search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    20 ஆயிரம் பேருக்கு உணவு பொட்டலம் வினியோகம்- நிவாரண முகாம்களில் 306 பேர் தங்க வைப்பு
    X

    20 ஆயிரம் பேருக்கு உணவு பொட்டலம் வினியோகம்- நிவாரண முகாம்களில் 306 பேர் தங்க வைப்பு

    • சென்னையை புயல் மிரட்டும் சூழ்நிலையில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • நிவாரண முகாம்களில் கூடுதலாக உணவு தயாரிக்கவும், பொதுமக்களுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெய்த கனமழையில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    கடந்த மாதம் பெய்த மழையின்போது 37 இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கியது. ஆனால் தற்போது பெய்த கனமழையால் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. தேங்கிய மழைநீர் வெள்ளத்தை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.

    ஆனாலும் இன்று வரை 38 இடங்களில் மழை வெள்ளம் வடியால் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளநீரை வெளியேற்ற அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் முகாமிட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    குறிப்பாக மேற்கு மேம்பாலம், கொளத்தூர், கொரட்டூர் பகுதியில் மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். நேற்று மாலை வரை 64 இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

    தொடர் நடவடிக்கையின் மூலமாக 26 பகுதிகளில் தேங்கிய நீர் வடிந்தது. ஆனாலும் 38 இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகராட்சி சார்பில் நிவாரண முகாம்கள் தயார்படுத்தி வைக்கப்பட்டிருந்தன. நேற்று 306 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு நேற்று மாநகராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டது.

    தண்ணீர் சூழ்ந்த பகுதியில் வசித்த மக்களுக்கு 10 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இன்று காலை மற்றும் மதியமும் உணவு பொட்டலம் வினியோகிக்கப்பட்டது. இதுவரையில் 20 ஆயிரம் உணவு பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

    சென்னையை புயல் மிரட்டும் சூழ்நிலையில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால் பாதிப்பு உள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்டுகிறது. மீண்டும் அங்கு தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நிவாரண முகாம்களில் கூடுதலாக உணவு தயாரிக்கவும், பொதுமக்களுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×