search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    20 சுகாதார நல வாழ்வு மையம் கட்டுமான பணி நிறைவு
    X

    20 சுகாதார நல வாழ்வு மையம் கட்டுமான பணி நிறைவு

    • கட்டுமான பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்து விட்டது.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இதில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    மக்களுக்கு மருத்துவ சேவை அளிக்க மாநகராட்சியில் ஈரோடு காந்திஜி சாலை, பி.பெ.அக்ரஹாரம், நேதாஜி சாலை, கருங்கல்பாளையம்,

    சூரம்பட்டி, அகத்தியர் வீதி, வீரப்பன்சத்திரம் (சாணார்பாளையம்), பெரியசேமூர், சூரியம்பாளையம், ராஜாஜிபுரம் ஆகிய 10 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் ஈரோடு மாநகராட்சி மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவைகளை வழங்க ஏற்கனவே உள்ள 10 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கூடுதலாக 2 சுகாதார நலவாழ்வு மையங்களை அமைத்திட அரசு உத்தரவிட்டது.

    இதற்கு தமிழக அரசு ஒவ்வொரு சுகாதார நல வாழ்வு மையத்திற்கும் தலா ரூ.25 லட்சம் என மொத்தம் ரூ.5 கோடி நிதி ஒதுக்கியது.

    இதன்பேரில் 36-வது வார்டுக்கு உட்பட்ட காவேரி சாலையிலும், 42-வது வார்டுக்கு உட்பட்ட மரப்பாலம், 14-வது வார்டில் வைராபாளையம்,

    15-வது வார்டில் அன்னை சத்யா நகர், 55-வது வார்டில் தணிகை நகர், 51-வது வார்டில் அண்ணா நகர், 40-வது வார்டில் காவேரி சாலை, 39-வது வார்டில் பெரிய மாரியம்மன் கோவில் வீதி,

    15-வது வார்டில் விஜிபி நகர், 59-வது வார்டில் கொல்லம்பாளையம் வ.உ.சி. வீதி, 57-வது வார்டில் பாரதி நகர், 9-வது வார்டில் குறிஞ்சி நகர், 11-வது வார்டில் மாணிக்கம்பாளையம்,

    23-வது வார்டில் சத்யா நகர், 47-வது வார்டில் திரு.வி.க.வீதி, 50-வது வார்டில் முத்தம்பாளையம் பேஸ் 2, 6-வது வார்டில் ஞானபுரம், 3-வது வார்டில் இந்திராபுரம்,

    5-வது வார்டில் எல்லப்பாளையம், 28-வது வார்டில் முனிசிபல் காலனி ஆகிய 20 இடங்களில் சுகாதார நல வாழ்வு மையங்கள் அமைக்கும் பணி கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது.

    தற்போது சுகாதார நல வாழ்வு மையங்கள் கட்டுமான பணி நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது.

    இந்த சுகாதார நல வாழ்வு மையங்களில் ஒரு மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மாவட்ட சுகாதாரத்துறை மூலம் நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்கு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

    ஈரோடு மாநகராட்சியில் 10 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கூடுதலாக இரண்டு சுகாதார நல வாழ்வு மையங்கள் அரசு உத்தரவின்பேரில் அமைக்கப்பட்டுள்ளது

    பணி நடந்து வருகிறது. 20 சுகாதார நல வாழ்வு மையங்கள் கட்டுமான பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்து விட்டது. உள் கட்டமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.

    மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், தளவாட பொருட்கள் திறப்பு விழாவுக்கு முன்னதாக மருத்துவமனையில் வைக்கப்படும்.

    இந்த சுகாதார நல வாழ்வு மையங்களை விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். ஈரோடு மாநகராட்சியுடன் சேர்ந்து மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 450 சுகாதார நலவாழ்வு மையங்களும் ஒரே நாளில் திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு விட அரசு முடிவு செய்துள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    Next Story
    ×