search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போடியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
    X

    கடைகளில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள்.

    போடியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

    • மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவின் பேரில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ராகவன் தலைமையில் அலுவலர்கள் போடி பஸ் நிலையம் அருகே உள்ள பள்ளி வளாக கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
    • காலாவ தியான ஐஸ்கிரீம் பாக்கெட்டுகள், மெகுழு பூசப்பட்ட பழங்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப், கவர் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள், காலாவதியான உணவுகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவின் பேரில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ராகவன் தலைமையில் அலுவலர்கள் போடி பஸ் நிலையம் அருகே உள்ள பள்ளி வளாக கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    போடி வட்டார உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சரண்யா, தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு த்துறை அலுவலர்கள் சுரேஷ், மணிகண்டன், அகமது உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர் 25-க்கும் மேற்பட்ட கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது காலாவ தியான ஐஸ்கிரீம் பாக்கெட்டுகள், மெகுழு பூசப்பட்ட பழங்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப், கவர் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

    Next Story
    ×