search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விடுமுறை நாட்களிலும் கணினி வரி வசூல் மையம் செயல்படும் -திருப்பூர் மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
    X

    கோப்புபடம்.

    விடுமுறை நாட்களிலும் கணினி வரி வசூல் மையம் செயல்படும் -திருப்பூர் மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

    • திருப்பூர் மாநகராட்சியின் முக்கிய வருவாய் இனமாக சொத்துவரி கருதப்படுகிறது.
    • தகவல்களுக்கு 155304 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர்பவன்குமார் ஜி.கிரியப்பனவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாநகராட்சியின் முக்கிய வருவாய் இனமாக சொத்துவரி கருதப்படுகிறது. சொத்துவரி, தொழில்வரி போன்ற வரிகள் மூலம் பெறப்படும் வருவாயினை கொண்டு, திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தூய்மைப் பணிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், சுகாதார வசதிகள், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், பொது மக்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்குதல் போன்ற சேவைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, 31.12.2022ல் சொத்துவரி ரூ. 50.73 கோடி, காலியிட வரி ரூ. 1.75 கோடி, தொழில் வரி ரூ.2.21 கோடி, குடிநீர் கட்டணம் ரூ.11.84 கோடி, வாடகை - குத்தகை இனங்கள் ரூ.3.56 கோடி, பாதாள சாக்கடை கட்டணம் ரூ. 46 லட்சம் என மொத்தம் ரூ. 79.13 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி 31.1.2023ல் சொத்துவரி ரூ. 66.47 கோடி, காலியிட வரி ரூ. 1.99 கோடி, தொழில் வரி ரூ.2.53 கோடி, குடிநீர் கட்டணம் ரூ.15.66 கோடி, வாடகை -குத்தகை இனங்கள் ரூ.3.66 கோடி, பாதாள சாக்கடை கட்டணம் ரூ. 58 லட்சம் என மொத்தம் ரூ. 101.83 கோடி பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

    அதன்படி 16.2.2023ல் சொத்துவரி ரூ. 73.66 கோடி, காலியிட வரி ரூ. 2.12 கோடி, தொழில் வரி ரூ. 3.20 கோடி, குடிநீர் கட்டணம் ரூ.17.68 கோடி, வாடகை - குத்தகை இனங்கள் ரூ. 3.68 கோடி, பாதாள சாக்கடை கட்டணம் ரூ. 64 லட்சம் என மொத்தம் ரூ. 13.58 கோடி பொது மக்கள் கட்டணங்களாக செலுத்தியுள்ளனர்.

    மேற்கண்ட தகவலின்படி டிசம்பர் 2022 ல் 36.36 சதவீதமும், ஜனவரி 2023ல் 44.22 சதவீதமும் பிப்ரவரி 2023 நாளது வரை 47.96 சதவீதமும் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வரி, வாடகை மற்றும் குத்தகை இனங்கள் மூலம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பொதுமக்கள் விடுமுறை நாட்களில் வரி செலுத்த ஏதுவாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மைய அலுவலக கணிணி வரி வசூல் மையம், நான்கு மண்டல அலுவலகங்கள், குமரன் வணிக வளாகம், செட்டிபாளையம், தொட்டிபாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை, முத்தணம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம் ஆகிய கணிணி வரி வசூல் மையங்களில் பணமாகவோ அல்லது காசோலை மூலமாக செலுத்தமேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் தகவல்களுக்கு 155304 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    எளிய முறையில் இணையதளம் வழியாக வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தும் சேவையை பயன்படுத்த.Use "Quick Payment" or "Register & Login" tohttps://tnurbanepay.tn.gov.in. மேலும்,அனைத்து மண்டலங்களிலும் சொத்துவரி மற்றும் காலியிடவரி வரி விதித்தல் தொடர்பிலும், பெயர் மாறுதல்கள் செய்தல் தொடர்பிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உரிய காலகெடுவிற்குள் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதால், இதனை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளவும் மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் .இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×