search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Relief camp"

    • தன்னார்வ தொண்டு அமைப்புகளும் சாப்பாடு, பிரட், பிஸ்கட் உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர்.
    • பால் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் பாலகங்கள் முன்பு நீண்ட வரிசையின் நின்று பால் பாக்கெட்டுகள் வாங்கி சென்றனர்.

    நெல்லை:

    நெல்லையில் பெய்த மிக கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மாநகர பகுதி மற்றும் மாவட்டத்தில் தாமிரபரணி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் முற்றிலுமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் வசித்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு 75 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் சுமார் 3,500 பேர் நேற்று முன்தினம் முதல் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் மாநகர பகுதியில் மட்டும் 12 நிவாரண முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் செய்யப்பட்டு வரும் நிலையில் தன்னார்வலர்களும் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு உதவினர். மேலும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தன்னார்வ தொண்டு அமைப்புகளும் சாப்பாடு, பிரட், பிஸ்கட் உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர்.

    இன்று மழை குறைந்துவிட்டதால் வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது. சந்திப்பு சிந்துப்பூந்துறை உள்ளிட்ட பகுதியில் படகு மூலம் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வந்தது. சுமார் 20 படகுகள் மூலமாக பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த மழை வெள்ளத்தின் காரணமாக சுமார் 36 கிராமங்கள் மற்றும் 2 பேரூராட்சிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

    மாநகரில் பொதுமக்களின் தேவைக்காக 10 ஆயிரம் லிட்டர் பால் கூடுதலாக கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. ஆனாலும் பெரும்பாலான இடங்களில் பால் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் பாலகங்கள் முன்பு நீண்ட வரிசையின் நின்று பால் பாக்கெட்டுகள் வாங்கி சென்றனர்.

    • மீட்புப் பணியில் விமானப்படையின் ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • மாவட்டத்தில் தேவைப்படுவோருக்கு உணவு கிடைக்கவும் ஆவின் பால் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக தேசிய பேரிடர் மீட்புக் குழு மாநில பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 475 பேர் வந்துள்ளனர்.

    ஏற்கனவே 8 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ள நிலையில் கூடுதலாக இரு குழுக்கள் வர உள்ளன. மீட்புப் பணியில் விமானப்படையின் ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் 41 இடங்களில் மழை நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 502 குடும்பங்களைச் சேர்ந்த 2,800 பேர் தங்கியுள்ளனர்.

    கன்னியாகுமரி மாவட்டத் தில் 9 முகாம்களில் 123 குடும்பங்களைச் சேர்ந்த 517 பேர், தூத்துக்குடி மாவட்டத்தில் 26 முகாம்களில் 870 குடும்பங்களைச் சேர்ந்த 4,056 பேர் தங்கியுள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தில் 235 இடங்களில் மழை நிவாரண முகாம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் பல இடங்களில் தாமிரபரணி நீர் புகுந்துள்ளது. சில இடங்களில் குளங்கள் உடைந்து உள்ளன. அந்தப் பகுதிகளில் படகுகள் மூலம் மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் 35 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

    நெல்லை மாநகரைப் பொருத்தவரையில் மேலப் பாளையம், தச்சநல்லூர் மண்டலங்களில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு உள்ளது.

    சீவலப்பேரி, சிற்றாறு, கங்கைகொண்டான் சுற்று வட்டாரங்களில் ஆறுகள் இணையக் கூடிய இடங்களில் முகத்துவாரங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் தேவைப்படுவோருக்கு உணவு கிடைக்கவும் ஆவின் பால் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    • சென்னையை புயல் மிரட்டும் சூழ்நிலையில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • நிவாரண முகாம்களில் கூடுதலாக உணவு தயாரிக்கவும், பொதுமக்களுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெய்த கனமழையில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    கடந்த மாதம் பெய்த மழையின்போது 37 இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கியது. ஆனால் தற்போது பெய்த கனமழையால் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. தேங்கிய மழைநீர் வெள்ளத்தை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.

    ஆனாலும் இன்று வரை 38 இடங்களில் மழை வெள்ளம் வடியால் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளநீரை வெளியேற்ற அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் முகாமிட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    குறிப்பாக மேற்கு மேம்பாலம், கொளத்தூர், கொரட்டூர் பகுதியில் மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். நேற்று மாலை வரை 64 இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

    தொடர் நடவடிக்கையின் மூலமாக 26 பகுதிகளில் தேங்கிய நீர் வடிந்தது. ஆனாலும் 38 இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகராட்சி சார்பில் நிவாரண முகாம்கள் தயார்படுத்தி வைக்கப்பட்டிருந்தன. நேற்று 306 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு நேற்று மாநகராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டது.

    தண்ணீர் சூழ்ந்த பகுதியில் வசித்த மக்களுக்கு 10 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இன்று காலை மற்றும் மதியமும் உணவு பொட்டலம் வினியோகிக்கப்பட்டது. இதுவரையில் 20 ஆயிரம் உணவு பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

    சென்னையை புயல் மிரட்டும் சூழ்நிலையில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால் பாதிப்பு உள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்டுகிறது. மீண்டும் அங்கு தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நிவாரண முகாம்களில் கூடுதலாக உணவு தயாரிக்கவும், பொதுமக்களுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    • பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் நேற்று கனமழை கொட்டியது. இதனால் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் பல மணி நேரம் விடாமல் கனமழை கொட்டியதால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்தது. சில இடங்களில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியதால் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர்.

    கஜக்கூட்டம் பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்ததால் குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. அங்கு துணை மின் நிலையத்திலும் மழை வெள்ளம் தேங்கியது. இதனால் பல இடங்களில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்குவதற்காக நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டன. வெள்ளத்தில் சிக்கி தவித்த பொதுமக்களை பேரிடர் மீட்பு குழுவினர் ரப்பர் படகுகளில் சென்று மீட்டு நிவாரணை முகாம்களில் தங்க வைத்தனர்.

    பொதுமக்களை தங்க வைப்பதற்காக திருவனந்தபுரம் மாவட்டம் முழுவதும் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டன. திருவனந்தபுரம் தாலுகாவில் உள்ள 16 முகாம்களில் 580 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். சிராயின்கீழ் தாலுகாவில் அமைக்கப்பட்டிருக்கும் 4 முகாம்களில் 249 பேரும், வர்கலா தாலுகாவில் உள்ள நிவாரண முகாமில் 46 பேரும் தங்கியிருக்கின்றனர்.

    மாவட்டம் முழுவதும் திறக்கப்பட்டுள்ள 21 நிவாரண முகாம்களில் மொத்தம் 900பேர் தஞ்சம் அடைந்துள்ளனர். முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

    மேலும் திருவனந்தபுரம், நெய்யாற்றின்கரை, கட்டக்கடா, நெடுமங்காடு, வர்க்கலா, சிராயன்கீழ் ஆகிய தாலுகாக்களில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. அவற்றை பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    உதவி தேவைப்படுவோர் கட்டுப்பாட்டு மையங்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கனமழை காரணமாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி-கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டு இருக்கிறது.

    கேரள மாநிலத்தில் பல மாவட்டங்களில் நாளை மறுநாள்(18-ந்தேதி) வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

    பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்க ளுக்கு இன்றும், நாளையும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி, வயநாடு ஆகிய 5 மாவட்டங்களுக்கு 18-ந் தேதியும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

    கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதியை சேர்ந்த பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    • இடுக்கி மாவட்டத்தில் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
    • தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை மற்றும் மிக கனமழை பெய்து வருகிறது.

    பல இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் ஏராளமான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. மேலும் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் ஊருக்குள் தண்ணீர் புகுந்திருப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    இடுக்கி மாவட்டத்தில் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதேபோல் இடுக்கி, கோழிக்கோடு, பத்தனம் திட்டா, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அணைகளுக்கும் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அந்த அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    சபரிமலை வனப்பகுதியில் கனமழை பெய்வதால் பம்பை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதே போல் மாநிலம் முழுவதும் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. அங்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களை மீட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வருகின்றனர்.

    மாநிலம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் ஆயிரகணக்கானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தங்கு தடையின்றி வழங்கப்படுகிறது.

    கனமழை காரணமாக கேரளாவில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து உள்ளனர். ரூ.8 கோடிக்கும் மேல் பயிர்கள் சேதம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

    கனமழைக்கு இதுவரை 150-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து உள்ளன. அவற்றை சீரமைக்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

    கேரளாவில் இன்றும் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அங்கு மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர் கோடு ஆகிய 5 மாவட்டங்களில் 6 முதல் 11 சென்டிமீட்டர் வரை இன்று மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பத்தனம்திட்டா, கோட்டையம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

    • மதுரை வைகை ஆற்றங்கரை ஓரத்தில் வசிப்பவர்களுக்கு நிவாரண முகாம் வழங்கப்பட்டது.
    • இதனை கலெக்டர் அனீஷ்சேகர் இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. வைகை ஆற்றில் வினாடிக்கு 7000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆற்றங்கரை ஓரங்களில் வசிக்கும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அலுவலகம் தொடங்கப்பட்டு உள்ளது.

    அங்கு இருந்தபடி கலெக்டர் அனீஷ்சேகர் வெள்ள பாதிப்புகளை கவனித்து வருகிறார். வெள்ள பாதிப்பில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கோசாகுளம் பள்ளிக்கூடத்தில் மாதிரி தற்காலிக நிவாரண மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை கலெக்டர் அனீஷ்சேகர் இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மன்னார்குடி அருகே நிவாரண முகாமில் தங்கியிருந்த 85 வயது மூதாட்டி மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Gajastorm

    மன்னார்குடி:

    கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்கள் நிவாரண முகாமில் கடந்த 9 நாட்களாக தங்கி உள்ளனர். இதேபோல் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோமாளபேட்டை கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்கி உள்ளனர். இந்த முகாமில் அதே ஊரை சேர்ந்த ராஜகோபால் மனைவி பக்கிரிஅம்மாள் (வயது85) என்பவரும் தங்கி இருந்தார்.

    கூலித் தொழிலாளியான இவரது கூரை வீடு புயலால் இடிந்து விட்டதால் 9 நாட்களாக முகாமில் தங்கி இருந்து வந்தார். இந்நிலையில் தொடர் மழை காரணமாக அவர் 2 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் பக்கிரி அம்மாள் இன்று அதிகாலை 5 மணியளவில் திடீரென இறந்து விட்டார்.

    இதையடுத்து முகாம் பணியை பார்வையிட்டு வரும் அரசு அதிகாரிகளுக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுபற்றி அவரது மகள் மல்லிகா என்பவர் கோட்டூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். #Gajastorm

    காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர பகுதிகளில் வசிக்கும் 108 பேர் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். #Metturdam #Cauvery
    பள்ளிப்பாளையம்:

    5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடி நிரம்பியதையடுத்து தற்போது விநாடிக்கு 76 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    5 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி ஆற்றில் வெள்ளம் வருவதை காண கரையோர பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வேடிக்கை பார்த்து செல்கின்றனர். கரையோர பகுதியில் முன் எச்சரிக்கையாக போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றின் இருபுறமும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் முன்கூட்டியே பள்ளிப்பாளையத்தில் காவிரி கரையோரம் காலி செய்யப்பட்ட 200 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அந்த வீடுகளில் இருந்த பொதுமக்கள் ஏற்கனவே வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து சென்று விட்டனர். ஆகவே பொதுமக்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை.

    பள்ளிப்பாளையம் பாவடி தெரு அருகில் காவிரி ஆற்றில் கட்டப்பட்டு உள்ள முனியப்பசாமி சிலையின் 13 அடி உயர பீடத்தை மூழ்கடித்தப்படி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதுபோல் ஆதிகேசவ பெருமாள் கோவிலை தொட்டப்படி காவிரி வெள்ளம் செல்கிறது. ஆவரங்காடு பகுதியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தபடி சென்றது. காக்காத்திட்டுபாறை பகுதியில் உள்ள விநாயகர் கோவிலையும் வெள்ளம் சூழ்ந்தது.

    பொதுமக்கள் வழக்கமாக குளிக்கும் இடங்களான பள்ளிப்பாளையம் காவிரிப்படித்துறை, ஜனதா நகர், ஆவாரங்காடு, அக்ரஹாரம் பகுதியில் நேற்று இரவு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு பலகை நகராட்சி மற்றும் ஊராட்சி சார்பில் நடப்பட்டது. அதில், ‘‘கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ள காரணத்தினால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவே, துணி துவைக்கவோ வேண்டாம்’’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    குமாரபாளையம் மணிமேகலை இந்திரா நகரில் 5 வீடுகளும், கலைமகள் நகரில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளிலும் வெள்ளம் சூழ்ந்தது.

    இப்பகுதியில் உள்ள 31 குடும்பங்களை சேர்ந்த 30 ஆண்கள், 39 பெண்கள் மற்றும் 6 குழந்தைகள் சேர்த்து மொத்தம் 75 பேர் குமாரபாளையம் ஜே.கே.கே.நடராஜா நகராட்சி திருமண மண்டபத்திற்கு வருவாய்த்துறையின் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் இந்திரா நகர், மணிமேகலை தெருவில் வசித்து வரும் 6 குடும்பங்களை சேர்ந்த 8 ஆண்கள், 15 பெண்கள் மற்றும் குழந்தைகள் என 33 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு புத்தர் வீதியில் செயல்பட்டு வரும் நகராட்சி தொடக்கப் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசின் சார்பாக அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. கலெக்டர் ஆசியா மரியம் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை நேரில் பார்வையிட்டு குறைகளை கேட்டறிந்தார்.

    ஆற்றின் 2 கரைகளையும் தழுவியபடி தண்ணீர் செல்வதால் பரமத்திவேலூர் தாலுகாவுக்கு உட்பட்ட காவிரி கரையோர பகுதிகளில் பரிசல்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசம்பாளையம், ஜேடர்பாளையம், கண்டிப்பாளையம், அய்யம்பாளையம் ஆகிய பகுதிகளில் வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வெள்ளப்பெருக்கின் காரணமாக நாமக்கல் மாவட்ட காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆற்றில் மீன் பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Metturdam #Cauvery

    ×