search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில்  பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் முன்னேற்பாடுகள்மேயர், மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
    X

    பூங்காவில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ ஆகியோர் ஆய்வு செய்த போது எடுத்தபடம்.

    தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் முன்னேற்பாடுகள்மேயர், மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

    • தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் ரோச் பார்க் அருகே தற்காலிகமாக ஒரு படகு குழாம் மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தனர்.
    • ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி நல்ல பெருமாள் பூங்கா மற்றும் தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கழிப்பறை அமைப்பது குறித்தும், பழைய மாநகராட்சி அருகில் இருந்து ெரயில்வே நிலையம் செல்வதற்கு மக்களின் பயன்பாட்டில் ஏற்கனவே இருந்த பாதையை செப்பனிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மீண்டும் திறந்து விடுவது குறித்தும் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் சாருஸ்ரீ ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் ரோச் பார்க் அருகே தற்காலிகமாக ஒரு படகு குழாம் மற்றும் ஏற்கனவே கயாக்கியில் உள்ள படகு குழாமில் மாலை நேரத்திலும் பயன்படுத்தும் வகையில் மின் கோபுரம் அமைக்கும் பணிகளையும், முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×