என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பவன் கேரா"

    • இந்து மக்கள் தொகை 4.5 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது
    • 2005–2013 க்கு இடையில், காங்கிரஸ் அரசாங்கங்கள் 88,792 வங்கதேச நாட்டினரை நாடு கடத்தின. பாஜக ஆட்சியின் கீழ், 11 ஆண்டுகளில் 10,000 க்கும் குறைவானவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

    பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து ஊடுருவல் காரணமாக இந்தியாவில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

    கடந்த வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் பேசும்போதும், தனது எக்ஸ் பதிவிலும் அமித் ஷா இந்த குற்றச்சாட்டைமுன்வைத்தார்.

    அதில், இந்திய குடிமக்களுக்கு மட்டுமே வாக்குரிமை கிடைக்க வேண்டும். நாட்டில் முஸ்லிம் மக்கள் தொகை 24.6 சதவீதம் அதிகரித்துள்ளது, இந்து மக்கள் தொகை 4.5 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. ஊடுருவல் காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டதாக அமித் ஷா கூறினார்.

    ஊடுருவல்காரர்களை அடையாளம் கண்டு அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும், சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் தங்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அமித் ஷா கூறினார்.

    இந்நிலையில் அமித் ஷாவின் பேச்சுக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், அக்டோபர் 10 ஆம் தேதி கூட்டுறவு அமைச்சர், இந்து-முஸ்லிம் தீயை மூட்டி, வரவிருக்கும் தேர்தல்களுக்கு முன்னதாக வாக்காளர்களை பிளவுபடுத்த முயற்சித்திருக்கிறார்.

    இந்தியாவில் பரவலாக முஸ்லிம் ஊடுருவல் இருப்பதாக மறைமுகமாக முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகரித்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

    இந்த சூழ்நிலையில் ஒரு தர்க்கரீதியான கேள்வி என்னவென்றால், அவர் கூறுவது போல், முஸ்லிம் மக்கள் தொகை ஊடுருவல் காரணமாக உயர்ந்துள்ளது என்றால், கடந்த 11 ஆண்டுகளாக உள்துறை அமைச்சர் சரியாக என்ன செய்து கொண்டிருந்தார்?

    அவர் தான் உள்துறை அமைச்சரும் கூட என்பதை அவர் உணர்த்தாரா?. மேலும் அவர் முஸ்லிம்களை நோக்கி குறிவைத்த பூமராங் திரும்பி அவரையே வந்தடைந்தது. எனவே, அவரது பதிவு உடனடியாக நீக்கப்பட்டது.

    ஆனால் அது உண்மையை நீக்கவில்லை. 2005–2013 க்கு இடையில், காங்கிரஸ் அரசாங்கங்கள் 88,792 வங்கதேச நாட்டினரை நாடு கடத்தின. பாஜக ஆட்சியின் கீழ், 11 ஆண்டுகளில் 10,000 க்கும் குறைவானவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். ஆனாலும், நாங்கள் ஒருபோதும் பெருமை பேசவில்லை, பாஜக ஒருபோதும் வாயை மூடிக்கொள்ளாது. காலி பாத்திரங்கள் தான் அதிக சத்தத்தை உண்டாக்கும்" என்று விமர்சித்துள்ளார்.   

    • மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 62, துணைப்பிரிவு 2 இன் படி ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் வாக்களிக்க முடியாது.
    • வாக்கு திருட்டு குறித்து பேசி வந்த பவன் கேரா தான் உண்மையான திருடன் என பாஜக விமர்சித்துள்ளது.

    காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் பவன் கேரா 2 வாக்காளர் அட்டை வைத்திருப்பதாக குற்றம்சாட்டி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 62, துணைப்பிரிவு 2 இன் படி ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் வாக்களிக்க முடியாது. எனவே இது குறித்து தேர்தல் ஆணையம் கேராவிடம் பதில் கோரியுள்ளது.

    "கேராவிடம் இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் உள்ளன. ஒன்றில் XHC1992338 என்ற எண் உள்ளது, இது ஜங்புரா சட்டமன்றத் தொகுதி 41 ஐச் சேர்ந்தது. மற்றொன்றின் EPIC எண் SJE0755967 ஆகும், இது புது டெல்லி சட்டமன்றத் தொகுதி 40 ஐச் சேர்ந்தது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    இதுபோல தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்புவது இது முதல் முறை அல்ல. தேஜஸ்வி யாதவ், விஜய் குமார் சின்ஹா, ரேணு தேவி போன்ற தலைவர்களும் தலா இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருப்பதாக தேர்தல் ஆணையம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் கோரியுள்ளது.

    வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் தில்லு முல்லு செய்து பாஜகவை வெற்றி பெற வைப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் அவர்களை குறிவைத்து தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி வருவதாக மற்றொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதற்கிடையே வாக்கு திருட்டு குறித்து பேசி வந்த பவன் கேரா தான் உண்மையான திருடன் என பாஜக ஐடி தலைவர் அமித் மாளவியா விமர்சித்துள்ளார். 

    • ஃபெரோஸ்பூரில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்து கான்ஸ்டபிள் சாஹுவை பாகிஸ்தான் ரேஞ்சர்கள் கைது செய்தனர்.
    • அவரது குடும்பத்தினர் பதில்களுக்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

    கடந்த வாரம் பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர் பூர்ணம் சாஹு என்பவர் தவறுதலாக சென்று மாட்டிக்கொண்டார்.

    பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்து BSF கான்ஸ்டபிள் சாஹுவை பாகிஸ்தான் ரேஞ்சர்கள் கைது செய்தனர்.

    எல்லைக்கு அருகே விவசாயிகள் குழுவை அழைத்துச் சென்ற சாஹு, ஒரு மரத்தின் கீழ் ஓய்வெடுக்கச் சென்று, தெரியாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக BSF அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் அவர் பாதுகாப்பாகத் திரும்புவதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று காங்கிரஸ் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி உள்ளது..

    இதுதொடர்பாக பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா, BSF கான்ஸ்டபிள் பாகிஸ்தான் ரேஞ்சர்களால் தடுத்து வைக்கப்பட்டு ஆறு நாட்கள் ஆகின்றன.

    அவரது குடும்பத்தினர் பதில்களுக்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். அவர் பாதுகாப்பாகத் திரும்புவதற்கு அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    சாஹுவின் விடுதலை குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்திய மற்றும் பாகிஸ்தான் எல்லைப் படைகள் கூட்டத்தை நடத்திய போதிலும் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை என்று தெரிகிறது.

    ஜம்மு காஷ்மீரில் கடந்த ஏப்ரல் 22 அன்று 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் மோசமடைந்துள்ள நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் விமானம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • பவன் கேராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    புதுடெல்லி:

    அதானி-ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரத்தில் பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் பேசியதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான பவன் கேரா மீது அசாமில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சத்தீஸ்கரில் நடக்கும் காங்கிரஸ் மாநாட்டிற்கு செல்வதற்காக டெல்லி விமான நிலையம் வந்த அவர், இண்டிகோ விமானத்தில் அமர்ந்திருந்தார். அவரை கைது செய்வதற்காக அசாம் போலீசார் விமான நிலையம் வந்தனர். விமான நிலைய அதிகாரிகளிடம் எப்ஐஆர். தகவலை காண்பித்தனர். தொடர்ந்து போலீசார் கேட்டுக் கொண்டதால், பவன் கேரா விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டார். அவரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

    இதனையடுத்து, பவன் கேராவுடன் சத்தீஸ்கர் செல்லவிருந்த காங்கிரசார், விமானத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். விமானத்தை புறப்படவும் விடவில்லை. விமானம் புறப்பட்டுச் செல்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து துணை ராணுவப் படையினர் விமான நிலையத்தில் குவிக்கப்பட்டனர். முக்கிய நிர்வாகிகள் விமானம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே, உத்தர பிரதேசம் மற்றும் அசாமில் பவன் கேரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. பிப்ரவரி 28ம் தேதி வரை இடைக்கால ஜாமீனில் அவரை விடுவிக்கும்படி தலைமை நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அவர் மீதான வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்கவும் நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.

    • தேர்தலில் போட்டியிட தன்னிடம் தேவையான பணம் இல்லை என்பதால் மறுத்து விட்டதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்
    • என்னுடைய சம்பளம், என்னுடைய சம்பாத்தியம், என்னுடைய சேமிப்பு எல்லாம் என்னுடையது. இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி எனக்கு சொந்தம் கிடையாது

    மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் உள்ளார். இவருக்கு தமிழ்நாடு அல்லது ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததாகவும், தன்னிடம் தேவையான பணம் இல்லை என்பதால் மறுத்து விட்டதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

    நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா? அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது

    இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் "என்னுடைய சம்பளம், என்னுடைய சம்பாத்தியம், என்னுடைய சேமிப்பு எல்லாம் என்னுடையது. இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி எனக்கு சொந்தம் கிடையாது" என்று கூறினார்.

    இந்நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், காங்கிரஸ் ஆட்சியின் போது, தேநீர் விற்றவர்கள் தேர்தலில் நின்றார்கள் என்று பதிவிட்டுள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் கட்சி இதுவரை 326 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது
    • காங்கிரஸ் 272 இடங்களில் கூட போட்டியிடவில்லை என்றால் எப்படி ஆட்சி அமைப்பது என்று பிரதமர் கூறுகிறார்

    அண்மையில் குஜராத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மோடி,"இந்தியாவில் ஆட்சி அமைக்க விரும்பினால், குறைந்தது 272 இடங்கள் தேவை. பாஜகவைத் தவிர, நாட்டில் வேறு எந்த அரசியல் கட்சியும் 272 இடங்களில் போட்டியிடவில்லை, பின்னர் அவர்கள் (காங்கிரஸ்) எப்படி ஆட்சி அமைப்போம் என்று கூறுகிறார்கள்" என்று பேசியிருந்தார்.

    இதற்கு பதில் அளிக்கும் விதமாக மூத்த காங்கிரஸ் தலைவர் பவன் கேரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "காங்கிரஸ் கட்சி இதுவரை 326 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. ஆனால் காங்கிரஸ் 272 இடங்களில் கூட போட்டியிடவில்லை என்றால் எப்படி ஆட்சி அமைப்பது என்று பிரதமர் கூறுகிறார்.

    மோடி அவர்களே... உங்களது கணித திறமை அபாரமானது. நீங்கள் முழு கணிதவியல் பாடத்திற்கான டிகிரி வைத்திருக்கிறீர்களா. உத்தரபிரதேசத்தில் உள்ள கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்தின் கணிதப் பேராசிரியராக உங்களை அடுத்த மாதமே நியமிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

    • டெல்லி மக்களுக்கு எந்த குழப்பமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
    • கடந்த 2 தேர்தல்களை போல் தனி மெஜாரிட்டி கிடைக்கும் வகையில் டெல்லி மக்கள் வாக்களிப்பார்கள்.

    70 தொகுதிகளை கொண்ட டெல்லி மாநில சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. பிப்ரவரி 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்றைய தினம் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? என்பது தெரிந்துவிடும்.

    இந்த நிலையில் ஒருவேளை தொங்கு சட்டசபை அமைந்தால், ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்குமா? என்று காங்கிரஸ் கட்சி தலைவர் பவன் கேராவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பவன் கேரா பதில் அளித்து கூறியதாவது:-

    கடந்த இரண்டு தேர்தல்களை போன்று டெல்லி மக்கள் தீர்க்கமான முடிவை கொடுக்கும் வகையில் வாக்களிப்பார்கள் என்பதால் தொங்கு சட்டசபை என்ற பேச்சுக்கு இடம் இருக்காது. டெல்லி மக்களுக்கு எந்த குழப்பமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அப்படி நிகழ்ந்தால் நமக்கு இன்னொரு தேர்தல் இருக்கும். ஆனால், இது நிகழும் என நான் நினைக்கவில்லை.

    இவ்வாறு பவன்கேரா தெரிவித்தார்.

    2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முதன்முறையாக ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டது. ஆம் ஆத்மி 28 இடங்களையும், பாஜக 32 இடங்களையும் கைப்பற்றியது.

    இரு கட்சிகளுக்கு ஆட்சியமைக்க போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. தொங்கு சட்டசபையுடன் ஆட்சி அமைக்க பாஜக விரும்பவில்லை. அதனால் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை.

    இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரஸ் ஆதரவுடன் முதலமைச்சர் ஆனார். பின்னர் காங்கிரஸ் ஆதரவை திரும்பப் பெற்றது. இதனால் 2015-ல் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது ஆம் ஆத்மி 67 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 2020 தேர்தலில் 62 இடங்களை பிடித்தது.

    • காங்கிரஸ் தலைமையிலான UPA ஆட்சியின்போது தேச நலனுக்கு எதிரான சக்திகள் மத்திய அரசின் அமைப்புகளில் ஊடுருவின.
    • பாஜக 2014 தேர்தல்களில் சோரோஸ்/USAID காரணமாக வெற்றி பெற்றது என்றும் அர்த்தம்.

    நிதி நிறுத்தம்

    பல்வேறு நாடுகளுக்கு நிதியுதவி வழங்கி வந்த USAID அமைப்புக்கான நிதியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிறுத்துவதாக அறிவித்திருந்தார்.

    அரசு செயல்திறன் மேம்பாட்டு துறை (DODGE) என்ற ஒன்றை உருவாக்கி அதற்கு தலைவராக உலக பணக்காரர் எலான் மஸ்க்கை நியமித்தார். இந்த துறை அரசின் வீண் செலவுகளை கண்டறிந்து அதை குறைப்பதற்கான ஆலோசனையை டிரம்ப்புக்கு வழங்கி வருகிறது.

    இதற்கிடையில் USAID மூலம் இந்தியாவில் தேர்தல் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக வழங்கப்பட்டு வந்த 21 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 182 கோடி ரூபாய்) நிதியை நிறுதுவதாக DODGE அறிவித்தது. இந்த நிதியுதவி ஒப்பந்தம் 2012 இல் போடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இந்த விவகாரம் இந்திய அரசியலில் கவனம் பெற்றுள்ளது. அதாவது, அமெரிக்கா வழங்கி வந்த இந்த நிதி, இந்திய தேர்தலில் அந்நிய நாட்டின் தலையீட்டை உறுதி செய்வதாக பாஜக கூறியுள்ளது.

    பாஜக வாதம் 

    இதுதொடர்பாக பாஜக தலைவர் அமித் மாளவியா வெளியிட்ட எக்ஸ் பதிவில், "2012 ஆம் ஆண்டில், எஸ்.ஒய். குரைஷியின் தலைமையில், தேர்தல் ஆணையம், ஜார்ஜ் சோரோஸ் நிறுவனத்தின் இணை நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது USAID ஆல் நிதியளிக்கப்படுகிறது. இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க 21 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    காங்கிரஸ் தலைமையிலான UPA ஆட்சியின்போது தேச நலனுக்கு எதிரான சக்திகள் மத்திய அரசின் அமைப்புகளில் ஊடுருவின. இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க 21 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்த நிதியை பாஜக பெறவில்லை. அப்படியென்றால் அமெரிக்காவின் நிதியுதவியைப் பெற்றது யார்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

    குரேஷி மறுப்பு

    ஆனால் 2010-2012 ஆம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையராக இருந்த எஸ்.ஒய்.குரேஷி, இந்த கூற்று ஆதாரமற்றது என்று மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நான் தலைமை தேர்தல் ஆணையராக  இருந்தபோது, 2012 ஆம் ஆண்டு அமெரிக்காவிடம் நிதி பெறும் எந்த ஒப்பந்தமும் போடவில்லை. ஊடகங்களில் வெளியான செய்தியில் சிறிதும் உண்மை இல்ல" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் பயிற்சி மற்றும் வள மையமான IIIDEM மூலம் பிற நாடுகளுக்கு பயிற்சி அளிக்க பல நிறுவனங்கள் மற்றும் தேர்தல் மேலாண்மை அமைப்புகளுடன் நாங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தோம். ஆனால், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நிதியுதவி அல்லது நிதி அளிப்பதாக வாக்குறுதி என எதுவும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார். 

    பவன் கேரா பாயிண்ட்

    இந்நிலையில் பாஜவின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் தேசிய செய்திதொடர்பாளர் பவன் கேரா பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

    2012 ஆம் ஆண்டு, USAID இலிருந்து தேர்தல் ஆணையம் இந்த நிதியைப் பெற்றதாகக் கூறப்பட்டபோது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் என்று இந்த கோமாளியிடம் (பாஜக தலைவர் அமித் மாலவியாவிடம்) யாராவது சொல்லுங்கள்.

    அமித் மாலவியா சொல்லும் கூற்றுப்படி, ஆளும் கட்சி (காங்கிரஸ்) இந்த 'வெளிநாட்டு தலையீடு' என்று அழைக்கப்படுவதைப் பயன்படுத்தி அதன் சொந்த தேர்தல் வாய்ப்புகளை நாசப்படுத்தியது என்று பொருள்படுகிறது. மேலும் எதிர்க்கட்சி (பாஜக) 2014 தேர்தல்களில் சோரோஸ்/USAID காரணமாக வெற்றி பெற்றது என்றும் அர்த்தமாகிறது என்று பதிலடி கொடுத்துள்ளார்.

    ×