என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் முன்னேற்பாடுகள்மேயர், மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
- தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் ரோச் பார்க் அருகே தற்காலிகமாக ஒரு படகு குழாம் மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தனர்.
- ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி நல்ல பெருமாள் பூங்கா மற்றும் தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கழிப்பறை அமைப்பது குறித்தும், பழைய மாநகராட்சி அருகில் இருந்து ெரயில்வே நிலையம் செல்வதற்கு மக்களின் பயன்பாட்டில் ஏற்கனவே இருந்த பாதையை செப்பனிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மீண்டும் திறந்து விடுவது குறித்தும் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் சாருஸ்ரீ ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் ரோச் பார்க் அருகே தற்காலிகமாக ஒரு படகு குழாம் மற்றும் ஏற்கனவே கயாக்கியில் உள்ள படகு குழாமில் மாலை நேரத்திலும் பயன்படுத்தும் வகையில் மின் கோபுரம் அமைக்கும் பணிகளையும், முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்