search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "food safety officials"

    • உணவகங்கள், டிபன் கடைகள் தாபாக்களில் தரமற்ற முறையில் உணவு வழங்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • தாபாக்கள், சைவ மற்றும் அசைவ உணவகங்கள், டிபன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள உணவகங்கள், டிபன் கடைகள் தாபாக்களில் தரமற்ற முறையில் உணவு வழங்கப்படுவதாக நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அருணுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், பரமத்தி வேலூர் உணவு பாதுகாப்பு அலுவலர் சிங்கரவேலு தலை மையிலான குழுவி னர், பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் தாபாக்கள், சைவ மற்றும் அசைவ உணவகங்கள், டிபன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது உணவகத்தில் வைத்திருந்த இறைச்சி, சமையல் எண்ணைய் மற்றும் உணவுப் பொருட்களை ஆய்வு செய்தனர். பின்னர் அங்கிருந்த உணவு மாதிரி களை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். உணவுப் பொருட்கள் தயாரிக்க தரமற்ற பொருட்களை பயன்படுத்துவது கண்டறி யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததுடன், இது தொடர்பாக உணவகங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது:-

    இங்கு செயல்படும் தாபாக்கள், டிபன் கடை கள் அனைத்திலும் மது அருந்த அனுமதியும், மது விற்பனையும் நடைபெறு கிறது. வெளி மாநில மதுபானங்கள் அதிக அளவில் விற்கப்படுகிறது. இதனால் மது பிரியர்கள் விரும்பி தாபாக்களுக்கு செல்கின்றனர்.

    தீபாவளி அன்று தாபாக்களில் விற்பனை செய்த உணவு பொருட்கள் தரமற்றதாக இருந்ததால் சிலர் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் இந்த ஆய்வு நடைபெற்றது. இதேபோன்று தியேட்டர்களில் வழங்கப்ப டும் திண்பண்டங்களும் சுகாதாரமற்று இருக்கிறது. எனவே தியேட்டர்களிலும் அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர். 

    • தியாகதுருகத்தில் 20 க்கும் மேற்பட்ட இனிப்பகங்கள், 25 -க்கும் மேற்பட்ட உணவகங்கள், 50 க்கும் மேற்பட்ட மளிகை கடைகள் செயல்பட்டு வருகின்றன.
    • இம்மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் 20 க்கும் மேற்பட்ட இனிப்பகங்கள், 25 -க்கும் மேற்பட்ட உணவகங்கள், 50 க்கும் மேற்பட்ட மளிகை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் தியாகதுருகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை பெற்றுச் செல்கின்றனர். இந்நிலையில் மளிகை கடைகளில் திண்பண்டங்கள் பாக்கெட்டைகளில் அடைத்து வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஒரு சில மளிகை கடைகளில் காலாவதியான திண்பண்டங்கள் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இதேபோல் ஒரு சில உணவகங்களில் செயற்கை நிறமிகளை பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    எனவே சம்மந்தப்பட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் திண்பண்டங்கள் காலா வதியான பின்பு விற்பனை செய்யப்படுகிறதா? உணவ கங்களில் செயற்கை நிறமிகள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மேலும் வருகின்ற நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் இனிப்ப கங்களில் பயன்படுத்தப்படும் எண்ணை மற்றும் இனிப்புகள், காரவகைகள் தயார் செய்ய பயண்படுத்தும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மேலும் காலாவதியான மற்றும் தரமற்ற பொருட்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்க வேண்டும்.  தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு பாதுகாப்பு தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்பு ணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் இப்பகுதி சமூக அலுவலர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    ×