என் மலர்
உலகம்

நிதி நெருக்கடிக்கு மத்தியில் பாதுகாப்பு பட்ஜெட்டை 20% உயர்த்திய பாகிஸ்தான்.. மக்களின் நிலை?
- இது கடந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட 2.12 லட்சம் கோடி ரூபாயை விட அதிகம்.
- நாட்டின் பலவீனமான பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும்.
இந்தியாவுடனான எல்லை பதட்டங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் அரசு 2025-26 நிதியாண்டிற்கான பாதுகாப்பு பட்ஜெட்டில் 20% அதிகரிப்பை அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் நிதியமைச்சர் முகமது ஔரங்கசீப் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், இராணுவ செலவினங்களுக்கு 2.55 லட்சம் கோடி பாகிஸ்தான் ரூபாய் (சுமார் 9 பில்லியன் டாலர்) ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட 2.12 லட்சம் கோடி ரூபாயை விட அதிகம்.
நிதியமைச்சர் ஔரங்கசீப், தேசிய பாதுகாப்புக்கு அரசு முதலிடம் அளிக்கும் என்று கூறினார். அதே சமயம், மொத்த பொதுச் செலவினத்தில் 7% குறைப்பு, பாதுகாப்பு செலவினங்களில் அதிகரிப்பு விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
கல்வி, விவசாயம் ஆகியவற்றை விட பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டதற்காக பாகிஸ்தான் மீது விமர்சனம் எழுந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் இந்த முடிவை கடுமையாக எதிர்த்து, இது நாட்டின் பலவீனமான பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் என்றும், முக்கியமான சிவில் துறைகளுக்கு நிதி கிடைக்காமல் போகும் என்றும் குற்றம் சாட்டியுள்ளன.






