என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குளித்தலை மக்கள் நீதிமன்றத்தில் 760 வழக்குகளுக்கு தீர்வு
- குளித்தலை மக்கள் நீதிமன்றத்தில் 760 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
- சிவில் வழக்குகள். வங்கி கடன் வழக்குகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரணைக்கு வந்தன.
குளித்தலை:
குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் குளித்தலை வட்ட சட்டம் பணிகள் குழு நடத்தும் தேசிய மக்கள் நீதிமன்றமம் நீதிபதிகள் சார்பு நீதிபதி சண்முககனி, மாவட்ட உரிமையியல் நீதிபதி, பாலமுருகன், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1 நீதிபதி தினேஷ்குமார், குற்றவியல் நடுவர் எண் 2 நீதிபதி பிரகதீஸ்வரன் ஆகியோர்கள் தலைமையில் நடைபெற்றது.தேசிய மக்கள் நீதிமன்றத்தில் குடும்ப நலம், வாகன விபத்துக்கள் இழப்பீடு வழக்கு, காசோலை மோசடி வழக்குகள், இடப் பிரச்சனை தொடர்பான சிவில் வழக்குகள். வங்கி கடன் வழக்குகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு சமரசம் செய்ததில் 760 வழக்கு களுக்கு சம்பந்தப்ப ட்டவர்களிடம் சமரசம் பேசி தீர்வு காணப்பட்டு ரூ.5.63.70.551 தொகையாக முடிக்க ப்பட்டது.இதில் அரசு வழக்கறி ஞர்கள் சாகுல்ஹமீது, நீலமேகம் மற்றும் குழு வழக்கறிஞர் பாலசு ப்பிரமணியன், மோட்டார் வாகன விபத்து வழக்கறிஞர் நிகில்அரவிந்த், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி டிவிசனல் மேனேஜர் ராஜேந்திரன், கிளை மேலாளர் பாலசு ப்ரமணியன் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.குளித்தலை ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் குளித்தலை வட்ட சட்டம் பணிகள் குழு நடத்தும் தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பு நீதிபதி சண்முக கனி விபத்தில் காயமடைந்த நபருக்கு இழப்பீடு வழங்கினார்,
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்