search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "surprise inspection"

    • காவலர் பணி ஒதுக்கீடு பதிவேடு, உணவு பதிவேடு, இருப்பு பதிவேடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.
    • அரசு விதித்துள்ள விதிமுறைகளை முறையாக பின்பற்றி உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு கைதிகளுக்கு வழங்கப்படுவது குறித்து கைதிகளிடம் நேரடியாக கேட்டறிந்தார்.

    தேனி:

    பெரியகுளம் கிளை சிறைச்சாலையில் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.பெரியகுளம் சிறைச்சாலையில் பராமரிக்கப்பட்டு வரும் வருகை பதிவேடு, உள்வரும் மற்றும் வெளிசெல்லும் நபர்கள் குறித்த பதிவேடு, பார்வையாளர்கள் பதிவேடு, அலுவலர்கள் ஆய்வு பதிவேடு, தொகுதி பதிவேடு, கைதிகளின் அறை ஒதுக்கீடு பதிவேடு, காவலர் பணி ஒதுக்கீடு பதிவேடு, உணவு பதிவேடு, இருப்பு பதிவேடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.

    பின்னர் கைதிகளுக்கு தயார்செய்யப்படும் உணவுக்கூடம், அடிப்படை வசதிகள், கைதிகளின் அறைகள் சுத்தமாவும் தூய்மையாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறதா என நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், கைதிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் மற்றும் உணவு தரமாக வழங்கப்படுகிறதா எனவும், அரசு விதித்துள்ள விதிமுறைகளை முறையாக பின்பற்றி உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு கைதிகளுக்கு வழங்கப்படுவது குறித்து கைதிகளிடம் நேரடியாக கேட்டறிந்தார்.

    மேலும் சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிட வரும் பார்வையாளர்களிடம் சிறைச்சாலை போலீசார் அரசு விதிமுறைகளை முறையாக பின்பற்றுகிறார்களா என கேட்டறிந்தார். கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் விரிவாக ஆய்வு மேற்கெண்டார்.

    • தாபா, ரெஸ்டாரண்ட்களில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் அருண் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர்.
    • தொடர்ந்து பொத்தனூர், ஜேடர்பாளையம், செல்லப்பம்பாளையம் பகுதிகளில் செயல்படும் கடைகளிலும் சோதனை செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் பால் குளிரூட்டும் நிலையம் எதிரே உள்ள தாபா மற்றும் ரெஸ்டாரண்டுகளில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அப்பகுதியில் உள்ள தாபா, ரெஸ்டாரண்ட்களில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் அருண் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர். இது தொடர்பாக தாபா, ரெஸ்டாரண்ட்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

    தொடர்ந்து பொத்தனூர், ஜேடர்பாளையம், செல்லப்பம்பாளையம் பகுதிகளில் செயல்படும் கடைகளிலும் சோதனை செய்தனர். அப்போது உணவு பாதுகாப்பு தணிக்கைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள ஓட்டல்களில் சோதனை செய்தபோது சுகாதாரமற்ற முறையில் சாம்பார், சட்னி, குருமா வைத்திருந்த தலா 2 கடைகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் இது தொடர்பான சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் உணவு பாதுகாப்பு விதிகளை மீறும் ஓட்டல்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.

    • உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • 2 பேக்கரி கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை பகுதியில் உள்ள பேக்கரி கடைகள், அசைவ உணவகங்கள் மற்றும் பழமுதிர் நிலையங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது இனிப்பு மற்றும் கார வகைகளில் தயாரிப்பு தேதி குறிப்பிடப்படாமல் விற்பனை செய்த 2 பேக்கரி கடைகளுக்கு தலா 1000 வீதம் ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    பிறந்தநாள் கேக் தரம் குறைவு மற்றும் இனிப்பு, காரவகைகளில் தயாரிப்பு தேதி இல்லாமல் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் பேக்கரி கடைகளில் உள்ள பிறந்தநாள் கேக்கில் அளவுக்கு அதிகமான கலர் சேர்க்கப்பட்டுள்ளதா? என்பதை பரிசோதனை செய்வதற்காகவும், மிச்சர் மற்றும் கார கடலையில் செயற்கை கலர் சேர்க்கப்ப ட்டுள்ளதா? என்பதை கண்டறிவதற்காகவும் உணவு மாதிரி சேகரிக்கப் பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

    மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக் பயன்படுத்திய பழமுதிர் நிலையத்திற்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    அதேபோல் அசைவ உணவகங்களில் சில்லி சிக்கன், காலிபிளவர் சில்லி போன்றவற்றிற்கு செயற்கை வண்ணம் பயன்படுத்தக் கூடாது.

    சூடான உணவு பொருள்களை தடை செய்ய ப்பட்ட பிளாஸ்டிக் கவர், கேரி பேக் போன்றவற்றில் பார்சல் செய்து கொடுக்க கூடாது.

    துரித உணவு உணவு கடைகள், பேக்கரி மற்றும் டீக்கடைகளில் விற்பனை செய்யும் எண்ணெய் பலகாரங்கள் ஆன பஜ்ஜி, போண்டா மற்றும் மீன் சில்லி, சிக்கன் சில்லி வகைகளை நேரடியாக அச்சிட்ட பேப்பரில் வைத்து உண்பதற்கும், பார்சல் செய்தும் கொடுக்க கூடாது எனவும் கடைகாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    அவ்வாறு பார்சல் செய்து கொடுக்கும் கடை களுக்கு அபராதம் விதிக்க ப்படும் என அறிவுறுத்த ப்பட்டது.

    உணவுப்பொருள் குறைகள் சம்பந்தமான புகாரை 94440 42322 என்ற எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என உணவு பாதுகாப்பு அலுவலர் தெரிவித்தார்.

    • இந்து அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம்.
    • குறைந்த அளவிலான உயரம் கொண்ட விநாயகர் சிலைகளை வைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    திருவள்ளூர்:

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டும் திருவள்ளூரில் 63 இடங்களிலும், திருத்தணி 98, ஊத்துக்கோட்டை 204, கும்மிடிப்பூண்டி 67, பொன்னேரி 20 உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 452 சிலை வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத வகையில் விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும், குறைந்த அளவிலான உயரம் கொண்ட விநாயகர் சிலைகளை வைப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு தெரிவித்து உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் காக்களூர், திருத்தணி, வெங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் விநாயகர் சிலை செய்வதற்கான கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து பல்வேறு வடிவங்களில், பல்வேறு வண்ணங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, ஆர்டர் கொடுத்தவர்களுக்கு கொடுக்கும் பணி நடந்து வருகிறது.

    இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் திருவள்ளூர் - ஆவடி சாலையில் காக்களூர் பகுதியில் உள்ள விநாயகர் சிலை தயாரிக்கும் இடத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது விநாயகர் சிலையில் அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் மற்றும் ரசாயன பொருட்களைக் கொண்டு விநாயகர் சிலை செய்யப்படுகின்றனவா என ஆய்வு செய்தனர்.

    • ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஓட்டல்களில் ஆய்வு செய்தனர்.
    • இது தொடர்பாக 3 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    ஈரோடு:

    தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறை சார்பில் அனைத்து உணவ கங்களி லும் தேங்காய் சட்னி, தயிர், மோர் வகைகள், ஷவர்மா உள்ளிட்ட உணவு பொருட்கள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.

    இதன்படி ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வன், அருண்குமார் ஆகியோர் 15-க்கும் மேற்பட்ட ஓட்ட ல்களில் ஆய்வு செய்தனர்.

    இதில், கடைகளில் உள்ள குளிர்பதன பெட்டியில் (பிரிட்ஜில்) இருப்பு வைக்க ப்பட்டிருந்த 12 லிட்டர் தேங்காய் சட்னி, சமைத்த நிலையில் வைக்கப்பட்டி ருந்த ஷவர்மா இறைச்சி வகைகள் 3.5 கிலோவை பறிமுதல் செய்யப்பட்டு உணவு பாதுகாப்பு, தரங்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அவைகள் உடனடியாக அழிக்கப்பட்டன.

    இது தொடர்பாக 3 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. 2 கடைகளுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் தங்க விக்னேஷ் கூறுகையில்,

    மாவட்டம் முழுவதும் இதேபோன்று திடீர் ஆய்வு தொடரும். பொதுமக்கள் தரமில்லாத உணவு பண்டங்கள், பொருட்கள் கண்டறிந்தால் உடனடியாக 94440 42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

    • ஈரோடு மாவட்ட விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • ஆவணங்கள் இல்லாத விதைகளை விற்க தடை விதிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்ட விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி கோபிசெட்டி பாளையம், காசியூர், காஞ்சிக்கோவில், பெருந்துறை பகுதிகளில் விதை ஆய்வாளர்கள் விஜயா, நவீன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது 10-க்கும் மேற்பட்ட தனியார் விதை விற்பனை நிலையங்கள் மற்றும் நாற்று பண்ணைகளில் சோதனை நடத்தி அதில் முறையான ஆவணங்கள் இல்லாத 12 குவிண்டால் அளவிலான நெல், வீரிய மக்காச்சோளம் மற்றும் காய்கறி விதைகளை விற்க தடை விதிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ 1,24,034 ஆகும்.

    ஒவ்வொரு விதை விற்பனை மற்றும் நாற்று பண்ணை உரிமையா ளர்கள், விலைப்பட்டியல் அடங்கிய பதாகைகளை விவசாயிகளின் பார்வைக்கு வைக்க வேண்டும்.

    மேலும் விதை இருப்பு பதிவேடு, கொள்முதல் பதிவேடு, விற்பனை பட்டியல், பதிவு சான்றிதழ், முளைப்புத்திறன் அறிக்கை, காலாவதி பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்.

    இதை தவறும் பட்சத்தில் அவர்கள் மீது எவ்வித பாரபட்சமின்றி விதை சட்டம் 1966 மற்றும் 1983-கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,

    விவசாயிகள் விதைகள் மற்றும் நாற்றுகள் வாங்கும் போது விதை உரிமம் எண், குவியல் எண், காலாவதி நாள் குறிப்பிட்ட ரசீதுகளை விற்பனையாளர்களிடம் இருந்து பெற்று பயன்பெறு மாறு ஆய்வின் போது தெரிவித்தனர்.  

    • அரசு பெண்கள் பள்ளியில் கல்வித்துறை அமைச்சர் திடீர் ஆய்வு செய்தார்.
    • அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருகை புத்தகத்தில் தன்னுடைய கருத்தை எழுதி கையெழுத்திட்டார்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம், சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொரு வகுப்பறையாக சென்று பார்வையிட்ட அவர் பள்ளியின் அடிப்படை வசதி, கல்வி தரம் போன்றவை குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். மேலும் மாணவிகளிடமும் குறைகளை கேட்டறிந்தார். அமைச்சரிடம் கூடுதலாக விளையாட்டு மைதானம், கழிப்பறை வசதி செய்து தருமாறு மாணவிகள் கோரிக்கை வைத்தனர். மாலை நேர வகுப்புகள் நடத்துமாறு அமைச்சர், ஆசிரியர்களிடம் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வில் வெங்கடேசன் எம்.எல்.ஏ. பேரூராட்சி மன்றத்தலைவர் ஜெயராமன்,செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின், நகர செயலாளர் வக்கீல் சத்ய பிரகாஷ், அவைத்தலைவர் ராமன், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, திருவேடகம் ஒன்றிய கவுன்சிலர் வசந்த கோகிலா சரவணன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆய்வின் போது உதவி தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி மற்றும் ஆசிரியை, ஆசிரியைகள், மாணவிகள் இருந்தனர். இந்த ஆய்வு குறித்து தலைமை ஆசிரியர் அலுவ லகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வருகை புத்தகத்தில் தன்னுடைய கருத்தை எழுதி கையெழுத்திட்டார்.

    • மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவின் பேரில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ராகவன் தலைமையில் அலுவலர்கள் போடி பஸ் நிலையம் அருகே உள்ள பள்ளி வளாக கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
    • காலாவ தியான ஐஸ்கிரீம் பாக்கெட்டுகள், மெகுழு பூசப்பட்ட பழங்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப், கவர் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள், காலாவதியான உணவுகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவின் பேரில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ராகவன் தலைமையில் அலுவலர்கள் போடி பஸ் நிலையம் அருகே உள்ள பள்ளி வளாக கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    போடி வட்டார உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சரண்யா, தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு த்துறை அலுவலர்கள் சுரேஷ், மணிகண்டன், அகமது உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர் 25-க்கும் மேற்பட்ட கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது காலாவ தியான ஐஸ்கிரீம் பாக்கெட்டுகள், மெகுழு பூசப்பட்ட பழங்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப், கவர் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

    • சேலம் ஜங்சன், டவுன் ரெயில் நிலையங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • அப்போது ஒரு ஓட்டலில் 15 வயதுக்கு மேல் 18 வயக்குட்பட்ட ஒரு வளரின பருவத்தினர் பணிபுரிவது கண்டபிடிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தலைமை யில் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் நேற்று சேலம் ஜங்சன், டவுன் ரெயில் நிலையங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது ஒரு ஓட்டலில் 15 வயதுக்கு மேல் 18 வயக்குட்பட்ட ஒரு வளரின பருவத்தினர் பணிபுரிவது கண்டபிடிக்கப்பட்டது. அந்த வளரின பருவத் தினரை அதிகாரிகள் மீட்டு குழந்தை தொழிலாளர் நலக்குழுவிடம் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து உதவி ஆணையர் கிருஷ்ணவேணி கூறும் போது, 14 வயதுக் குட்பட்ட குழந்தைகளை எந்த ஒரு நிறுவனத்திலும் பணியமர்த்த கூடாது என்றும், 15 முதல் 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினர்களை அபாயகரமான எந்த ஒரு பணியிலும் அமர்த்துவதும் குற்றமாகும். மீறி பணியில் அமர்த்தும் நிறுவனங்களின் உரிமையாளருக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் முதம் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப் படும் என்றார்.

    • கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார்
    • செவிலியர், சுகாதாரஆய்வாளர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணியில் இருப்பார்கள்.

     கள்ளக்குறிச்சி:

    மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் தலாரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் 500 நகர்புற நல வாழ்வு மையங்களை தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன்படி கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட விளாந்தங்கல் சாலையில் நகர்ப்புற நல வாழ்வு மையத்தினை சென்னை தலைமை ச்செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து குத்துவிளக்கை ஏற்றி வைத்து நகர்ப்புற நல வாழ்வு மையத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். மேலும் பொது மக்களுக்கு வழங்க ப்படும் மருத்துவ சேவையை பார்வையிட்டனர். இதுகுறித்து மருத்துவ அதிகாரி ஒருவர் கூறுகையில்,இந்த நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் ஒரு மருத்துவ அலுவலர், செவிலியர், சுகாதாரஆய்வாளர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணியில் இருப்பார்கள்.

    இந்த மையத்தில்கர்ப்ப கால மற்றும் பிரசவ கால சேவைகள், சிசு மற்றும் குழந்தைகள் நல சேவைகள், குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்திற்கான சேவைகள், குடும்ப நலம், கருத்தடை, பேறுகால சேவைகள், தேசியசுகாதார திட்டங்களின் பொதுவான தொற்று நோய்களுக்கான சிகிச்சைகள், வெளிநோயாளிகளுக்கான சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளும் 63 ஆய்வக பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது என்றார். இதில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள்,கள்ளக்குறிச்சி நகர்மன்ற தலைவர் சுப்பராயலு, துணை இயக்குநர் சுகாதார பணிகள் ராஜா, கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையாளர் குமரன், தியாகதுருகம் ஒன்றிய குழுதலைவர் தாமோதிரன், சின்னசேலம் ஒன்றிய குழு தலைவர் சத்தியமூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள், டாக்டர்கள், அரசு அலுவலர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலை நகர்புற நல வாழ்வு மையத்திற்கு வந்தார். அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். தரமான சிகிச்சை அளிக்கும் படி டாக்டர்கள், நர்சுகளுக்கு அறிவுறுத்தினர். அப்போது கலெக்டர் ஷ்ரவன் குமார், உதய சூரியன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.

    • நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு தாமிரபரணி ஆறு குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.
    • நெல்லை மாநகராட்சி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் 20 இடங்களில் கழிவுநீர் கலப்பதாகவும், இதனை தடுக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு தாமிரபரணி ஆறு குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. இந்தப்பகுதி களுக்கு செல்லக்கூடிய குடிநீர், தற்போது சாக்கடை கலந்து துர்நாற்றம் வீசுவதால் பொது மக்கள் குடிக்க முடியாத நிலைக்கு மாறி வருவதாக புகார் எழுந்து வருகிறது.

    மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

    நெல்லை மாநகராட்சி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் 20 இடங்களில் கழிவுநீர் கலப்பதாகவும், இதனை தடுக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி நேற்று தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் பகுதியான மீனாட்சி புரம், சிந்துபூந்துறை, குறுக்குத்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து நெல்லை மாந கராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி கூறியதாவது:-

    நெல்லை மாநகரப் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக நீண்டகாலமாக புகார்கள் உள்ளது. இதை தடுக்க ரூ.295 கோடியில் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இதில் 90 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன.

    ஒரு குழுவை அமைத்து மாநகராட்சி பகுதியில் தாமிர பரணி ஆற்றின் நதிக்கரைகளில் உள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர் கலப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு அவர்களுக்கு முதல் கட்டமாக நோட்டீஸ் வழங்க உள்ளோம். மேலும் அந்தந்த பகுதியில் கழிவுநீர் ஓடைகளில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்காத வண்ணம் அதற்கான ஏற்பாடுகளை செய்ய உள்ளோம். மேலும் அவர்கள் வீட்டிற்கு அருகே பாதாள சாக்கடை திட்டம் இருந்தால் பாதாள சாக்கடை திட்டத்தில் உடனடியாக அந்த இணைப்புகளை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    மீண்டும் அதேபோல் செய்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கவும், நாங்களே அவர்கள் வீட்டிற்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கவும் தயாராக இருக்கிறோம் என்றார்.

    ஆய்வின்போது, முன்னாள் மண்டல சேர்மனும், 3-வது வார்டு கவுன்சிலருமான தச்சை சுப்பிரமணியன், முன்னாள் கவுன்சிலர் எஸ்.வி.சுரேஷ், கண்ணன், செல்வம், சிவா, போஸ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. ஆய்வு மேற்கொண்டார்.
    • போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உள்ளிட்ட போலீசாரையும் பாராட்டினார்.

    ஈரோடு:

    தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திரபாபு கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்த பல்வேறு ஆய்வுகள் மற்றும் கூட்டங்களை முடித்து கொண்டு திடீரென நேற்று இரவு சுமார் 11 மணியளவில் ஈரோடு வந்தார்.

    அப்போது அவர் ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    அதில் காவல் நிலைய பதிவேடுகள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா? என்றும், போலீஸ் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    அதைத்தொடர்ந்து பதிவேடுகளை முறையாக பராமரித்து வருவதையும், போலீஸ் நிலையத்தின் செயல்பாடு குறித்தும் பாராட்டி வெகுமதியளித்தார்.

    மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உள்ளிட்ட போலீசாரையும் பாராட்டினார்.

    ×