search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை, மேலப்பாளையம் விரிவாக்கப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாற்று ஏற்பாடுகள் - மாநகராட்சி கமிஷனர் தகவல்
    X

    கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி.

    பாளை, மேலப்பாளையம் விரிவாக்கப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாற்று ஏற்பாடுகள் - மாநகராட்சி கமிஷனர் தகவல்

    • மேலப்பாளையம், பாளை விரிவாக்கப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள தற்காலிக குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • சுத்தமல்லி நீரேற்று நிலையத்தில் இருந்து வரும் பிரதான குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு நீண்ட காலமானதால் அவற்றில் ஆங்காங்கே உடைப்பு ஏற்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யுள்ளதாவது:-

    நெல்லை மாநகராட்சி பகுதிகளான மேலப் பாளையம், பாளை விரிவாக்கப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள தற்காலிக குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் சுத்தமல்லி நீரேற்று நிலையத்தில் இருந்து வரும் பிரதான குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு நீண்ட காலமானதால் அவற்றில் ஆங்காங்கே உடைப்பு ஏற்படுகிறது. இதனால் சீரான குடிநீர் விநியோகம் செய்வதில் அடிக்கடி தடங்கல் ஏற்படுகிறது.

    இவ்வாறு குழாய்களில் ஏற்படும் உடைப்புகளை சரிசெய்யும் பொருட்டு அடிக்கடி உடைப்பு ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு அவற்றை மாற்றுவதற்காக தனியாக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

    கோடை காலங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டி னை போக்குவதற்கு நிரந்திர தீர்வாகவும் சுத்தமல்லி தலைமை நீரேற்று நிலை யத்தில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யும் பழைய பிரதான குழாய்களை அகற்றி அங்கு புதிதாக குழாய் அமைப்பதற்காக ரூ.8.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தற்போது மேலப்பாளை யம், பாளை விரிவாக்க பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டினை நீக்க தற்காலிகமாக மாநகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.

    மேலும் நிரந்தர தீர்வாக இந்த பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பொருட்டு அரியநாயகிபுரம் குடிநீர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் சேவியர் காலனி குடிநீர் மேல்நிலைநீர்த் தேக்க தொட்டியில் இருந்து மகிழ்ச்சிநகர் மற்றும் ஆசிரியர்காலனி பகுதிகளில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளில் நிரப்பி ஆசிரியர் காலனி, தமிழ்நகர், மகிழ்ச்சிநகர்,என்.ஜி.ஓ. 'பி' காலனி, எழில்நகர், திருமால்நகர், பெருமாள்புரம் சி காலனி, குமரேசன் காலனி,கனரா பேங்க் காலனி,பி.ஏ.பிள்ளை நகர் (தியாகராஜநகர்),எல்.கே.எஸ். நகர், அன்புநகர் ஆகிய இடங்களில் உள்ள 12 குடிநீர் மேல்நிலைநீர்த் தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆங்காங்கே தேவைப்படும் இடங்களில் சிறிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் பொதுமக்கள் மத்திகள் குடிநீர் விநியோகம் தொடர்பாக வதந்திகள் ஏதும் பரப்ப வேண்டாம் எனவும் எச்சரிக்கப்படுகிறது. மாநகராட்சி குடிநீர் விநியோக வால்வு களை மாநகராட்சி சம்பந்தமில்லாத நபர்கள் யாரேனும் இயக்கினால் அவர்கள் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்படுகின்றது.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    Next Story
    ×