search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "officers review"

    • வேதாரணியம் நகராட்சியில் 500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன
    • வணிக உரிமம் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சியில் வணிகம் உரிமம் குறித்து கடைகளில் அதிகாரிகள் சோதனையிட்டனர் வேதாரணியம் நகராட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

    இந்த கடைகளில் நகராட்சியின் வணிக உரிமம் பெற்றுள்ளதா என நகராட்சி ஆணையர் அப்துல் ஹாரிஸ் சுகாதார அலுவலர் ராஜாராமன் சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கடைகடையாக சோதனை நடத்தினர் உரிமம் பெறாத வணிகர்கள் புகைப்படம் குடும்ப அட்டை ஜிஎஸ்டி நம்பர் பான் கார்டு ஆதார் அட்டை சொத்து வரி வசதி விசிட்டிங் கார்டு உள்ளிட்ட 7 ஆவணங்களுடன் http://tnUrban epay th.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கொள்ளிடம் பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் ஆய்வு செய்தனர்.
    • கடைகளில் முறையாக உரிமம் பெற்று கடைகள் நடத்தப்படுகிறதா என்றும் பார்வையிட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் சீர்காழி தாசில்தார் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    கடைகளில் முறையாக உரிமம் பெற்று கடைகள் நடத்தப்படுகிறதா, பட்டாசு கடைக்கு தேவையான பொருட்கள் முறையாக வைக்கப்பட்டுள்ளதா, எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்கள் ஏதேனும் அங்கு உள்ளதா தீ தடுப்பு சாதனங்கள் முறையாக வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறதா என்றும் பார்வையிட்ட ஆய்வு செய்தனர்.

    • சட்டம் 2006 பிரிவு (31) கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது
    • பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் மாவட்ட கலெக்டர் தெ. பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட நியமன அலுவலர் (உணவு பாதுகாப்பு) செந்தில்குமார் அறிவுறுத்த லின்படி ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி ஜோலார்பேட்டையில் உள்ள புது ஓட்டல் தெரு பகுதியில் ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட், மளிகை கடைகள், டீக்கடை உள்ளிட்ட கடைகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    கடைகளில் லைெசன்ஸ் இல்லாமல் கடை நடத்தி வந்த கடை உரிமையாளருக்கு உணவு பாதுகாப்பு சட்டம் 2006 பிரிவு (31) கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    மேலும் கடைகளில் அதிக வர்ணம் கலந்த சிக்கன் மற்றும் சிக்கன் 65 இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர்.

    மேலும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

    மளிகை கடைகளில் காலாவதியான பொரு ட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். வணிக கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு மேற்பார்வை யாளர் பயிற்சி எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து சாலையோரங்களில் போண்டா, பஜ்ஜி விற்கும் கடைகளில் உணவுப் பொருட்களை கண்ணாடி பாக்ஸில் வைத்து விற்பனை செய்யவும், உணவுப் பொருட்களை சில்வர் கப், இலை போன்றவற்றில் விற்பனை செய்யவும், பேப்பர் மூலம் சூடான உணவுப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.

    மேலும் கடை உரிமையாளர்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி உரிமம் பெற வேண்டும் என்றும் உரிமம் பெற்றவர்கள் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.

    ஜோலார்பேட்டை பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் காலாவதியான உணவுப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் மற்ற கடை உரிமையா ளர்களிடத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.

    • சாலை அமைப்பதற்கான பணிகளை பார்வையிட்டார்
    • பொதுமக்களின் அடிப்படை தேவைகள் குறித்து விசாரித்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பாச்சல் ஊராட்சியில் உள்ள பல்வேறு பணிகள் மற்றும் பழுதடைந்த கட்டிடங்களை வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன் ஆய்வு மேற்கொண்டார்.

    இதில் நரிக்குறவர்கள் வசிக்கும் பகுதியான இதயநகரில் நடைபெற்றுவரும் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்தார்.

    இதனை அடுத்து பாச்சல் டிவி ஸ்டேஷன் பகுதியில் பழுதடைந்துள்ள பயணியர் நிழற்க்கூடத்தை அகற்றி புதிய நிழல் கூடம் அமைக்க வேண்டும் எனவும் புளியாங்கொட்டை பகுதியில் உள்ள பழுதடைந்துள்ள அங்கன்வாடிமையம் கட்டிடத்தை அகற்றி புதிய அங்கன்வாடிமையம் அமைக்க வேண்டும் என பாச்சல் ஒன்றிய கவுன்சிலர் ஆர்.மணிகண்டன், ஊராட்சி மன்ற தலைவர் கவிதா திருப்பதி, துணைத்தலைவர் சஞ்சீவி ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

    அதன் பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், உதவி செயற்பொறியாளர் சேகர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் பழுதடைந்த கட்டிடங்களை அகற்றி புதிய கட்டிடம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

    மேலும் புளியாங்கொட்டை பகுதியில் உள்ள பொதுமக்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்தும் வகையில் ஏரிக்கரையின் மீது புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதுகுறித்து ஒன்றிய கவுன்சிலர் வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவித்து சாலை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை வைத்ததின் பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன் புளியாங்கொட்டை ஏரிக்கரையில் சாலை அமைப்பதற்கான பணி குறித்து ஆய்வு செய்தார்.

    இதனை அடுத்து ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் பல்வேறு வளர்ச்சி பணிகளையும், பொதுமக்களின் அடிப்படை தேவைகள் குறித்தும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    • முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாக புகார்
    • தரமற்ற முட்டைகள் சப்ளை செய்தால் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க அறிவுரை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சத்துணவு மையங்களுக்கு கடந்த வாரம் சப்ளை செய்யப்பட்ட முட்டைகளில் ஒரு சில சத்துணவு மையங்களில் தரமற்ற முட்டைகள் இருந்ததாகவும், ஒரு சில முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன், ஊரக வளர்ச்சி துறை வேலூர் மாவட்ட திட்ட இயக்குனர் ஆர்த்தி ஆகியோரின் உத்தரவின் பேரில் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.கார்த்திகேயன் அதிகாரி களுடன் தாழையாத்தம் ஊராட்சி, மேல்முட்டுகூர் ஊராட்சி, உள்ளி ஊராட்சி ஆகிய ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது சத்துணவு மையங்களுக்கு சப்ளை செய்யப்பட்ட முட்டைகளை பார்வையிட்டு தரம் குறித்து ஆய்வு செய்தார்.

    அப்போது சத்துணவு பணியாளர்களுக்கு தரமற்ற முட்டைகள் சப்ளை செய்யப்பட்டால் உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கோ அல்லது வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    • ரூ.110 கோடி மதிப்பில் பணி நடைபெற உள்ளது
    • நில உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு வழங்காமல் பணிகள் தொடங்கியது வருந்தத்தக்கது என பொதுமக்கள் வேதனை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் கூட்ரோடு பகுதியில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க, வேலூர் சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் தொடங்கி, கீழ்பள்ளிப்பட்டு நாகநதி ஆற்றுக்கால்வாய் வரை 16 பில்லர்களுடன், 12 மீட்டர் அகலம் கொண்ட மேம்பாலம் ரூ.110 கோடி மதிப்பில் கட்டப்படும் பணி நடைபெற உள்ளது.

    இதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ள இடத்தில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் ஜெயக்குமார் உதவி பொறியாளர் இளங்கோவன் ஆகியோர் அளவீடு செய்தனர்.

    சர்வீஸ் ரோடு பெட்ரோல் பங்க் முதல் கீழ்பள்ளிப்பட்டு கால்நடை மருத்துவ நிலையம் வரையிலும், கீழ்பள்ளிப்பட்டு பழைய லெவல் கிராசிங் ரோடு வழியாக 9 மீட்டர் உயரத்தில், 3.5 மீட்டர் அகலத்தில் சப் வே சுரங்கப்பாதை அமைத்து திருவண்ணாமலை ரோட்டில் இணைக்கப்படுகிறது.திட்ட மதிப்பில் நில ஆர்ஜிதம் இழப்பீட்டுத் தொகையும் அடங்கும் என ஜெயக்குமார் தெரிவித்தார்.

    இந்த அளவீடு செய்யும் போது கீழ்வல்லம் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ், மற்றும் கிராம உதவியாளர்கள் உடனிருந்தனர். நிலம் மற்றும் கட்டிடங்கள் வழங்கிய உரிமையாளர்கள் தங்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்காமல் பணிகள் தொடங்கியது மிகவும் வருந்தத்தக்கது என தெரிவித்தனர்.

    • குளத்தில் ஆங்காங்கே மீன்கள் செத்து மிதப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
    • நீர் மாதிரி சேகரித்து பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, எஸ்.பெரியபாளையத்தில் நல்லாற்றின் குறுக்கே 440 ஏக்கர் பரப்பளவில் நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது. திருப்பூரில் ஏராளமான விதிமீறல் பட்டன், ஜிப் நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்நிறுவனங்களில் இருந்து சுத்திகரிக்காத சாயக்கழிவுநீர், மாநகர பகுதிகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் நல்லாற்றில் கலக்கிறது.

    தொடர் மழையால் நல்லாற்றில் உள்ள சாயம், சாக்கடை கழிவுகள், நஞ்சராயன் குளத்தில் கலந்து மாசு ஏற்படுத்துகிறது. இதையடுத்து குளத்தில் ஆங்காங்கே மீன்கள் செத்து மிதப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்தநிலையில் மாசுகட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர் வடக்கு சரவணகுமார் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தியுள்ளனர். நல்லாற்றில் சாயக்கழிவுநீர் கலக்கிறதா,ஆற்றுநீரின் டி.டி.எஸ்., அளவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இது குறித்து மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறுகையில், நஞ்சராயன் குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதற்கான காரணத்தை கண்டறிவதற்காக 2 நாட்கள் தொடர் ஆய்வு நடத்தியுள்ளோம். டி.டி.எஸ்., அளவு 900 க்கு கீழ் சீராகவே உள்ளது. நீர் மாதிரி சேகரித்து பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். குளத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நீர் மாதிரி பரிசோதனை முடிவுகள் வந்தபின்னர் அறிக்கை தயாரிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடமும், வாரிய உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பிவைக்கப்படும் என்றனர்.

    • வெண்டை செடிகளும் விளைநிலத்தில் மழைநீர் அதிக அளவில் தேங்கியதால் சேதமடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
    • பீட்ரூட்,சின்ன வெங்காயம்,தக்காளி உள்ளிட்ட காய்கறிப் பயிர்களும் பலத்த மழையால் சேதமடைய வாய்ப்புள்ளது.

      உடுமலை:

    குடிமங்கலம் வட்டாரத்தில் காய்கறிப் பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.இந்தநிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் பல இடங்களில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.சேதம் குறித்த தகவல் கிடைத்ததும் குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத்,உதவி தோட்டக்கலை அலுவலர் சங்கவி ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    குடிமங்கலம் வட்டாரத்தில் கொண்டம்பட்டி பகுதியில் காலிபிளவர் சாகுபடியில் சேதம் ஏற்பட்டுள்ளது.சொட்டு நீர்ப் பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சுமார் ஒரு மாதம் வயது கொண்ட காலிபிளவர் மழைநீரில் முழுவதுமாய் மூழ்கி விட்டது.அத்துடன் சுமார் 65 முதல் 70 நாள் வயது கொண்ட காலிபிளவர் பூக்கள் முழுவதும் அழுகி வீணாகியுள்ளது.காலிபிளவரைப் பொறுத்தவரை பூக்கும் பருவத்தில் மழை பெய்வது மகசூல் இழப்பை ஏற்படுத்தும்.தற்போது பெய்துள்ள கனமழையால் இந்த பகுதியில் பல ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த காலிபிளவர் முற்றிலும் சேதமடைந்துள்ளது.இதுதவிர சில பகுதிகளில் வெண்டை செடிகளும் விளைநிலத்தில் மழைநீர் அதிக அளவில் தேங்கியதால் சேதமடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

    பீட்ரூட்,சின்ன வெங்காயம்,தக்காளி உள்ளிட்ட காய்கறிப் பயிர்களும் பலத்த மழையால் சேதமடைய வாய்ப்புள்ளது.இதுதவிர பலத்த காற்று வீசினால் வாழை மரங்களும் சேதமடையும் வாய்ப்பு உள்ளது.சேதத்தைத் தவிர்க்க விவசாயிகள் வடிகால் வசதி,முட்டு கொடுத்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.அதையும் தாண்டி மழை மற்றும் காற்றினால் தோட்டக்கலைப் பயிர்களில் சேதம் கண்டறியப்பட்டால் விவசாயிகள் உடனடியாக தோட்டக்கலைத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.அதிகாரிகள் ஆய்வு செய்து அரசுக்கு அனுப்பும் அறிக்கையின் அடிப்படையிலேயே விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.எனவே விவசாயிகள் துணை தோட்டக்கலை அலுவலர் சிவானந்தம்-9944937010,உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சரவணக்குமார்-9789197648,சங்கவி-8111055320,ராஜசேகரன்-8675556865 ஆகியோரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.

    • குடியிருப்பு பகுதியில் நோய் தொற்று ஏற்படுவதாக புகார்
    • விதிமுறைகள் பின்பற்றபடுகின்றதா? என விசாரணை

    ஆரணி:

    ஆரணி அடுத்த அருகே ராட்டினமங்கலம் கிராமத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த அரிசி ஆலைகள் 24 மணி நேரமும் இயங்குகின்றன.

    அரிசி ஆலைகளிலிருந்து கரும்புகை நச்சு துகள் மற்றும் தூசி வெளியேறுவதால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளன. இதனால் குடியிருப்பு பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுகின்றது.

    மேலும் இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் ஊராட்சி மற்றும் மாசுகட்டுபாட்டு வாரியம் ஆகிய நிர்வாகத்திற்கு பலமுறை மனு அளித்தோம் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த ராட்டினமங்கலம் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்டோர் அரிசி ஆலைகளில் இருந்து வரும் கரும்புகை துகள்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என கூறி ஆரணி ராட்டினமங்கலம் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதன் எதிரொலியாக மாவட்ட சுற்றுசூழல் மற்றும் மாசு கட்டுபாடு வாரிய இணை இயக்குநர் கதிர்வேல் தலைமையில் அதிகாரிகள் ஆரணி அருகே ராட்டினமங்கலம் கிராமத்தில் உள்ள அரிசி ஆலைகளில் திடீரென ஆய்வு மேற்கொ ண்டனர்.

    இதில் கருப்புகை தூசிகள் உள்ளிட்ட பிரச்சினைகள் வருகின்றதா மற்றும் மாசுகட்டு ப்பாடு வாரிய விதித்த விதிமுறை களை பின்பற்றுகி ன்றதா என பல்வேறு கோணத்தில் ஆய்வு மேற்கொ ண்டனர்.

    • இக்கோவிலில் பல இடங்களில் சிதலமடைந்து காணப்படுவதால் கோவிலை புனரமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
    • கோவில் முழுவதும் கற்களால் கட்டப்பட்டுள்ளதால், அவற்றின் பழமை தன்மை மாறாத வகையில் புனரமைக்கப்பட உள்ளது.

     காங்கயம்:

    காங்கேயம் பழைய கோட்டை செல்லும் சாலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது.சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோவிலில் கடந்த 1996ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. கடந்த 26 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்து வந்துள்ளது. தற்போது இக்கோவிலில் பல இடங்களில் சிதலமடைந்து காணப்படுவதால் கோவிலை புனரமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    இதற்காக அறநிலையத்துறையின் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. மேலும் கோவில் முழுவதும் கற்களால் கட்டப்பட்டுள்ளதால், அவற்றின் பழமை தன்மை மாறாத வகையில் புனரமைக்கப்பட உள்ளது.

    இதற்காக திருப்பூர் மாவட்ட தொல்லியல் துறை முதன்மை ஆலோசகர் அர்ஜுனன் தலைமையிலான தொல்லியல் துறை அதிகாரிகள் கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர். கோவிலில் சேதமடைந்த பகுதிகள், மண்டபம், சிலைகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பின் இவற்றை அறிக்கையாக தொல்லியல்துறை ஆணையருக்கு அனுப்பி வைக்க உள்ளதாக தொல்லியல் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

    • விதைச்சான்று பணிகள் தீவிரம்
    • கலப்பு இல்லாமல் சுத்தமாக இருக்க அறிவுறுத்தல்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் விதைச்சான்று பணிகளை சென்னை விதைச்சான்று இயக்குனர் கோ வளர்மதி வயல் ஆய்வுகளை மேற்கொண்டார்.

    ஆரணி பகுதியில் நடப்பு காரிப் பருவத்தில் நெல் (20 ஏக்கர்), உளுந்து (32 ஏக்கர்), மற்றும் மணிலா (33 ஏக்கர்) ஆகிய விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டு விதைச்சான்று பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    மேலும் இதன் ஒரு பகுதியாக ஆரணி அருகே நெசல் கிராமத்தில் விவசாயி சத்தியராஜ் விவசாய நிலத்தில் உழுதுள்ள உளுந்து வம்பன் ரகம் விதைப் பண்ணையை நேரில் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வில் விதைப்பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் விதைகள் பிற ரக கலப்பு இல்லாமலும், சுத்தமாகவும், களைவிதை ஏதுமின்றி இருக்க வேண்டும் என அறிவுறித்தினார்.

    மேலும் அதே கிராமத்தில் அமைக்கப்பட்ட மணிலா, தரணி, விதைப்பண்ணை யில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் விவசாயிகளிடம் அதிக அளவில் உளுந்து விதைப் பண்ணைகளை அமைத்து கூடுதல் லாபம் பெறலாம் எனவும் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வில் மாவட்ட மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்பாலா, வேளாண்மை துணை இயக்குநர்ஏழுமலை (மத்திய திட்டம்), விதை ஆய்வு துணை இயக்குநர் சோமு விதைச்சான்று உதவி இயக்குநர் குணசேகரன், விதைச்சான்று அலு வலர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் சுந்தரமூர்த்தி, உதவி விதை அலுவலர்கள் வடிவேல் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர்.

    தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பம்மல் கல்குவாரி நீர் குடிநீராக பயன்படுத்த தகுதி உள்ளதா என்று ஆய்வு செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
    தாம்பரம்:

    பருவ மழை பொய்த்ததால் இந்த ஆண்டு சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் முற்றிலும் வறண்டு விட்டன.

    பூண்டி, புழல் ஏரியில் உள்ள தண்ணீரை இன்னும் ஒருவாரத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தண்ணீர் பிரச்சினை விசுவரூபம் எடுத்து உள்ளது. குடிநீருக்காக பொதுமக்கள் காலி குடங்களுடன் தினமும் காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது.

    குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க கல்குவாரி நீர் மற்றும் காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய கிணற்று தண்ணீரை கூடுதலாக எடுத்து பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இதேபோல பம்மல் காமராஜபுரத்தில் உள்ள செங்கழுநீர் கல்குவாரியில் தேங்கி உள்ள நீரை குடிநீருக்கு பயன்படுத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ. 6.5 கோடி செலவில் பம்மல், அனகாபுத்தூர் ஆகிய 2 நகராட்சிகளிலும் தனித்தனியாக சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

    சோதனை ஓட்டமாக தண்ணீரை சுத்திகரித்து குடிநீருக்கு பயன்படுத்த உகந்ததா? என்று அறிய மாநில சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கிண்டி ஆராய்ச்சி மைய நீர் பரிசோதனை துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ஆனால் இதுவரை தண்ணீரின் தன்மை குறித்த முடிவு தெரிவிக்காமல் உள்ளதாக தெரிகிறது. இதனால் செங்கழுநீர் கல்குவாரி நீரை குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாநில பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி கூறும்போது, ‘கல்குவாரி, ஏரி, குளங்களில் உள்ள நீரை குடிநீருக்கு பயன்படுத்த தகுதி உள்ளதா? என்பதை பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்க முடியும்.

    நீரின் தன்மை குறித்து பரிசோதனைக்கு அனுப்பிய 3 நாட்களில் முடிவை தெரிவிக்க வேண்டும். கல்குவாரி நீரின் தன்மை குறித்த முடிவு என்ன காரணத்தினால் தாமதம் என்று தெரியவில்லை. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    பம்மல், அனகாபுத்தூர் கல்குவாரி நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உடனடியாக ஆய்வு செய்யப்படும்’ என்றார்.

    ×