search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drinking water Scarcity"

    • நீர் முழுமையாக சுத்திகரிப்பு செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகத்தை கடந்த 5 நாட்களாக நிறுத்தியுள்ளனர்.
    • பொதுமக்கள் முழுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்து வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

    பெரியகுளம்:

    தேனிமாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு முழுமையான குடிநீர் ஆதாரமாக விளங்குவது சோத்துப்பாறை அணை. இந்த அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியில் நீரை சேமித்து வைக்கப்படும் நீர் நகராட்சி பகுதி மக்களுக்கான குடிநீர் மற்றும் பாசனத்திற்காக கடந்த 22 ஆண்டுகளாக பயன்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அணையில் நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டதால் அணை நீர் முழுமையாக வற்றியது.

    இதனால் அணையில் மிகவும் குறைவாக இருந்த நீரில் சட்டவிரோதமாக மீன்பிடிக்கப்பட்டதால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் 20 நாட்களாக நகராட்சி நிர்வாகம் செம்மண் கலந்த கலங்கிய குடிநீரை விநியோகம் செய்து வந்தது.

    இந்நிலையில் மேலும் அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் நீர் முழுமையாக சுத்திகரிப்பு செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகத்தை கடந்த 5 நாட்களாக நிறுத்தியுள்ளனர். பெரியகுளம் பகுதியில் முழுமையாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தனியார் குடிநீர் ஆலைகளில் இருந்து 25 லிட்டர் கொண்ட குடிநீர் கேன் முன்பு 30 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில் தற்போது 40 ரூபாய் வரை விலையேற்றம் செய்து விற்று வருகின்றனர்.

    மேலும் பொதுமக்கள் முழுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்து வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் தனியார் குடிநீர் கேன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதோடு தனியார் குடிநீர் ஆலைகளில் இருந்து கொண்டு வரப்படும் 25 லிட்டர் குடிநீர் கேன் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விற்பனைக்காக கொண்டு வந்த உடனே விற்று தீர்ந்து விடுகிறது.

    மேலும் நகராட்சி நிர்வாகத்தில் இருந்து தற்போது 30 வார்டு பகுதிகளுக்கும் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீரை விநியோகம் செய்து வருகின்றனர். இதுகுறித்து பெரியகுளம் நகராட்சி பொதுமக்கள் கூறுகையில்; 100 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த பெரியகுளம் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு வந்ததே கிடையாது. தற்பொழுது செயற்கையாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அணையில் இருக்கும் நீரை கோடை காலங்களில் குடிநீருக்கு மட்டும் தேவைக்கேற்ப திறந்து விட வேண்டிய பொது ப்பணித்துறை அதிகாரிகள், தொடர்ச்சி யாக பிப்ரவரி மாதத்தில் 80 அடி வரை திறந்து விட்டதே தற்போதை ய தட்டுப்பாட்டிற்கு காரணமாகும்.

    தற்காலிக குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பொதுமக்களை அலை க்கழிக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இந்நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி தினந்தோறும் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தை அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    • மேலப்பாளையம், பாளை விரிவாக்கப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள தற்காலிக குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • சுத்தமல்லி நீரேற்று நிலையத்தில் இருந்து வரும் பிரதான குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு நீண்ட காலமானதால் அவற்றில் ஆங்காங்கே உடைப்பு ஏற்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யுள்ளதாவது:-

    நெல்லை மாநகராட்சி பகுதிகளான மேலப் பாளையம், பாளை விரிவாக்கப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள தற்காலிக குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் சுத்தமல்லி நீரேற்று நிலையத்தில் இருந்து வரும் பிரதான குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு நீண்ட காலமானதால் அவற்றில் ஆங்காங்கே உடைப்பு ஏற்படுகிறது. இதனால் சீரான குடிநீர் விநியோகம் செய்வதில் அடிக்கடி தடங்கல் ஏற்படுகிறது.

    இவ்வாறு குழாய்களில் ஏற்படும் உடைப்புகளை சரிசெய்யும் பொருட்டு அடிக்கடி உடைப்பு ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு அவற்றை மாற்றுவதற்காக தனியாக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

    கோடை காலங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டி னை போக்குவதற்கு நிரந்திர தீர்வாகவும் சுத்தமல்லி தலைமை நீரேற்று நிலை யத்தில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யும் பழைய பிரதான குழாய்களை அகற்றி அங்கு புதிதாக குழாய் அமைப்பதற்காக ரூ.8.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தற்போது மேலப்பாளை யம், பாளை விரிவாக்க பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டினை நீக்க தற்காலிகமாக மாநகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.

    மேலும் நிரந்தர தீர்வாக இந்த பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பொருட்டு அரியநாயகிபுரம் குடிநீர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் சேவியர் காலனி குடிநீர் மேல்நிலைநீர்த் தேக்க தொட்டியில் இருந்து மகிழ்ச்சிநகர் மற்றும் ஆசிரியர்காலனி பகுதிகளில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளில் நிரப்பி ஆசிரியர் காலனி, தமிழ்நகர், மகிழ்ச்சிநகர்,என்.ஜி.ஓ. 'பி' காலனி, எழில்நகர், திருமால்நகர், பெருமாள்புரம் சி காலனி, குமரேசன் காலனி,கனரா பேங்க் காலனி,பி.ஏ.பிள்ளை நகர் (தியாகராஜநகர்),எல்.கே.எஸ். நகர், அன்புநகர் ஆகிய இடங்களில் உள்ள 12 குடிநீர் மேல்நிலைநீர்த் தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆங்காங்கே தேவைப்படும் இடங்களில் சிறிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் பொதுமக்கள் மத்திகள் குடிநீர் விநியோகம் தொடர்பாக வதந்திகள் ஏதும் பரப்ப வேண்டாம் எனவும் எச்சரிக்கப்படுகிறது. மாநகராட்சி குடிநீர் விநியோக வால்வு களை மாநகராட்சி சம்பந்தமில்லாத நபர்கள் யாரேனும் இயக்கினால் அவர்கள் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்படுகின்றது.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    ×