சேலம் ரெயில் நிலையங்களில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

சேலம் ஜங்சன், டவுன் ரெயில் நிலையங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு ஓட்டலில் 15 வயதுக்கு மேல் 18 வயக்குட்பட்ட ஒரு வளரின பருவத்தினர் பணிபுரிவது கண்டபிடிக்கப்பட்டது.
சேலம் ரெயில் நிலையங்களில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
Published on

சேலம்:

சேலம் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தலைமை யில் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் நேற்று சேலம் ஜங்சன், டவுன் ரெயில் நிலையங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ஒரு ஓட்டலில் 15 வயதுக்கு மேல் 18 வயக்குட்பட்ட ஒரு வளரின பருவத்தினர் பணிபுரிவது கண்டபிடிக்கப்பட்டது. அந்த வளரின பருவத் தினரை அதிகாரிகள் மீட்டு குழந்தை தொழிலாளர் நலக்குழுவிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து உதவி ஆணையர் கிருஷ்ணவேணி கூறும் போது, 14 வயதுக் குட்பட்ட குழந்தைகளை எந்த ஒரு நிறுவனத்திலும் பணியமர்த்த கூடாது என்றும், 15 முதல் 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினர்களை அபாயகரமான எந்த ஒரு பணியிலும் அமர்த்துவதும் குற்றமாகும். மீறி பணியில் அமர்த்தும் நிறுவனங்களின் உரிமையாளருக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் முதம் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப் படும் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com