என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சேலம் கோட்டை பெருமாள் கோவில் தேரோட்டம்
Byமாலை மலர்20 May 2019 6:39 AM GMT (Updated: 20 May 2019 6:39 AM GMT)
சேலம் கோட்டை பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சேலத்தில் அழகிரிநாதர் என்று அழைக்கப்படும் கோட்டை பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் வைகாசி மாதத்தில் வரும் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டுக்கான வைகாசி விசாக தேர்த்திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் அழகிரிநாதருக்கும், தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது.
தேரோட்டத்தையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன் அழகிரிநாதர் சாமி, ராஜகணபதி கோவில் முன்பு இருக்கும் தேர்நிலையம் பகுதிக்கு ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவமூர்த்திகள் எழுந்தருளினர்.
இதையடுத்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
சேலம் கடைவீதியில் அமைந்துள்ள ராஜகணபதி கோவில் முன்பு தொடங்கிய தேரோட்டம், முதல் அக்ரஹாரம், 2-வது அக்ரஹாரம், பட்டைக்கோவில், சின்னக்கடை வீதி, பெரிய கடைவீதி, கன்னிகா பரமேஸ்வரி கோவில் வழியாக மீண்டும் தேர் நிலையை அடைந்தது. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் நின்று சாமியை தரிசனம் செய்ததுடன் தேர் மீது பூக்கள் தூவினர். தேர்த்திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அதன்படி இந்தாண்டுக்கான வைகாசி விசாக தேர்த்திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் அழகிரிநாதருக்கும், தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது.
தேரோட்டத்தையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன் அழகிரிநாதர் சாமி, ராஜகணபதி கோவில் முன்பு இருக்கும் தேர்நிலையம் பகுதிக்கு ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவமூர்த்திகள் எழுந்தருளினர்.
இதையடுத்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
சேலம் கடைவீதியில் அமைந்துள்ள ராஜகணபதி கோவில் முன்பு தொடங்கிய தேரோட்டம், முதல் அக்ரஹாரம், 2-வது அக்ரஹாரம், பட்டைக்கோவில், சின்னக்கடை வீதி, பெரிய கடைவீதி, கன்னிகா பரமேஸ்வரி கோவில் வழியாக மீண்டும் தேர் நிலையை அடைந்தது. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் நின்று சாமியை தரிசனம் செய்ததுடன் தேர் மீது பூக்கள் தூவினர். தேர்த்திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X