search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம்
    X

    வலங்கைமான் ஒன்றிய குழு கூட்டத்தில் தலைவர் சங்கர் பேசினார்.

    ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம்

    • ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • பொது நிதி பங்கு தொகை ரூபாய் 69 ஆயிரத்து 671 விடுவிப்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம்அரித்து வாரமங்கலம் ஊராட்சியில் ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் சங்கர் தலைமையில் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வன் அனைவரையும் வரவேற்றார்.

    ஒன்றிய குழு துணை தலைவர்வாசுதேவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அரித்து வாரமங்கலம் ஊராட்சியில் ரூபாய் 78.10 லட்சத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட 2021-22ம் ஆண்டு 15-வது மத்திய நிதிக்குழு சுகாதார தலைப்பு ஒதுக்கீட்டு மான்ய நிதி ரூபாய் 60 லட்சம் போக பற்றாக்குறை நிதியான ரூபாய் 18.10 லட்சத்தை ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து வழங்கவும் வடகிழக்கு பருவமழையில் பழுதடைந்த அரித்துவாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூபாய் இரண்டு லட்சத்து 58 ஆயிரத்து 569 மதிப்பீட்டில் பழுது ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம்நீக்கம் செய்ய ஒன்றிய பொது நிதி பங்கு தொகையாக ரூபாய் 58 ஆயிரத்து 569-ம்.

    கேத்தனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூபாய் இரண்டு லட்சத்து 69 ஆயிரத்து 671 மதிப்பீட்டில் பழுதுநீக்கம் செய்ய ஒன்றிய பொது நிதி பங்கு தொகை ரூபாய் 69 ஆயிரத்து 671 விடுவிப்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் திமுக ஒன்றிய குழு உறுப்பினர் ரசூல் நஸ்ரின் பேசுகையில் மூன்று ஆண்டுகாலமாக ஒன்றிய குழு உறுப்பினர்கள் தங்களது பகுதியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை வாக்களித்த மக்கள் கேள்வி கேட்கின்றனர் நாங்கள் என்ன பதில் சொல்வது என கேள்வி எழுப்பினார்

    இதற்கு பதில் அளித்து அதிமுகவை சேர்ந்த ஒன்றியக்குழு தலைவர் சங்கர் பேசுகையில் அரசாங்கம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை அரசு நிதி ஒதுக்கினால் மட்டுமே உறுப்பினர்கள் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள முடியும் பானையில் இருந்தால்தானே அகப்பையில் வரும் எனப் பேசினார்.

    முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வி நன்றி கூறினார்.

    Next Story
    ×