search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "council president"

    • மாவட்ட நிா்வாகத்தின் மூலமாக குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • உடுமலை வட்டாட்சியா் தலைமையில் கருத்துக் கேட்புக்கூட்டம் கடந்த ஏப்ரல் 24 -ந் தேதி நடைபெற்றது.

    உடுமலை :

    திருப்பூா் மாவட்டம் உடுமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட போடிப்பட்டி ஊராட்சியில் நிதி நிா்வாகத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகாா் எழுந்தது. இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகத்தின் மூலமாக குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த முறைகேடு தொடா்பாக ஊராட்சி மன்ற தலைவா் டி.சௌந்திரராஜனிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

    இதுதொடா்பாக அவா் அளித்த விளக்கம் ஏற்கத் தகுதியில்லாததால் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் உத்தரவிட்டிருந்தாா். இதையடுத்து உடுமலை வட்டாட்சியா் கண்ணாமணி தலைமையில் கருத்துக் கேட்புக்கூட்டம் கடந்த ஏப்ரல் 24 -ந் தேதி நடைபெற்றது. இதில் 12 ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், ஊராட்சி மன்றத் தலைவா் ஆகியோரிடம் கருத்துக் கேட்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் போடிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் சௌந்திரராஜனை தகுதி நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் உத்தரவிட்டாா்.

    • தண்ணீர் தேங்கிய பகுதியில் நகர்மன்ற தலைவர் நேரில் ஆய்வு செய்தார்.
    • மொத்த அளவு-235.90, சராசரி-14.74 மி. மீ, மழை பதிவாகியுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட த்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த 4 நாட்களாக பெய்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தின் பல இடங்களில் நேற்று சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் குளம் போல தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் நகராட்சிப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

    ராமநாதபுரத்தில் 9-வது வார்டு செய்யதுஅம்மாள் பள்ளியின் பின்புறம் பலத்த காற்றுடன் பெய்த கனமழையில் மின்கம்பம் சாய்ந்தது. நகர்மன்ற தலைவர் கார்மேகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இன்று காலை நகர் மன்ற தலைவர் கார்மேகம், துணைத் தலைவர் பிரவீன் தங்கம், ஆணையாளர் (பொறுப்பு) சுரேந்திரன் ஆகியோர் கேணிக்கரை, புதிய பஸ் நிலையம், அண்ணா நகர், பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கியுள்ளதா என்பதை பார்வையிட்டு உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

    ராமநாதபுரம் மாவட்ட த்தில் இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    கடலாடி - 4.80, வாலிநோக்கம் -4.60,கமுதி - 1.50, பள்ளமோர்க்குளம்-5, மண்டபம்- 11, ராமநாதபுரம்- 41.20, பாம்பன்-40.40, ராமேசுவரம்- 77.60, தங்கச்சிமடம்-35.80, திருவாடானை-9.20, தொண்டி- 4.80,

    மொத்த அளவு-235.90, சராசரி-14.74 மி. மீ, மழை பதிவாகியுள்ளது.

    ×