search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rice Mill"

    • நவீன அரிசி ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை சித்தர்க்கா ட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலை நிர்வாகம் ஐகோர்ட்டில் அளித்த உறுதி மொழியை மீறி சுற்றுச்சூழல் சீர்கேட்டில் ஈடுபடுவதாக கூறி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினவேல்,

    , ஒன்றிய குழு உறுப்பினர் பாரதி மதியழகன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமணி தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமார் வரவேற்றார். இந்த ஆலையால் ஆயிரக்க ணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருவதாக வழக்கறிஞர்கள் கணபதீஸ்வரன், பாலாஜி, விஜயசுந்தரம், ஆறுமுகம், வசந்த் ஆகியோர் விளக்க உரையாற்றினார்.

    இதில் நவீன அரிசி ஆலை நிர்வாகம் ஐகோ ர்ட்டில் அளித்த உறுதிமொ ழிக்கு எதிராக, புழுங்கல் அரிசியை அரைக்க நாள் ஒன்றுக்கு 5 டன் உமியை எரித்து வருவதால் காற்றில் கரித்துகள்கள் பரவி மனிதர்களுக்குசுவாசக் கோளாறு, புற்றுநோய் உள்ளிட்ட நோய் ஏற்ப டுகிறது. சுற்றுச்சூழல் சீர்கேட்டினை ஏற்படுத்தும் நவீன அரிசி ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்ப ப்பட்டன.

    இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ஏழு மணி நன்றி கூறினார்.

    • மனைவி மற்றும் உறவினர்கள் காங்கேயம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
    • காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    காங்கேயம் :

    காங்கேயம் அருகேயுள்ள கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது33). இவர் பெரிய இல்லியம் ரோட்டில் அரிசி ஆலை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை பழனிசாமி வீட்டில் உள்ள தனது அறையில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

    இதனை கண்ட அவரது மனைவி மற்றும் உறவினர்கள் காங்கேயம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஆலை அதிபர் பழனிசாமிக்கும் அவரது குடும்பத்தினருக்கு இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதில் மன உளைச்சல் அடைந்த அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. மேலும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

    • மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறாமல் அரிசி ஆலை இயங்கி வந்தது தெரிய வந்தது.
    • சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் அரிசி ஆலை இயக்கத்தை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி சிங்கனூர் பகுதியில் தனியார் அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. அரிசி ஆலையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். உரிய அனுமதி இன்றியும், விதிமுறைகளை மீறி இயங்கி வரும் அரிசி ஆலையின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தும், அரிசி ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.இதையடுத்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் அரிசி ஆலையை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ( திருப்பூர் தெற்கு ) சுற்றுச்சூழல் பொறியாளர் சாமிநாதன் அறிவுறுத்தலின்படிஉதவி சுற்றுச்சூழல் பொறியாளர் வனஜா தலைமையில் அதிகாரிகள் அரிசி ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறாமல் அரிசி ஆலை இயங்கி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், அந்த ஆலையின் மின் இணைப்பை துண்டிக்க, மின்வாரியத்திற்கு பரிந்துரை செய்தனர். பரிந்துரையின் பேரில் அரிசி ஆலையின் மின் இணைப்பை மின்வாரிய அதிகாரிகள் துண்டித்தனர். இந்த நிலையில் மின் இணைப்பை துண்டித்த பின்னும் இரவு நேரங்களில் ஜெனரேட்டர் மூலம் அந்த அரிசி ஆலை இயங்குவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உரிய அனுமதி இன்றி செயல்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் அரிசி ஆலை இயக்கத்தை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    • அரிசி ஆலையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.
    • பொதுமக்கள் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி சிங்கனூரில் பகுதியில் தனியார் அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. அரிசி ஆலையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். உரிய அனுமதி இன்றியும், விதிமுறைகளை மீறி இயங்கி வரும் அரிசி ஆலையின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தும், அரிசி ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இதையடுத்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் அரிசி ஆலையை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ( திருப்பூர் தெற்கு ) சுற்றுச்சூழல் பொறியாளர் சாமிநாதன் அறிவுறுத்தலின்படிஉதவி சுற்றுச்சூழல் பொறியாளர் வனஜா தலைமையில் அதிகாரிகள் அரிசி ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறாமல் அரிசி ஆலை இயங்கி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், அந்த ஆலையின் மின் இணைப்பை துண்டிக்க, மின்வாரிய த்திற்கு பரிந்துரை செய்தனர். பரிந்துரையின் பேரில் அரிசி ஆலையின் மின் இணைப்பை மின்வாரிய அதிகாரிகள் துண்டித்தனர். இதனால் உரிய அனுமதி பெறாமல் இயங்கி வந்த அரிசி ஆலை இயக்கம் நிறுத்தப்பட்டது.

    • தனியாா் அரிசி ஆலை கடந்த 6 மாதங்களாக இயங்கி வருகிறது.
    • கனரக வாகனங்களால் மண் சாலை பழுதடைந்துள்ளது.

    திருப்பூர் :

    பொங்கலூா் ஒன்றியம் மாதப்பூா் ஊராட்சி சிங்கனூா் கிராமத்தில் தனியாா் அரிசி ஆலை கடந்த 6 மாதங்களாக இயங்கி வருகிறது. இந்த ஆலையின் கரித்துகள்கள் காற்றில் பறந்து சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. அரிசி ஆலைக்கு வரும் கனரக வாகனங்களால் மண் சாலை பழுதடைந்துள்ளது. இந்த ஆலை உரிய உரிமம் இன்றி இயங்கி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்தனா்.

    இதைத் தொடா்ந்து, பல்லடத்தில் உள்ள திருப்பூா் (தெற்கு) மாவட்ட மாசுக் கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் துறை உதவி செற்பொறியாளா் வனஜா, சம்பந்தப்பட்ட அரிசி ஆலையில் ஆய்வு மேற்கொண்டாா்.

    • அரிசி ஆலை 6 மாதங்களாக செயல்பட்டு வருகிறது.
    • அப்பகுதி சுற்றிலும் துர்நாற்றம் வீசுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவிற்கு உட்பட்ட மாதப்பூர் சிங்கனூர் பகுதி மக்கள் இன்று பள்ளி குழந்தைகளுடன் வந்து திருப்பூர் மாவட்ட கலெக்டரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர் அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    எங்களது ஊர் பகுதியில் அமைந்துள்ள தனியார் அரிசி ஆலை 6 மாதங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து கழிவு நீர் தொட்டியில் சேமிக்கப்பட்ட கழிவு நீர் அங்குள்ள தென்னை மரங்களுக்கு உபயோகப்படுத்தப்படுவதால் அப்பகுதி சுற்றிலும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் ஆலையின் பாய்லர் கழிவுகள் புகை கூண்டு மற்றும் சேமிப்பு தொட்டிகளில் இருந்து நச்சு துகள்கள் காற்றில் கலந்து அருகில் உள்ள துவக்கப்பள்ளி மற்றும் சிங்கனூரில் உள்ள அனைத்து வீடுகளின் சமையல் கூடங்கள் , படுக்கையறை , வீட்டு வாசலில் காய வைக்கப்படும் துணிகள் , இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் மீது சாரல் மழை போல் கரி மற்றும் தவிட்டு துகள்கள் விழுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு அப்பகுதி பொது மக்களுக்கு சளி இருமல் உள்ளிட்ட நோய் பரவக்கூடிய அபாயம் உள்ளது . அரிசி ஆலை முறையாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் எந்தவித அனுமதியும் பெறாததற்கான சான்றுகள் உள்ள நிலையில் அரிசி ஆலையின் மீது நடவடிக்கை எடுத்து சுகாதார சீர்கேட்டை தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    • சிப்காட் நவீன அரிசி ஆலையில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் செயல்பட்டு வரும் நவீன அரிசி ஆலையை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லினை மழையிலிருந்து நனையாமல் பாதுகாக்கும் வகையில் 60.600 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூறை அமைப்பிலான நெல் சேமிப்பு மேடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பணி முடிக்கப்பட்ட 31,600 மெட்ரிக் டன்கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு மேடைகள் முதல்-அமைச்சரால் கடந்த 11-ந் தேதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் 14,573 மெட்ரிக் டன் நகர்வு செய்யப்பட்ட நெல்லில் 2,000 மெட்ரிக் டன், மானாமதுரை சிப்காட் நவீன அரிசி ஆலை வளாகத்தில் முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட 10,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்பிலான மேடையில் சேமிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 12,573 மெட்ரிக் டன் நெல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் மானாமதுரை நவீன அரிசி ஆலையின் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு நகர்பொருள் வாணிப கழகம் சிவகங்கை மண்டலத்தில் 2022-23-ல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கு சிவகங்கை மாவட்டத்தில் 62 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, கடந்த 21-ந் தேதி வரை 19,365 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    அதில் 14,573 மெட்ரிக் டன் நகர்வு செய்யப்பட்டு பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்முதலில் 4,549 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இதில் 3,134 விவசாயிகளுக்கு ரூ.29.40 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் பணமாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் மானாமதுரை பகுதிகளில் 25 இடங்களில் இயங்கும் நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு. நவீன அரிசி ஆலை வளாகத்தில் மேற்கூரை அமைப்பிலான நெல் மேடைகளில் சேமிக்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் அருண்பிரசாத், செயற்பொறியாளர் முருகன், மேலாளர் முத்துப்பாண்டி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் மூலம் வழங்கப்படும் நெல் மூட்டைகளை அரைத்து அரிசியை பேக்கிங் செய்து அரசுக்கு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • ரேஷன் அரிசியை வாங்கி பாலிஷ் செய்து கொடுக்கக் கூடாது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் இயங்கும் தனியார் அரிசி ஆலையில் தமிழக அரசின் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினர் திடீர் ஆய்வு நடத்தினர்.

    திருப்பூரில் இயங்கும் தனியார் அரிசி ஆலையில், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் மூலம் வழங்கப்படும் நெல் மூட்டை களை அரைத்து அரிசியை பேக்கிங் செய்து அரசுக்கு வழ ங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அரிசி அரவை ஆலையில் தனி நபர்களின் நெல் அரைத்து கொடுக்கப்படுகிறதா அல்லது அரிசி ஆலையில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறப்பு புலனாய்வுத் துறையின் டிஜிபி ஆபாஸ் குமார் கோவை மண்டல எஸ்.பி பாலாஜி ஆகியோர் உத்தரவிட்டனர்.

    இதையடுத்து ஈரோடு சரக டிஎஸ்பி சுரேஷ்குமார், காவல் ஆய்வாளர் சாந்தி ஆகியோர் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர்கள் இசக்கி, கார்த்தி, போலீசார் அரிசி ஆலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் மூலம் வழங்கும் எல்லை மட்டும் ஆலையில் அரவை செய்து அரிசியை பேக்கிங் செய்து கொடுக்க வேண்டும் ரேஷன் அரிசியை வாங்கி பாலிஷ் செய்து கொடுக்கக் கூடாது. தனிநபர்களின் நெல்லை அரைத்து கொடுப்பதை தவிர்க்க வேண்டுமென அரிசி ஆலை நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கப்பட்டது.

    அரிசி ஆலையில் முறைகேடு கண்டறியப்ப ட்டால் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்ததாக குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் தெரிவித்தனர்.

    • கிருஷ்ணமூா்த்தி தனது குடும்பத்துடன் திருப்பூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றுள்ளாா்.
    • வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா்.

    காங்கயம்

    காங்கயம், அய்யாசாமி நகா் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (வயது 40), அரிசி ஆலை நடத்தி வருகிறாா். இந்நிலையில், கிருஷ்ணமூா்த்தி தனது குடும்பத்துடன் திருப்பூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றுள்ளாா். மதியம் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா்.உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 20 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.

    இது குறித்து காங்கயம் காவல் நிலையத்தில் கிருஷ்ணமூா்த்தி புகாா் அளித்தாா்.வழக்குப் பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி கொள்ளையர்கள் யாரென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • உணவு உற்பத்திக்கான பரப்பை அதிகரிக்க மத்திய அரசு மாநிலங்களிடம் கோரியுள்ளது.
    • வழக்கமாக ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் தான் நெல் கொள்முதல் செய்யப்படும்.

    காங்கயம்:

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்,உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் திருப்பூர் ஈரோடு மாவட்ட தனியார் அரிசி ஆலை அரவை உரிமையாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம் காங்கயம் அரிசி ஆலை சங்கத்தில் நடைபெற்றது‌.

    இதில் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், உணவுப்பொருள் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், நுகர்பொருள் வாணிப கழக செயலாளர் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு,வரும் பருவத்தில் நெல்லை அரைத்து கொடுப்பது குறித்து கலந்தாய்வு நடைபெற்றது.

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட உள்ள நெல்லை அரைத்து தருவது குறித்து அரவை ஆலை உரிமையாளர்களுடன் இந்த கலந்தாய்வு நடைபெற்றது. இதில் அரிசி ஆலை உரிமையாளர்கள் சார்பில்கூறுகையில்,கொள்முதல் செய்யப்படும் நெல் 16 சதவீதம் ஈரப்பதத்துடன் இருக்கும். இவ்வாறு வரும் நெல்லை அரவை செய்யும்போது ஒரு வேகவைப்பு மூலம் கொடுக்க அமைச்சர் கூறியுள்ளார்.

    ஆனால் அவ்வாறு செய்தால் அரிசி உற்பத்தி அளவு குறைவு ஏற்படும். இதனால் அரசின் அரிசி ஆலைகளில் எந்த அளவு அரிசி உற்பத்தி வருகிறது என கூறினால் நன்றாக இருக்கும் என தெரிவித்தனர். மேலும் நெல் கொள்முதல் செய்யும் போதே ட்ரையர் அமைத்து கொள்முதல் செய்து கொடுத்தால் வசதியாக இருக்கும் என கூறினர்.

    மேலும் அரிசிக்கு ஜிஎஸ்டி போடப்பட்டதை தி.மு.க. அரசு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என காங்கயம் தாராபுரம் மற்றும் தமிழகம் முழுவதுமிருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இணைந்த அரிசி ஆலை உரிமையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதனை தொடர்ந்து அமைச்சர் சக்கர பாணி கூறுகையில்,கொள்முதல் குடோனில் சேமிக்கும் போது ட்ரையர் அமைத்து நெல் ஈரப்பதம் 12 அல்லது 13 சதவீதம் இருக்கும் படி செய்து அரவைக்கு கொடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார். சன்னரக நெல்லை அதிக அளவில் பயிர் செய்ய விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை கொடுத்து பயிரிட வலியுறுத்த உள்ளோம்.

    அரவை ஆலைகளுக்கு நெல் அரைத்து தரும்போது இரண்டு நாட்களில் பணம் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும். அரவை கூலி குவிண்டாலுக்கு புழுங்கல் அரிசிக்கு 100ம் பச்சை அரிசிக்கு 60 கொடுக்க மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம்‌. தற்போது 40 ரூபாய் கொடுக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் யாராவது இவ்வாறு வந்து அரவை செய்து கொடுக்க கேட்டுள்ளார்களா? இல்லை. நாங்கள் வருகிறோம் என்றால் மக்கள் நலனுடன் உங்களையும் இணைக்க முயற்சியே இது என்றார்.

    உணவு பாதுகாப்பு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், உணவு உற்பத்திக்கான பரப்பை அதிகரிக்க மத்திய அரசு மாநிலங்களிடம் கோரியுள்ளது. அதன்படி உற்பத்தியாகும் நெல்லை அரைத்து கொடுக்க ஆலை அதிபர்கள் ஒத்துழைத்து கொள்முதல் செய்யும் நெல்லை அரைத்து கொடுக்க வேண்டும். அரைத்து கொடுக்கும் நெல்லுக்கு பணம் கிடைக்கவில்லை என்பது கடந்த காலங்களில் நடைபெற்றிருந்தாலும் தற்போது அவ்வாறு நடைபெறாது என்றார்.

    இதன்பின்னர் நிருபர்களிடம் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், தற்போது காங்கயம் பகுதி நெல் அரவை ஆலை உரிமையாளர்களிடம் அரசு கொள்முதல் செய்யும் நெல்லை அரைத்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். அதற்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    இந்த ஆண்டு முன்கூட்டியே டெல்டாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் அதிக பரப்பளவில் நெல் சாகுபடி செய்துள்ளனர். மேலும் இந்த ஆண்டு முதன் முறையாக செப்டம்பர் மாதம் 1 ந்தேதி முதலே நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

    வழக்கமாக ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் தான் நெல் கொள்முதல் செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு ஒரு மாதம் முன்னதாகவே கொள்முதல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. கண்வலி விதைக்கு குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யக்கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசு விலை நிர்ணயம் செய்தவுடன் விதைகளை தமிழக அரசு கொள்முதல் செய்ய தயாராக உள்ளதாக கூறினார். கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கரும்புக்கான நிலுவைத்தொகை ரூ.300 கோடி இருந்தது. அது இந்த ஆட்சியில் உடனடியாக வழங்க முதல்வர் உத்தரவிட்டதின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

    • அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் 5 சதவீத வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 5 சதவீத வரி அமல்படுத்தப்பட்டால் கிலோ அரிசி ரூ.3 வரை உயரும்.

    திருப்பூர் :

    திருப்பூர் அரிசி மண்டி மொத்த வியாபாரிகள் சங்கம் மற்றும் திருப்பூர், பல்லடம் தாலுகா அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.சி.எம்.துரைசாமி, தலைமையில் திருப்பூரில் உள்ள சங்க அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. பண்டல் செய்யப்பட்ட அரிசிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை விலக்கிக்கொள்ள வலியுறுத்தி ஒருநாள் வேலைநிறுத்தம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தினர்.

    பின்னர் கே.சி.எம்.துரைசாமி கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பண்டல் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு என அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் 5 சதவீத வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவு பெற்ற பிராண்டுக்கு மட்டுமே 5 சதவீத வரி விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது பண்டல் செய்யப்பட்ட அனைத்து விதமான அரிசி மூடைக்கும் 5 சதவீத வரி அமல்படுத்தப்பட்டால் கிலோ அரிசி ரூ.3 வரை உயரும்.

    நடுத்தர குடும்பம் மட்டுமில்லாமல் தினமும் வேலைக்கு செல்லும் அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். கடந்த முறை ஜி.எஸ்.டி. வரி விதித்தபோது தமிழக அரசிடம் எடுத்துக்கூறியதால் நிறுத்தப்பட்டது. மத்திய அரசு உடனடியாக வரி விதிப்பை விலக்கிக்கொள்ள வலியுறுத்தி அகில இந்திய அரிசி ஆலை சம்மேளனம், அகில இந்திய அனைத்து உணவு தானியங்களின் அமைப்புகள் இணைந்து நாளை (சனிக்கிழமை) அனைத்து அரிசி ஆலைகள், அரிசி மொத்த வணிகர்கள், அரிசி சில்லறை வணிகர்கள் அனைவரும் இந்தியா முழுவதும் ஒருநாள் அடையாள கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் காங்கயத்தில் 125 அரிசி ஆலைகள், தாராபுரத்தில் 40 அரிசி ஆலைகள், திருப்பூரில் 20, அவினாசி, ஊத்துக்குளியில் தலா 10 உள்பட மொத்தம் 205 அரிசி ஆலைகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி மொத்த வணிகர்கள், சில்லறை வணிகர்கள் நாளை (சனிக்கிழமை) நடக்கும் கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள். நாளொன்றுக்கு அரிசி ஆலையில் 25 ஆயிரம் டன் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. கடைகளில் 30 ஆயிரம் டன் அரிசி விற்பனையாகும். அவை வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ×