என் மலர்
நீங்கள் தேடியது "Defense Minister"
- இது கடந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட 2.12 லட்சம் கோடி ரூபாயை விட அதிகம்.
- நாட்டின் பலவீனமான பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும்.
இந்தியாவுடனான எல்லை பதட்டங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் அரசு 2025-26 நிதியாண்டிற்கான பாதுகாப்பு பட்ஜெட்டில் 20% அதிகரிப்பை அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் நிதியமைச்சர் முகமது ஔரங்கசீப் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், இராணுவ செலவினங்களுக்கு 2.55 லட்சம் கோடி பாகிஸ்தான் ரூபாய் (சுமார் 9 பில்லியன் டாலர்) ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட 2.12 லட்சம் கோடி ரூபாயை விட அதிகம்.
நிதியமைச்சர் ஔரங்கசீப், தேசிய பாதுகாப்புக்கு அரசு முதலிடம் அளிக்கும் என்று கூறினார். அதே சமயம், மொத்த பொதுச் செலவினத்தில் 7% குறைப்பு, பாதுகாப்பு செலவினங்களில் அதிகரிப்பு விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
கல்வி, விவசாயம் ஆகியவற்றை விட பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டதற்காக பாகிஸ்தான் மீது விமர்சனம் எழுந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் இந்த முடிவை கடுமையாக எதிர்த்து, இது நாட்டின் பலவீனமான பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் என்றும், முக்கியமான சிவில் துறைகளுக்கு நிதி கிடைக்காமல் போகும் என்றும் குற்றம் சாட்டியுள்ளன.
- உள்நாட்டு, வெளிநாட்டு பாதுகாப்புக்கு இடையேயான இடைவெளி குறைந்து வருகிறது.
- சில நாடுகளின் உத்தரவுகளை இந்தியா ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது.
தலைநகர் டெல்லியில் உள்ள தேசிய ராணுவ கல்லூரியின் 60வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங், பயிற்சி முடித்த இந்திய முப்படை அதிகாரிகள், ஆட்சிப்பணி அதிகாரிகள் மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு பட்டங்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
மோடி தலைமையிலான மத்திய அரசு, உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அதிமுக்கியத்துவம் அளித்து வருகிறது. குறிப்பாக மக்களின் விருப்பங்கள் பாதுகாக்கப்படும்போதுதான், நாடு முழு வல்லமை பெற்றதாக மாறும் என்பதைக் கருத்தில் கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பாதுப்புக்கு இடையிலான இடைவெளி குறுகி வரும் நிலையில், கால மாற்றத்திற்கு ஏற்ப நாடு எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களும் புதிய வடிவம் பெற்றிருக்கிறது. உள்நாட்டு தீவிரவாதம், தற்போது வெளிநாட்டில் பயிற்சி பெறுவது, நிதி திரட்டுவது, ஆயுதங்களை விநியோகிப்பது போன்றவற்றை மேற் கொள்கின்றன.

சைபர் குற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள் மாபெரும் அச்சுறுத்தலாகத் திகழ்கின்றன. இவற்றால் எரிசக்தி, போக்குவரத்து, தொலைத்தொடர்பு உள்ளிட்டத் துறைகள் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ரஷியா- உக்ரைன் இடையேயான போர் குறித்த தகவல்களை, சமூக வலைதளங்களும், இதர ஆன்லைன் தகவல் பரிமாற்ற தளங்களும், தங்கள் கண்ணோட்டத்தில் வெளியிட்டு வருவது புதிய தகவல் போராக மாறி விட்டது.
சைபர் குற்றங்கள், சமூக வலைதளங்களின் தகவல் போர் போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முறியடிக்க சர்வதேச சமுதாயம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். உலக நாடுகளை ஆதிக்கம் செலுத்தும் சில நாடுகளின் உத்தரவுகளை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. அனைத்து நாடுகளின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, சமமாக நடத்துவதுதான் இந்தியாவின் நீதி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஜி-20 அமைப்பின் லோகோவில் தாமரை மலர் இருப்பது இந்திய கலாச்சாரத்தின் அடையாளம்.
- தேச நலன்களைப் பாதுகாப்பதே மோடி அரசின் முக்கிய நோக்கம்.
அரியானா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளதாவது: இந்தியா இப்போது பலவீனமாக இல்லை. நாம் அமைதியை நம்புகிறோம், ஆனால் யாரேனும் நமக்குத் தீங்கு விளைவிக்க முயன்றால், நாம் தக்க பதிலடி கொடுப்போம். நமது வீரர்கள் இதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர்.
2016-ல் சர்ஜிகல் தாக்குதல், 2019 பாலகோட் வான் வழித் தாக்குதல் மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நமது வீரர்கள் காட்டிய வீரம் ஆகியவை நமது வலிமை மற்றும் தயார் நிலைக்கு சான்றாகும். தேச நலன்களைப் பாதுகாப்பதே மோடி தலைமையிலான அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது.எதிர்கால சவால்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்க ராணுவம் அதிநவீன ஆயுதங்களுடனும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட உபகரணங்களுடனும் தயாராக இருக்கிறது.
அடுத்த ஆண்டு இந்தியா தலைமையில் நடைபெறும் ஜி-20 நாடுகள் அமைப்பின் உச்சி மாநாட்டிற்காக அண்மையில் பிரதமரால் வெளியிடப்பட்ட லோகோவில் தாமரை மலர் இருப்பது இந்திய கலாச்சாரத்தின் அடையாளம் ஆகும். இந்தியாவின் தேசிய மலர் தாமரை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- தேசியப் பாதுகாப்புக்கே மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது.
- ராணுவத்தைப் பலப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மும்பையில் நடைபெற்ற பாதுகாப்புத்துறை ஆலோசனை கூட்டத்தில் பேசிய மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளதாவது:
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல் மற்றும் ஆயுதங்கள் மூலம், நாட்டின் கடல் எல்லைகளைப் பாதுகாக்க ஏதுவாக இந்தியக் கடற்படையும், கடலோரக் காவல்படையும் தயாராகி வருகிறது. தேசியப் பாதுகாப்புக்கே மத்திய அரசு முன்னுரிமை அளிப்பதை உறுதிசெய்யும் வகையில், இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையைப் பலப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிரதமர் மோடியின் தற்சார்பு இந்தியா இயக்கம் மூலம் உரிய நேரத்தில் ராணுவத்தைப் பலப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராணுவ தளவாட இறக்குமதியைக் குறைக்கும் வகையில், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் முயற்சிகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.
ராணுவ கப்பல் கட்டும் தளங்கள் நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்தும் தளங்களாக மாறியிருக்கின்றன. கடந்த 2021-2022ம் ஆண்டு ரூ.8,925 கோடியாக இருந்த கப்பல் கட்டும் தளங்களின் உற்பத்தி , நடப்பு ஆண்டில் ரூ.81,777 கோடியாக உயர்ந்துள்ளது. இந்திய கப்பல்கட்டும் தளங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தரமான பணிகளை நட்பு நாடுகள் வெகுவாகப் பாராட்டி வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- ஐ.என்.எஸ். மொர்முகோவ் போர்க்கப்பல் கடற்படையில் இணைந்தது.
- இந்த கப்பலில் உள்ள உபகரணங்கள் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டவை.
மும்பைக் கடற்படைத் தளத்தில் இன்று மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐ.என்.எஸ். மொர்முகோவ் என்ற போர்க்கப்பல், இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது. இதன் மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ள 2-வது போர் கப்பல் என்ற பெருமையை அது பெற்றது.

விழாவில் பேசிய மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் கூறியுள்ளதாவது: இந்தக் கப்பல் இந்தியக் கடற்படையின் திறன்களை மேம்படுத்துவதுடன், கடல் பாதுகாப்பை உறுதி செய்யும். தொழில்நுட்ப ரீதியிலான அதிநவீன ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும் வல்லமை கொண்டது. இதில் இடம்பெற்றுள்ள 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட உபகரணங்கள் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டவை. இந்திய ராணுவம் தற்சார்பு நிலையை அடைவதற்கு இது உதாரணம்.

இந்தியக் கடற்படை, கடல்சார் பாதுகாப்பைக் கண்காணிப்பது மட்டுமல்லாமல், சமூக, பொருளாதார வளர்ச்சியிலும் பங்காற்றுகிறது. இந்திய கடல் பிராந்தியத்தைப் பாதுகாப்பதே, இந்தியக் கடற்படையின் முக்கிய இலக்கு. இந்திய பொருளாதார வளர்ச்சி கடல் மார்க்கமாக அதிகரிக்கும் வர்த்தகத்தைச் சார்ந்தே இருக்கிறது.
எல்லைப்பகுதிகளையும், கடலோரப் பகுதிகளையும் பாதுகாக்கும் ஆயுதப்படையினர், தங்களுடைய அர்ப்பணிப்புடன் கூடியப் பங்களிப்பின் மூலம், இந்தியாவின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகழ்கின்றனர். சர்வதேச அளவிலான சவால்களை எதிர்கொள்ள நாடு தயாராக இருக்கிறது. ராணுவத்தில் பெரும்பாலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களைக் கொண்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- இந்தியாவை மிகப் பெரிய ராணுவ சக்தியாக உலகம் அங்கீகரித்துள்ளது.
- நாட்டின் எல்லைகளை துணிச்சலுடன் ராணுவ வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர்.
கேரள மாநிலம் சிவகிரி மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளதாவது:
தற்சார்பு என்பது இந்திய கலாச்சாரத்தில் ஒருங்கிணைந்த பகுதி. தற்சார்பு தொடர்பான தகவல்களை நாராயண குரு பரப்பினார். தற்போது அந்தப் பணியை சிவகிரி மடமும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது. நாராயண குரு, பழங்கால கலாச்சாரம் மற்றும் நவீனத்திற்கு இடையே சமநிலையைப் பராமரித்தார். இது தற்போதும் நாட்டுக்கு பொருத்தமாக உள்ளது.

கல்வி, தூய்மை போன்ற விஷயங்களில் பொதுமக்கள் மத்தியில் நாராயண குரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இது அவரது தொலைநோக்குப் பார்வையை எடுத்துக் காட்டுகிறது. இந்த விஷயங்களில் அரசும் அதிக கவனம் செலுத்தி வருகிறது. சமத்துவம், விடுதலை மற்றும் சகோதரத்துவம் ஆகியவை மேற்கத்திய தத்துவம் என கருதப்படுகிறது.
உண்மையில் இவை பழங்கால இந்திய இலக்கியங்கள் மற்றும் பாரம்பரியத்தில் காணப்படுகிறது. வேதங்கள், உபநிடதங்கள், பகவத் கீதை, ராமாயணம் உள்ளிட்டவற்றில் சமத்துவம் மற்றும் ஒற்றுமை குறித்து விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு தற்சார்பு கொள்கையை ஊக்குவிப்பதன் காரணமாகவே ராணுவ பலம் அதிகரித்து வருகிறது. இந்தியாவை மிகப் பெரிய ராணுவ சக்தியாக உலகம் அங்கீகரித்துள்ளது.உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா தற்போது திகழ்கிறது. நாட்டின் எல்லைகளை துணிச்சலுடனும் தைரியத்துடனும் ராணுவ வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஆயுத கொள்முதலில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரால் இந்த விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
- சீன ராணுவத்தின் கொள் முதல் பிரிவை சேர்ந்த 8 மூத்த அதிகாரிகளும் விசாரணை வளையத்தில் உள்ளனர்.
பீஜிங்:
சீன ராணுவ மந்திரியாக இருப்பவர் லீஷாங்பூ. இவர் கடந்த இரண்டு வாரமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. அரசு நிர்வாக விவகாரங்களிலும் கலந்துக் கொள்ளவில்லை. அவர் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்காதது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடவில்லை. கடந்த ஜூலை மாதம் சீன வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த குயின் கேங் திடீரென்று மாயமாகி பொது நிகழ்ச்சிகளை தவிர்த்து வந்த நிலையில் புதிய வெளியுறவுத்துறை மந்திரியாக வாங்யீ நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையே சீன ராணுவ மந்திரி மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணுவ மந்திரி லீஷாங்பு எங்கு உள்ளார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படாத நிலையில், அவர் ரகசிய இடத்தில் சீன அதிகாரிகளால் விசாரணை வளையத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ராணுவ உபகரணங்களை வாங்கியது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆயுத கொள்முதலில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரால் இந்த விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் 2017 முதல் 2022-ம் ஆண்டு வரை லீஷாங்பு தலைமையிலான சீன ராணுவத்தின் கொள் முதல் பிரிவை சேர்ந்த 8 மூத்த அதிகாரிகளும் விசாரணை வளையத்தில் உள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் ராணுவ மந்திரியாக நியமிக்கப் பட்ட லீஷாங்பு மற்றும் 8 அதிகாரிகள் மீதான விசாரணை ராணுவத்தின் சக்தி வாய்ந்த ஒழுங்குமுறை ஆய்வு குழுவால் மேற்கொள்ளப்படுகிறது. சீன ராணுவ மந்திரி லீஷாங்பு, ஊழல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் நம்புவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.
லீ ஷாங்பு, கடைசியாக கடந்த ஆகஸ்ட் 29-ந்தேதி பீஜிங்கில் நடந்த ஆப்பிரிக்க நாடுகளுடனான பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றினார். கடந்த மாத தொடக்கத்தில் ரஷியா, பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அஜய் சிங்கின் தந்தையே, ராஜ்நாத் சிங்கின் பொய்யை அம்பலப்படுத்தியுள்ளார்.
- பாதுகாப்புத்துறை அமைச்சர் ராணுவத்திடமும், அஜய் சிங் குடும்பத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.
ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அக்னிவீரர் அஜய் சிங்கிற்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வீர மரணம் அடைந்த வீரரின் தந்தை, உண்மை நிலையை கூறும் வீடியோவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்,
"ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அக்னிவீரருக்கு நிதியுதவி அளிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பொய் சொல்லியுள்ளார். கடவுள் சிவன் புகைப்படம் முன்பு ராஜ்நாத்சிங் பொய் பேசியுள்ளார்.
ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அஜய் சிங்கின் தந்தையே, ராஜ்நாத் சிங்கின் பொய்யை அம்பலப்படுத்தியுள்ளார்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்திலும், நாட்டு மக்களிடமும், ராணுவத்திடமும், அஜய் சிங் குடும்பத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் பேசியுள்ள அஜய் சிங்கின் தந்தை, "அக்னிவீரர் திட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்றும் ராணுவத்தில் வழக்கமான முறையில் வீரர்களை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ராகுல்காந்தியின் குற்றச்சாட்டிற்கு இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளதில். அதில் அஜய் சிங் குடும்பத்திற்கு ஏற்கனவே ரூ.98.39 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை சரிபார்ப்பிற்கு பின்பு மீதமுள்ள 67 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இன்சூரன்ஸ் பணம் தான் அஜய்குமார் குடும்பத்திற்கு கிடைத்துள்ளது. அரசாங்கத்திடம் இருந்து இழப்பீடு கிடைக்கவில்லை.
- உயிரிழந்த அஜய் குமாரின் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தான் பணம் கொடுத்துள்ளது. மத்திய அரசு அல்ல.
ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அக்னிவீரர் அஜய் சிங்கிற்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வீர மரணம் அடைந்த வீரரின் தந்தை, உண்மை நிலையை கூறும் வீடியோவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில்,
"ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அக்னிவீரருக்கு நிதியுதவி அளிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பொய் சொல்லியுள்ளார். கடவுள் சிவன் புகைப்படம் முன்பு ராஜ்நாத்சிங் பொய் பேசியுள்ளார்.
ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அஜய் சிங்கின் தந்தையே, ராஜ்நாத் சிங்கின் பொய்யை அம்பலப்படுத்தியுள்ளார்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்திலும், நாட்டு மக்களிடமும், ராணுவத்திடமும், அஜய் சிங் குடும்பத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்தியின் குற்றச்சாட்டிற்கு இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளதில். அதில் அஜய் சிங் குடும்பத்திற்கு ஏற்கனவே ரூ.98.39 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை சரிபார்ப்பிற்கு பின்பு மீதமுள்ள 67 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் இன்னொரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ராணுவத்தில் உயிரிழந்த அக்னிவீரர் அஜய் குமார் குடும்பத்திற்கு மத்திய அரசு தற்போது வரை எந்தவொரு இழப்பீடும் வழங்கவில்லை. தனியார் வங்கியில் ரூ.50 லட்சம் இன்சூரன்ஸ் பணமும் ராணுவ குரூப் இன்சூரன்ஸ் நிதியில் இருந்து ரூ.48 லட்சமும் அஜய்குமார் குடும்பத்திற்கு கிடைத்துள்ளது.
அஜய்குமாரின் சம்பள பாக்கியை இன்னமும் ஏன் அவரது வங்கிக்கணக்கில் செலுத்தவில்லை என கேள்வியெழுப்பிய அவர், இன்சூரன்ஸ் பணம் தான் அஜய்குமார் குடும்பத்திற்கு கிடைத்துள்ளது. அரசாங்கத்திடம் இருந்து இழப்பீடு கிடைக்கவில்லை. இழப்பீட்டிற்கும் இன்சூரன்ஸ் பணத்திற்கும் வேறுபாடு உள்ளது. உயிரிழந்த அஜய் குமாரின் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தான் பணம் கொடுத்துள்ளது. மத்திய அரசு அல்ல.
நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரரின் குடும்பத்தை நாம் மதிக்க வேண்டும். ஆனால் மோடி அரசு அவர்களுக்கு பாரபட்சம் காட்டுகிறது. இது ஒரு தேசிய பிரச்சனை இதற்காக நான் எப்போதும் குரல் கொடுப்பேன்.
நம் நாட்டில் ராணுவ வீரர் அக்னிவீரர் இருவரும் உயிர் தியாகம் செய்கிறார்கள். ஆனால் ராணுவ வீரருக்கு தியாகி பட்டம் கிடைக்கிறது. அக்னீவீரருக்கு தியாகி பட்டம் கிடைப்பதில்லை. ஒருவருக்கு பென்ஷன் கிடைக்கிறது. இன்னொருவருக்கு கிடைப்பதில்லை. நாட்டிற்காக யார் தியாகம் செய்தாலும் அவரை நாம் மதிக்க வேண்டும்" என்று பேசியுள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய அஜய்குமாரின் தந்தை, மத்திய அரசிடம் இருந்து எங்களுக்கு எந்த நிதியுதவியும் கிடைக்கவில்லை. எங்கள் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ், கேன்டீன் கார்டு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தரவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
- அமைதியை விரும்பும் இந்தியா, போருக்கு தயங்குவதாக தவறாக நினைக்கக் கூடாது.
- தீங்கு விளைவிக்க விரும்புபவர்களுக்கு பதிலடி கொடுக்கப்படும்.
பதோலி:
நாட்டுக்காக உயிர்நீத்த பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினரை இமாச்சலப் பிரதேசம், பதோலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நத்சிங் கவுரவித்தார். அப்போது அவர் பேசியதாவது:
உயிர் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களின் குடும்பத்தினருக்கு நாடு என்றென்றும் கடன் பட்டுள்ளது. ஒழுக்கம், கடமையில் அர்ப்பணிப்பு, தேசபக்தி மற்றும் தியாகம் மூலம் மக்களுக்கு குறிப்பாக, இளைஞர்களுக்கு பாதுகாப்பு படையினர் எப்போதும் உந்து சக்தியாக திகழ்கின்றனர்.

பின்னணியோ, மத நம்பிக்கையோ அவர்களுக்கு ஒரு பொருட்டு கிடையாது. நம்முடைய மதிப்பிற்குரிய மூவர்ணக் கொடி தொடர்ந்து உயரத்தில் பறக்கவேண்டும் என்பது முக்கியம். நமது ராணுவத்தின் துணிச்சல் உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
உலகில் அமைதி நிலவ வேண்டும் என்று வலியுறுத்தி வரும் ஒரே நாடு இந்தியா. அமைதியை விரும்பும் இந்தியா, போருக்கு தயங்குவதாக எந்த நாடும் தவறாக நினைக்கக்கூடாது. எந்த ஒரு நாட்டையும், இந்தியா தாக்கவில்லை, ஒரு இஞ்ச் அன்னிய நாட்டு நிலத்தைக்கூட கைப்பற்றவில்லை. இந்தியாவின் நல்லிணக்கத்திற்கு யாராவது ஊறு விளைவித்தால், உரிய பதிலடி கொடுக்கப்படும்.
வடக்கு எல்லைப்பகுதியில் சீனாவுடன் நமக்கு கருத்து வேறுபாடு உள்ளது. எந்தவொரு பெரிய சக்தியாக இருந்தாலும், அது பொருட்டல்ல என்பதை கல்வான் சம்பவம் மூலம் நமது தைரியமிக்க வீரர்கள் நிரூபித்தனர். நட்பு நாடுகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், புதிய இந்தியாவை மத்திய அரசு கட்டமைத்து வருகிறது. அதற்கு தீங்கு விளைவிக்க விரும்புபவர்களுக்கு பதிலடி கொடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- இந்தியா-எகிப்து இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை.
- தமது பயணத்தின்போது எகிப்து அதிபரையும், சந்தித்து பேசுகிறார்.
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நாளை மறுநாள் 19ந் தேதி எகிப்து நாட்டிற்கு செல்கிறார். இந்த பயணத்தின் போது அந்நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி ஜெனரல் முகமது சாக்கியுடன் இருதரப்பு உறவுகள் பேச்சுவார்த்தை நடத்துவார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இரு நாட்டு ராணுவங்களுக்கிடையே தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான புதிய முன்முயற்சிகளை கண்டறிதல், இரு நாடுகளின் பாதுகாப்பு தொழில் துறைகளுக்கிடையே ஒத்துழைப்பில் கவனம் செலுத்துதல் ஆகியவை பற்றி இரு மந்திரிகளும் விவாதிக்கி உள்ளனர்.
இந்தியா எகிப்து இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் அப்போது கையெழுத்திடப்படும் என கூறப்பட்டுள்ளது. எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசியையும் தமது பயணத்தின்போது ராஜ்நாத் சிங்கின் சந்தித்து பேசுகிறார்.
- இந்திய பாதுகாப்பு மந்திரி ஒருவர் மங்கோலியா செல்வது இதுவே முதல் முறை.
- இரு நாடுகள் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை இந்தப் பயணம் மேம்படுத்தும்.
கிழக்கு ஆசிய நாடுகளுடன் கூட்டு நட்புறவு முயற்சிக்கு வலு சேர்க்கும் வகையில் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் இன்று முதல் வரும் 7ந் தேதி வரை மங்கோலியா நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் செல்கிறார். இந்திய பாதுகாப்பு மந்திரி ஒருவர் மங்கோலியாவிற்கு பயணம் செய்வது இதுவே முதல் முறையாகும்.
இரு நாடுகள் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் கேந்திர கூட்டுமுயற்சியை மேலும் மேம்படுத்துவதற்கு இந்தப் பயணம் வழிவகை செய்யும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்நாத்சிங் தமது பயணத்தின் போது மங்கோலியா பாதுகாப்பு அமைச்சர் லெஃப்டினன்ட் ஜென்ரல் சைகான்பயருடன் இருதரப்பு பேச்சு வார்த்தைகளை மேற்கொள்வார். இந்த பேச்சு வார்த்தையின் போது இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களும் இந்தியா மற்றும் மங்கோலியா இடையேயான ராணுவ ஒத்துழைப்பை ஆய்வு செய்வார்கள்.
இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கு புதிய முன்முயற்சிகள் குறித்தும் ஆலோசனை நடத்துவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. தொடர்ந்து மங்கோலிய அதிபர் குரெல்சுக், அந்நாட்டு நாடாளுமன்ற அவை தலைவர் ஜண்டன்ஷாடர் ஆகியோரையும் ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசுகிறார்.






