search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police patrol"

    • 60-வது வார்டு கோவில்வழி. தென் மாவட்டங்கள் செல்வதற்கான பேருந்து நிலையம் இங்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
    • கோவில் வழியில் போதிய சிசிடிவி., கேமராக்கள் இல்லாததால், திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க முடியாத நிலை உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரின் 60-வது வார்டு கோவில்வழி. தென் மாவட்டங்கள் செல்வதற்கான பேருந்து நிலையம் இங்கு விரிவாக்கம் செய்யப்பட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டு வருவதால் பொதுமக்கள் பலரும் இந்த பகுதியில் குடியேறி வருகின்றனர்.

    இப்பகுதியில் அடிக்கடி தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்தவரும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொறுப்பாளருமான பரமசிவம் கூறியதாவது:-

    கோவில்வழி பகுதியை சுற்றியுள்ள முத்தணம்பாளையம், பிள்ளையார் நகர் மேற்கு, சேரன் நகர் ஆகிய 3 பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிகளில் சமீபகாலமாக திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சேரன் நகர் 2-வது வீதியில் ஈஸ்வரன் - ராணி தம்பதி வீட்டில் 8 பவுன் நகைகள் திருட்டு,சண்முகம் - சண்முகப் பிரியா தம்பதி வீட்டில் கடந்த அக்டோபர் மாதம் 8 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் திருட்டு, நடைபெற்றது, இதனை தொடர்நது ஜெயராஜ் - மாலதி தம்பதி வீட்டில் கடந்த ஆண்டு இறுதியில் 3 பவுன் தங்க நகை, வெள்ளி, ரொக்கம் திருட்டு என இப்பகுதிகளில் அரங்கேறிய திருட்டு சம்பவங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

    இந்த வழக்கு தொடர்பாக நல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, பல மாதங்களாகியும் இதுவரை எந்த வழக்கிலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. நடுத்தர குடும்பத்தினர் சிறுக சிறுக சேமித்து, நகையை வாங்கி வீட்டில் வைத்தால், அவற்றுக்கும் பாதுகாப்பற்ற சூழலே நிலவுகிறது.

    மாநகர போலீசார் தொடர்ந்து எங்கள் பகுதியில் இரவு மற்றும் பகல் நேரங்களில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தினால் மட்டுமே திருட்டு சம்பவங்களை தடுக்க முடியும். எங்கள் பகுதியில் போதிய தெருவிளக்குகளும் இல்லாததால், குற்றச்செயல்கள் அரங்கேற ஏதுவாக அமைந்து விடுகிறது. பொதுமக்களின் தேவை கருதி போதிய தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும் என கூறியுள்ளார்.

    இது தொடர்பாக, திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபுவிடம் கேட்டபோது, கோவில் வழியில் போதிய சிசிடிவி., கேமராக்கள் இல்லாததால், திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க முடியாத நிலை உள்ளது. அந்த பகுதியில் சிசிடிவி., கேமராக்கள் அமைக்க குடியிருப்பு வாசிகளிடம் பேசி வருகிறோம்" என்றார்.

    • 25 பாட்டில்கள் பறிமுதல்
    • சிறையில் அடைப்பு

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி நியூ டவுன் சாலையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப் போது அங்கு அரசு மதுபான பாட்டில்களை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த கோனாமேடு பகுதியை சேர்ந்த சசிகுமார்(வயது26) அரவிந்த்குமார்(25) ஆகிய இருவரையும் பிடித்தனர்.

    அவர்களிடம் விற்பனைக்காக வைத்திருந்த 25 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • 70 மதுபாட்டில்கள், மொபட் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணியை அடுத்த சதுப்பேரி பகுதியில் டாஸ்மாக் மதுபா னங்களை வீட்டில் பதுக்கி வைத்து அதிகவிலைக்கு விற்பனை செய்து வருவதாக களம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சத்யா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது செல்வராஜ் (வயது 60) என்பவரின் வீட்டில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து சுமார் 70 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் மது விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்
    • சட்டம் ஒழுங்கு குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் சட்டம் ஒழுங்கு குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது வெட்டுவானம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே ஏற்ப்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் விசாரித்தார்.

    இதில் இரு பிரிவினரையும் ஆர்டிஓ முன்பு ஆஜர் படுத்தி சுமுக பேச்சு வார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்யவும், இரு பிரிவினருடைய சுமுக பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்ப டவில்லை எனில் இரு பிரிவினர்கள் மீதும் வழக்குப்பதியவும் உத்தரவிட்டுள்ளார்.

    இதையடத்து பள்ளிகொண்டா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ரோந்து பணிகள் குறித்தும், குற்றச்சம்பவங்களை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், பள்ளி பகுதிகளில் பள்ளி மாணவர்கள் சென்று வரும் நேரங்களில் ரோந்து பணிகள் மேற்கொள்வது குறித்தும் கேட்டறிந்தார்.

    மேலும் இணைய வழி குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் குறித்தும் ஆய்வின் போது கேட்டறிந்தார்.

    இந்த திடீர் ஆய்வின் போது பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணாகரன் துணை இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி சிறப்பு தனிப்பிரிவு போலீஸ் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • பண்ருட்டி அருகே அம்மன் கோவிலில் தாலி திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இந்த தனிப்படையினர் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விசூர் காலனியில் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 12-ந் தேதி மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் கிடந்த தாலி, குத்துவிளக்கு ஆகியவற்றை திருடிசென்றனர். இந்த கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ள பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து முத்தாண்டி குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.நேற்று இரவு விசூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது 2 பேர் சந்தேகப்படும்படியாக வந்தனர்.இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.ஆனால் 2 பேரும் முன்னுக்குபின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

    உடனே 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரிக்க ப்பட்டனர். விசாரணையில் அவர்கள் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவிலில் திருடியதை ஒப்புக்கொண்டனர். உடனே 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களது பெயர் அய்யனார் (வயது 35), அங்கப்பன் (25) என்றும் 2 பேரும் விசூர் காலனி பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இவர்களிடம் இருந்து அம்மன் தாலி, குத்து விளக்கு பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேரும் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்
    • அரசு மதுபாட்டில்கள் பறிமுதல்

    ஜோலார்பேட்டை:

    திருவள்ளுவர் தினத்தை முன் னிட்டு நேற்று டாஸ்மாக் கடை களுக்கு விடுமுறை விடப்பட் டது. இதனால் ஜோலார் பேட்டைபோலீஸ் இன்ஸ்பெக் டர் மங்கையர்க்கரசி, சப்- இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப் போது பாச்சல் பகுதியில் பெட்டிக்கடையில் மது விற்பதாக தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் அங்குசென்று பெட்டிக்கடை யில் சோதனை செய்ததில் அரசு மதுபாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதனையடுத்து கடை உரி மையாளர் ஜோதி (வயது 60) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெல்லையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி போலீசார் ரோந்து பணிகளை அதிகப்படுத்தி உள்ளனர்.
    • சோதனையில் ‘நம்பர் பிளேட்’ இல்லாத மோட்டார் சைக்கிள்கள் உள்பட சுமார் 77 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    நெல்லை:

    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி நெல்லையில் போலீசார் ரோந்து பணிகளை அதிகப்படுத்தி உள்ளனர்.

    குறிப்பாக மாநகர பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், ஜவுளிக்கடைகள், தியேட்டர்கள் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனையொட்டி மாநகர பகுதியில் உள்ள டவுன், சந்திப்பு, தச்சநல்லூர், பாளை, கே.டி.சி.நகர், பெருமாள்புரம், டக்கம்மாள்புரம், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்த போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் உத்தரவிட்டார்.

    அதன்படி கிழக்கு மண்டல துணை கமிஷனர் சீனிவாசன் மற்றும் மேற்கு மண்டல துணை கமிஷனர் சரவணக்குமார் ஆகியோரின் அறிவுறுத்தலின்பேரில் மாநகரில் நேற்றிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    நள்ளிரவு வரையில் நடைபெற்ற இந்த சோதனையில் 'நம்பர் பிளேட்' இல்லாத மோட்டார் சைக்கிள்கள் உள்பட சுமார் 77 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    • தலையில் அண்டாவை கவிழ்த்து மளிகை கடையில் திருடிய கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • முகத்தை மறைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    செஞ்சி, டிச.3-

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜாரில் உள்ள பிரபல மளிகை கடையில் கொள்ளை போனது. இந்த கடையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக மாடி வழியே கதவை உடைத்து உள்ளே புகுந்த திருடன் சி.சி.டி.வி. கேமராவில் முகம் பதிவாகாமல் இருப்பதற்கு தலையில் அண்டாவை கொண்டு முகத்தை மறைத்து டார்ச் லைட் அடித்து கடையில் உள்ள பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர் ராஜகோபால் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் செ ஞ்சியில்சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்து கொண்டிருந்த 2பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் செஞ்சி காந்தி பஜாரில் உ ள மளிகை கடையில் உள்ளே புகுந்து தலையில் அண்டாவை கொண்டு முகத்தை மறைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதுதெரிய வந்தது. இத்தி ருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட செஞ்சி சக்கராபுரம் பகுதியை சேர்ந்த உத்தரவேல் (வயது39), வெங்க டேசன் , செஞ்சி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த கர்ணன் ஆகியயோர் ஈடுபட்டனர். இவர்களை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகி ன்றனர்.

    • உடுமலை கால்வாய் வாயிலாக 14,612 ஏக்கர், பாசன வசதி பெற்று வருகிறது.
    • 38 கி.மீ., தொலைவுக்கு இக்கால்வாய் அமைந்துள்ளது.

    உடுமலை :

    பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தில் உடுமலை கால்வாய் வாயிலாக 14,612 ஏக்கர், பாசன வசதி பெற்று வருகிறது. ஆயக்கட்டு பகுதியில், மக்காச்சோளம் பிரதானமாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது.திருமூர்த்தி அணை அருகே பிரதான கால்வாயில் இருந்து பிரிந்து 38 கி.மீ., தொலைவுக்கு இக்கால்வாய் அமைந்துள்ளது.

    தற்போது இரண்டாம் மண்டலம், மூன்றாம் சுற்றுக்கு தண்ணீர் இக்கால்வாயில் சென்று வருகிறது. இந்நிலையில், வழியோரத்தில் தண்ணீர் திருட்டு காரணமாக கடைமடை பகுதிக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது.

    பருவமழை பெய்யாத பகுதிகளில் நிலைப்பயிராக உள்ள மக்காச்சோளத்துக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டியுள்ளது. எனவே அனைத்து மடைகளுக்கும் போதுமான தண்ணீர் கிடைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தண்ணீர் திருட்டை தடுக்க இரவு நேரங்களில் போலீஸ், பொதுப்பணித்துறையினர் உள்ளடக்கிய கண்காணிப்பு குழுவினர் ரோந்து சென்று தண்ணீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆயக்கட்டு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • சுற்றுலா பயணிகளின் வரத்து ஆரோவில் பகுதிகளில் அதிகமாக இருக்கும்.
    • தங்கும் விடுதி ஒன்றில் போலீசார் வருவதை கண்டவுடன் ஒரு பெண் தப்பி ஓடிவிட்டார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே ஆரோவில் சுற்றுலாப் பயணிகளின் புகழ்பெற்ற இடம் ஆகும். மேலும் இந்த பகுதியில் வெளிநாட்டவர் தங்கம் விடுதிகள் ஏராளமாக உள்ளன. இதனால் சுற்றுலா பயணிகளின் வரத்து ஆரோவில் பகுதிகளில் அதிகமாக இருக்கும். ஆரோவில் அருகே குயிலாபாளையம், பட்டானூர் ஆகிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தங்குவதற்கு ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த தங்கும் விடுதிகளில் இரவு நேரங்களில் விபச்சாரம் நடைபெறுவதாக ஆரோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பெயரில் ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் நேற்று இரவு குயிலா பாளையம் பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனை மேற்கொண்டார். அப்போது பெண் உள்பட2 வாலிபர்களை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். மேலும் இதே போன்று பட்டானூர் பகுதியில் சோதனை செய்தபோது அங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் போலீசார் வருவதை கண்டவுடன் ஒரு பெண் தப்பி ஓடிவிட்டார். மேலும் வாலிபர் ஒருவர் போலீசாரிடம் பிடிபட்டார்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்ததில் சிதம்பரத்தை சேர்ந்த சிதம்பரக்கனி (வயது 28), கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த கார்த்தி (22), புவனகிரி பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (29) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் 3 வாலிபர்களையும் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர். பிடிபட்ட பெண் விழுப்புரம் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். வெளிநாட்டு சுற்றுலா பயணியர் அதிகம் கூடும் இடமான ஆரோவில் பகுதியல் உள்ள தங்கும் விடுதிகளில் சமீப காலமாக விபச்சார கூடமாக மாறி வருவது அங்குள்ள பொது மக்களிடையே வருத்தத்தை அளிக்கிறது.

    • புதுவையில் இருந்து கேரளாவுக்கு கார் கடத்த முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீஸ்காரர் ஜீவரத்தினம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

     விழுப்புரம்:

    புதுவை மாநிலம் லாஸ்பேட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எட்டியாஸ் காரை யாரோ மர்ம நபர்கள் கடத்தி செல்வதாக போலலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் கோட்டகுப்பம் பகுதியில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மாவட்ட முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து அனைத்து போலீசாரும் தீவிர கண்க்காணிப்பில் இருந்தனர். மரக்காணம் போலீஸ் எல்லைக்குட்பட்ட தாழங்காடு கிராமம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீஸ்காரர் ஜீவரத்தினம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது பெயர் முகமது அஸ்லாம் (வயது 24). கேரள மாநிலம் ஏரிக்குளம் பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. இவர் புதுவையில் இருந்து கேரளாவுக்கு காரை கடத்தி சென்றதாக தெரிவித்தார்.உடனே போலீசார் அவரை கைது செய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கடலூரில் பிரபல ரவுடி வீரா கொலை செய்யப்பட்ட பிறகு பழிக்கு பழி கொலை சம்பவம் நடந்து வந்த நிலையில் மீண்டும் கொலை சம்பவம் நடத்த திட்டம் தீட்டிய கும்பலை போலீசார் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர்:

    கடலூர் கெடிலம் ஆறு பகுதியில் ஒரு கும்பல் சந்தேகம் படும்படியாக இருப்பதாக கடலூர் புதுநகர் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுஅதன் பேரில் இன்ஸ்பெக்டர்கள் கவிதா, குருமூர்த்தி, மற்றும் போலீசார் சம்பவத்திற்கு சென்றனர். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அங்கு இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் 5 பேர் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்

    விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இதில் கடலூர் குப்பன் குளம் சேர்ந்தவர்கள் ஜீவா (வயது 22), மதன்குமார் (18), நவீன்ராஜ் (வயது 20) மற்றும் புதுப்பாளையம் குப்பன் குளம் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் என தெரியவந்தது‌. மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் பிரபல ரவுடி வீரா என்பவரை கொலை செய்த ஒரு கும்பலை கைது செய்தது.இந்த வழக்கு தொடர்பாக கிருஷ்ணன் என்பவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த கொலை வழக்கு முன் விரோத தொடர்பாக கிருஷ்ணன் மனைவி காந்திமதி என்பவரை ஒரு கும்பல் கடந்த 2021 -ஆம் ஆண்டு கொலை செய்தனர். இந்த வழக்குகளில் ஜீவா, மதன் குமார் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் தொடர்புடையவர்கள் என தெரிய வந்தது. மேலும் கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி வீரா என்பவரின் தந்தை கனகராஜ் என்பவரை இந்த கும்பலை சேர்ந்தவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் கொலை செய்யப்பட்ட வீரா வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் மீண்டும் இந்த கும்பல் கொலை செய்வதற்கு சதி திட்டம் தீட்டியதும் தெரிய வந்துள்ளது. மேலும் ஏற்கனவே கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் கோவில் உண்டியல் திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சக்தி என்பவரும் மேற்கண்ட கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். கடலூரில் பிரபல ரவுடி வீரா கொலை செய்யப்பட்ட பிறகு பழிக்கு பழி கொலை சம்பவம் நடந்து வந்த நிலையில் மீண்டும் கொலை சம்பவம் நடத்த திட்டம் தீட்டிய கும்பலை போலீசார் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×