search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பி.ஏ.பி., கால்வாயில் இருந்து வெளியேறும் தண்ணீர்
    X

    பி.ஏ.பி., கால்வாய்.

    பி.ஏ.பி., கால்வாயில் இருந்து வெளியேறும் தண்ணீர்

    • 3 லட்சத்து 77 ஆயிரத்து ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றது.
    • 6 மாதங்களுக்கு ஒரு மண்டலம் வீதம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    உடுமலை :

    பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த 3 லட்சத்து 77 ஆயிரத்து ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றது. இந்த பாசனப்பகுதிகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 6 மாதங்களுக்கு ஒரு மண்டலம் வீதம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி 2 வது மண்டல பாசனத்திற்காக தண்ணீர் திருமூர்த்தி அணையிலிருந்து கடந்த மாதம் ஆகஸ்டு 26 ந் தேதி திறந்துவிடப்பட்டது. இதன் மூலம் திருப்பூர் மாவட்டங்களில் 94 ஆயிரத்து 201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த தண்ணீர் உடுமலை கால்வாயிலும் சென்று கொண்டுள்ளது. இந்த கால்வாயில் ஆங்காங்கு படிக்கட்டுகள் உள்ளன. அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அந்த படிக்கட்டுக்குள் பகுதியில் குளிப்பார்கள். அத்துடன் துணிகளை கொண்டு வந்து துவைப்பார்கள்.

    இந்நிலையில் இந்த கால்வாயில் அரசு கல்லூரிக்கு அருகே எஸ்.வி.புரம் மற்றும் பல இடங்களில் படிக்கட்டுகள் மற்றும் கான்கிரீட் கரை பகுதிகள் தெரியாத அளவுக்கு தண்ணீர் நிரம்பி செல்கிறது. கரைப்பகுதியை மூழ்கடித்து வெளியேறுகிறது. இதனால் கடைமடை பகுதிக்கு செல்ல வேண்டிய தண்ணீர் அளவு குறையகூடும் .தண்ணீர் விரயமாவதைத்த தவிர்க்கும் வகையில் பி. ஏ. பி. உடுமலை கால்வாயில் கரைக்கு உள் பகுதியில் மட்டும் தண்ணீர் செல்வதற்கான நடவடிக்கைகளை பி.ஏ.பி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×