search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvenkadu"

    • பவித்திர உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • முக்கிய திருவிழாவான கருட சேவை நடந்தது.

    திருவெண்காடு:

    திருவெண்காடு அருகே நாங்கூர் கீழச்சாலையில் மாதவப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் பவித்திர உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய திருவிழாவான கருட சேவை நடந்தது.

    இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு, கருட வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் கோவில் ஆதீன கர்த்தர் சீனிவாசா பட்டாச்சாரியார், அடியார்கள் திருகூட்டத் தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • காசிக்கு இணையான 6 கோவில்களில் முதன்மையான கோவில்.
    • தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் காசிக்கு இணையான 6 கோவில்களில் முதன்மையான திருக்கோவிலாகவும், சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம் கொண்டு இங்கு சிவன் அகோரமூா்த்தியாக தனி சன்னிதியில் அருள்பாலித்து வருவது சிறப்புக்குரியதாகும். மேலும், நவ கிரக தலங்களில் கல்வி, தொழில் ஆகியவற்றின் அதிபதியான புதன் பகவானுக்குரிய தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.

    இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்திர விழா, கடந்த வாரம் 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

    தேரோட்டத்தை முன்னிட்டு விநாயகர், முருகர், பிரம்ம வித்யாம்பிகை உடனான ஸ்வேதாரண்யேஸ்வரர் உள்ளிட்ட சாமிகள் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்–செல்வம், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்துராமன், சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் உ.அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார் திமுக ஒன்றிய செயலாளர் பஞ்சு. குமார் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மூன்று தேர்களையும் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நான்கு வீதிகளையும் வலம் வந்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். வருகின்ற மார்ச் 15-ந்தேதி தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×