search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பணித்துராவில் பூரணத்திரேசியன் கோவிலில் உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    திருப்பணித்துராவில் பூரணத்திரேசியன் கோவிலில் உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரம்ம கலசத்தில் அபிஷேகம் நடைபெற்றது.
    • 15 யானைகள் அணிவகுத்த முதல் ஸ்ரீவேலி தொடர்ந்து நடைபெற்றது.

    கொச்சி அருகே திருப்போனித்துராவில் ஸ்ரீ பூரணத்திரேசியன் கோவில் உள்ளது. இந்த கோவில் விருச்சிக உற்சவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக கொடி மரத்தில் ஆலய தந்திரி புலியனூர் நாராயணன் நம்பூதிரிப்பாடு சிறப்பு வழிபாடு செய்து கொடியேற்றினார். பின்னர் காலை பிரம்ம கலசத்தில் அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து 15 யானைகள் அணிவகுத்த முதல் ஸ்ரீவேலி தொடர்ந்து நடைபெற்றது. இதில் குடை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதனை ஏராளமானோர் கண்டு களித்தனர்.

    மேலும் படிங்காரே தட்டு மாளிகை அருகே நடைபெற்ற ஓட்டம் துள்ளல் நிகழ்ச்சியில் ஆராட்டுப்புழா பிரதீப், கலா மண்டலம் ராஜேஷ், பாலா கே.ஆர்.மணி மற்றும் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×