search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ozone layer"

    • உடல் உறுப்புகள் அனைத்தும் சீக்கிரமாக சீர்கெட்டுவிடும்.
    • ஆக்ஸிஜன் அளவு முற்றிலும் குறையத் தொடங்கும்.

     திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் திருப்பூர் மாவட்டம் இணைந்து உலக ஓசோன் தினம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் நடத்தப்பட்டது. நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுவாமிநாதன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ஓசோன் இல்லாமல் பூமியில் உயிர் வாழ முடியாது, ஓசோன் பூமியை காக்கும் காவலன், இவற்றின் முக்கிய பணி சூரிய ஒளியிலிருந்து வரும் அதிக வெப்பத்தையும், புற ஊதாக் கதிர்களையும் தடுத்து பூமியில் உள்ள உயிரினங்களை பாதுகாக்கிறது.

    ஓசோன் படலம் அழிந்தால் பூமியில் அனைத்து உயிரினங்களும் அழிந்து விடும். மேலும் நீர் நிலைகள் வறண்டு போய்விடும்.வெப்பம் அதிகமானால் நம்முடைய தோள் சுருங்கும். உடல் உறுப்புகள் அனைத்தும் சீக்கிரமாக சீர்கெட்டுவிடும். பல நோய்கள் உயிரனங்களை தாக்கும். உணவு சங்கிலி அறுபட்டு விடும். ஆக்ஸிஜன் அளவு முற்றிலும் குறையத் தொடங்கும், ஓசோன் என்பது உலகிற்கும்,உயிரினங்களுக்கும் உற்ற தோழன். தலைமறைவாக இருந்தாலும் தலைமுறை தலைமுறையாக நம்மை காக்கிறது ஓசோன்.

    பூமியில் உள்ள அனைத்து வகையான உயிரினங்களை பாதுகாக்கவும், காப்பாற்றவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும் என்றார். தெற்கு காவல் ஆய்வாளர் பிச்சையா பேசுகையில், மாணவர்கள் ஓசோனை பாதுகாக்க வலியுறுத்தி குழுக்களாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து மாணவ செயலர்கள் அருள்குமார், பூபாலன், ரமேஷ், சர்நித்தா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் ஓசோன் விழிப்புணர்வு நடனம் மற்றும் நாடகத்தை அரங்கேற்றினார்கள். பின்னர், மாணவ மாணவிகளும், பொது மக்களும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அலுவலர்களும் இணைந்து ஓசோன் படலத்தை காக்க பதாகைகளை ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அனைவருக்கும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர்கள் முரளி, பாரதிராஜா, சத்தியன் மற்றும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    சுற்றுச்சூழல் விழிப்புணர்வால் ஓசோன் படலம் பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது என ஐ.நா.சபை தெரிவித்துள்ளது. #UN #Ozonelayer
    ஜெனீவா:

    காற்றில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசு காரணமாக ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து விட்டது. இதனால் சூரியனில் இருந்து வெளியாகும் நச்சு கதிர்களால் புற்றுநோய் போன்றவை ஏற்பட்டு மனித குலம் பெரும் பாதிப்படைந்து வருகிறது.

    மேலும் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு பேரழிவுகளும் ஏற்படுகின்றன. எனவே கடந்த 1986-ம் ஆண்டு முதல் நச்சு வாயுவை உருவாக்கும் ரசாயன பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. அதன் மூலம் ஓசோன் படலம் மேலும் பாதிக்கப்படையாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதில் பொதுமக்களும் அதிக அளவில் விழிப்புணர்வுடன் உள்ளனர். அதனால் ஓசோன் படலம் பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது.


    இந்த நிலை தொடர்ந்தால் பழுதடைந்த ஓட்டை விழுந்த நிலையில் இருக்கும் ஓசோன் படலம் விரைவில் சீரடையும் என ஐ.நா.சபை தெரிவித்துள்ளது. ஐ.நா.சபையின் சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு 4 ஆண்டுகளாக ஆய்வு நடத்தி சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது.

    அதில் அண்டார்டிகா பகுதியில் ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டை மெல்ல மெல்ல மூடி சீரடைந்து வருகிறது. இதேநிலை தொடர்ந்தால் வருகிற 2060-ம் ஆண்டில் கடந்த 1980-ம் ஆண்டில் இருந்தது போன்ற பழைய நிலை ஏற்பட்டு விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2000-ம் ஆண்டில் இருந்து 10 ஆண்டிற்குள் ஓசோன் படலத்தின் ஓட்டை 1 முதல் 3 சதவீதம் வரை குறைந்து சீரடைந்துள்ளது.

    பூமியின் வடபகுதி மற்றும் மத்திய பகுதியில் 2030-ம் ஆண்டிலும், தென்பகுதியில் 2050-ம் ஆண்டிலும், அண்டார்டிகாவில் 2060-ம் ஆண்டிலும் முற்றிலும் சீரடைந்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ரசாயனங்கள் குறிப்பாக குளோரோ, புளோரோ கார்பன்களை தடை செய்ததால் தான் இத்தகைய முன்னேற்றமான நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.  #UN #Ozonelayer
    ×