பருவக் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக தீவுப்பகுதியான ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் கடந்த 3 நாட்களாக பலத்த சூறாவளி காற்று வீசியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் சாலையோர மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    ஆங்காங்கே மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் ரெயில்களும் பாம்பன் பாலத்தில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. காற்றின் வேகம் குறைந்த பின்னர் மெதுவாக இயக்கப்பட்டன.

    4-வது நாளாக இன்றும் சூறாவளியின் வேகம் அதிகமாக உள்ளது. இதனால் சாலைகள் மணலால் மூடப்பட்டு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் அவர்கள் கடலில் இறங்கக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    இன்றும் பாம்பன் பாலத்தில் குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ரோந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக தவறி கடலில் விழுந்து இறந்த சென்னையை சேர்ந்த கடற்படை வீரரின் உடல் கரை ஒதுங்கியது.
    ராமேசுவரம்:

    இந்திய கடற்படைக்கு சொந்தமான கார்நிக்கோபர் கப்பல் சென்னை முதல் ராமேசுவரம் வரை உள்ள கடற்பகுதியில் ரோந்து சென்று வருவது வழக்கம். இந்த கப்பலில் 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.

    கடந்த 6-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம், தொண்டிக்கும், ஜெகதாபட்டிணத்துக்கும் இடையே உள்ள கடலில் கடற்படை வீரர்கள் ரோந்து சென்றனர்.

    அப்போது சென்னையை சேர்ந்த கடற்படை வீரர் ஜாய் பிரசாத் (வயது 27) என்பவர் எதிர்பாராதவிதமாக தவறி கடலில் விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற வீரர்கள் கடலில் குதித்து அவரை தேடினர். பலன் இல்லை.

    இதையடுத்து கடலோர காவல் படையினர், அப்பகுதி மீனவர்களுடன் சேர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு தொண்டி கடற்கரையில் ஜாய் பிரசாத்தின் உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்பேரில் தொண்டி போலீசார் அங்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடந்து வருகிறது. #Tamilnews
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ராமேசுவரத்தை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றிடும் வகையில் ரூ. 31 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப்பணிகளை செயல்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
    ராமநாதபுரம்:

    ராமேசுவரம், ராமநாத சுவாமி கோவில் கிழக்கு கோபுரவாசல் அருகே உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மேளா நடந்தது. கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கினார். அமைச்சர் மணிகண்டன் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவுப் பொருட்களை வழங்குவது குறித்து உணவு வணிகர்களுக்கும், உணவு விடுதிகள் மற்றும் குளிர்பான கடைகளில் உணவுப்பொருட்களை வாங்கி உட்கொள்ளும் போது விழிப்புடன் கவனிக்க வேண்டிய வி‌ஷயங்கள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதுதொடர்பாக விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களும் பொதுமக்கள் மற்றும் உணவு வணிகர்களுக்கு வழங்கப்பட்டது. மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க ஏதுவாக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் சார்பாக 94440 42322 என்ற “வாட்ஸ்அப்” எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்புகார் எண் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    பாதுகாப்பான உணவு மற்றும் பாதுகாப்பற்ற உணவு மாதிரிகள் குறித்து பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் செயல்முறை விளக்க அரங்குகள் அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு அரங்குகளை அமைச்சர் மணிகண்டன் பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராமேசுவரம் பழைமை வாய்ந்த புனித தலமாகவும், சுற்றுலா பயணிகளை அதிகளவில் ஈர்த்திடும் சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. ராமேசுவரத்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள், அருகே உள்ள தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட பகுதிகளுக்கும் குடும்பத்தினருடன் சென்று மகிழ்ச்சியாக பொழுது போக்கும் சூழ்நிலை இருந்து வருகிறது.

    அதன் அடிப்படையில் ராமேசுவரத்தில் சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்த்திடும் வகையில் மத்திய அரசின் சுவதேஷ் தர்‌ஷன் திட்டத்தின் கீழ் ரூ. 15.86 கோடி மதிப்பில் ராமேசுவரம் நகராட்சியின் மூலம் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.

    குறிப்பாக ஜெ.ஜெ. நகர் பகுதியில் ரூ. 1.51 கோடி மதிப்பில் வாகன நிறுத்துமிடம், சங்கு அணி கலன்கள் கடை அமைத்தல் போன்ற பணிகளும், வாகன நிறுத்துமிட வளாகத்தில் ரூ. 65 லட்சம் மதிப்பில் நவீன கழிப்பறைகளும், அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் ரூ. 37.15 லட்சம் மதிப்பில் எல்.இ.டி. பல்புகளுடன் தெரு மின் கம்பங்கள் மற்றும் ரூ. 35.45 லட்சம் மதிப்பில் நவீன ஒளிரும் தகவல் பலகைகள் அமைத்தல், ரூ. 20.90 லட்சம் மதிப்பில் உடை மாற்றும் அறைகள் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அதேபோல் தனுஷ்கோடி பகுதிகளில் உள்ள புராதன கட்டிடங்களை அதன் பழைமை மாறாமல் புனரமைத்திட ரூ.1.37கோடி மதிப்பிலும், இ-சைக்கிள், இ-ரிக்ஷா, மினி பஸ் என வாகன வசதிகளுக்கு ரூ.95 லட்சம் மதிப்பிலும், எம்.ஆர்.சத்திரம் பகுதியில் ரூ.80 லட்சம் மதிப்பில் மொபைல் டாய்லெட் மற்றும் ரூ.80 லட்சம் மதிப்பில் பொருட்கள் வைப்பு அறை கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.4.37 கோடி மதிப்பில் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

    இது தவிர தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக ரூ.4.52 கோடி மதிப்பில் ஒளி-ஒலி காட்சிகள் அமைத்திடவும், ரூ.6.18 கோடி மதிப்பில் ராமாயண சுற்றுத்தொடர் பணிகள் என மொத்தம் ரூ.30.93 கோடி மதிப்பில் பல்வேறு பணிகளும் செயல்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

    விரைவில் தமிழ்நாடு அரசின் ஒப்புதல் பெற்று, ராமேசுவரத்தை சிறந்த சுற்றுலா தலமாக ஏற்படுத்திடும் வகையில் அனைத்து பணிகளும் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திர போஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    ×