search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Solution"

    • 8-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
    • கருட வாகன வீதிஉலா மார்ச் 4-ந்தேதி நடக்கிறது.

    திருமலை:

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி, அடுத்த மாதம் (மார்ச்) 8-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி நேற்று அதிகாலை மூலவரை துயிலெழுப்பி சுப்ரபாதம், கொலு, பஞ்சாங்க சிரவணம், மாலை அங்குரார்ப்பணம் நடந்தது.

    மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை புண்யாஹவச்சனம், மிருதங்கரஹணம், சேனாதிபதி உற்சவம் நடந்ததும், சிறப்புப்பூஜைகள் செய்து புற்று மண் எடுத்து வந்து முளைப்பாரிக்காக விதைகள் விதைப்பு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிகளில் கோவில் சிறப்பு நிலை துணை அதிகாரி வரலட்சுமி, உதவி அதிகாரி கோபிநாத், கண்காணிப்பாளர் செங்கல்ராயுலு, கோவில் ஆய்வாளர் கிரண்குமார் ரெட்டி மற்றும் கோவில் அர்ச்சகர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 8.40 மணியில் இருந்து 9 மணிக்குள் மீன லக்னத்தில் பாரம்பரிய முறைப்படி பிரம்மோற்சவ விழா `கருட' கொடியேற்றம் நடக்கிறது.

    முன்னதாக இன்று காலை 6.30 மணியில் இருந்து 8.30 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    அதைத்தொடர்ந்து மாலை 5 மணியில் இருந்து 6 மணி வரை ஊஞ்சல் சேவை, இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை பெரிய சேஷ வாகன வீதிஉலா நடக்கிறது. வாகன சேவைகள் தினமும் காலை 8 மணியில் இருந்து 9 மணி வரையிலும், மீண்டும் இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரையிலும் நடக்கிறது.

    வாகனங்களில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் தனித்தும், உபய நாச்சியார்களுடன் சேர்ந்தும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பிரம்மோற்சவ விழாவின் `சிகர' நிகழ்ச்சியாக கருடவாகன வீதிஉலா (கருட சேவை) மார்ச் 4-ந்தேதி நடக்கிறது.

     விழாவையொட்டி கோவில் வளாகம், நான்கு மாடவீதிகள் முழுவதும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரிக்காக கோவில் புஷ்கரணி சுத்தம் செய்து தூய புனிதநீர் நிரப்பப்பட்டுள்ளது.

    • மக்கள் நேர்காணல் முகாம் 22 -ந்தேதி நடைபெற உள்ளது.
    • பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்து தீர்வு பெறலாம்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டத்துக்கு உட்பட்ட செங்கமங்கலம் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நவம்பர் 22 புதன்கிழமை நடைபெற உள்ளது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்தாவது:-

    பேராவூரணி வட்டம் ஆவணம் சரகம் செங்கம ங்கலம் கிராமத்தில் நவம்பர் 22ஆம் தேதி புதன்கிழமை நடத்தப்பட உள்ள மக்கள் நேர்காணல் முகாமில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது மனுக்களை அளித்து தீர்வு பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • எலிகள் வீட்டுக்குள் நுழைந்துவிட்டால் மிகப்பெரிய தொல்லையாக இருக்கும்.
    • எலி அதிகமாகிவிட்டாலே கிட்சன் நாசமாகிவிடும்.

    எலிகள் வீட்டுக்குள் நுழைந்துவிட்டால் மிகப்பெரிய தொல்லையாக இருக்கும். எலி அதிகமாகிவிட்டாலே கிட்சன் நாசமாகிவிடும். எலி, கரப்பான் பூச்சி போன்றவை வீட்டுக்குள் நுழைந்து விட்டாலே வீடு அசுத்தமாவதோடு பல்வேறு கொடிய நோய்க்கிருமிகளையும் அது பரப்பி விடும். குறிப்பாக எலிகள் பிளேக் வைரசை பரப்பும் ஆபத்து அதிகம். அதனால் முடிந்தவரை வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதும் வீட்டில் உள்ள எலிகளை உடனடியாக விரட்டுவதும் மிக அவசியம்.

    வேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் பீநட் பட்டர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் மிகப் பிடிக்கும். அதேபோல தான் பீநட் பட்டர் உங்களுடைய வீட்டில் உள்ள எலிகளுக்கும் பிடிக்கும்.

    பொதுவாக எலிகளை பிடிக்க வீட்டில் எலிப்பொறியில் தக்காளி அல்லது தேங்காய் துண்டு, கருவாடு ஆகியவற்றை வைப்பதுண்டு. ஆனால் எலிப்பொறியில் சிறிதளவு பீநட் பட்டர் தடவி, அதன் அருகிலும் சிறிது பீநட் பட்டரை உள்ளுக்குள் வைத்துவிடுங்கள். பீநட் பட்டரை சாப்பிட முயற்சிக்கும்போது அதில் உள்ள பிசுபிசுப்புத் தன்மையால் சிறிது நேரம் நன்கு அவற்றின் கால்கள் மாட்டிக் கொள்ளும். அடுத்த நாள் காலையில் எலிப்பொறியில் நிச்சயம் எலி மாட்டியிருக்கும்.

    எப்படி விரட்டுவது?

    புதினா

    புதினா இலைகள் எலிகளுக்கு எதிரி என்றே சொல்லலாம். புதினா இலைகளில் இருந்து வரும் நல்ல நறுமணம் எல்லோருக்கும் பிடிக்கும். எலி அடிக்கடி வந்து போகும் இடங்களில் ஃபிரஷ்ஷான புதினா இலைகளைக் கசக்கி போட்டு வைக்கலாம். அதேபோல புதினா சேர்க்கப்பட்ட டூத்பேஸ்ட்டுகள் கடைகளில் நிறைய கிடைக்கின்றன. அவற்றை வாங்கி, எலி அடிக்கடி வந்து போகும் இடங்களில் சிறிய சிறிய உருண்டைகளாக தடவி வைக்கலாம். புதினாவின் வாசனையில் எலி மயங்கிவிடும்.

    பிரிஞ்சுஇலை

    பிரியாணி இலை என்று அழைக்கப்படுவது தான் பிரிஞ்சி இலை. இதில் நல்ல வாசனை இருக்கும். பிரியாணி, மாமிச உணவுகள் செய்யும்போது வாசனைக்காகவும் ஜீரண சக்திக்காகவும் சேர்த்துக் கொள்ளப்படும் வாசனை மிகுந்த இலை தான் இந்த பிரிஞ்சி இலை.

    இந்த இலைகளில் இருந்து வரும் நறுமணம் எலிகளுக்குப் பிடிக்காது. பிரிஞ்சி இலையை சின்ன சின்ன துண்டுகளாக உடைத்தோ அல்லது கொரகொரப்பான பொடியாகவோ செய்து எலி வரும் இடங்களில் ஒரு பேப்பரில் அல்லது தட்டில் போட்டு வைத்துவிட வேண்டும். எலிகள் அந்த இலைகளை நுகரும்போது மயங்கிவிடும். இதனால் எலி மறுபடியும் வராது.

    கம்பி வலை

    பொதுவாக வீட்டில் ஏதேனும் சில வழிகளை எலிகள் நுழைவதற்காகத் தேர்வு செய்து வைத்திருக்கும். அந்த வழித்தடங்களைக் கண்டு பிடித்துவிட்டால் போதும் நீங்கள் உங்களுக்கு சவால் விடும் எலிகளை மிஞ்சி விடலாம். மெல்லிய இரும்பு அல்லது எஃகினால் ஆன கம்பி வலைகள் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி வீட்டில் எலிகள் நுழையும் ஓட்டை, வாஷ்பேஷன் டியூப் போன்ற இடங்களில் அடைத்து வைக்க வேண்டும். எலிகள் உள்ளே நுழையாமல் இருக்கும். சில சமயங்களில் நுழைய முயற்சி செய்யும் போது எலிகளின் கால்கள் வலைக்குள் மாட்டிக் கொள்ளும்.

    பேக்கிங் சோடா

    பேக்கிங் சோடா எல்லோருடைய வீடுகளிலும் வைத்திருப்பது மிகவும் நல்லது. இது பாத்திரங்கள் சுத்தம் செய்வது தொடங்கி, வீட்டை சுத்தப்படுத்த, கறைகளை நீக்க, சருமத்துக்கு பயன்படுத்த என பல்வேறு விஷயங்களுக்குப் பயன்படுகின்றன. எலிகளை விரட்டுவதிலும் பேக்கிங் சோடாவிற்கு மிக முக்கியப் பங்குண்டு. எலிகள் அடிக்கடி வரும் இடங்களில் பேக்கிங் சோடா கரைசலை தெளித்து விட வேண்டும். பேக்கிங் சோடாவில் சிறிது வினிகர் சேர்த்தும் தெளிக்கலாம். அது இன்னும் விரைவான பலன்களைத் தரும்.

    • குளிச்சபட்டு ஊராட்சியில் கிராம சபா கூட்டம் நடந்தது.
    • விரைவாக மனுக்களுக்கு தீர்வு காணப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம் குளிச்சபட்டு ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

    குளிச்சபட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    இதில் ஊராட்சியில் உள்ள வரவு செலவுகள் சமர்ப்பிக்கப்பட்டன.

    பின்னர் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

    விரைவாக மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என்று பொதுமக்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலர் வாசு, ஊரக வளர்ச்சி துறை உதவி பொறியாளர் மணிகண்டன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வனிதா நடராஜன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகானந்தம் ,ஊரக வளர்ச்சித் துறை திட்ட பணியாளர் மாலா, அங்கன்வாடி விற்பனை யாளர் செல்லத்துரை, ஊராட்சி செயலாளர் சசிகுமார், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவில் நிலப்பிரச்சினை தொடர்பான சிறப்பு முகாமில் 13 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது
    • சிறப்பு முகாம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவில் வசிக்கும் பொதுமக்களின் நிலப்பிரச்சினை தொடர்பான மனுக்களை விசாரிக்க சிறப்பு முகாம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. முகாமில் ஆலத்தூர் தாசில்தார் முத்துக்குமரன், பெரம்பலூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அபுபக்கர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் நல்லம்மாள், ராமர் மற்றும் ஏட்டு பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் நிலப்பிரச்சினை தொடர்பாக பெறப்பட்ட மொத்தம் 13 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    • கும்பகோணம் நீதிம ன்றத்தில் இரண்டு அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
    • மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு வழக்குகளுக்கு சட்டப்படியான உடனடி தீர்வு காணப்பட்டது.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜெசிந்தாமார்ட்டின் ஆணைப்படி, செயலாளரும் சார்பு நீதிபதியுமான இந்திராகாந்தி, தஞ்சை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவரும் கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவருமான சண்முகப்பிரியா ஆகியோ ர்களின் அறிவுரைகளின் படி கும்பகோணம், திருவிடைமருதூர் நீதிமன்றங்களில் இந்தியா முழுவதும் ஒரே நாள் ஒரே நேரம் நாடுதழுவிய நேசனல் லோக் அதாலத் என்றழைக்கப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    கும்பகோணம் நீதிமன்றத்தில் இரண்டு அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதில் முதல் அமர்வில் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்சி வசக்திவேல்கண்ணன் தலைமையில், வட்ட சட்டப் பணிகள் குழு வழக்கறிஞர்க ள்மோகன்ராஜ், சசிகலா மற்றும் இரண்டாவது அமர்வில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி புவியரசு தலைமையில், வட்ட சட்ட பணிகள் குழு வழக்கறிஞர்க ள்செந்தில்குமார், மங்களம்,

    அதேபோல் திருவிடை மருதூரில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமர்வில் மாவட்ட குற்றவியல் மற்றும் நீதித்துறை நடுவர் சிவபழனி, வட்ட சட்டப் பணிகள் குழு வழக்கறிஞர்கள் மதவன், பூமொழி ஆகியோரது பங்கேற்பில் மொத்தம் 1948 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

    இதில் பல்வேறு வழக்குகள் சம்பந்தமாக இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி சமரசமாக முடிக்க பரிசீலனைக்கு காசோலை வழக்குகள், குடும்பநல வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், வாய் தகராறு வழக்குகள், சிவில், சிறு குற்ற வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு 232 வழக்குகளுக்கு சட்டப்படியான உடனடி தீர்வு காணப்பட்டது.

    அதில் 3 காசோலை மோசடி வழக்கில் மூலம் ரூ. 16,49,841, 24 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள் மூலம் ரூ.92,83,000, 44 கடன் வசூல் வழக்கின் மூலம் ரூ.70,91,000, 189 சிறு குற்ற வழக்குகள் மூலம் ரூ.18,52,300/-இதர 1 வழக்குகள் மூலம் ரூ.1,94,000 என 232 வழக்குகள் மூலம் மொத்தம் ரூ.1,11,26,841 வசூல் ஆகியது. இதற்கான ஏற்பாடுகளை கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் இளநிலை உதவியாளர்ராஜேஷ்குமார், தன்னார்வ சட்ட பணியா ளர்கள்ரா ஜேந்திரன், பாஸ்கரன் மற்றும் நீதிமன்ற அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • மாவட்டம் முழுவதும் மொத்தம் 17 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டது.
    • திருவள்ளூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள 6351 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு 3070 வழக்குகள் முடிக்கப்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக திருவள்ளூர், பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, அம்பத்தூர். திருவொற்றியூர். பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப் பூண்டி மற்றும் மாதவரம் தாலுக்கா நீதிமன்றங்களில் லோக் அதாலத் நடைபெற்றது.

    இதில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள உரிமை யியல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், காசோலை வழக்குகள் குற்றவியல் வழக்குகள் மற்றும் நிலுவையில் அல்லாத வங்கி வழக்குகள் சமரசம் பேசி முடிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 17 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டது.

    திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை முதன்மை மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான எஸ்.செல்வ சுந்தரி பங்கேற்று தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மகளிர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி சுபத்திரா தேவி, மோட்டார் வாகன விபத்து சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரஸ்வதி, குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி வித்யா, தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆர்.வேல்ராஜ், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் மூத்த உரிமையியல் நீதிபதி பி.வி.சாண்டில்யன், மோட்டார் வாகன விபத்து சார்பு நீதிபதி இ.எம்.கே. யஸ்வந்த்ராவ் இங்கர்சால், முதன்மை மாவட்ட முன்சீப் நீதிபதி பிரியா, கூடுதல் மாவட்ட முன்சீப் ஸ்டான்லி, குற்றவியல் நீதிமன்ற நீதித் துறை நடுவர்கள் முகாம்பிகை, செல்வஅரசி மற்றும் பவித்ரா மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ராமலிங்கம், டேனியல் அரிதாஸ் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள 6351 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு 3070 வழக்குகள் முடிக்கப்பட்டது. ரூ.19 கோடியே 89 லட்சத்து 37 ஆயிரத்து 829 தீர்வு காணப்பட்டது. நிலுவையில் அல்லாத 102 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு 102 வழக்குகளும் முடிக்கப்பட்டு ரூ.75 லட்சத்து 45 ஆயிரத்து 431 தீர்வு காணப்பட்டது. 6453 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு 3172 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.20 கோடியே 64 லட்சத்து 83 ஆயிரத்து 260 இழப்பீடு தீர்வு காணப்பட்டது.

    பொன்னேரி முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற லோக்அதாலத்தில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி கிருஷ்ணசாமி, முதன்மை சார்பு நீதிபதி பிரேமாவதி கூடுதல் சார்பு நீதிபதி பாஸ்கரன் மாவட்ட உரிமையியல் நீதிபதி வண்ணமலர் முன்னிலை வகித்தனர். இதில் நிலுவையில் இருந்த 512 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ. 1 கோடியே 83 லட்சத்து 21ஆயிரத்து156 இழப்பீடு வழங்கபட்டன. பொன்னேரி பார் அசோசியேசன் தலைவர் தேவேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்த மையமானது வட்டார அளவிலான கூட்டமைப்பு மூலம் செயல்படுத்தப்படுகிறது.
    • பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பிரத்தியேகமான அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தேசிய ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் ,பட்டுக்கோட்டை ஆகிய இரண்டு வட்டாரங்களில் பாலின வள மையம் ,வானவில் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மையமானது வட்டார அளவிலான கூட்டமைப்பு மூலம் செயல்படுத்தப்படுகிறது. குடும்ப வன்முறை மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமை உள்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பிரத்தியேகமான அமைப்பாக உருவாக்கப்பட்டு ள்ளது.

    இந்த மையம் தஞ்சாவூர் வட்டாரத்தில் வட்டார சேவை மையத்திலும், பட்டுக்கோட்டை வட்டா ரத்தில் ஆலடிக்கு முலை கிராம மையத்திலும் செயல்பட்டு வருகிறது.

    இந்தப் பாலின சேவை மையத்தி னை பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் தொடர்புடைய வட்டார இயக்க மேலாளர்களை தொடர்பு கொண்டு பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு தஞ்சாவூர் வட்டார பாலின சேவை மையத்தை 8754990178 என்ற எண்ணிலும், பட்டுக்கோட்டை வட்டார சேவை மையத்தை 6369849825 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2-வது அமா்வில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
    • மொத்தம் 2013 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு, 261 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மாவட்டத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீா்வு காண்பதற்காகத் தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதி ஜெசிந்தா மாா்ட்டின் தலைமை வகித்தாா்.

    இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி மலா்விழி, குற்றவியல் நீதித்துறை நடுவா் இளவரசி, வழக்குரைஞா் வித்யா ஆகியோா் கொண்ட முதலாவது அமா்வில் உரிமையியல், குற்றவியல், குடும்ப நல வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

    முதன்மை சாா்பு நீதிபதி நாகராஜன், குற்றவியல் நீதித் துறை நடுவா் (விரைவு நீதிமன்றம்) முருகேசன், வழக்குரைஞா் தம்பிதுரை ஆகியோா் கொண்ட இரண்டாவது அமா்வில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

    இவற்றுடன் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவையாறு ஆகிய வட்டச் சட்டப் பணிகள் குழுவின் அமா்வுகளிலும் விசாரணை நடத்தப்பட்டது. இவற்றின் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 2013 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 261 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, ரூ. 5 கோடியே 72 லட்சத்து 65 ஆயிரத்து 781 அளவுக்கு இழப்பீடு மற்றும் தீா்வு தொகையாக வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான இந்திராகாந்தி, ஆணைக் குழு நிா்வாக அலுவலா் சந்தோஷ்குமாா் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    • வருகிற 31-ந்தேதி குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற உள்ளது.
    • 2-ந்தேதி தீர்த்தவாரியும், பஞ்சமூர்த்திகள் வீதியுலா காட்சியும் நடைபெற உள்ளது.

    மெலட்டூர்:

    பாபநாசம் அருகே உள்ள திருக்கருகாவூர் முல்லைவ னநாதர் உடனுறை கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு தினமும் சுவாமி- அம்பாள் காலை, இரவு வேலைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா நடைபெறும்.

    முதல் நாளில் கொடியேற்றம் நடைபெற்று, இரவு வக்கீல் அரிய அரசபூபதியின் ஆன்மீக சொற்பொழிவும், அதனைத் தொடர்ந்து சுவாமி- அம்பாள் வெள்ளி பல்லக்கில் வீதிஉலா காட்சியும் நடைபெற்றது.

    2-வது நாள் காலை வெள்ளி பல்லக்கிலும், இரவு சூரிய பிரபையில் சுவாமி- அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

    இன்று (26-ந்தேதி) காலை வெள்ளி பல்லக்கிலும், இரவு பூத வாகனத்தில் சுவாமி- அம்பாள் வீதியுலாவும், தொடர்ந்து சிவசக்தி கலைக்கூட மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    நாளை (27-ந்தேதி) சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், 28-ந்தேதி ஓலை சப்பரத்தில் சுவாமி வீதியுலாவும், 31-ந்தேதி குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலாவும் நடைபெற உள்ளது.

    வருகிற ஜூன் (1-ந்தேதி) தேரோட்டமும், 2-ந்தேதி தீர்த்தவாரியும் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா காட்சியும் நடைபெற உள்ளது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஆசைத்தம்பி மேற்பார்வை யில் கோவில் பணியாளர்கள், கிராமமக்கள் செய்து வருகின்றனர்.

    • பொது வினியோக திட்ட முகாமில் 30 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது
    • முகாமிற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் சிவசங்கரன் தலைமை தாங்கினார்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள தழுதாழையில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் பொது வினியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் சிவசங்கரன் தலைமை தாங்கினார். வேப்பந்தட்டை வட்ட வழங்கல் அலுவலர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். முகாமில் ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், புகைப்படம் மாற்றம் மற்றும் செல்போன் எண் இணைப்பு உள்ளிட்ட தேவைகளுக்கு பொதுமக்கள் 30 பேர் மனு கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. முடிவில் கிராம நிர்வாக அலுவலர் ரவி நன்றி கூறினார்.

    • சொத்து வழக்கு, குடும்ப வழக்கு, உள்ளிட்ட 192 வழக்குகள் எடுக்கப்பட்டு அதில்144 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
    • வழ க்கறிஞர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் பல்லடத்தில் மக்கள் நீதிமன்றம் பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு ) மேகலா மைதிலி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சித்ரா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, காசோலை வழக்கு, சொத்து வழக்கு, குடும்ப வழக்கு, உள்ளிட்ட 192 வழக்குகள் எடுக்கப்பட்டு அதில்144 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    தீர்வு தொகையாக ரூ.2,34,08,632 வழங்கப்பட்டது. இதில் வழ க்கறிஞர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×