search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Petiiton"

    • அரிசி ஆலை 6 மாதங்களாக செயல்பட்டு வருகிறது.
    • அப்பகுதி சுற்றிலும் துர்நாற்றம் வீசுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவிற்கு உட்பட்ட மாதப்பூர் சிங்கனூர் பகுதி மக்கள் இன்று பள்ளி குழந்தைகளுடன் வந்து திருப்பூர் மாவட்ட கலெக்டரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர் அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    எங்களது ஊர் பகுதியில் அமைந்துள்ள தனியார் அரிசி ஆலை 6 மாதங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து கழிவு நீர் தொட்டியில் சேமிக்கப்பட்ட கழிவு நீர் அங்குள்ள தென்னை மரங்களுக்கு உபயோகப்படுத்தப்படுவதால் அப்பகுதி சுற்றிலும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் ஆலையின் பாய்லர் கழிவுகள் புகை கூண்டு மற்றும் சேமிப்பு தொட்டிகளில் இருந்து நச்சு துகள்கள் காற்றில் கலந்து அருகில் உள்ள துவக்கப்பள்ளி மற்றும் சிங்கனூரில் உள்ள அனைத்து வீடுகளின் சமையல் கூடங்கள் , படுக்கையறை , வீட்டு வாசலில் காய வைக்கப்படும் துணிகள் , இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் மீது சாரல் மழை போல் கரி மற்றும் தவிட்டு துகள்கள் விழுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு அப்பகுதி பொது மக்களுக்கு சளி இருமல் உள்ளிட்ட நோய் பரவக்கூடிய அபாயம் உள்ளது . அரிசி ஆலை முறையாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் எந்தவித அனுமதியும் பெறாததற்கான சான்றுகள் உள்ள நிலையில் அரிசி ஆலையின் மீது நடவடிக்கை எடுத்து சுகாதார சீர்கேட்டை தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    ×