search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "health center"

    • நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர்.
    • இந்த பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே நாஞ்சி க்கோட்டை கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் நாஞ்சி.கி.வ.சத்தியராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மழைக் காலங்களில் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.

    நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

    இந்த பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் மூலம் முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

    அதற்கு பழனியப்பன் நகரில் இடம் ஒதுக்கி உள்ளோம். நமது ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஒத்துழை ப்புடன் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக ஊராட்சி செயலாளர் புண்ணியமூர்த்தி வரவேற்று, தீர்மானங்களை படித்தார்.

    கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வண்டார்குழலி நிம்மி, சகாயராணி, கல்பனா, வாசுதேவன், தாழம்பட்டி மதியழகன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உமாமகேஸ்வரி தோட்டக் கலை துறை உதவி இயக்குநர் முத்தமிழ் செல்வி பள்ளி தலைமை ஆசிரியர்கள் சாந்தி, விஜயரேவதி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி அடிக்கல் நாட்டினார்
    • 26 பேருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி ஒன்றியம் காவனூரில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி னார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் காவனூர், புங்கனூர், பட்டினம், வரகூர், குப்பம், வெங்கடாபுரம் இன் னும் பல கிராம மக்கள் பயன் பெறுவார்கள்.

    வெங்கடாபுரம் போன்ற மலைப்பகுதி மக்கள் அவசர சிகிச்சைபெற வேண்டும் என்றால் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விளாப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக வேண்டி உள்ளது.

    தற்போது இந்த மருத்துவ மனை தொடங்கப்பட்டால் அவசரகால சிகிச்சைகள், பிரசவங்கள், விஷ பூச்சி, விஷ பாம்பு கடிகள் போன்ற அவசர சிகிச்சைகளை இப்பகுதி மக்களால் விரைவில் பெற முடியும்.

    பொதுமக்களின் அடிப் படை வசதிகளை நிறை வேற்றி தருவதில் முதல்- அமைச்சர் மிகவும் முக்கியத் துவம் அளிக்கிறார். பெண்கள் சுலபமாக தொழில் தொடங்கிடவும், தன்னிறைவு பெற்று சுய மரியாதையுடன் வாழ்ந்திடவும் அதிகளவில் மகளிர் சுய உதவிக்கு ழுக்களுக்கு கடன்களை வழங்கி வருகின்றார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு தனியார் இடத்தினை விலைக்கு வாங்க நன்கொடை வழங்கிய 26 பேருக்கு அமைச்சர் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார்.

    இப்பணிக்காக முதன் முதலில் காவனூர் இந்திரா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி நிர்வாகி ஆர்.சேட்டு ரூ.1 லட்சம் வழங்கினார். அதன் பிறகு ஆற்காடு எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்கள் தங்களது பங்களிப்பை அளித்தனர்.

    நிகழ்ச்சியில் ஆற்காடு தொகுதி ஜெ.எல்.ஈஸ்வரப் பன் எம்.எல்.ஏ., சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மணிமாறன், ஒன்றியக் குழு தலைவர் அசோக், துணைத் தலைவர் ரமேஷ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் தன்ராஜ், வட்டார மருத்துவ அலுவலர் கிரிஜா, பொதுப்ப ணித்துறை உதவி செயற்பொ றியாளர் திரிபுர சுந்தரி, வட் டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன், ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சித்குமார், ஆர் சேட்டு, பி. வடமலை, எஸ் ஆறுமுகம், பி.பொன்னரசன் பி.மகேந்திரன், கே.ஆர்.சம்பத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கர்ப்பிணிகளுக்கு எடுக்கப்படும் ஸ்கேன் குறித்தும் கேட்டறிந்தார்
    • கருவில் இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்பதை தெரிவிப்பது சட்டத்திற்கு புறம்பானது என நோட்டீஸ் ஒட்ட வேண்டும்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மாரிமுத்து ஆய்வு செய்தார்.

    அப்போது அங்கு சிகிச்சை பெற்றுவரும் காப்பிணிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். மேலும் மருத்துவரிடம் கர்ப்பிணிகளுக்கு எடுக்கப்படும் ஸ்கேன் குறித்தும் கேட்டறிந்தார்.

    கருவில் இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்பதை தெரிவிப்பது சட்டத்திற்கு புறம்பானது என தாய்மார்களுக்கு தெரியும் வகையில் நோட்டீஸ் ஒட்ட வேண்டும் என எடுத்துரைத்தார்.

    தொடர்ந்து சிகிச்சைக்கு வந்த புறநோயாளிகளிடம், குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த ஆய்வின் போது அரசு டாக்டர்கள் இனியா, வித்தியா மற்றும் சுகாதார செவிலியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • தொண்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பொது மருத்துவமனையாக மாற்றப்படுமா?
    • வருகிற 6-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி முதல் நிலை பேரூராட்சியாகவும் வளர்ந்து வரும் நகரமாகவும் உள்ளது.

    இங்கு உள்ள மேம்படுத் தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவ மனையாக தரம் உயர்த்தக் ேகாரி, தமிழக அரசின் சுகாதாரத்துறை வழங்கிய அனைத்து ஆவணங்களுடன் மனித நேய மக்கள் கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் கலந்தர் ஆசிக் அகமது மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இதை நீதிபதிகள் வைத்தியநாதன், பரத் சக்கர வர்த்தி ஆகியோர் முன்பு டிவிஷன் பெஞ்சில் விசா ரணை நடந்தது. தொண்டி ஆரம்ப சுகாதார நிலை யத்தை அரசு பொது மருத்துவமனையாக தரம் உயர்த்த தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என மதுரை ஐகோர்ட் கேள்வி எழுப்பியது.

    மேலும் இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வருகிற 6-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.அரசு மருத்துவமனையை நம்பியுள்ள தொண்டி மற்றும் அதனைச் சுற்றி யுள்ள ஏராளமான கிராம மக்கள் சுகாதார தேவையை அரசு நிறைவேற்றுமா? மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அரசு பொது மருத்துவ மனையாக தரம் உயர்த்தப்படுமா? என இப்பகுதி பொது மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது
    • அமைச்சர் ஆர்.காந்தி குத்துவிளக்கு தொடங்கி வைத்தார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பிஞ்சி பகுதியில் புதிதாக ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நகர்புற நல வாழ்வு மையத்தை நேற்று மாலை தமிழ்நாடு முதல் அமைச்சர் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

    இதனைதொடர்ந்து இந்த புதிய நகர்புற நலவாழ்வு மைய கட்டிடத்தை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வளர்மதி, மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மணிமாறன், நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், துணை தலைவர் ரமேஷ் கர்ணா, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ருத்ரகோட்டி, நகரமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணன், அப்துல்லா, வினோத், குமார், கோபிகிருஷ்ணன், ஜெயசங்கீதா அசேன் உள்பட மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார்
    • செவிலியர், சுகாதாரஆய்வாளர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணியில் இருப்பார்கள்.

     கள்ளக்குறிச்சி:

    மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் தலாரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் 500 நகர்புற நல வாழ்வு மையங்களை தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன்படி கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட விளாந்தங்கல் சாலையில் நகர்ப்புற நல வாழ்வு மையத்தினை சென்னை தலைமை ச்செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து குத்துவிளக்கை ஏற்றி வைத்து நகர்ப்புற நல வாழ்வு மையத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். மேலும் பொது மக்களுக்கு வழங்க ப்படும் மருத்துவ சேவையை பார்வையிட்டனர். இதுகுறித்து மருத்துவ அதிகாரி ஒருவர் கூறுகையில்,இந்த நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் ஒரு மருத்துவ அலுவலர், செவிலியர், சுகாதாரஆய்வாளர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணியில் இருப்பார்கள்.

    இந்த மையத்தில்கர்ப்ப கால மற்றும் பிரசவ கால சேவைகள், சிசு மற்றும் குழந்தைகள் நல சேவைகள், குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்திற்கான சேவைகள், குடும்ப நலம், கருத்தடை, பேறுகால சேவைகள், தேசியசுகாதார திட்டங்களின் பொதுவான தொற்று நோய்களுக்கான சிகிச்சைகள், வெளிநோயாளிகளுக்கான சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளும் 63 ஆய்வக பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது என்றார். இதில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள்,கள்ளக்குறிச்சி நகர்மன்ற தலைவர் சுப்பராயலு, துணை இயக்குநர் சுகாதார பணிகள் ராஜா, கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையாளர் குமரன், தியாகதுருகம் ஒன்றிய குழுதலைவர் தாமோதிரன், சின்னசேலம் ஒன்றிய குழு தலைவர் சத்தியமூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள், டாக்டர்கள், அரசு அலுவலர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலை நகர்புற நல வாழ்வு மையத்திற்கு வந்தார். அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். தரமான சிகிச்சை அளிக்கும் படி டாக்டர்கள், நர்சுகளுக்கு அறிவுறுத்தினர். அப்போது கலெக்டர் ஷ்ரவன் குமார், உதய சூரியன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.

    • புதிய துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பல கிலோ மீட்டர் பயணம் செய்து சிகிச்சை பெறும் அவல நிலை உள்ளது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள கடலோர கிராமமான புதுப்பட்டிணம் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் மிகவும் பழுதடைந்த நிலை யில் உள்ளது. இங்கு புதுப்பட்டிணம், கண்கொள்ளான்பட்டிணம், தோப்பு முள்ளி முனை, காரங்காடு ஆகிய கடலோர கிராமங்களைச் சேர்ந்த வர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.

    தற்போது கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ள தால் செவிலியர்கள் அங்கு தங்கி பணியாற்ற முடியாத நிலை உள்ளது. இதனால் இப்பகுதி கடலோர மீன வர்கள் உட்பட அனைத்து பொதுமக்களும் சிகிச்சை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் பல கிலோ மீட்டர் பயணம் செய்து சிகிச்சை பெறும் அவல நிலை உள்ளது. மேலும் கட்டிடம் பழுது காரணமாக செவிலியர்கள் இங்கு தங்க முடியாத காரணத்தால் அவசர சிகிச்சை பெற முடியாமல் சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

    குறிப்பாக இரவு நேரங்க ளில் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், வயதான வர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே பழுதடைந்த துணை சுகாதார நிலையத்திற்கு பதிலாக புதிதாக துணை சுகாதார நிலையம் கட்ட இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கட்டுமான பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்து விட்டது.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இதில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    மக்களுக்கு மருத்துவ சேவை அளிக்க மாநகராட்சியில் ஈரோடு காந்திஜி சாலை, பி.பெ.அக்ரஹாரம், நேதாஜி சாலை, கருங்கல்பாளையம்,

    சூரம்பட்டி, அகத்தியர் வீதி, வீரப்பன்சத்திரம் (சாணார்பாளையம்), பெரியசேமூர், சூரியம்பாளையம், ராஜாஜிபுரம் ஆகிய 10 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் ஈரோடு மாநகராட்சி மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவைகளை வழங்க ஏற்கனவே உள்ள 10 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கூடுதலாக 2 சுகாதார நலவாழ்வு மையங்களை அமைத்திட அரசு உத்தரவிட்டது.

    இதற்கு தமிழக அரசு ஒவ்வொரு சுகாதார நல வாழ்வு மையத்திற்கும் தலா ரூ.25 லட்சம் என மொத்தம் ரூ.5 கோடி நிதி ஒதுக்கியது.

    இதன்பேரில் 36-வது வார்டுக்கு உட்பட்ட காவேரி சாலையிலும், 42-வது வார்டுக்கு உட்பட்ட மரப்பாலம், 14-வது வார்டில் வைராபாளையம்,

    15-வது வார்டில் அன்னை சத்யா நகர், 55-வது வார்டில் தணிகை நகர், 51-வது வார்டில் அண்ணா நகர், 40-வது வார்டில் காவேரி சாலை, 39-வது வார்டில் பெரிய மாரியம்மன் கோவில் வீதி,

    15-வது வார்டில் விஜிபி நகர், 59-வது வார்டில் கொல்லம்பாளையம் வ.உ.சி. வீதி, 57-வது வார்டில் பாரதி நகர், 9-வது வார்டில் குறிஞ்சி நகர், 11-வது வார்டில் மாணிக்கம்பாளையம்,

    23-வது வார்டில் சத்யா நகர், 47-வது வார்டில் திரு.வி.க.வீதி, 50-வது வார்டில் முத்தம்பாளையம் பேஸ் 2, 6-வது வார்டில் ஞானபுரம், 3-வது வார்டில் இந்திராபுரம்,

    5-வது வார்டில் எல்லப்பாளையம், 28-வது வார்டில் முனிசிபல் காலனி ஆகிய 20 இடங்களில் சுகாதார நல வாழ்வு மையங்கள் அமைக்கும் பணி கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது.

    தற்போது சுகாதார நல வாழ்வு மையங்கள் கட்டுமான பணி நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது.

    இந்த சுகாதார நல வாழ்வு மையங்களில் ஒரு மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மாவட்ட சுகாதாரத்துறை மூலம் நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்கு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

    ஈரோடு மாநகராட்சியில் 10 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கூடுதலாக இரண்டு சுகாதார நல வாழ்வு மையங்கள் அரசு உத்தரவின்பேரில் அமைக்கப்பட்டுள்ளது

    பணி நடந்து வருகிறது. 20 சுகாதார நல வாழ்வு மையங்கள் கட்டுமான பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்து விட்டது. உள் கட்டமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.

    மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், தளவாட பொருட்கள் திறப்பு விழாவுக்கு முன்னதாக மருத்துவமனையில் வைக்கப்படும்.

    இந்த சுகாதார நல வாழ்வு மையங்களை விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். ஈரோடு மாநகராட்சியுடன் சேர்ந்து மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 450 சுகாதார நலவாழ்வு மையங்களும் ஒரே நாளில் திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு விட அரசு முடிவு செய்துள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • உடன்குடி வட்டார கல்வி அலுவலகம் எதிரே இந்த துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
    • முறையாக பராமரிக்கப்படாத காரணத்தினால் கட்டிடத்தில் ஒவ்வொரு பகுதியாக இடிந்து வருகிறது.

    உடன்குடி:

    உடன்குடியில் கிறிஸ்தியாநகரம், புதுமனை, பரதர்தெரு, வில்லிகுடியிருப்பு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பகுதிகளை உள்ளடக்கிய பகுதியாக துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த துணை சுகாதார நிலையம் உடன்குடி வட்டார கல்வி அலுவலகம் எதிரே செயல்பட்டு வருகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் அங்கு பணியாற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் தங்கியிருந்து பணியாற்றிட வேண்டும். இந்த செவிலியர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு சத்து மாத்திரை மற்றும் வீடுகள் தோறும் சென்று அவ்வப்போது சர்வே எடுப்பது, கர்ப்பிணி பெண்கள் குறித்து கணக்கெடுத்து தடுப்பூசி, மாத்திரை என குழந்தை உண்டானதில் இருந்து குழந்தை பிறந்து 6 மாதம் வரை தனிக்கவனம் செலுத்தி கவனிப்பது, மேலும் குடும்பகட்டுப்பாடு செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வரும் கட்டிடம் முறையாக பராமரிக்கப்படாத காரணத்தினால் கட்டிடத்தில் ஒவ்வொரு பகுதியாக இடிந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மதியம் திடீரென துணை சுகாதார நிலையத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. மேலும் கட்டிடத்தைச் சுற்றி மேல்பகுதி இடிந்தும், கீறல் விழுந்து பெயர்ந்தும், கட்டிடத்தின் பெரும்பாலான பகுதிகளில் கான்கீரிட் கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டும் இருக்கிறது. இதனால் துணை சுகாதார நிலையத்திற்கு நோயாளிகள் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ளவர்கள் செல்ல அஞ்சவேண்டிய நிலையுள்ளது. எனவே இந்த கட்டிடத்தை புதுப்பித்து கட்ட வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கஸ்பாபேட்டை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட வில்லை.
    • கஸ்பாபேட்டை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே உள்ள கஸ்பாபேட்டை பகுதியில் 6500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். கஸ்பா பேட்டை பகுதியில் அரசு பள்ளிகள், வாரச் சந்தைகள், வங்கிகள், இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்கள் உள்ளன.

    ஆனால் கஸ்பாபேட்டை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட வில்லை. இந்த பகுதி மக்கள் மருத்துவ தேவைகளுக்கு 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அவல்பூந்துறை அடுத்த கவுண்டிச்சிபாளையம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    ஆனால் கவுண்டிச்சிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல போதுமான பஸ் வசதி இல்லை. இரு சக்கர வாகனம் வைத்திருப்போர் மட்டுமே ஆரம்ப சுமாதார நிலையத்துக்கு உடனடியாக செல்ல முடியும். பஸ்சை நம்பி உள்ளவர்கள் மிகவும் அவதி அடைந்து வரு கிறார்கள்.

    ஒரு சிலர் பஸ் வசதி இல்லாததால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை உள்ளது. இதனால் முதி யோர், குழந்தைகள் பெண்கள், கர்ப்பிணி பெண்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.

    மேலும் அவல்பூந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வருவதால் நேர விரயம் ஏற்படுகிறது. இதனால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது என மக்கள் புகார் கூறினர்.

    எனவே கஸ்பாபேட்டை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

    • ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • பொது நிதி பங்கு தொகை ரூபாய் 69 ஆயிரத்து 671 விடுவிப்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம்அரித்து வாரமங்கலம் ஊராட்சியில் ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் சங்கர் தலைமையில் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வன் அனைவரையும் வரவேற்றார்.

    ஒன்றிய குழு துணை தலைவர்வாசுதேவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அரித்து வாரமங்கலம் ஊராட்சியில் ரூபாய் 78.10 லட்சத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட 2021-22ம் ஆண்டு 15-வது மத்திய நிதிக்குழு சுகாதார தலைப்பு ஒதுக்கீட்டு மான்ய நிதி ரூபாய் 60 லட்சம் போக பற்றாக்குறை நிதியான ரூபாய் 18.10 லட்சத்தை ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து வழங்கவும் வடகிழக்கு பருவமழையில் பழுதடைந்த அரித்துவாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூபாய் இரண்டு லட்சத்து 58 ஆயிரத்து 569 மதிப்பீட்டில் பழுது ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம்நீக்கம் செய்ய ஒன்றிய பொது நிதி பங்கு தொகையாக ரூபாய் 58 ஆயிரத்து 569-ம்.

    கேத்தனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூபாய் இரண்டு லட்சத்து 69 ஆயிரத்து 671 மதிப்பீட்டில் பழுதுநீக்கம் செய்ய ஒன்றிய பொது நிதி பங்கு தொகை ரூபாய் 69 ஆயிரத்து 671 விடுவிப்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் திமுக ஒன்றிய குழு உறுப்பினர் ரசூல் நஸ்ரின் பேசுகையில் மூன்று ஆண்டுகாலமாக ஒன்றிய குழு உறுப்பினர்கள் தங்களது பகுதியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை வாக்களித்த மக்கள் கேள்வி கேட்கின்றனர் நாங்கள் என்ன பதில் சொல்வது என கேள்வி எழுப்பினார்

    இதற்கு பதில் அளித்து அதிமுகவை சேர்ந்த ஒன்றியக்குழு தலைவர் சங்கர் பேசுகையில் அரசாங்கம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை அரசு நிதி ஒதுக்கினால் மட்டுமே உறுப்பினர்கள் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள முடியும் பானையில் இருந்தால்தானே அகப்பையில் வரும் எனப் பேசினார்.

    முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வி நன்றி கூறினார்.

    • பெரியபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சமுதாய சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • தூய்மை பாரத இயக்க ஊரக திட்டத்தின் கீழ் சமுதாய சுகாதார வளாகம் அமைக்க கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 772 மாணவ -மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளி வளாகத்தில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லை. இதனால் மாணவிகள் சிரமத்திற்குள்ளாகி வருவதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.

    இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் மாணவிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இது குறித்து பெரியபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் அக்பர் ஜான் பீவி தலைமையில் எஸ்.டி.பி.ஐ. ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ்கான் முன்னி லையில் ஊராட்சி துணை தலைவர் புரோஸ் கான், வார்டு உறுப்பினர்கள் முகம்மது மீராசா, அய்யூப்கான், பீர் மைதீன் உள்பட பலர் கூடுதல் கழிப்பறை கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் மனு அளித்த னர்.

    பெரியபட்டினம் எஸ்.டி.பி.ஐ. ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ் கான் கூறுகையில், இந்த அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் போதிய இடம் இருப்பதால் மாணவிகளுக்கு தூய்மை பாரத இயக்க ஊரக திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் சமுதாய சுகாதார வளாகம் அமைக்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்தோம்.

    இது சம்பந்தமாக தொடர்ந்து குரல் எழுப்பி மாணவிகள் கோரிக்கை நிறைவேற முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.

    ×