என் மலர்

    நீங்கள் தேடியது "Pujas"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த 13-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின.
    • மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே நாங்கூரில் மணி மாட கோவில் என்று அழைக்கப்படுகின்ற நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    இந்தக் கோயில் 108 வைணவ திவ்ய தோஷ கோயில்களை ஒன்றாகும்.

    ஆண்டுதோறும் நாங்கூர் பகுதியை சுற்றியுள்ள 11 பெருமாள் கோவில் இந்தக் கோவிலில் தான் எழுந்தருளி கருட சேவை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த பெருமாளை பிரம்மா, இந்திரன் உள்ளிட்ட ஞானிகள் வழிபட்டதாகவும், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், பூதத்தா ழ்வார் உள்ளிட்ட பல்வேறு ஆழ்வார்கள் இந்த பெரு மாளை பற்றி பாசுரங்கள் இயற்றியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன.

    இந்நிலையில் 19 ஆண்டுகளுக்குப் பின்னர் கோவிலின் ராஜகோபுரம், சன்னதிகள், சுற்றுச் சுவர் உள்ளிட்டவைகள் திருப்பணி செய்யப்பட்டு கடந்த 13ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின.

    நேற்று காலை 7வது கால யாக பூஜை நடந்தது. பின்னர் மகாபூர்ணா வதி செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது.

    இதைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய யாக குடங்கள் ஊர்வலமாக கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    பின்னர் கலசங்களுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதனைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் ராஜகோபுரம், சன்னதிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது.

    அப்போது அங்கே கூடி இருந்த ஆயிரக்கண க்கான பக்தர்கள் நாராயணா நாராயணா என சரண கோஷமிட்டனர்.

    இதை அடுத்து மூலவருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    இதில் மயிலாடுதுறை மாவட்ட எஸ் பி மீனா, தனி துணை ஆட்சியர் கண்மணி , கோட்டாட்சியர் அர்ச்சனா (சீர்காழி), யுரேகா (மயிலாடுதுறை), தாசில்தார் செந்தில்குமார், கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சாமிநாதன் மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், மாவட்ட திமுக நெசவாளர் அணி துணை அமைப்பாளர் பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பூர்ணாஹூதி நடைபெற்று, யாகசாலை பூஜைகள் நிறைவடைந்தது.
    • குடமுழுக்கை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறுகிறது.

    நாகப்பட்டினம்:

    வேளாங்கண்ணி தலையாமழை கீராந்தியில் சிங்கமகா காளியம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கு நேற்று நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு அனுஞக்ஞை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, கோபூஜை, தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.

    அதனைத் தொடர்ந்து யாகசாலை பூஜைகளுடன் பூர்ணாஹூதி தீபாரத னைகள் நடைப்பெற்றது.

    தொடர்ந்து நான்காம் கால யாகசாலை பூஜை முடிவுற்று மஹா பூர்ணாஹூதி நடைபெற்று யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து மங்கல வாத்தியங்களில் மல்லாரி ராகம் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.

    சிவாச்சாரியார் கடங்கங்களை சுமந்து வந்து வேத மந்திரங்கள் முழங்க ஆலய கலசத்தை கருட பகவான் சுற்றிவர சிங்கமகா காளியம்மன் ஆலய கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைப்பெற்றது.

    பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கு கலச நீர் கொண்டு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடை பெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    குடமுழுக்கை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காலை 7 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி- விஸ்வரூபம், காலசந்தி பூஜைகள் ஆகியவை நடந்தது.
    • தொடர்ந்து, மாலை திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.

    திருவாரூர்:

    நீடாமங்கலம் லெட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் (கிருஷ்ணன் கோவில்) குடமுழுக்கு நடைபெற்றது.

    இக்கோவிலில் குடமுழுக்கு நடந்து 60 வருடங்கள் கடந்த நிலையில் அறநிலையத்துறையினர் கோவிலில் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்த முடிவு செய்தனர்.

    இதன்படி கோவில் திருப்பணி வேலைகள் நிறைவடைந்து யாகசாலை பூஜைகள் தொடங்கியது. நேற்று காலை 7 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி-விஸ்வரூபம், காலசந்தி பூஜை, நித்யஹோமம், மூலமந்திரஹோமங்கள் கடம் புறப்பாடு நடந்தது.

    தொடர்ந்து காலை 9.30 மணிக்கு விமான குடமுழுக்கு நடைபெற்றது. 9.45 மணிக்கு மூலஸ்தான தீபாராதனை நடந்தது. மாலை திருக்கல்யாணம் நடைபெற்றது.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குடமுழுக்கு விழா கடந்த 29-ந்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
    • இன்று காலை 2-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பூக்கார த்தெருவில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுப்பிரமணியசாமி, வள்ளி, தேவசேனையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    கடந்த ஆண்டு கோவிலில் குடமுழுக்கு பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் முடிந்து விட்டதால் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாளை மறுநாள் ( ஞாயிற்றுக்கிழமை ) குடமுழுக்கு நடைபெற உள்ளது.

    இதையொட்டி குடமுழுக்கு விழா கடந்த 29-ந்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

    இதையொட்டி நேற்று தஞ்சை சிவகங்கை பூங்காவில் இருந்து புனித நீர் யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மேளதாளங்கள் முழங்க முளைப்பாரி கோவிலுக்கு எடுத்து வந்தனர்.

    தொடர்ந்து நேற்று இரவு முதல்கால யாகாசாலை பூஜை தொடங்கியது.

    இன்று காலை 8.30 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜையும், நாளை காலை 8.45 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 6.30 மணிக்கு 5-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெறுகிறது.

    நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜையும், 9.30 மணிக்கு கடம் புறப்பாடும் 10.15 மணிக்கு குடமுழுக்கு விழாவும் நடைபெறுகிறது. 11.45 மணிக்கு மகா அபிசேஷகமும், தீபாராதனையும் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு மயில் வாகனத்தில் சாமி வீதி உலாவும் நடைபெறுகிறது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோவிலில் வருகிற செப்டம்பர் மாதம் 3-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • தொடர்ந்து, கஜ பூஜை, கோ பூஜை, குதிரை பூஜை செய்யப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ அபய பிரதாம்பிகை சமேத ஸ்ரீ மாயூரநாத சுவாமி பெரிய திருக்கோயிலில் வருகின்ற செப்டம்பர் மாதம் 3-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு திருக்கோயில் திருப்பணி பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதற்கு முன்பாக கணபதி பூஜை செய்து பாராம்பரியத்துடன் தெற்கு கோபுர வாசல் திறப்பு விழா 24 -வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் திறந்து வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து கஜ பூஜை, கோ பூஜை, குதிரை பூஜை செய்து அவ்வழியே நுழைய விட்டு கோயிலை அடைந்தது.

    இந்நிகழ்ச்சியில் பாடசாலை தலைமை குருக்கள் சிவாச்சாரியார் சுவாமிநாதன், ஆதினம் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன், காசாளர்வெங்கடேசன், விழா குழுவின் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார்உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள், ஆண்கள் பெண்கள் என திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று ஆடிப்பெருக்கையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
    • புதுமண தம்பதிகள் ஏராளமானோர் பண்ணாரி அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் முழுவதும் ஆடிப்பெரு க்கையொட்டி இன்று அதி காலை முதலே கோவி ல்களில் பக்தர்கள், பொது மக்கள் வழிபட குவிந்த வண்ணம் இருந்தனர். ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் இன்று காலை முதலே நடை திறக்க ப்பட்டு பண்ணாரி அம்ம னுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை செய்ய ப்பட்டது. புதுமண தம்பதி கள் ஏராளமானோர் பண் ணாரி அம்மனை தரிசித்து வழிபட்டனர். பண்ணாரி அம்மன் சிறப்பு அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதைப்போல் கோபி செட்டி பாளையத்தில் உள்ள புகழ் பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் பொதுமக்கள் ஏராளமானோர் சென்று அம்மனை வழிபட்டனர். இதே போல் கோபி சாரதா மாரியம்மன் கோவில், முடச்சூர் பால மாரியம்மன் கோவில் மற்றும் முருகன் கோயில்களில் ஆடிப்பெ ருக்கை ஒட்டி சிறப்பு பூஜை கள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதைப்போல் அந்தியூ ரில் பிரசித்தி பெற்ற பத்திர காளி அம்மன் கோவிலில் காலை முதலே நடை திறக்க ப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அந்தியூர் பேட்டை பெருமாள் செல் ஈஸ்வரர் கோவில், வரத ராஜ பெருமாள் கோவி லிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஈரோடு மாநகரில் மிகவும் புகழ் பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பெண்கள் நீண்ட வரிசை யில் நின்று பெரிய மாரிய ம்மன் தரிசித்து சென்றனர்.

    இதைப்போல் சின்ன மாரியம்மன், காரை வாய் க்கால் மாரியம்மன், கொங் காலம்மன் வீரப்பன்சத்தி ரம் மாரியம்மன் போன்ற பல்வேறு கோயில்களிலும் சிறப்பு பூஜைக நடைபெ ற்றது. ஆடிப்பெருக்கையொ ட்டி மாவட்டம் முழுவதும் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வேண்டுதலை நிறைவேற்ற ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு அம்மனுக்கு படையல் போட்டு வேண்டிக்கொண்டனர்.
    • அம்மன் ஊஞ்சலில் அமர்ந்து, உடுக்கை, பம்பை சத்தத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டியில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை யொட்டி ஊஞ்சல் உற்சவ திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலை அம்மனுக்கும் மற்றும் பெரியாயி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து மாலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு அம்மனுக்கு படையல் போட்டு வேண்டிக்கொண்டனர்.

    அதைத் தொடர்ந்து இரவு 11 மணிக்கு அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சலில் அமர்ந்து, உடுக்கை, பம்பை சத்தத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமானவர்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்பு பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியை விக்கிரவாண்டி பருவத ராஜகுலத்தார் மற்றும், கோயில் தர்மகர்த்தாக்கள், பொதுமக்கள் முன்னின்று செய்திருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • அம்மனுக்கு கஞ்சி வார்த்தல், பூச்சொரிதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஆற்றங்கரை தெருவில் செல்வமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.விழாவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    இதை தொடர்ந்து அம்மனுக்கு கஞ்சி வார்த்தல், அன்னதானமும்,பால், பன்னீர்,இளநீர், சந்தனம்,குங்குமம், மாப்பொடி ,திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகமும், பூச்சொரிதல் நடைபெற்றது.

    தீபாரதனையும் காண்பிக்கப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியான தீமிதி மற்றும் சாமி வீதியுலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முயலகனுடன் கூடிய நடராஜரின் கால் பகுதி மட்டும் உள்ள சிலையும் கண்டெடுக்கப்பட்டது.
    • சம்பவ இடத்துக்கு வந்து சிலைகளுக்கு பூஜை செய்து பொதுமக்கள் வழிபட்டனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் கீழ் கோபிநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

    மேலும் கோவில் தொடர்பான எல்லையை வரையறுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளின் போது அங்குள்ள புதர்களு க்கிடையே கலைநயத்துடன் கூடிய தவ்வை, பிரம்மி, வராஹி உள்ளிட்ட சப்த கன்னிகள் சிலையும், முயலகனுடன் கூடிய நடராஜரின் கால் பகுதி மட்டும் உள்ள 8 சிலைகள் இருப்பது தெரிய வந்தது.

    இந்த சிலைகளை மீட்டெடுத்த கோவில் பணியாளர்கள் சுத்தப்படுத்தி அருகில் இருந்த பகுதியில் சிலைகளை வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து சிலைகளுக்கு பூஜை செய்து வழிபட்டனர். சிலை கண்டெடுக்கப்பட்ட இடம் கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடம் என்பதால் கிராம மக்கள் கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் மற்றும் அலுவலர்கள் சிலைகள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் அமைந்துள்ள பாலமுருகன் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி மூலவர், உற்சவர் பாலமுருகனுக்கு நேற்று காலை பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கொண்டு வந்த பாலால் அபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பாலமுருகனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் பாலமுருகனை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பெரம்பலூர் அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பாலமுருகன் சன்னதியில் வைகாசி விசாகத்தையொட்டி அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு வழிபாடும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் உள்ள தர்மசம்வர்த்தினி சமேத பஞ்சநதீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி சுப்ரமணியர் சன்னதியில் சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    வைகாசி விசாகத்தையொட்டி ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளத்தில் மலை மீது அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி கோவிலிலும், வேப்பந்தட்டை தாலுகா வாலிகண்டபுரத்தில் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வாலாம்பிகை உடனுறை வாலீஸ்வரர் கோவிலில் உள்ள தண்டாயுதபாணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி விசாக விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo