என் மலர்

    நீங்கள் தேடியது "pollution control board"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தனியாா் அரிசி ஆலை கடந்த 6 மாதங்களாக இயங்கி வருகிறது.
    • கனரக வாகனங்களால் மண் சாலை பழுதடைந்துள்ளது.

    திருப்பூர் :

    பொங்கலூா் ஒன்றியம் மாதப்பூா் ஊராட்சி சிங்கனூா் கிராமத்தில் தனியாா் அரிசி ஆலை கடந்த 6 மாதங்களாக இயங்கி வருகிறது. இந்த ஆலையின் கரித்துகள்கள் காற்றில் பறந்து சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. அரிசி ஆலைக்கு வரும் கனரக வாகனங்களால் மண் சாலை பழுதடைந்துள்ளது. இந்த ஆலை உரிய உரிமம் இன்றி இயங்கி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்தனா்.

    இதைத் தொடா்ந்து, பல்லடத்தில் உள்ள திருப்பூா் (தெற்கு) மாவட்ட மாசுக் கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் துறை உதவி செற்பொறியாளா் வனஜா, சம்பந்தப்பட்ட அரிசி ஆலையில் ஆய்வு மேற்கொண்டாா்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குளத்தில் ஆங்காங்கே மீன்கள் செத்து மிதப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
    • நீர் மாதிரி சேகரித்து பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, எஸ்.பெரியபாளையத்தில் நல்லாற்றின் குறுக்கே 440 ஏக்கர் பரப்பளவில் நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது. திருப்பூரில் ஏராளமான விதிமீறல் பட்டன், ஜிப் நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்நிறுவனங்களில் இருந்து சுத்திகரிக்காத சாயக்கழிவுநீர், மாநகர பகுதிகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் நல்லாற்றில் கலக்கிறது.

    தொடர் மழையால் நல்லாற்றில் உள்ள சாயம், சாக்கடை கழிவுகள், நஞ்சராயன் குளத்தில் கலந்து மாசு ஏற்படுத்துகிறது. இதையடுத்து குளத்தில் ஆங்காங்கே மீன்கள் செத்து மிதப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்தநிலையில் மாசுகட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர் வடக்கு சரவணகுமார் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தியுள்ளனர். நல்லாற்றில் சாயக்கழிவுநீர் கலக்கிறதா,ஆற்றுநீரின் டி.டி.எஸ்., அளவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இது குறித்து மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறுகையில், நஞ்சராயன் குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதற்கான காரணத்தை கண்டறிவதற்காக 2 நாட்கள் தொடர் ஆய்வு நடத்தியுள்ளோம். டி.டி.எஸ்., அளவு 900 க்கு கீழ் சீராகவே உள்ளது. நீர் மாதிரி சேகரித்து பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். குளத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நீர் மாதிரி பரிசோதனை முடிவுகள் வந்தபின்னர் அறிக்கை தயாரிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடமும், வாரிய உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பிவைக்கப்படும் என்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உடல் உறுப்புகள் அனைத்தும் சீக்கிரமாக சீர்கெட்டுவிடும்.
    • ஆக்ஸிஜன் அளவு முற்றிலும் குறையத் தொடங்கும்.

     திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் திருப்பூர் மாவட்டம் இணைந்து உலக ஓசோன் தினம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் நடத்தப்பட்டது. நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுவாமிநாதன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ஓசோன் இல்லாமல் பூமியில் உயிர் வாழ முடியாது, ஓசோன் பூமியை காக்கும் காவலன், இவற்றின் முக்கிய பணி சூரிய ஒளியிலிருந்து வரும் அதிக வெப்பத்தையும், புற ஊதாக் கதிர்களையும் தடுத்து பூமியில் உள்ள உயிரினங்களை பாதுகாக்கிறது.

    ஓசோன் படலம் அழிந்தால் பூமியில் அனைத்து உயிரினங்களும் அழிந்து விடும். மேலும் நீர் நிலைகள் வறண்டு போய்விடும்.வெப்பம் அதிகமானால் நம்முடைய தோள் சுருங்கும். உடல் உறுப்புகள் அனைத்தும் சீக்கிரமாக சீர்கெட்டுவிடும். பல நோய்கள் உயிரனங்களை தாக்கும். உணவு சங்கிலி அறுபட்டு விடும். ஆக்ஸிஜன் அளவு முற்றிலும் குறையத் தொடங்கும், ஓசோன் என்பது உலகிற்கும்,உயிரினங்களுக்கும் உற்ற தோழன். தலைமறைவாக இருந்தாலும் தலைமுறை தலைமுறையாக நம்மை காக்கிறது ஓசோன்.

    பூமியில் உள்ள அனைத்து வகையான உயிரினங்களை பாதுகாக்கவும், காப்பாற்றவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும் என்றார். தெற்கு காவல் ஆய்வாளர் பிச்சையா பேசுகையில், மாணவர்கள் ஓசோனை பாதுகாக்க வலியுறுத்தி குழுக்களாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து மாணவ செயலர்கள் அருள்குமார், பூபாலன், ரமேஷ், சர்நித்தா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் ஓசோன் விழிப்புணர்வு நடனம் மற்றும் நாடகத்தை அரங்கேற்றினார்கள். பின்னர், மாணவ மாணவிகளும், பொது மக்களும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அலுவலர்களும் இணைந்து ஓசோன் படலத்தை காக்க பதாகைகளை ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அனைவருக்கும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர்கள் முரளி, பாரதிராஜா, சத்தியன் மற்றும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
    • சிலைகளுக்கு வர்ணம் பூச செயற்கை ரசாயன வர்ணங்களை பயன்படுத்தக் கூடாது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் வரும் 31 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யக்கூடிய நிலையில், நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பது குறித்த வழிமுறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதாவது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டும் நீர் நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மூலப்பொருட்களால் ஆன விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்காக உலர்ந்த மலர்கள், வைக்கோல், மரங்களின் இயற்கை பிசினை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை நீர் நிலையில் கரைக்கக் கூடாது. பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையில் செய்யப்பட்ட சிலைகளை கரைக்கக் கூடாது. மேலும், சிலைகளுக்கு வர்ணம் பூச செயற்கை ரசாயன வர்ணங்களை பயன்படுத்தக் கூடாது.

    மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள நீர்நிலைகளில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சில சாய தொழிற்சாலைகள் மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி சாய கழிவு நீரை கிணறுகள், ஓடைகளில் வெளியேற்றுகின்றன.
    • உடலில் மஞ்சள் நிற தண்ணீரை கொண்டு குளித்தால் சொறி, கொப்பளம், அரிப்பு உள்ளிட்ட தோல் சரும பிரச்சனைகள் வருகிறது.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அருள்புரம்,சின்னக்கரை, கரைப்புதூர், கணபதிபாளையம் பகுதியில் ஏராளமான பனியன் நிறுவனங்கள், சாய தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சில மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி சாய கழிவு நீரை கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், நீர் நிலை ஓடைகளில் வெளியேற்றுகின்றன.

    அதனால் நிலத்தடி நீர் பாதிப்படைகிறது. பருவ மழை காலங்களில் இது போன்ற விதி மீறல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில்,பச்சாங்காட்டுபாளையத்தில் ஒரு விவசாய தோட்டத்து குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு ஆழ்துளை கிணற்றில் மஞ்சள் நிறத்தில் தண்ணீர் வெளியேறி வருகிறது. இது குறித்து பாலாமணி என்பவர் கூறுகையில் ,மஞ்சள் நிறத்தில் வரும் தண்ணீரை எந்த உபயோகத்திற்கும் பயன்படுத்த முடியவில்லை. உடலில் இந்த தண்ணீரை கொண்டு குளித்தால் சொறி, கொப்பளம், அரிப்பு உள்ளிட்ட தோல் சரும பிரச்சனைகள் வருகிறது. விவசாயத்திற்கு விட்டால் பயிர் சாகுபடி பாதிப்படைகிறது. மகசூல் கிடைப்பதில்லை. தென்னை மரம் நாளுக்கு நாள் காய்ந்து வருகிறது. கால் நடைகள் இந்த தண்ணீரை குடிப்பதில்லை. வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தால் அந்த கால்நடைகள் நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றன. எங்களது அன்றாட சொந்த உபயோகத்திற்கு லாரி தண்ணீரை விலைக்கு வாங்கி தான் பயன்படுத்துகிறோம். குடிப்பதற்கு ஊராட்சி நிர்வாகம் வழங்கும் குடிநீரை பிடித்து வைத்து பயன்படுத்தி வருகிறோம்.

    இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களையும், கால்நடைகளையும் பாதுகாக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்த நிலையில் பல்லடத்தில் உள்ள திருப்பூர் தெற்கு மாசுக்கட்டுபாட்டு உதவி செயற்பொறியாளர் வனஜா தலைமையில் அதிகாரிகள் அந்த பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டது குறித்து பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    மதுரை:

    நாகர்கோவிலைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு, மாசுக்கட்டுப் பாட்டு வாரியத் தலைவராக பணியாற்றி வந்த அதிகாரி நசிமுதீன், அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

    நசிமுதீனுக்கு பதிலாக சுற்றுச்சூழல் துறை செயலாளராகவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ள மூத்த. ஐ.ஏ.எஸ். அதிகாரி ‌ஷம்பு கல்லோலிகரும் சிறந்த அதிகாரி ஆவார்.

    ஆனாலும், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நசிமுதீனுக்கு இருக்கும் புரிதலும், அனுபவமும் புதிய அதிகாரி ‌ஷம்பு கல்லோலிகருக்கு இருக்க வாய்ப்பில்லை.

    அடுத்த. சில நாட்களில் தேசியப் பசுமைத் தீர்ப்பாய குழுவின் விசாரணை தொடங்கவுள்ள நிலையில், அதற்குள்ளாக ஸ்டெர்லைட் குறித்த அனைத்து பின்னணி தகவல்களையும் அறிந்து கொண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்வது சாத்தியமற்றதாகும். இது ஸ்டெர்லைட் விவகாரத்தில் பின்னடைவை ஏற்படுத்தும்.

    எனவே, கடந்த 23-ந் தேதி தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரிய தலைவராக இருந்த நசிமுதீனை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின் படி விதிகளை உருவாக்க வேண்டும்.

    மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஸ் என்.சதீஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஹென்றி திபேன் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து ஆராயும் குழுவில் மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவர் நசிமுதீன் உள்ளார்.

    அவருக்கு தான் ஸ்டெர்லைட் ஆலை சம்பந்தமான அனைத்து விபரங்களும் தெரிந்து இருக்கும். அவரது பணியிட மாறுதல் பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுவது போல் உள்ளது.

    அதை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் சம்பந்தமான விசாரணையில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பழைய அதிகாரி நதிமுதீனும், புதிய அதிகாரியாக பொறுப்பேற்க உள்ள ‌ஷம்பு கல்லோலிக்கரும் இணைந்து ஒத்துழைக்க முடியுமா என தமிழக அரசிடம் கேட்டு தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.

    பின்னர் வழக்கு விசாரணையை வருகிற 3-ந் தேதிக்கு தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    காவிரியில் கழிவு நீர் கலக்கும் விவகாரம் தொடர்பாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று அறிக்கையை தாக்கல் செய்தது. #PollutionControlBoard #SupremeCourt
    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலத்தில் பல இடங்களில் காவிரி கரையில் உள்ள சில நகரங்கள் மற்றும் அந்த மாநிலத்தை சேர்ந்த தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் காவிரி ஆற்றில் அதிக அளவில் கலக்கின்றன. குறிப்பாக பெங்களூர் மாநகரத்தின் 80 சதவீத கழிவுகளும், கழிவு நீரும் காவிரியில்தான் கலக்கின்றன. ஆண்டுக்கு சுமார் 5 லட்சத்து 40 ஆயிரத்து 200 மில்லியன் லிட்டர் கழிவுகள் கர்நாடகாவிலிருந்து காவிரி மூலம் தமிழகத்துக்கு வருகிறது.

    அபாயகரமான கழிவுகளோடு தமிழகத்துக்கு வரும் காவிரி நீரில் விளையும் பயிர்களில் துத்தநாகம், ஈயம், காட்மியம், செம்பு போன்ற வேதிப்பொருள்களின் தன்மை அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவருகிறது. மேலும் இதனால் காவிரி கரையோரம் வாழ்பவர்கள் பலவிதமான நோய்களுக்கு ஆளாகிறார்கள். மாசுபட்ட வகையில் உள்ள ஆற்றுநீரை பயன்படுத்தும் உயிரினங்களுக்கும் பயங்கர கேடுகளை விளைவிக்கிறது.

    எனவே, கர்நாடகா மாநிலத்தில் காவிரி கரையில் அமைந்துள்ள நகரங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் பல்வகையான கழிவுகளை நேரடியாக ஆற்றில் கலக்கவிடாமல் கழிவுகள் கலந்த தண்ணீரை சுத்திகரித்து பிறகு மீண்டும் ஆற்றில் கலக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும், நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவின் மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.ஏ. போப்டே, எல். நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த ஏப்ரல் 13-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டுக்குழு கர்நாடக பகுதியின் நீர்த்தேக்கத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு அனுப்பப்படும் தண்ணீரின் தரத்தை மே மாதம் வரை முறையாக பரிசோதனை செய்து இது தொடர்பாக ஜூலை மாதத்தில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:-

    காவிரி உருவாகும் இடத்தில் கழிவுகள் எதுவும் கலப்பது இல்லை. கர்நாடக பகுதியில் ஓடும் நதியில் எங்கும் கழிவு நீர் கலக்கப்படவில்லை. காவிரி நீர் செல்லும் வழியில் கழிவு நீர் கலக்கப்படுகிறது. தென் பெண்ணையாறு, அக்ராவதி ஆகிய காவிரியின் கிளை நதிகள் மாசடைந்த நிலையில் தமிழ்நாட்டுக்குள் பிரவேசிக்கின்றன.

    கடந்த செப்டம்பர் தொடங்கி டிசம்பர் வரை நான்கு மாதங்களில் காவிரி (அஜ்ஜிபோர்-கர்நாடகா), தென்பெண்ணையாறு (சொக்கரசனபல்லி- தமிழ்நாடு), அக்ராவதி (சங்கமா-கர்நாடகா) ஆகிய நதிகளில் இருந்து தண்ணீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் தென்பெண்ணையாறு, காவிரி, அக்கராவதி ஆகிய நதிகளின் தண்ணீர் பெருமளவில் மாசடைகிறது. தண்ணீரின் தரத்தை சீர்படுத்துவதற்கான நடவடிக்கையை இரு மாநிலங்களும் எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

    அறிக்கை தாக்கல் செய்ததை தொடர்ந்து இந்த அறிக்கையின் தமிழக அரசு மற்றும் கர்நாடக அரசு 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  #PollutionControlBoard #SupremeCourt #tamilnews
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்ததை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கு ஜூன் 6-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.#Thoothukudi #Sterlite #SterliteProtest #BanSterlite #TalkAboutSterlite
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்பட அனுமதி மறுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த 9.4.2018 அன்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஆலை நிர்வாகம் சென்னையில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.

    ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்தற்கு கூறி உள்ள 5 குறைபாடுகளை நிறைவேற்ற ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ஸ்ரீவைகுண்டம் வக்கீல் ராமசுப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவைச் சேர்ந்த பாத்திமாபாபு ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்கள் நீதிபதி சுதந்திரம் மற்றும் நிபுணர்கள் ஜெயக்குமார், எத்திராஜ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது வைகோ, ராமசுப்பு ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர்.

    ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் சார்பில் மூத்த வக்கீல்கள் பி.எஸ்.ராமன், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அப்போது அவர்கள், ‘ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் எந்தவித விளக்கமும் கோராமல் ஆலைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்தது இயற்கை நீதிக்கு புறம்பானது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்ததற்கு 5 குறைபாடுகளை கூறி உள்ளது. இந்த குறைபாடுகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். இதில், ஒரு குறைபாட்டை சரி செய்ய 2019-ம் ஆண்டு வரை காலக்கெடு உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் இதுவரை மாசு ஏற்படவில்லை’ என்று வாதாடினர்.

    அப்போது கோர்ட்டில் ஆஜராகி இருந்த வைகோ, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், தமிழக அரசு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை தங்களது முழுமையான வாதத்தை எடுத்து வைத்த பின்பு தனது தரப்பு வாதத்தை எடுத்து வைப்பதாக நீதிபதியிடம் தெரிவித்தார். இதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

    இதன்பின்பு, வழக்கு விசாரணையை அடுத்த மாதம்(ஜூன்) 6-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். #Thoothukudi #Sterlite #SterliteProtest  #BanSterlite #TalkAboutSterlite
    ×