search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plants"

    • மழை நீர் மூழ்கி சம்பா நேரடி விதைப்பு நெற்பயிரை வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.
    • இளம் நாற்றுகள் பாதிக்கப்பட்டிருக்கும் இடங்களில் அதே ரக நாற்றுகளைக் கொண்டு நடவு செய்ய வேண்டும்.

    சீர்காழி:

    கொள்ளிடம் அருகே அளக்குடி, ஆச்சாள்புரம்,மகாராஜபுரம்,நல்லூர், பச்சபெருமாள் நல்லூர், நல்ல நாயகபுரம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் மூழ்கி பின்னர் வடிந்த நிலையில் உள்ள சம்பா நேரடி விதைப்பு நெற்பயிரை கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குனர் எழில்ராஜாநேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நல்ல விநாயகபுரம் கிராமத்தில் தண்ணீரில் மூழ்கி பின்னர் வடிந்த நிலையில் நெற்பயிரை பார்வையிட்ட எழில்ராஜா எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து விவசாயிகளிடம் விளக்கம் அளித்து பேசுகையில் ,

    சமீபத்தில் பெய்த மழையால் சம்பா தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.வயல்களில் தேங்கியுள்ள அதிகப்படியான மழைநீரை முதலில் வெளியேற்ற வேண்டும்.

    இளம் நாற்றுகள் பாதிக்கப்பட்டிருக்கும் இடங்களில் அதே ரக நாற்றுகளைக் கொண்டு நடவு செய்ய வேண்டும். வடிகால் வசதியின்றி முழுமையாக பாதிக்கப்பட்ட வயல்களில் குறுகிய கால நெல் இரகங்களை சாகுபடி செய்யலாம்.

    தேங்கியுள்ள நீரை வடித்தவுடன் வரிசை நடவு மேற்கொண்ட வயல்களில் கோனோவீடர் அல்லது ரோட்டரிவீடர் கருவி மூலம் மண்ணில் காற்றோட்டத்தை ஏற்படுத்தி வேர்கள் மண்ணில் உள்ள சத்துக்களை எடுத்துக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.

    நீர் வடிந்த பிறகு பயிரின் வளர்ச்சி சரியாக இல்லாத இடங்களில் வளர்ச்சியை மேம்படுத்த ஒரு ஏக்கருக்கு 22 கிலோ யூரியா. 18 கிலோ ஜிப்சம், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து ஒரு நாள் இரவு வைத்திருந்து இத்துடன் 17 கிலோ மியூரியேட்ஆப்பொட்டாஷ் கலந்து வயலில் சீராக தூவ வேண்டும்.

    இந்த உரங்களை இடும்பொழுது வயலில் சீராக தண்ணீர் வைத்துக்கொள்வதுடன் நீர் வெளியேறாதவாறு பராமரிக்க வேண்டும்.

    பயிரின் வளர்ச்சி மிகவும் குன்றி, துத்தநாக சத்து குறைபாடு தென்பட்டால் உடனடியாக ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ யூரியா, 1 கிலோ ஜிங்க் சல்பேட் கரைத்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.மழைக்காலங்களில் நீர்தேங்கி நின்ற வயல்களில் இலை வழி உரத்தெளிப்பு சிறந்த பலனை தரும். நானோ யூரியா ஏக்கருக்கு 250 மில்லியை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

    இப்ப பருவமழை காலத்தில் போதிய சூரிய வெளிச்சம் இல்லாததாலும் குளிர்ச்சியான சீதோஷ்ன நிலையாலும் மண்ணின் வெப்பநிலை குறைவாக காணப்படுவதாலும் நெற்பயிரில் போதிய சத்துக்களை வேர் வழியாக எடுத்துக் கொள்ள முடியாது.

    இத்தருணத்தில் ஏக்கருக்கு 2 கிலோ யூரியா, 2 கிலோ டி.ஏ.பி மற்றும் 2 கிலோ மியூரி பேட் ஆப் பொட்டாஷ் 200 லிட்டர் நீரில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் தெளிக்க வேண்டும் என்றார்.

    • கபிலர்மலை வட்டாரத்தில் 2023-24-ம் ஆண்டு கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மலர் செடிகள்(மல்லிகை) ஆகியவை வழங்கப்பட உள்ளது.
    • மாடித்தோட்டம் அமைப்பதற்கான தொகுப்பினை ரூ.450 செலுத்தியும், பழச்செடிகள் தொகுப்பினை ரூ.50 செலுத்தியும் பெற்றுக் கொள்ளலாம்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் சின்னத் துரை செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா, கபிலர்மலை வட்டாரத்தில் 2023-24-ம் ஆண்டு கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கோப்பணம்பாளையம், திடுமல், திடுமல் கவுண்டம்பாளையம் மற்றும் பெருங்குறிச்சி உள்ளிட்ட 4 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    இந்த ஊராட்சிகளில் உள்ள விவசாயிகளுக்கு, தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறையின் மூலம் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பழக்கன்றுகள் (மா, கொய்யா, எலுமிச்சை), காய்கறி நாற்றுகள் (தக்காளி, மிளகாய், கத்தரி), விதைகள் (வெண்டை, வெங்காயம்), மலர் செடிகள்(மல்லிகை) ஆகியவை வழங்கப்பட உள்ளது.

    மேலும் வெற்றிலை சாகுபடி செய்யும் விவசாயி களுக்கு இயற்கை உரமும், வாழை மற்றும் பல்லாண்டு பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு காய்கறிகள் ஊடுபயிராக சாகுபடி செய்திட விதைகள் மற்றும் உயிர் உரங்களும் மானி யத்தில் வழங்கப்பட உள்ளது.

    வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வெங்காய சேமிப்பு கிடங்கு அமைத்திட ஒரு மெட்ரிக் டன் கொள்ளளவுக்கு ரூ.3 ஆயிரத்து 500 பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். மேலும் மேற்குறிப்பிட்ட ஊராட்சிகளில் உள்ள விவசாயி அல்லாதவர்கள் மாடித்தோட்டம் அமைப்பதற்கான தொகுப்பினை ரூ.450 செலுத்தியும், பழச்செடிகள் தொகுப்பினை ரூ.50 செலுத்தியும் பெற்றுக் கொள்ளலாம்.

    இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் தங்களது கணினி சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், ரேசன் கார்டு நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கபிலர்மலை வட்டார தோட்டக்கலை துறையினரை அணுகி பயன் பெறலாம் என தோட்டக்கலை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    • ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து நீரோட்டத்தையே காண முடியாத அளவுக்கு உள்ளது.
    • ஆற்றில் கலக்கும் கழிவுநீர் வழித்தடங்களை கண்டறிந்து அதனை தடுத்து அப்புறப்படுத்த வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூரில் நகரின் மையமாக ஓடம்போக்கி ஆறு செல்கிறது. ஒரு காலத்தில் இந்த ஆற்றில் ஓடம் போக்குவரத்து இருந்ததால் இதனை ஓடம்போக்கி ஆறு என்று அழைத்ததாக கூறுகின்றனர்.

    இந்த ஆற்றின் மூலம் திருவாரூர் நகரம், விளமல், வன்மீகபுரம், தியானபுரம், சாப்பாவூர், கடாரம்கொண்டான், அலிவலம், கீவளூர் ஆகிய இடங்களில் பாசன வசதிகளும் வழங்கப்பட்டு வந்தது.

    தற்போது இந்த ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து இருப்பது நீரின் போக்கை மாற்றுகிறது.

    மேலும் நகர்ப்புறங்களில் உள்ள தொழில் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் இந்த ஆற்றில் கலந்து விடுகிறது. இதனால் இந்த ஆற்றின் தண்ணீர் தெளிவற்ற நிலையில் கருமை நிறமாக காட்சியளிக்கிறது.

    மேலும் இந்த ஆற்றில் பெரும்பாலான இடங்களில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து நீரோட்டத்தையே காண முடியாத அளவுக்கு உள்ளது.

    இதனால் நீரின் தூய்மை மாறுவதோடு, ஆற்று நீரின் போக்கும் மாறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    எனவே இந்த ஆற்றில் தெளிந்த நீரோட்டம் இருக்கும் வகையில் செய்திட வேண்டும்.

    அதற்கேற்ற வகையில் ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும்.

    ஆற்றில் கலக்கும் கழிவுநீர் வழித்தடங்களை கண்டறிந்து அதனையும் தடுத்து, அப்புறப்படுத்த வேண்டும்.

    இதன் மூலம் ஆற்றில் தெளிவான நீரோட்டத்தை ஏற்படுத்தி நகரின் அழகை மேம்படுத்த வேண்டும்.

    இவ்வாறு பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
    • 4 மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.

    உடுமலை :

    பி.ஏ.பி., 4வது சுற்று பாசன பகுதியில் தண்ணீர் விரைவில் திறக்கப்பட உள்ளதால் கிளை பகிர்மான வாய்க்கால்களில் செடி கொடிகளை அகற்றும் பணி தீவிரமாக நடக்கிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணை மூலம் பிஏபி. பாசனத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மொத்தம் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 4 மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.

    தற்போது மூன்றாவது மண்டல பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் 4 சுற்றுகள் தண்ணீர் விடப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி மூன்றாவது சுற்று இன்னும் ஓரிரு நாட்களில் நிறைவடைய உள்ளது. இதை தொடர்ந்து நான்காவது சுற்றுக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனையொட்டி நான்காவது சுற்று பாசனப்பகுதி உள்ள கிளை வாய்க்கால்கள் பகிர்மான கால்வாய்களில் படர்ந்து கிடக்கும் செடி கொடிகளை அகற்றும் பணி தீவிரமாக நடக்கிறது. மேலும் வாய்க்கால் ஷட்டர்களில் கிரீஸ் தடவும் பணியும் நடக்கிறது. இதன் மூலம் கடைமடை பகுதி வரை தண்ணீர் விரைவாக சென்றடையும் என அதிகாரிகள்- விவசாயிகள் தெரிவித்தனர். இந்நிலையில் 60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணையில் நீர்மட்டம் 41. 76 அடியாக உள்ளது. தற்போது 813 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 119 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    • 5 வகையான பழ செடிகள் அடங்கிய பழ தொகுப்பு ஆகியவை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
    • மாடித்தோட்ட கிட் 50 சதவீதம் மானியத்தில் ரூ.750-க்கு வழங்கப்படுகிறது.

    மடத்துக்குளம் :

    வீடுகளில் மூலிகைத்தோட்டம் அமைக்க மாடித்தோட்டம் கிட் தோட்டக்கலைத்துறை சார்பில் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இது குறித்து மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கூறியதாவது :- மடத்துக்குளம் வட்டாரத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காய்கறி விதைகள் அடங்கிய விதைத்தொகுப்பு, 5 வகையான பழ செடிகள் அடங்கிய பழ தொகுப்பு ஆகியவை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் தற்போது மூலிகை தோட்டம் அமைக்க 10 வகையான மூலிகை செடிகள் அடங்கிய மாடித்தோட்ட கிட் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

    தூய்மையான காற்றை சுவாசிக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் நாட்டு மருத்துவத்தை ஊக்குவிக்கும் வகையிலும், மருத்துவ தாவரங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அழிந்து வரும் மருத்துவ தாவரங்களை பாதுகாக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    மாநில தோட்டக்கலை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் நடப்பாண்டு வீடுகளில் மூலிகை தோட்டம் அமைக்க, தமிழக அரசு தோட்டக்கலைத்துறை வாயிலாக 10 வகையான மூலிகைச்செடிகள் அடங்கிய மாடித்தோட்ட கிட் 50 சதவீதம் மானியத்தில் ரூ.750-க்கு வழங்கப்படுகிறது.இதில் வழங்கப்படும் துளசி, இருமல், சளி, வயிற்றுப்புழு நீக்கம் உள்ளிட்ட பயன்பாட்டிற்கும், கற்பூரவல்லி, சளி, இருமல், ஆஸ்துமா, வயிற்றுப்புண், அஜீரணப் பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.திருநீற்றுப்பச்சை, வயிறு தொடர்பான நோய்களுக்கு சுவையின்மை, வாந்தி, குடல் புண் ஆகியவற்றை போக்குகிறது.ஆடாதொடை, இருமல், சளி, தொண்டைக்கட்டு, இளைப்பு, வாந்தி, விக்கல் ஆகிய நோய்களுக்கு தீர்வாகவும், வல்லாரை, நினைவாற்றலைப்பெருக்கவும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.திப்பிலி, இருமல், இரைப்பு அனாமிகா, சுவையின்மை பொருமல், தலைவலி, நீரேற்றம், தொண்டை நோய்கள் நீங்கும்.

    அமுக்கிராக்கிழங்கு, பசியை உண்டாக்குதல், தோல் நோய்கள் ஆகியவற்றுக்கும், பிரண்டை, வயிற்றுப்புண்ணை ஆற்றும். பசியை உண்டாக்கும். எலும்புகளை வலுப்பெறச்செய்யும் திறன் உள்ளதாகும். கற்றாழை, குடல் புண்ணை ஆற்றவும், மூலம் பவுத்திரம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வாகவும், கீழாநெல்லி, சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும், நாக்கு வறட்சி, தாகம் ஆகியவற்றை போக்கும் மருந்தாக சித்தமருத்துவத்தில் பயன்படுகிறது.இவ்வாறு 10 வகையான மூலிகைத்தோட்ட தொகுப்பில் ஒவ்வொரு வகையில் தலா 2,10 செடி வளர்ப்பு பைகள், 10 தென்னை நார் கட்டிகள், மண் புழு உரம், 4 கிலோ மற்றும் தொழில் நுட்ப புத்தகம் வழங்கப்படுகிறது.நிலப்பகுதி மற்றும் வீடுகளிலுள்ள மாடிப்பகுதியில் மூலிகைத்தோட்டம் அமைக்கலாம். பையில் தென்னை நார் கட்டியை வைத்து 10 லிட்டர் நீர் ஊற்ற வேண்டும்.

    ஒரு பைக்கு 400 கிராம் மண்புழு உரம் கலந்து, தென்னை நார் கழிவுடன் கலந்த உரத்தை செடிகள் வளர்ப்பதற்கான பைகளில் நிரப்பி 7 முதல் 8 நாட்கள் வைத்திருந்து ஒரு பையில் ஒரே வகையான இரண்டு மூலிகைச்செடிகள் நட வேண்டும்.பிறகு பூ வாளி கொண்டு நீர் ஊற்ற வேண்டும். கோடை காலத்தில் ஒரு நாளைக்கு இருமுறை நீரூற்ற வேண்டும்.மூலிகை தோட்ட தொகுப்பு பெற மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    மேலும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் தாமோதரன் 96598 38787 என்ற எண்ணிலும், நித்யராஜ் 84890 95995 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்றனர். 

    • வெங்காய தாமரை செடிகளால் தண்ணீர் போக்கு தடைப்படுகிறது.
    • இயற்கை உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதி நீர்நிலைகளில் வளர்ந்துள்ள வெங்காய தாமரை செடிகளை அகற்றும் பணியை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில்:-

    மக்களுக்கு முக்கிய தேவையாக இருக்கின்ற நீராதாரங்களை பாதுகாத்து அதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை நகராட்சி நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது. ஆறு, குளம், குட்டைகளில் வளர்ந்துள்ள வெங்காய தாமரை செடிகளால் தண்ணீர் போக்கு தடைப்படுகிறது, நிலத்தடி நீர் மாசுபடுகிறது. எனவே, இந்த செடிகளை முற்றிலும் அகற்றி அதனை நகராட்சி நுண்ணுர தயாரிப்பு மையம் மூலம் பாலம் சேவை நிறுவனத்தின் மேற்பார்வையில் இயற்கை உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது என்றார். நிகழ்ச்சியில் பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், நகராட்சி அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் மானிய விலையில் பழச்செடிகள் வழங்கப்பட்டது.
    • விவசாயிகள் தங்களது சிட்டா, ஆதார் அட்டை நகல், ரேசன் கார்டு நகல், போட்டோ ஆகியவற்றை தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் கொடுத்து பழ செடிகளை பெற்றுக் கொள்ளலாம்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சித்

    திட்டத்தின் கீழ் இருக்கூர்,

    குன்னத்தூர், பிலிக்கல்பா ளையம், ஆனங்கூர், வட

    கரையாத்தூர், சிறு நல்லிக்கோவில், சுள்ளிபா

    ளையம், குப்பிரிக்காபா ளையம் ஆகிய கிராமங்க ளுக்கு பழப்பயிர் பயிரிட விரும்பும் விவசாயிகளுக்கு மா, கொய்யா மற்றும் எலுமிச்சை செடிகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

    எனவே தேவைப்படும் விவசாயிகள் தங்களது சிட்டா, ஆதார் அட்டை நகல், ரேசன் கார்டு நகல், போட்டோ ஆகியவற்றை கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் கொடுத்து தோட்டக்கலை துறையின் மூலம் பழ செடிகளை பெற்றுக் கொள்ளலாம் என கபிலர்மலை வட்டார

    தோட்டக்கலை துறை அலுவலர் தெரிவித்துள்ளார். 

    • நெல்லை மாநகர பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிய கட்டிடங்கள் கட்டுவது மட்டுமல்லாமல் பாலங்களை பொலிவுற செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
    • பூந்தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள செடிகள் 2 நாட்களாக வாடிய நிலையில் காணப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிய கட்டிடங்கள் கட்டுவது மட்டுமல்லாமல் பாலங்களை பொலிவுற செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. அதன் ஒரு முயற்சியாக வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலத்தில் வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. இரவு நேரங்களில் அவை ஒளிரும்போது வாகனஓட்டிகளை கவரும் விதத்தில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் மேம்பாலங்களின் கீழ் பகுதி தூண்களை அழகுப்படுத்தும் விதமாக சமீபத்தில் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி அறிவுறுத்தலின்பேரில் சிறிய அளவிலான பூந்தொட்டிகள் அமைக்கப்பட்டன. ஆனால் இந்த பூந்தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள செடிகள் 2 நாட்களாக வாடிய நிலையில் காணப்பட்டது.

    இதனை வண்ணார்பேட்டை ரவுண்டானாவில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் சீனிவாசன் போக்குவரத்தை சரி செய்யும் பணிக்கு இடையில், மேம்பால தூண்களில் வாடிய நிலையில் இருந்த செடிகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகிறார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து போக்குவரத்து காவலரை பாராட்டினர்.

    • மருத்துவ குணமுடைய வெற்றிலை, ஓமவள்ளி, கருந்துளசி, சிற்றரத்தை, இன்சுலின் உள்ளிட்ட செடிகள்.
    • மூலிகை வனத்தில் பல்வேறு செடிகள் செழித்து வளர்ந்து பூத்து குலுங்குகின்றன.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மூலிகை தோட்டம் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு அமைக்கபட்டது. இந்த மூலிகை வனம் அமைக்கும் பணியை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

    இந்த மூலிகை தோட்டத்தில் மருத்துவ குணமுடைய வெற்றிலை, ஓமவள்ளி, கருந்துளசி, சிற்றரத்தை, இன்சுலின் செடிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட செடிகள் நடப்பட்டு செடிகள் முன்பு பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த மூலிகை வனத்தில் தற்போது பல்வேறு செடிகள் செழித்து வளர்ந்து பூத்து குலுங்குகின்றன. இந்நிலையில், நேற்று வேதாரண்யம் வருகை தந்த கலெக்டர் அருண் தம்புராஜ் மூலிகை தோட்டத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மூலிகை செடிகள் செழித்து வளர்ந்திருப்பதை கண்டு அதிகாரிகளை பாராட்டினார்.

    இது போல் மூலிகை வனம் கலெக்டர் அலுவலகம் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ஆய்வின்போது, தாசில்தார் ஜெயசீலன், துணை வட்டாட்சியர் வேதையன் மற்றும் வருவாய் துறையினர் உள்ளனர்.

    • ஆதிரெங்கம் ஊராட்சியில் பிரதான மங்கள வாய்க்கால் அமைந்துள்ளது.
    • பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் ஆகாய தாமரை செடிகள் புதர்போல் மண்டி கிடக்கிறது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த ஆதிரெங்கம் ஊராட்சியில் பிரதான மங்கள வாய்க்கால் அமைந்துள்ளது.

    முள்ளியாற்றில் பிரிந்து கட்டிமேடு முதல் ஆதிரெங்கம் வரை 7-கிமீ தூரம் கொண்ட இந்த வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் ஆகாய தாமரை செடிகள் புதர்போல் மண்டி கிடக்கிறது.

    தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக தண்ணீர் வடிய வழியின்றி வாய்க்காலின் கரைகளை தாண்டி செல்லும் நிலை உள்ளது.

    இதுகுறித்து, விவசாயிகள் ஊராட்சி மன்ற தலைவர் வீரசேகரனிடம் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து, செடிகளை எந்திரம் கொண்டு அகற்றும் பணி ஊராட்சி மன்ற தலைவர் வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது.

    பணியின் போது ஒன்றியக்குழு உறுப்பினர் சரஸ்வதி ராமகிருஷ்ணன்,துணைத்தலைவர் பொற்செல்வி செல்லபாண்டியன், ஊராட்சி செயலாளர் இளந்திரையன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • தமிழ்நாட்டில் அரசு அலுவலகத்தில் முன்மாதிரியாக மூலிகை தோட்டம் அமைத்த துணை வட்டாட்சியர் வேதையனை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பாராட்டினார்.
    • அலுவலகத்தில் பணிபுரியும் துணை வட்டாட்சியர் வேதையன் தாசில்தார் அலுவலகம் முழுவதும் மூலிகை செடி நாட்டு அதன் பெயர் பலகையும் வைத்து உள்ளார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா அலுவலக வளாகத்தில் 76 வகையான மூலிகை செடிகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது

    விழாவில் கோட்டாட்சியர்பெளலின், தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தாசில்தார் வேதையன் வரவேற்றார்.விழாவில் அலுவலக வளாகத்தில் வல்லாரை, கருசலங்கண்ணி சித்தரத்தை, மலைவேம்பு, மின்னல் கீரை, நித்திய கல்யாணிமருதோன்றி உட்பட 76 வகையான மூலிகை செடிகளையும், 10-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளையும் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நட்டும், மூலிகைகளின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அதிகாரிகள், பொதுமக்களுக்கு மூலிகை கன்றுகளையும் வழங்கினார்

    பின்பு 8 பயனாளிகளுக்கு பட்டா மாற்ற நகல், குடும்ப அட்டையும் வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர்கமலா அன்பழகன், ஊராட்சி ஒன்றியஆணையர்கள் ராமலிங்கம், பாஸ்கரன், நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகரமன்றதலைவர் புகழேந்தி, மாநில கிராம நிர்வாக அலுவலர் சங்க தலைவர் ராஜேந்திரன் கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார்மூ லிகை பண்ணையாளர் புஷ்பவனம்ஹரிகிருஷ்ணன் உட்பட அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.விழா முடிவில்துணை தாசில்தார் ரமேஷ் நன்றி கூறினார்.

    வழக்கமாக தாசில்தார் அலுவலகங்களில் பெயரளவிற்கு புங்கை உள்பட ஒரு சில மரங்கள் நடப்படுவது வழக்கம் மேலும் அமைச்சர்கள், அதிகாரிகள் வரும்போது சிறு செடிகளை நடுவார்கள் அதன் பிறகு அதையாரும் கண்டுகொள்ளமாட்டர்கள் மீண்டும் அதிகாரிகள் வரும்போது அதே இடத்தில் மீண்டும் மரம் நடும் விழா நடைபெறுவது அனைத்து அலுவலகத்திலும் நடைபெறுவது வழக்கம்

    ஆனால் அதற்கு நேர்மாறாக இவ் அலுவலகத்தில் பணிபுரியும் துணை வட்டாட்சியர் வேதையன் தாசில்தார் அலுவலகம் முழுவதும் மூலிகை செடி நாட்டு அதன் பெயர் பலகையும் வைத்து உள்ளார்

    இந்த மூலிகை தோட்டத்தை அலுவலகம் வரும் பொதுமக்கள் பார்த்து வியந்து பாராட்டி செல்கின்றனர் தமிழ்நாட்டில் அரசு அலுவலகத்தில் முன்மாதிரியாக மூலிகை தோட்டம் அமைத்த துணை வட்டாட்சியர் வேதையனை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பாராட்டினார்.

    மேலும் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களும் மூலிகை செடியின் பயன்பாட்டை அறிந்து அதனை தங்களின் வீடுகளில் வளர்த்து பயன்பெற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டு செயல்பட துணை வட்டாட்சியரின் செயலை ஒவ்வொரு அலுவலகத்தில் பின்பற்றினால் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு சென்றால்நோயற்ற வாழ்வை நோக்கிச் .தமிழகம்செல்லும் என்பதில் ஆச்சரியமில்லை.

    ×