search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Malpractice"

    • பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டருக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • முறைகேடாக அதிகாரிகள் திட்டத்தில் சேர்த்து பணத்தை முறைகேடு செய்துள்ளனர்.

    மதுரை

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்த லட்சுமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் பிரதமரின் அனை வருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து இருந்தேன். அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த அதிகாரிகள் திட்டத்தின் கீழ் என்னை பயனாளியாக தேர்ந்தெடுத்தனர்.

    இந்த நிலையில் அந்த திட்டத்தில் எனக்கு வரவேண்டிய பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட வில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்ட போது உரிய பதிலளிக்காமல், காலம் தாழ்த்தினர். மேலும் இது குறித்து விசாரித்த போது அதே கிராமத்தில் எனது பெயரை கொண்ட வேறொரு நபர் இந்த திட்டத்தின் கீழ் பயனாளியாக சேர்க்கப்பட்டது தெரியவந்தது. என்னை பயனாளியாக தேர்ந்தெடுத்து விட்டு வேறொரு நபரை முறைகேடாக அதிகாரிகள் திட்டத்தில் சேர்த்து பணத்தை முறைகேடு செய்துள்ளனர்.

    எனவே எனக்கு அந்த திட்டத்தின் கீழ் வரவேண்டிய பணத்தை வழங்கவும், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி,

    பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் வீடில்லாத ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டி கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்டது.வறுமையில் உள்ளவர்களுக்கான திட்டத்தில் முறைகேடு நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    இந்த திட்டம் முறையாக வெளிப்படை தன்மையோடு செயல்படுத்தப்பட வேண்டும். தகுதியான பயனாளிகளுக்கு திட்டம் சென்றடைவதை அதிகாரிகள் தான் உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் உண்மையான பயனாளிகளுக்கு திட்டம் சென்றடையும்.

    எனவே சிவகங்கை மாவட்ட கலெக்டர் இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மனு தாரர் லட்சுமிக்கு 12 வாரத்தில் மானிய தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். 

    • ஆயுத கொள்முதலில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரால் இந்த விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
    • சீன ராணுவத்தின் கொள் முதல் பிரிவை சேர்ந்த 8 மூத்த அதிகாரிகளும் விசாரணை வளையத்தில் உள்ளனர்.

    பீஜிங்:

    சீன ராணுவ மந்திரியாக இருப்பவர் லீஷாங்பூ. இவர் கடந்த இரண்டு வாரமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. அரசு நிர்வாக விவகாரங்களிலும் கலந்துக் கொள்ளவில்லை. அவர் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்காதது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடவில்லை. கடந்த ஜூலை மாதம் சீன வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த குயின் கேங் திடீரென்று மாயமாகி பொது நிகழ்ச்சிகளை தவிர்த்து வந்த நிலையில் புதிய வெளியுறவுத்துறை மந்திரியாக வாங்யீ நியமிக்கப்பட்டார்.

    இதற்கிடையே சீன ராணுவ மந்திரி மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ராணுவ மந்திரி லீஷாங்பு எங்கு உள்ளார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படாத நிலையில், அவர் ரகசிய இடத்தில் சீன அதிகாரிகளால் விசாரணை வளையத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ராணுவ உபகரணங்களை வாங்கியது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆயுத கொள்முதலில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரால் இந்த விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

    மேலும் 2017 முதல் 2022-ம் ஆண்டு வரை லீஷாங்பு தலைமையிலான சீன ராணுவத்தின் கொள் முதல் பிரிவை சேர்ந்த 8 மூத்த அதிகாரிகளும் விசாரணை வளையத்தில் உள்ளனர்.

    கடந்த மார்ச் மாதம் ராணுவ மந்திரியாக நியமிக்கப் பட்ட லீஷாங்பு மற்றும் 8 அதிகாரிகள் மீதான விசாரணை ராணுவத்தின் சக்தி வாய்ந்த ஒழுங்குமுறை ஆய்வு குழுவால் மேற்கொள்ளப்படுகிறது. சீன ராணுவ மந்திரி லீஷாங்பு, ஊழல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் நம்புவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.

    லீ ஷாங்பு, கடைசியாக கடந்த ஆகஸ்ட் 29-ந்தேதி பீஜிங்கில் நடந்த ஆப்பிரிக்க நாடுகளுடனான பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றினார். கடந்த மாத தொடக்கத்தில் ரஷியா, பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக பலரும் நன்கொடை வழங்கினார்கள்.
    • பொதுமக்கள் வழங்கிய நன்கொடையை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அனுப்பாமல் வைத்துக்கொண்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் பலத்த மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் கோடிக்கணக்கில் சேதம் ஏற்பட்டது.

    பல மாவட்டங்களில் ஏராளமானோர் தங்களின் உடமைகளை இழந்தனர். வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மாநில அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உதவி செய்வதற்காக பலரும் நன்கொடை வழங்கினார்கள்.

    அவற்றை அதிகாரிகள் பெற்று முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு அனுப்பினர். பின்பு அந்த நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மூலம் வழங்கப்பட்டது. இந்நிலையில் பொதுமக்கள் வழங்கிய நன்கொடையை முதல்வரின் நிவாரணநிதிக்கு அனுப்பாமல் மோசடி செய்த கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

    கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கடுத்துருக்கி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்தவர் சஜி வர்கீஸ். இவர் தனது அலுவலகத்துக்கு பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்களிடம் அன்பளிப்பாக பணம் பெறுவதாகவும், சட்ட விரோதமாக மணல் அள்ளுபவர்களிடம் லஞ்சம் வாங்குவதாகவும் புகார்கள் கூறப்பட்டன.

    அந்த புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார் தலைமையிலான போலீசார் கடுத்துருத்தி கிராம நிர்வாக அலுவலகத்துக்கு அதிடியாக சென்று ஆய்வு செய்தனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர் சஜி வர்கீசிடம் விசாரணை நடத்தினர்.

    அதில் 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் மழையால் பெருவெள்ளம் ஏற்பட்ட போது பேரிடர் நிவாரணநிதிக்கு பொதுமக்கள் வழங்கிய பணத்தை கிராம நிர்வாக அலுவலர் சஜி வர்கீஸ், முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்காமல் மோசடி செய்தது தெரியவந்தது.

    சுமார் 9பேர் வழங்கிய தொகையை அவர் மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் ரூ.10லட்சம் வரையிலான பணத்தை அவர் முறைகேடு செய்தது லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வுசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சஜி வர்சீசை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். பேரிடர் நிவாரணத்துக்கு பொதுமக்கள் நன்கொடை யாக வழங்கிய பணத்தை கிராம நிர்வாக அலுவலர் முறைகேடு செய்திருக்கும் சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • புகைப்படம் எடுப்பதற்காக ஒரு நபருக்கு ரூ.20 வீதம் வசூலிப்பதாக தகவல்
    • தொழிலாளர்கள் கூலித்தொகையில் பாதி பணமும் கேட்பதாக குற்றச்சாட்டு

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 51 ஊராட்சிகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டம் நடக்கிறது.

    இதில் தோளப்பள்ளி ஊராட்சியில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 100 நாள் வேலை செய்கின்றனர்.

    இவர்களிடம் பணித்தள பொருப்பாளர்கள் மிரட்டி பணி செய்யும் போது புகைப்படம் எடுப்பதற்காக ஒரு நபருக்கு ரூ.20 வீதம் வசூலிப்பதாக கூறப்படுகிறது.

    மேலும் பணிக்கு வராத ஆட்களை வந்தது போல் வருகை பதிவேட்டில் பதிவு செய்ய, தொழிலாளர்கள் கூலித்தொகயைில் பாதி பணமும் கேட்பதாக, 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் தோளப்பள்ளி ஊராட்சிக்குபட்ட கடலை குளம் கிராமத்தில் நேற்று 100 நாள் வேலை திட்டம் நடைபெற இருந்தது.

    அப்போது வேலை செய்வது போல் புகபை்படம் எடுக்க, தொழிலாளர்களை ரூ.20 தரும்படி பணித்தளப் பொருப்பாளர்கள் கேட்டுள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் நேற்று 100 நாள் வேலைக்கு செல்லாமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் கல்பனா சுரேஷ் மற்றும் வேப்பங்குப்பம் போலீசார் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும் இதுபோன்று தவறுகள் இனிமேல் நடக்காது என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து அணைவரும் மீண்டும் ேவலைக்கு திரும்பி சென்றனர்.

    இந்த சம்பவம் நேற்று தோலப்பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அதிகாரிகள் பெயரை சொல்லி முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு
    • ஓராண்டாக ஆர்.டி.ஓ. நியமிக்கப்படாததால் பொதுமக்கள் அவதி

    திருச்சி,

    திருச்சி பிராட்டியூரில் திருச்சி மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் பழகுனர் உரிமம், ஓட்டுனர் உரிமம், புதிய வாகன பதிவு, வாகன உரிம பெயர் மாற்றம், வாகன அனுமதி சீட்டு,வாகன தகுதிச் சான்று, பொதுப்பணி வில்லை போன்ற பல்வேறு தேவைகளுக்கு பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.மேற்கண்ட தேவைகளுக்கு ஆன்லைனில் அதற்குரிய கட்டணத்தை செலுத்தும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது. முறைகேடுகளை தடுத்து பொதுமக்களுக்கு விரைவான சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆன்லைன் வசதி கொண்டுவரப்பட்டது.ஆனால் இப்போதும் புரோக்கர்களின் துணை இல்லாமல் பெரும்பாலான மக்களால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் எதையும் பெற முடியாத நிலையே நீடிக்கிறது.பேட்ஜ் எனப்படும் பொது வாகனங்களை இயக்குவதற்கான வில்லைகள் பெற்றுக் கொள்வதற்கு அரசு ரூ. 315 மட்டுமே கட்டணம் நிர்ணயித்துள்ளது.ஆனால் இதனை புரோக்கர்கள் வாயிலாக கூடுதல் தொகை செலவழிக்காமல் வாங்க இயலவில்லை.இவற்றையெல்லாம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் பிராட்டியூர் திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த ஒரு வருட காலமாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நியமிக்கப்படவில்லை.அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூடுதல் பொறுப்பினை வகித்து பணியாற்றி வருகின்றனர்.

    வாரத்தில் ஒன்றிரண்டு தினங்கள் மட்டுமே முழுநேர பணிகளை மேற்கொள்கிறார்கள். இதனால் பொதுமக்களும் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பல நாட்கள் காத்திருக்க வேண்டிய அவலம் நீடிக்கிறது.பெரும்பாலான பணிகளை போக்குவரத்து ஆய்வாளர்களே செய்து முடிக்கிறார்கள். இந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை பொருத்தமட்டில் காத்திருக்கும் மக்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. காத்திருப்பு பகுதியில் குறைந்த அளவு இருக்கைகளே உள்ளன.இதுபோன்ற சிக்கலான நிலைகளில் பொதுமக்கள் புரோக்கர்களை நாட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள்.இதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் சில புரோக்கர்கள் அதிகாரிகளின் பெயர்களை சொல்லி லஞ்சம் வாங்குவதாகவும் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் புலம்புகின்றனர்.இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க உடனடியாக வட்டார போக்குவரத்து அலுவலர் நியமிக்க வேண்டும் என பொதுமக்களும் ஊழியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குடல் பகுதியையும், கர்ப்பப்பை பகுதியையும் சேர்த்து தையல் போட்டுள்ளனர்.
    • பெட்ரோல் கேனை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே உள்ள சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி பத்மாவதி. கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 19.9.2022 அன்று அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் சிகிச்சை முடிந்ததும் பத்மாவதி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதன் பிறகு பத்மாவதிக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்பட்டுள்ளது. புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பத்மாவதியை பரிசோதனை செய்ததில் பிரசவத்தின் போது குடல் பகுதியையும், கர்ப்பப்பை பகுதியையும் சேர்த்து தையல் போட்டுள்ளதும், அதனால் தான் வயிறு வலி ஏற்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பாதிக்கப்பட்ட பத்மாவதி, சிகிச்சை முடிந்ததும் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவ குழு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்திய பிறகு, எவ்வித அறிக்கையும் சமர்ப்பிக்கவில்லை என தெரிகிறது. 

    இதனையடுத்து பத்மாவதி மற்றும் அவரது கணவர், குழந்தைகள், உறவினர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கடந்த 24-ந்தேதி வந்தனர். அவர்கள் அங்கு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தனர். அவர்களிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அறுவை சிகிச்சை யின் போது குடலையும், கர்ப்பபையினையும் சேர்த்து தையல் போட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென பத்மாவதி குடும்பத்தார் வலியுறுத்தினர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை அடுத்து பத்மாவதி குடும்பத்தார் அங்கிருந்து சென்றனர். 

    இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு பத்மாவது, அவரது கணவர், குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் ஆஸ்ப த்திரியின் டாக்டர்கள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் அரசு ஆஸ்பத்திரி வளாகமே பரபரப்பாக காணப்படுகிறது.

    • மாவட்ட நிா்வாகத்தின் மூலமாக குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • உடுமலை வட்டாட்சியா் தலைமையில் கருத்துக் கேட்புக்கூட்டம் கடந்த ஏப்ரல் 24 -ந் தேதி நடைபெற்றது.

    உடுமலை :

    திருப்பூா் மாவட்டம் உடுமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட போடிப்பட்டி ஊராட்சியில் நிதி நிா்வாகத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகாா் எழுந்தது. இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகத்தின் மூலமாக குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த முறைகேடு தொடா்பாக ஊராட்சி மன்ற தலைவா் டி.சௌந்திரராஜனிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

    இதுதொடா்பாக அவா் அளித்த விளக்கம் ஏற்கத் தகுதியில்லாததால் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் உத்தரவிட்டிருந்தாா். இதையடுத்து உடுமலை வட்டாட்சியா் கண்ணாமணி தலைமையில் கருத்துக் கேட்புக்கூட்டம் கடந்த ஏப்ரல் 24 -ந் தேதி நடைபெற்றது. இதில் 12 ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், ஊராட்சி மன்றத் தலைவா் ஆகியோரிடம் கருத்துக் கேட்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் போடிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் சௌந்திரராஜனை தகுதி நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் உத்தரவிட்டாா்.

    • மதுரை மாவட்டத்தில் தொழிலாளர் துறையினர் சோதனையில் முறைகேட்டில் ஈடுபட்ட 45 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • இணைய தளத்தில் புகார் தெரிவிக்கலாம்.

    மதுரை

    மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், இணை ஆணையர் சுப்பிரமணியன் ஆகிேயாரது ஆலோசனை பேரில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஏப்ரல் மாதத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகளில் சோதனை நடத்தினர்.

    அப்போது தராசுகளை மறுமுத்திரையிடாதது, தரப்படுத்தாத எடை அளவுகள் பயன்படுத்தியது, மறுபரிசீலனை சான்று காட்டி வைக்காதது, நிறுவன உரிமங்கள் புதுப்பிக்காதது ஆகியவற்றிற்காக 26 நிறுவனங்கள் மீது நட வடிக்கை எடுக்கப்பட்டது.

    குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட் லைட்டர்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் பதிவுச்சான்று பெறாமல் பொட்டலப் பொருட்களை விற்பனை செய்த, அதிகபட்ச சில்லறை விலையைவிட கூடுதலாக விற்பனை செய்த 5 நிறுவனங்கள் சிக்கியது.

    குறைந்தபட்ச கூலிச் சட்டத்தின்கீழ் நடத்தப்பட்ட ஆய்வில் 14 உணவு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. அந்த நிறுவனங்களிடம் இருந்து 23 ஊழியர்களுக்கு ரூ.2 லட்சத்து 24 ஆயிரத்து 260 சம்பள நிலுவைத் தொகை பெற்று வழங்கப்பட்டது.

    மோட்டார் வாகனம் பழுதுபார்க்கும் தொழிற்கூடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 1 குழந்தை தொழிலாளர் மற்றும் 4 வளரிளம் பருவ ஊழியர்கள் மீட்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பாக தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி கூறுகையில், தொழிலாளர் நலச் சட்டங்களின் கீழ் பதிவுச் சான்று பெற, தராசுகளை முத்திரையிட labour.tn.gov.in இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 18 வயது நிறைவடையாத குழந்தைகளை அபாய கரமான தொழிலில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும்.அவ்வாறு செய்தால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ரூ.50 ஆயிரம் மற்றும் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுள்ளது. குழந்தை தொழிலாளர் குறித்து 1098, 155214 அல்லது ''Pencil portal'' இணையதளம் வழியாக புகார் செய்யலாம்.

    குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பும் பெற்றோர்- பாதுகாவலர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க இயலும். எடை அளவைகள் மற்றும் பொட்டல பொருட்கள் விதிகளின் கீழ் முரண்பாடு தெரிய வந்தால் ரூ.500 முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    முத்திரையிடாத எடை அளவைகள் பயன்படுத்துவோர், அதிகபட்ச சில்லரை விலையைவிட கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோர் பற்றி National Consumer Helpline எண். 1915 அல்லது இணைய தளத்தில் புகார் தெரிவிக்கலாம்.

    மேற்கண்ட தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தெரிவித்துள்ளார்.

    • சிண்டிகேட் கூட்டத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்து இதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
    • முறைகேட்டில் ஈடுபட்ட 8 ஆசிரியர்களும் கடந்த ஜனவரி மாதமே பணி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    சென்னை:

    பல்கலைக்கழக தேர்வில் அதிக மதிப்பெண் வழங்குவதாக கூறி மாணவர்களிடம் பணம் வசூலித்து முறை கேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தின் 8 பேராசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்து இதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த 8 பேரில் மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட மண்டல மையங்களில் உள்ள ஆசிரியர்கள், கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி ஆசிரியர்கள் ஆகியோர் அடங்குவர்.

    மேலும் மூத்த பேராசிரியர்கள் 3 பேர் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஓய்வு பெறும்போது பேராசிரியர்களாக மட்டுமே ஓய்வு பெறுவார்கள்.

    முறைகேட்டில் ஈடுபட்ட 8 ஆசிரியர்களும் கடந்த ஜனவரி மாதமே பணி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. தற்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறாமல் அரிசி ஆலை இயங்கி வந்தது தெரிய வந்தது.
    • சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் அரிசி ஆலை இயக்கத்தை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி சிங்கனூர் பகுதியில் தனியார் அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. அரிசி ஆலையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். உரிய அனுமதி இன்றியும், விதிமுறைகளை மீறி இயங்கி வரும் அரிசி ஆலையின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தும், அரிசி ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.இதையடுத்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் அரிசி ஆலையை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ( திருப்பூர் தெற்கு ) சுற்றுச்சூழல் பொறியாளர் சாமிநாதன் அறிவுறுத்தலின்படிஉதவி சுற்றுச்சூழல் பொறியாளர் வனஜா தலைமையில் அதிகாரிகள் அரிசி ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறாமல் அரிசி ஆலை இயங்கி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், அந்த ஆலையின் மின் இணைப்பை துண்டிக்க, மின்வாரியத்திற்கு பரிந்துரை செய்தனர். பரிந்துரையின் பேரில் அரிசி ஆலையின் மின் இணைப்பை மின்வாரிய அதிகாரிகள் துண்டித்தனர். இந்த நிலையில் மின் இணைப்பை துண்டித்த பின்னும் இரவு நேரங்களில் ஜெனரேட்டர் மூலம் அந்த அரிசி ஆலை இயங்குவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உரிய அனுமதி இன்றி செயல்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் அரிசி ஆலை இயக்கத்தை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    • மரக்கன்று வளர்ப்பு திட்டப்பணிகள் மந்தம் தண்ணீர் ஊற்றாததால் கருகி வருகின்றன
    • 100 நாள் திட்டத்தில் முறைகேடு நடப்பதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலக எல்லைக்கு உள்பட்ட அபிராமம் பகுதியில் 100 நாள் வேலைத்திட்டம் மூலம் மரக்கன்று வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கடந்த 2 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நட்டபோதி லும், சில நூறு மரக்கன்றுகள் கூட இப்போது இல்லை. இதனால் மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கபடுகின்றனவா? என்பதை கண்காணிக்க வேண்டும்.

    கிராமப்புறங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள், ஒடைகள், வரத்துக்கால்வாய்கள், நீர்பிடிப்பு பகுதிகளில் வனத்துறை மூலம் மரக்கன்றுகள் வாங்கப்பட்டு நடப்படுகின்றன. இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டம் (100 நாள் வேலைத்திட்டம்) பணியாளர்கள் மூலம் தினமும் தண்ணீர் ஊற்றப்பட்டு மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. இதன்மூலம் பசுமை பகுதியாக மாற வாய்ப்புள்ளதால் அரசு நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    ஊரகப்பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களில் கடந்த சில ஆண்டுகளாக மரக்கன்றுகள் வளர்க்கப் பட்டு வருகின்றன. இவற்றில் வேம்பு, அரசு மா, பலா, புளி, தேக்கு புங்கன் போன்ற 15-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன.

    மொத்தமாக மரக்கன்று கள் நடப்பட்டுள்ள இடங்களில் தண்ணீர் ஊற்றுவதற்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு தண்ணீர்தொட்டிகளும் கட்டப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வந்தாலும் பெரும்பாலான இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டாலும் சில 100 குழிகளில் மட்டுமே மரக்கன்றுகள் உள்ளன. ஆனால் பெரும்பாலான கிராமங்களில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களை வைத்து பெயரளவில் தண்ணீர் ஊற்றும் பணி நடந்து வருகிறது.

    இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் கூறும்போது, மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள பல குழிகளில் தண்ணீர் இருந்ததற்கான அடையாளமே இல்லை. ஆனாலும் அதிகாரிகள் உத்தரவின்படி 100 நாள் திட்டப் பணியாளர்கள் மூலம் தினமும் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது. மேலும் பல கிராமங்களில் 100 நாள் திட்டம் மூலம் மரக்கன்றுகள் வளர்க்கப்படுவதாக கணக்கு எழுதப்படுகிறது. ஆனால் எங்குமே மரக்கன்றுகள் இல்லை.

    பணியாளர்கள் எண் ணிக்கை கணக்கெடுப்பு நடத்தப்பட்டவுடன் ஒருசில குழிகளில் மட்டுமே தண்ணீர் ஊற்றப்படுகிறது. பிறகு பணியாளர்கள் ஓய்வு எடுக்க சென்று விடுகின்றனர். தண்ணீர் ஊற்றியும் மரக்கன்றுகள் வளராததற்கு என்ன காரணம்? என அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை.

    எனவே அரசு மரக்கன்று கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மேலும் இந்த திட்டத்தின் கீழ் தண்ணீர் ஊற்றுவது பெயரளவில் மட்டுமே நடக்கிறது. இதனால் முறையாக மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றவும் 100 நாள் திட்டத்தில் முறைகேடு நடப்பதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இதுபற்றி 100 நாள் வேலைத்திட்டத்தை கண்காணிக்கும் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறும்போது, கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் கொண்டு வரப் பட்ட திட்டம் தான் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம்.

    கடந்த 2016-ம் ஆண்டு முதல் அரசு நிலங்கள், சாலையோரங்கள், கண்மாய், குளம், ஊரணி கரைகளில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சில வருடங்களில் மட்டும் பல லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

    ஆண்டுதோறும் அக்டோ பர் மாதம் முதல் டிசம்பர் வரை மட்டும் தான் பரவ லாக மழை இருக்கிறது. மற்ற 9 மாதங்களில் 55 சதவீத தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. பெரும்பாலன கிராமங்களில் குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத நிலை யில், மரக்கன்று களுக்கு தண்ணீர் ஊற்றுவது சிரம மாக உள்ளது.

    இருந்தபோதிலும் ஊராட்சிகள் மூலம் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர் இருப்பு உள்ள இடங்களில் அடி பம்பு பொருத்தி தண்ணீர் எடுத்து மரக்கன்றுகளுக்கு தண்ணிர் ஊற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

    • முறைகேடு செய்ததாக கிராம நிர்வாக அலுவலர் மீது தாசில்தாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    • புகாரின் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தாசில்தார் தெரிவித்தார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் ஊராட்சி சிவசுப்பிரமணியபுரம் பொதுமக்களுக்கு பாத்தியப்பட்ட ராமசாமி கோவில் இடத்திற்கான பட்டாவில் தனி நபர்களின் பெயரினை இணைத்து முறைகேடு செய்ததாக ஆவுடையானூர் கிராம நிர்வாக அலுவலர் மீது தென்காசி தாசில்தாரிடம் ஆவுடையானூர் ஊராட்சி தலைவர் குத்தாலிங்கராஜன் என்ற கோபி தலைமையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் புகாரின் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சட்டவிரோத பட்டாவில் சேர்க்கப்பட்டுள்ள பெயர்கள் அனைத்தும் நீக்கப்படும் என்று தெரிவித்தார்.

    இதில் தமிழன் மக்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் முருகன் சமூக ஆர்வலர்கள் ரமேஷ்குமார்,செல்லப்பா மற்றும் பாதிக்கப்பட்ட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×