search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PAP Canal"

    • திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது
    • மக்கள் கால்வாயில் குளித்து துணிகளை துவைத்து வந்தனர்.

    உடுமலை :

    உடுமலை பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்திற்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதில் உடுமலை கால்வாய் ஜீவா நகர், வெஞ்சமடை உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளின் வழியே செல்கிறது. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் கால்வாயில் குளித்து துணிகளை துவைத்து வந்தனர். தற்போது கோடை வெயில் கொளுத்துவதால் கால்வாயில் எப்போதும் மக்கள் கூட்டம் காணப்பட்டது.

    இந்நிலையில் கால்வாயில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர்.

    • .ஏ.பி., வாய்க்காலை பல ஊராட்சிகள் குப்பை கிடங்காக பயன்படுத்தி வருகின்றன.
    • இறந்த கோழிகளை வாய்க்காலில் வீசி தண்ணீரை அசுத்தப்படுத்துகின்றனர்.

    உடுமலை :

    உடுமலையில் இருந்து வெள்ளகோவில் வரை 126 கி.மீ., நீளமுள்ள பி.ஏ.பி., வாய்க்காலை பல ஊரா ட்சிகள் குப்பை கிடங்காக பயன்படுத்தி வருகின்றன. சுல்தான்பேட்டை, பொங்கலூர் பகுதிகளில் செயல்படும் கோழிப்ப ண்ணையாளர்கள் பலர் இறந்த கோழிகளை வாய்க்காலில் வீசி தண்ணீரை அசுத்தப்படு த்துகின்றனர். தண்ணீர் குடிக்க தகுதியற்றதாக மாறிவி ட்டதால் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு ஏராளமான நோய்கள் வருகின்றன.

    கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் முறையிட்டதை தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் ரமேஷ் பொங்கலூர் மற்றும் சுல்தான்பேட்டை பகுதிகளில் ஆய்வு செய்தார்.

    • கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
    • 4 மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.

    உடுமலை :

    பி.ஏ.பி., 4வது சுற்று பாசன பகுதியில் தண்ணீர் விரைவில் திறக்கப்பட உள்ளதால் கிளை பகிர்மான வாய்க்கால்களில் செடி கொடிகளை அகற்றும் பணி தீவிரமாக நடக்கிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணை மூலம் பிஏபி. பாசனத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மொத்தம் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 4 மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.

    தற்போது மூன்றாவது மண்டல பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் 4 சுற்றுகள் தண்ணீர் விடப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி மூன்றாவது சுற்று இன்னும் ஓரிரு நாட்களில் நிறைவடைய உள்ளது. இதை தொடர்ந்து நான்காவது சுற்றுக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனையொட்டி நான்காவது சுற்று பாசனப்பகுதி உள்ள கிளை வாய்க்கால்கள் பகிர்மான கால்வாய்களில் படர்ந்து கிடக்கும் செடி கொடிகளை அகற்றும் பணி தீவிரமாக நடக்கிறது. மேலும் வாய்க்கால் ஷட்டர்களில் கிரீஸ் தடவும் பணியும் நடக்கிறது. இதன் மூலம் கடைமடை பகுதி வரை தண்ணீர் விரைவாக சென்றடையும் என அதிகாரிகள்- விவசாயிகள் தெரிவித்தனர். இந்நிலையில் 60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணையில் நீர்மட்டம் 41. 76 அடியாக உள்ளது. தற்போது 813 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 119 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    • வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுவன் மாயமானான்.
    • காங்கயம் போலீசார் ‘சிசிடிவி’ பதிவுகளை பார்வையிட்டு தேடினர்

    திருப்பூர் :

    திருப்பூர் அடுத்த காங்கயத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி மஞ்சுளா . இவர்களுக்கு ரிதன் என்ற 3½ வயது மகன் உள்ளார்.கடந்த 2ந்தேதி வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுவன் மாயமானான். புகாரின் பேரில் காங்கயம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதியினர் தேடி வருகின்றனர்.சிறுவனை கடத்தி சென்றார்களா என்ற கோணத்திலும் அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' பதிவுகளை பார்வையிட்டு தேடினர். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை.

    இந்தநிலையில் வீட்டுக்கு அருகே பி.ஏ.பி., வாய்க்கால் செல்லும் காரணத்தால், சிறுவன் அங்கு ஏதாவது சென்றானா என்ற சந்தேகத்தின் பேரில் தேட ஆரம்பித்தனர்.சிறுவனை தேடும் பணிக்காக வாய்க்காலில் ஆங்காங்கே மதகுகள் அடைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இப்பணியில், 20க்கும் மேற்பட்ட போலீசார், மற்றும் தீயணைப்பு படை வீரர்கள், பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். சிறுவன் மாயமாகி 7 நாட்கள் ஆகியும் எந்த ஒரு தகவலும் கிடைக்காததால் பெற்றோர் மற்றும் அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சோகத்தில் உள்ளனர்.

    • உடுமலை கால்வாய் வாயிலாக 14,612 ஏக்கர், பாசன வசதி பெற்று வருகிறது.
    • 38 கி.மீ., தொலைவுக்கு இக்கால்வாய் அமைந்துள்ளது.

    உடுமலை :

    பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தில் உடுமலை கால்வாய் வாயிலாக 14,612 ஏக்கர், பாசன வசதி பெற்று வருகிறது. ஆயக்கட்டு பகுதியில், மக்காச்சோளம் பிரதானமாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது.திருமூர்த்தி அணை அருகே பிரதான கால்வாயில் இருந்து பிரிந்து 38 கி.மீ., தொலைவுக்கு இக்கால்வாய் அமைந்துள்ளது.

    தற்போது இரண்டாம் மண்டலம், மூன்றாம் சுற்றுக்கு தண்ணீர் இக்கால்வாயில் சென்று வருகிறது. இந்நிலையில், வழியோரத்தில் தண்ணீர் திருட்டு காரணமாக கடைமடை பகுதிக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது.

    பருவமழை பெய்யாத பகுதிகளில் நிலைப்பயிராக உள்ள மக்காச்சோளத்துக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டியுள்ளது. எனவே அனைத்து மடைகளுக்கும் போதுமான தண்ணீர் கிடைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தண்ணீர் திருட்டை தடுக்க இரவு நேரங்களில் போலீஸ், பொதுப்பணித்துறையினர் உள்ளடக்கிய கண்காணிப்பு குழுவினர் ரோந்து சென்று தண்ணீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆயக்கட்டு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • வாய்க்காலில் தவறி விழுந்து தண்ணீரில் மல்லிகா அடித்து செல்லப்பட்டார்.
    • கல்லுக்குட்டை மேடு என்ற இடத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

    வெள்ளகோவில் :

    காங்கேயம், திருப்பூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா (வயது 59). இவர் நேற்று அப்பகுதியில் செல்லும் பிஏபி. கிளை வாய்க்காலில் துணி துவைக்க சென்றுள்ளார், அப்போது வாய்க்காலில் தவறி விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

    இந்தநிலையில் மல்லிகா வெள்ளகோவில் அருகே உள்ள கல்லுக்குட்டை மேடு என்ற இடத்தில் பிணமாக மீட்கப்பட்டார். வெள்ளகோவில் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • 3 லட்சத்து 77 ஆயிரத்து ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றது.
    • 6 மாதங்களுக்கு ஒரு மண்டலம் வீதம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    உடுமலை :

    பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த 3 லட்சத்து 77 ஆயிரத்து ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றது. இந்த பாசனப்பகுதிகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 6 மாதங்களுக்கு ஒரு மண்டலம் வீதம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி 2 வது மண்டல பாசனத்திற்காக தண்ணீர் திருமூர்த்தி அணையிலிருந்து கடந்த மாதம் ஆகஸ்டு 26 ந் தேதி திறந்துவிடப்பட்டது. இதன் மூலம் திருப்பூர் மாவட்டங்களில் 94 ஆயிரத்து 201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த தண்ணீர் உடுமலை கால்வாயிலும் சென்று கொண்டுள்ளது. இந்த கால்வாயில் ஆங்காங்கு படிக்கட்டுகள் உள்ளன. அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அந்த படிக்கட்டுக்குள் பகுதியில் குளிப்பார்கள். அத்துடன் துணிகளை கொண்டு வந்து துவைப்பார்கள்.

    இந்நிலையில் இந்த கால்வாயில் அரசு கல்லூரிக்கு அருகே எஸ்.வி.புரம் மற்றும் பல இடங்களில் படிக்கட்டுகள் மற்றும் கான்கிரீட் கரை பகுதிகள் தெரியாத அளவுக்கு தண்ணீர் நிரம்பி செல்கிறது. கரைப்பகுதியை மூழ்கடித்து வெளியேறுகிறது. இதனால் கடைமடை பகுதிக்கு செல்ல வேண்டிய தண்ணீர் அளவு குறையகூடும் .தண்ணீர் விரயமாவதைத்த தவிர்க்கும் வகையில் பி. ஏ. பி. உடுமலை கால்வாயில் கரைக்கு உள் பகுதியில் மட்டும் தண்ணீர் செல்வதற்கான நடவடிக்கைகளை பி.ஏ.பி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    • 6 மாதங்களுக்கு ஒரு மண்டலம் வீதம் பாசன வசதி பெற்று வருகிறது.
    • முதல் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது கடந்த மே மாதம் நிறைவடைந்தது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து பரம்பிக்குளம்-ஆழியாறு (பி.ஏ.பி) பாசனத்திட்டத்தில் திருப்பூர், கோவை மாவட்டத்தில் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த பாசன பகுதிகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 6 மாதங்களுக்கு ஒரு மண்டலம் வீதம் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த பாசன பகுதிகளுக்கான தண்ணீர் தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து கால்வாய்கள் மூலமாக பாசனபகுதிகளுக்கு திறந்து விடப்படுகிறது. முதல் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது கடந்த மே மாதம் நிறைவடைந்தது.

    இந்தநிலையில் தற்போது பிரதான கால்வாய்கள் மற்றும் கிளை (பகிர்மான) கால்வாய் கரைகளில் செடிகள் வளர்ந்துள்ளன. கால்வாயின் உள்பகுதியிலும் செடிகள் வளர்ந்துள்ளன. 2-ம் மண்டல பாசனத்திற்கு வருகிற 28-ந்தேதி தண்ணீர் திறந்து விட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கால்வாய்களை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது உடுமலை கால்வாய் பிரிவு1-ல் திருமூர்த்தி அணையில் இருந்து தளி ஜல்லிபட்டி, பள்ளபாளையம், எஸ்.வி.புரம் வழியாக 23 கி.மீ.தூரத்தில் உள்ள தாந்தோணி வரை கால்வாய் கரையின் 2 பக்கங்களிலும் வளர்ந்துள்ள செடிகள் மற்றும் கால்வாயின் உள்புறம் வளர்ந்துள்ள செடிகள் வெட்டி அகற்றப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் ஆங்காங்கு நடைபெற்று வருகிறது.

    அத்துடன் உடுமலை கால்வாயில் இருந்து 2-ம் மண்டல பாசன பகுதிகளுக்கு தண்ணீர் செல்லும் கிளை (பகிர்மான கால்வாய்) கால்வாய்கள் மற்றும் கரைப்பகுதிகளில் வளர்ந்துள்ள செடிகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தற்போது ஜல்லிபட்டியில் உடுமலை (பிரதான) கால்வாய், சின்னவீரன்பட்டி, எஸ்.வி.புரம் ஆகிய பகுதிகளில் கிளை கால்வாய் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

    • முக்கிய கால்வாய்கள் பராமரிப்பே பரிதாபமாக உள்ளது.
    • பகிர்மான கால்வாய்களின் நிலை படுமோசமாக உள்ளது.

    உடுமலை :

    பிரதான கிளை மற்றும் பகிர்மான கால்வாய்கள் பராமரிப்பு குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதால் திருப்பூர் மாவட்டத்தில் பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனம் குறித்த நேரத்தில் துவங்குவது கேள்விக்குறியாகியுள்ளது.

    பி.ஏ.பி., முதலாம் மண்டல பாசனத்துக்கு கடந்த ஆண்டு, டிசம்பர் 25-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டு, 5 சுற்றுகளாக 9,500 மில்லியன் கனஅடி நீர், திருமூர்த்தி அணையிலிருந்து வழங்கப்பட்டது.அந்த மண்டல பாசனம், மே மாதத்தில் நிறைவு பெற்ற நிலையில் இரண்டாம் மண்டல பாசனத்துக்கு வரும் ஆகஸ்டு மாதம் தண்ணீர் திறக்கப்பட வேண்டும். இந்த மண்டலத்தில் கோவை, திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட 94,201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது.

    பி.ஏ.பி., பாசனத்துக்கு தொகுப்பு அணைகளில் இருந்து திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் வாயிலாக பெறப்படும் தண்ணீரே ஆதாரமாக உள்ளது. இக்கால்வாயில் கி.மீ., 30 முதல் 49 வது கி.மீ., வரை புதுப்பித்தல் பணிக்காக 72 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்தது.

    பணிக்கான நிர்வாக ஒப்புதல், பிப்ரவரி 2021ல், பெறப்பட்டது. இந்நிலையில் இந்த புதுப்பித்தல் பணிகள் இதுவரை நிறைவு பெறவில்லை.தென்மேற்கு பருவமழையால் தொகுப்பு அணைகளான சோலையாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட அணைகள் நிரம்பிய போதும், திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது திருமூர்த்தி அணையின் நீர்மட்டம், 60 அடிக்கு 28.70 அடி மட்டுமே உள்ளது. ஆகஸ்டில், இரண்டாம் மண்டல பாசனம் குறித்த நேரத்தில் துவங்க, காண்டூர் கால்வாய் பணிகளை துரிதப்படுத்தி தொகுப்பு அணைகளில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் பெற வேண்டும்.

    திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி., நான்கு மண்டலத்துக்குரிய 3.77 லட்சம் ஏக்கருக்கு பிரதான கால்வாய் வழியாகவே தண்ணீர் திறக்கப்படும். இந்த கால்வாய் பல இடங்களில் கரைகள் சரிந்து மண் கால்வாயாக மாறி விட்டது.தண்ணீர் திருட்டு காரணமாக கடைமடை பகுதிகள் பாதிப்பதாக வெள்ளகோவில் பகுதி விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கரையில்லாத பிரதான கால்வாயில், நீரிழப்பு அதிகரிப்பதுடன் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, பாசனம் பாதிக்கும் நிலை உள்ளது.இரண்டாம் மண்டல பாசனம் துவங்கும் முன் படுமோசமாக உள்ள கால்வாயில், அடிப்படை பராமரிப்பு பணிகளையாவது மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை.தற்போதே பணிகளை துவக்கினால் மட்டுமே, ஆகஸ்டில் தண்ணீர் திறக்கும் போது பணிகளை முடிக்க முடியும்.

    முக்கிய கால்வாய்கள் பராமரிப்பே பரிதாபமாக உள்ள நிலையில், சுழற்சி முறையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையே கிளை கால்வாய்களில், தண்ணீர் திறக்கப்படும்.இதனால் இரண்டாம் மண்டல பாசன கால்வாய்களே தற்போது தேடினால் கிடைக்காது. முறையான பராமரிப்பின்றி, புதர் மண்டி கால்வாயை கண்டுபிடிக்க வேண்டிய நிலை உள்ளது. உடுமலை கால்வாய், புதுப்பாளையம் கிளை கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் முன்பாவது பொதுப்பணித்துறையினர் தேடிக்கண்டுபிடிக்க வேண்டும் என்பது விவசாயிகள் கோரிக்கையாக உள்ளது.வழக்கமாக அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு இரண்டு நாட்கள் முன் கரையிலும் கால்வாயிலும் உள்ள புதர்களை அகற்றி விட்டு பாசனத்துக்கு தயாராவது பொதுப்பணித்துறையினர் வழக்கமாக உள்ளது.

    பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள கால்வாய்கள் நிலை இப்படி இருக்கும் போது, பாசன சபை கட்டுப்பாட்டிலுள்ள பகிர்மான கால்வாய்களின் நிலை படுமோசமாக உள்ளது. சமீபத்தில் பாசன சபைக்கு ஆர்வத்துடன் போட்டியிட்டு தேர்வான பாசன சபை நிர்வாகிகள் பகிர்மான கால்வாய்களை தூர்வார நிதியில்லாததால், திணறி வருகின்றனர்.வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பகிர்மான கால்வாய்களை தூர்வார மாவட்ட நிர்வாகத்துக்கு, கோரிக்கை மனு அனுப்பி காத்திருக்கின்றனர்.நீர் வளத்தை பாதுகாக்க, பொதுப்பணித்துறையிலிருந்து நீர்வளத்துறையை தனியாக பிரித்த தி.மு.க., அரசு, இரு மாவட்டத்திலும், பல லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் பி.ஏ.பி., பாசனத்திட்ட மேம்பாட்டிலும் அக்கறை காட்ட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    • திருப்பூர் மாவட்டம், காங்கயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுமார் 48 ஆயிரத்து 384 ஏக்கர் பாசன பரப்பை கொண்டது.
    • ரூ.1 கோடி மதிப்பில் 6 இடங்களில் குழாய்களை அகற்றி சிறு பாலங்கள் அமைக்கும் பணியை செய்தித்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில், முத்து ரோடு, எம்ஜிஆர் நகர் அருகே ஒரு கோடி மதிப்பில் பிஏபி கிளை வாய்க்கால் புனரமைக்கும் பணியை செய்திதுறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் துவக்கி வைத்தார்.

    பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் வெள்ளகோவில் கிளை வாய்க்காலானது பரம்பிக்குளம் பிரதான கால்வாய் சரகம் 126.100 கிலோமீட்டரிலிருந்து பிரிகிறது, கடந்த 1981 ம் ஆண்டு முதல் 1986 ம் ஆண்டு வரை பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட ஆயக்கட்டு பகுதிகளை விரிவாக்கம் செய்யும் நோக்கத்தின் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது/

    இந்த வாய்க்காலின் மொத்த நீளம் 270.650கிலோமீட்டர் ஆகும். இந்த வாய்க்காலானது திருப்பூர் மாவட்டம், காங்கயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுமார் 48 ஆயிரத்து 384 ஏக்கர் பாசன பரப்பை கொண்டதாகும்.தன் மொத்த ஆயக்கட்டு பரப்பு நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு முதலாம் மண்டலத்தில் 12.108 ஏக்கர், இரண்டாம் மண்டலத்தில் 12 ஆயிரத்து176 ஏக்கர், மூன்றாம் மண்டலத்தில் 12 ஆயிரத்து 91 ஏக்கர், நான்காம் மண்டலத்தில் 12 ஆயிரத்து 7 ஏக்கர் பாசனம் பெறப்பட்டு வருகிறது.

    திட்ட காலத்தில் அமைக்கப்பட்ட குறுக்கு கட்டுமானங்களான மதகுகள் மிகவும் சிதலமடைந்து இருப்பதால் அவற்றை சீரமைக்க வேண்டி இருப்பதாலும் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் பாசன காலங்களில் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதால் பாசன நீர் வழங்க இடையூர் ஏற்படுவதால் ரூ.1 கோடி மதிப்பில் 6 இடங்களில் குழாய்களை அகற்றி சிறு பாலங்கள் அமைக்கும் பணியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட திட்ட அலுவலர் லட்சுமணன்.தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை உடுமலைப்பேட்டை செயற்பொறியாளர் கோபி, உதவி செயற்பொறியாளர் வடிவேல், உதவிபொறியாளர் கோகுல சந்தானகிருஷ்ணன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.மோகன செல்வம்,தி.மு.க.நகர செயலாளர் கே.ஆர். முத்து குமார்,நகர துணை செயலாளர் சபரி.எஸ்.முருகானந்தன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள்,உள்ளாட்சி பிரதிநிதிகள், பாசன சபை நிர்வாகிகள்,காங்கேயம் தாசில்தார் புவனேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • இரண்டாம் மண்டல பாசனத்தில் பி.ஏ.பி. வாய்க்காலில் 14,662 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது.
    • கால்வாய் ஷட்டர்களில் கழிவுகள் தேங்கி தண்ணீர் விரயமும் அதிகரிக்கிறது.

    உடுமலை :

    பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில் உடுமலை கால்வாய் வாயிலாக நான்கு மண்டலங்களில் 58 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வரும் இரண்டாம் மண்டல பாசனத்தில் இந்த வாய்க்காலில் 14,662 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது.

    இந்த கால்வாயில் போடிபட்டி, பள்ளபாளையம், அரசு கலைக்கல்லூரி பின்பகுதி, கணக்கம்பாளையம், எஸ்.வி., புரம், எஸ்.வி., மில் உட்பட பகுதிகளில், கால்வாயில் அனைத்து வகையான குப்பையும் கொட்டப்படுகிறது.குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவு கொட்டப்படுவதால் கால்வாயே காணாமல் போகும் அவல நிலையில் உள்ளது. பாசனத்துக்கு, கால்வாயில் தண்ணீர் திறக்கும் போது இத்தகைய குப்பை விளைநிலத்தில் தேங்குவதுடன், மண் வளத்தையும் பாதித்து வருகிறது. மேலும் பகிர்மான கால்வாய் ஷட்டர்களில் கழிவுகள் தேங்கி தண்ணீர் விரயமும் அதிகரிக்கிறது.

    பாசனத்துக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் முன் பொதுப்பணித்துறை சார்பில் அவசர கதியில் உடுமலை வாய்க்காலில் உள்ள குப்பை அகற்றப்படுகின்றன.நீர் நிர்வாகம் மற்றும் மண் வளத்தை பாதிக்கும் இப்பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் தரப்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.பொதுப்பணித்துறை சார்பில் கால்வாயில், குப்பை கொட்டப்படுவதை தவிர்க்க குறிப்பிட்ட இடங்களில் கம்பி வேலி அமைக்க திட்டமிடப்பட்டது. திட்டத்துக்கான கருத்துரு தயாரிக்கப்பட்டு அரசு ஒப்புதலுக்கும் அனுப்பப்பட்டது.ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாசன திட்டத்தை பாதுகாக்க உடனடியாக அரசு நிதி ஒதுக்கி நடப்பு சீசனில், பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ் சுமார் 4 லட்சம் ஏக்கர் அளவிற்கு மேல் பாசனம் நடைபெற்று வருகிறது.
    • பி.ஏ.பி., திட்டம் வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே இருக்கும்.

    பல்லடம் :

    பி.ஏ.பி., பாசனத் திட்டத்தில் ஒட்டன்சத்திரம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ் சுமார் 4 லட்சம் ஏக்கர் அளவிற்கு மேல் பாசனம் நடைபெற்று வருகிறது. பாசனத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் பற்றாக்குறை இருந்து வரும் சூழ்நிலையில், அணையில் தண்ணீர் இருக்கும்போதே, தண்ணீர் இல்லை என்று கூறி அதிகாரிகள் பாசனத்துக்கான தண்ணீரை நிறுத்துகின்றனர்.

    இந்த சூழ்நிலையில் 150 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்துக்கு எவ்வாறு தண்ணீர் வினியோகிக்க முடியும் ? பி.ஏ.பி., பாசன விவசாயிகள் ஏற்கனவே தண்ணீர் இல்லாமல் பற்றாக்குறையில் தவித்து வருகின்றனர்.இதில் ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் வினியோகித்தால், பி.ஏ.பி., திட்டம் வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே இருக்கும்.

    எனவே பி.ஏ.பி., பாசன விவசாயிகளை பாதிக்கும் இந்த திட்டத்தை தமிழக அரசு உடனே ரத்து செய்ய வேண்டும். இதை கண்டித்து, வரும் ஜூன் 27-ந் தேதி அன்று பொள்ளாச்சி, உடுமலையில் நடக்கவுள்ள கண்டன ஆர்ப்பாட்டம், மற்றும் கடையடைப்பு போராட்டத்துக்கு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் முழு ஆதரவு அளித்து திருப்பூர் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்துகொள்ள உள்ளோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×