search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜல பிரதட்சனம்
    X

    ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜல பிரதட்சனம்

    • எடப்பாடி முதல்-அமைச்சராக வேண்டி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜல பிரதட்சனம் செய்தார்.
    • தீய சக்தி கூடாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

    மதுரை

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராக வேண்டி ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் சோழவந்தான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.வி. கருப்பையா ஜல பிரதட்சணம் செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், கடை கோடி தொண்டனுக்கும் தொண்டு செய்ய வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம் அ.தி.மு.க. நல்லாட்சி செய்த எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராக மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்பதற்காக இந்த வேண்டுதலை நிறைவேற்றினேன்.

    மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாடு கட்டுப்படுத்த முடியாத விலைவாசி ஏற்றம், கள்ளச்சாராயம், சாதிக் கலவரம், வழிப்பறி, கொலை, கொள்ளை, சட்ட ஒழுங்கு சீர்கேடு என்று ஒட்டுமொத்த தீய சக்தி கூடாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும். எம்.ஜி.ஆர். அம்மா அருளாசியோடும் மீண்டும் முதலமைச்சராக ஆவார் என்றார்.

    Next Story
    ×