என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

நீரில் கரையாத உப்பு லிங்கம்
- எளிதில் கரையக்கூடிய உப்பில் ஒரு லிங்கம் செய்து அதற்கு அபிஷேகம் செய்தார்.
- உப்பின் சொரசொரப்பினை அந்த லிங்கத்தைப் பார்த்தாலே உணர முடியும்.
ஒரு சமயம் இக்கோவில் லிங்கம் மணலால் செய்யப்பட்ட தல்ல என்றும் அப்படியிருந்தால் அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்று சிலர் வாதம் செய்தனர்.
அப்போது பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர் தண்ணீரில் எளிதில் கரையக்கூடிய உப்பில் ஒரு லிங்கம் செய்து அதற்கு அபிஷேகம் செய்தார்.
அந்த லிங்கம் கரையவில்லை.
அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாத போது சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாததில் ஒன்றும் அதிசயமில்லை என்று நிரூபித்தார்.
ராயர் செய்த உப்பு லிங்கத்தை பிரகாரத்தில் ராமநாதர் சன்னதிக்கு பின்புறம் காணலாம்.
உப்பின் சொரசொரப்பினை அந்த லிங்கத்தைப் பார்த்தாலே உணர முடியும்.
பதஞ்சலி முக்தி தலம்
பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சங்கள் சேர்த்து பின்னப்பட்ட ஒரு பந்தலின் கீழ் இத்தலத்துக்கு நடராஜர் காட்சி தருகிறார்.
இவரது எதிரில் நந்தி இருக்கிறது.
நடராஜர் சன்னதியின் பின்புறம் ஒரு சக்கரம் மட்டும் உள்ளது.
இதற்கு தினமும் பூஜை நடக்கும். யோகக் கலையில் தேர்ச்சி பெறவும் நாகதோஷ நிவர்த்திக்காகவும் இந்த சன்னதியில் நம் கண்ணுக்குத் தெரியாமல் நாக வடிவில் மறைந்திருக்கும் பதஞ்சலி முனிவரிடம் வேண்டிக் கொள்ளலாம்.
பதஞ்சலி முக்தியடைந்த தலம் என்பதால் நம் கண்களுக்கு தெரிய மாட்டார்.