என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் போராட்டம்"

    • மகிந்தர் ஜியின் குடும்பத்தில் என்னை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.
    • இந்தச் சர்ச்சையை என் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

    வேளாண் திருத்த மசோதாவை எதிர்த்து 2021-ம் ஆண்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குறித்து எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்த நடிகை கங்கனா ரனாவத், ஒரு வயதான பெண்ணின் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். "டைம் பத்திரிகையால் மிகவும் சக்திவாய்ந்த இந்தியர் என்று குறிப்பிடப்பட்ட அதே பாட்டி இவர். பாகிஸ்தானியப் பத்திரிகையாளர்கள், இந்தியாவின் சர்வதேச மக்கள் தொடர்பு முயற்சிகளைக் கேவலமான முறையில் கைப்பற்றிவிட்டனர். சர்வதேச அளவில் நமக்காகப் பேச நமது ஆட்களே தேவை" என குறிப்பிட்டிருந்தார்.

    ஆனால், அவர் பகிர்ந்திருந்த படம் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 73 வயதான மஹிந்தர் கவுர். இவர் வேளாண் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டக்களத்தில் கலந்துகொண்டவர்.எங்கள் போராட்ட முறையை இழிவு படுத்தியிருக்கிறார் என பதிண்டா மாவட்ட நீதிமன்றத்தில் கங்கனா ரனாவத் மீது அவதூறு வழக்குப் பதிவு செய்திருந்தார்.

    பிப்ரவரி 2022-ல் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'கங்கனா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்' என்று சம்மன் அனுப்பியது. இந்த உத்தரவால் கோபமடைந்த கங்கனா ரனாவத், ஜூலை 2022-ல் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தை அணுகி, அவதூறு புகாரையும் கீழ் நீதிமன்றத்தின் சம்மன் உத்தரவையும் ரத்து செய்யக் கோரினார்.

    ஆனால், இந்த மனுவை ரத்து செய்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறிய உயர் நீதிமன்றம் கங்கனா ரனாவத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து கங்கனா ரனாவத் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். உச்ச நீதிமன்றமும் கங்கனா ரனாவத்தின் மனுவை ஏற்க முடியாது எனக் கடந்த செப்டம்பர் 12-ம் தேதி தெரிவித்தது. இந்த நிலையில், கங்கனாவின் வழக்கறிஞர் இந்த விவகாரத்தில் சிறப்பு விடுப்பு மனுவை வாபஸ் பெற விரும்புவதாகத் தெரிவித்தார். அதற்காக கங்கனா ரனாவத் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா ரனாவத், "மகிந்தர் ஜியின் குடும்பத்தில் என்னை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. எப்படி அந்தப் பதிவு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது என்பது குறித்து மஹிந்தர் கவுரின் கணவருக்கு நான் ஒரு செய்தி அனுப்பியிருக்கிறேன்.இந்தச் சர்ச்சையை என் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. எந்த மாநிலத்தைச் சேர்ந்த தாதாவாக இருந்தாலும் எனக்கு மரியாதைக்குரியவர். மேலும் எந்த நபருக்கும் எதிராக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. நீதிமன்றத்தில் ஆஜரான உடனேயே, மஹிந்தர் கவுரின் கணவரிடம் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டிருக்கிறேன்" என்றார்.

    • பாலிவுட் நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்து தெரிவித்திருந்தார்.
    • கங்கனா முன்பே மன்னிப்பு கேட்டிருக்கவேண்டும் என்று மகிந்தர் கவுரின் கணவர் தெரிவித்தார்.

    மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் கொள்கைகளை எதிர்த்து 2020-21 ஆம் ஆண்டில் டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண்கள் குறித்து பாலிவுட் நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்து தெரிவித்திருந்தார்.

    போராட்ட வீடியோவை ரீட்வீட் செய்த பாலிவுட் நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத், மூத்த போராட்டக்காரரான மஹிந்தர் கவுருக்கு எதிராக, "இந்தப் கிழவி டைம் இதழில் இடம்பெற்ற அதே வலிமையான இந்தியப் பெண்மணி. அவர் இப்போது ரூ.100க்குக் கிடைக்கிறார்" என்று கிண்டல் செய்யும் கருத்தைத் தெரிவித்திருந்தார்.

    இந்த அறிக்கைக்கு எதிராக மஹிந்தர் கவுர் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கங்கனாவின் மனுவை கடந்த மாதம் உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

    இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்காக பஞ்சாபின் பாதிண்டா மாவட்ட நீதிமன்றத்தில் கங்கனா ரனாவத் இன்று ஆஜரானார்.  நீதிமன்ற விசாரணைக்கு மஹிந்தர் கவுர் சார்பாக அவரது கணவர் வனத்திருந்தார். விசாரணையின்போது தனது கருத்துக்கு கங்கனா மன்னிப்பு கேட்டார். இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 24 ஆம் தேதிக்கு ஒதுக்கிவைக்கப்ட்டது. 

    மேலும் நீதிமன்றத்தின் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேண்டுமென்றே அந்தக் கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை என்றும், நடந்ததற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

    கங்கனா முன்பே மன்னிப்பு கேட்டிருக்கவேண்டும் என்று மகிந்தர் கவுரின் கணவர் தெரிவித்தார். 5 வருடங்கள் முன் கழிந்து கங்கனா தனது  கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • விதைநெல், உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவை தடையின்றி கிடைக்க வழி செய்ய வேண்டும்.
    • தமிழக முழுவதும் வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் பிரச்சாரப் பயணம் மேற்கொள்வது என முடிவு.

    ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பு (கட்சி சார்பற்றது) மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் மாநில தலைவர் அய்யாக்கண்ணு ஆகியோர் திருச்சியில் இன்று கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது;-.

    தமிழ்நாட்டில் பெரும்பா லான நெல் கொள்முதல் நிலையங்களில் தினசரி 40 கிலோ எடையுள்ள 500 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவ சாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆகவே நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி, சுமை தூக்கும் தொழிலாளர் பற்றாக்குறையை போக்க வேண்டும்.

    மத்திய அரசை காரணம் காட்டாமல், 22 விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள நெல் மணிகளை தடையில்லாமல் கொள்முதல் செய்ய வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள் காலவரை யற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனால் சம்பா, தாளடி நெல் சாகுபடி பணிகளை தொடங்கியுள்ள விவசாயி கள், தேவையான உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். விதைநெல், உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவை தடையின்றி கிடைக்க வழி செய்ய வேண்டும்.

    கரும்பு, நெல் உள்ளிட்ட விவசாயிகளின் விளை பொருட்களுக்கு லாபக ரமான விலை வேண்டும் என்பன உள்ளிட்ட விவ சாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி, அனை த்து விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து, தமிழக முழுவதும் வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் பிரச்சாரப் பயணம் மேற்கொள்வது என முடிவு செய்துள்ளோம் என்றனர்.

    மேலும் விவசாய விளைபொருள்களுக்கு நியாயமான விலை கேட்டு 7-ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில், 5 நாட்கள் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பேட்டியின் போது மாநிலத் துணைத் தலைவர் மேகராஜன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • மாவட்டங்களுக்கு விவசாய பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முல்லை பெரியாற்று நீர் தங்களுக்கு கிடைக்கவில்லை.
    • போடி தாலுகா போலீசார் அங்கு குவிக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    முல்லை பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் 5 மாவட்டங்களுக்கு பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் முதல் போடி வரை 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடையும் வகையில் முல்லை பெரியாற்றில் இருந்து 18ம் கால்வாய் அமைக்கப்பட்டது. இதன் மூலம் அப்பகுதியில் உள்ள ஏராளமான கிராமங்களில் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது.

    18ம் கால்வாய் தண்ணீர் கடந்த 3 ஆண்டுகளாக தேவாரம் வரை மட்டுமே வருவதாகவும், இதனால் சங்கராபுரம் முதல் போடி வரை உள்ள 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். இதற்காக பலமுறை போராட்டங்கள் நடத்தினார். மேலும் சங்கராபுரம் பகுதியில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.

    ஆனால் இதற்கு போடி போலீசார் அனுமதி மறுத்து தடை விதித்தனர்.

    இந்த நிலையில் சங்கராபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சாலையில் தட்டு ஏந்தி பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 5 மாவட்டங்களுக்கு விவசாய பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முல்லை பெரியாற்று நீர் தங்களுக்கு கிடைக்கவில்லை. எனவே 18ம் கால்வாயை சீரமைத்து போடி கடைமடை வரை தண்ணீர் கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    இந்த போராட்டத்தில் சங்கராபுரத்தை சேர்ந்த அகில இந்திய மக்கள் பாதுகாப்பு உதவிக்கரம் அமைப்பை சேர்ந்த ராஜசேகரன், பொட்டிபுரம் விவசாயிகள் சங்க சிவக்குமார், சிலமரத்துப்பட்டி 18ம் கால்வாய் உயர்திட்ட போராட்டக் குழுவை சேர்ந்த வாசகர் மற்றும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். போடி தாலுகா போலீசார் அங்கு குவிக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    • இந்தப் பாட்டி டைம் இதழில் இடம்பெற்ற அதே வலிமையான இந்தியப் பெண்மணி. அவர் இப்போது ரூ.100க்குக் கிடைக்கிறார்.
    • நீங்கள் உங்கள் கருத்தில் மசாலாவை சேர்த்துளீர்கள்

    2021 ஆம் ஆண்டு விவசாயிகள் போராட்டத்தில் பெண்கள் சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டதற்காக நடிகையும் பாஜக எம்.பியுமான கங்கனா ரனாவத் மீதான கிரிமினல் அவதூறு வழக்கை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

    2021 ஆம் ஆண்டு விவசாயிகள் போராட்ட வீடியோவை ரீட்வீட் செய்த கங்கனா ரனாவத், மூத்த போராட்டக்காரரான மஹிந்தர் கவுருக்கு எதிராக, "இந்தப் பாட்டி டைம் இதழில் இடம்பெற்ற அதே வலிமையான இந்தியப் பெண்மணி. அவர் இப்போது ரூ.100க்குக் கிடைக்கிறார்" என்று கிண்டல் செய்யும் கருத்தைத் தெரிவித்திருந்தார்.

    இந்த அறிக்கைக்கு எதிராக மஹிந்தர் கவுர் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கங்கனா உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் நீதிபதி சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது பேசிய நீதிபதிகள், "உங்கள் அறிக்கைகள் குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? இது வெறும் ரீ ட்வீட் அல்ல. நீங்கள் உங்கள் சொந்த கருத்துக்களை சேர்த்துள்ளீர்கள். நீங்கள் உங்கள் கருத்தில் மசாலாவை சேர்த்துளீர்கள்" என்று கூறி கங்கனாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

    • சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் மற்றும் அவர்களது வாகனங்களை சிறை பிடித்தனர்.
    • எண்ணெய் குழாய்களை விளைநிலங்களில் அமைக்கக்கூடாது என போராட்டங்களில் ஈடுபட்டோம்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் கிராமத்திற்கு ஐ.டி.பி.எல். எண்ணெய் நிறுவன திட்ட அதிகாரிகள் பொது மேலாளர் தீபக் தலைமையில் 2 கார்களில் வந்தனர். அவர்கள் அங்குள்ள விவசாய நிலங்களை அளவீடு செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த விவசாயிகள், உடனடியாக மற்ற விவசாயிகளுக்கும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்திற்கும் தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் மற்றும் அவர்களது வாகனங்களை சிறை பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் மற்றும் தாசில்தார் சபரிகிரி உள்ளிட்ட அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    விவசாயிகள் கூறுகையில், கடந்த 2011ல் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள விவசாய விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிடப்பட்டு விவசாய நிலத்திற்குள் எண்ணெய் குழாய் பதிக்கப்பட்டது.

    எண்ணெய் குழாய்களை விளைநிலங்களில் அமைக்கக்கூடாது என போராட்டங்களில் ஈடுபட்டோம். அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அந்த திட்டத்தை சாலையோரமாக மட்டுமே அமைக்க வேண்டும் என அறிவித்தார்.

    இந்தநிலையில் ஏற்கனவே பதிக்கப்பட்ட எண்ணெய் குழாய்களுடன் மீண்டும் புதிதாக ஐ.டி.பி.எல். நிறுவனம் எரி காற்றுக்குழாய்களை அமைக்க முயற்சித்து வருகிறது. இதற்கு விவசாயிகள் கடுமையாக எதிர்த்து தெரிவித்து கடந்த 200 நாட்களுக்கு மேலாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

    இந்தநிலையில் எங்களின் எதிர்ப்பை மீறி ஐ.டி.பி.எல். திட்ட அதிகாரிகள் அளவீடு செய்ய வந்தனர். அவர்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தினோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அலுவலக அறைக்குள் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் இருந்தனர்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது . உதவி கலெக்டர் அருள் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர் . பின்னர் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சின்ன சூரியூரில் உள்ள 100 ஏக்கர் அரசு தரிசு நிலத்தினை போலி பட்டா மூலமாக பிளாட் போட்டு விற்பனை செய்ததை கண்டித்தும், திருச்சி உறையூர் சின்ன செட்டி தெருவில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் விசாலாட்சி அம்மன் கோவில் பின்புறம் உள்ள நந்தவனத்தில் அமைந்திருக்கும் காகபுஜண்டா சித்தா மகரிஷி கோவில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்யாமல் தடுக்க வலியுறுத்தியும் அலுவலக பூட்டை பூட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அலுவலக அறைக்குள் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் இருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டக்காரர்கள் வெளியில் நின்ற உதவி கலெக்டர் காரின் முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பிறகு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் மாநில துணைத்தலைவர் மேகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

    • இடுப்பளவு தண்ணீருக்குள் இறங்கி பெண்கள் கோஷம் எழுப்பினார்கள்.
    • விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஏராளமான சலவை தொழிலாளர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

    திருச்சி:

    கொள்ளிடம் அழகிரிபுரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கடந்த ஆண்டு ரூ.7 கோடியில் கட்டிய தடுப்பணை சேதம் அடைந்தது. இதனால் அந்த பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக சலவை தொழில் செய்து வந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து சலவை தொழிலாளர்களுக்கு தடுப்பு சுவர், படித்துறை கட்டி தர கோரியும், காவிரியுடன் அய்யாற்றை இணைக்க வலியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக் கண்ணு தலைமையில் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தப்பட்டது.

    இடுப்பளவு தண்ணீருக்குள் இறங்கி பெண்கள் கோஷம் எழுப்பினார்கள். இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஏராளமான சலவை தொழிலாளர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. 

    • 'நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியவில்லை' என்றேன்.
    • கருத்து வேறுபாடு கொண்டவர்களை அச்சுறுத்துவது தனது தந்தையின் குணம் அல்ல.

    'அரசியலமைப்பு சவால்கள்' என்ற தலைப்பில் டெல்லியின் இன்று நடைபெற்ற காங்கிரசின் வருடாந்திர சட்ட மாநாட்டில் ராகுல் காந்தி கலந்துகொண்டார்.

    அப்போது பேசிய அவர், "நான் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடியபோது, அருண் ஜெட்லி என்னிடம் வந்து என்னை மிரட்டினார். 'நீங்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராகப் போராடினால், நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்' என்று அவர் கூறினார். நான் அவரைப் பார்த்து, 'நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியவில்லை' என்றேன்" என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

    இந்நிலையில் ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லி மகன் ரோகன் ஜெட்லி பதிலளித்துள்ளார்.

    அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,"ராகுல் காந்தி, எனது மறைந்த தந்தை அருண் ஜெட்லி, வேளாண் சட்டங்கள் குறித்து அவரை மிரட்டியதாகக் கூறுகிறார்.

    அவருக்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன், எனது தந்தை 2019-ஆம் ஆண்டு காலமானார். வேளாண் சட்டங்கள் 2020-ஆம் ஆண்டுதான் கொண்டுவரப்பட்டன" என்று ஜெட்லி கூறினார்.

    இது ஒரு தவறான குற்றச்சாட்டு மட்டுமல்ல, மரியாதை இல்லாத செயல் என்றும் ரோஹன் ஜெட்லி குறிப்பிட்டார். கருத்து வேறுபாடு கொண்டவர்களை அச்சுறுத்துவது தனது தந்தையின் குணம் அல்ல என்றும், அவர் எப்போதும் ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் நம்பிக்கை கொண்டவர் என்றும் ரோஹன் ஜெட்லி தெரிவித்தார். 

    • அரசின் திட்டத்திற்கு எதிராக விவசாயிகளும் சமூக செயல்பாட்டாளர்களும் மூன்றரை ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர்.
    • கூட்டத்தில், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான இறுதி அறிவிப்பை ரத்து செய்ய அரசாங்கம் முடிவு செய்தது.

    கர்நாடகாவில் நீண்ட போராட்டத்தின் பலனாக பெங்களூரு ரூரல் மாவட்டத்தில் உள்ள தேவனஹள்ளி தாலுகா விவசாயிகள் ஒரு முக்கியமான வெற்றியைப் பெற்றுள்ளனர்.

    கர்நாடக முதல்வர் சித்தராமையா, அந்தப் பகுதியில் உள்ள சென்னராயப்பட்டணா ஹோப்ளியில் 1,777 ஏக்கர் விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தும் அரசின் திட்டம் முற்றிலுமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

    இந்தப் பகுதியில் உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு மற்றும் விண்வெளி பூங்காவை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.

    ஆனால் இதற்காக விவசாய நிலத்தை கையகப்படுத்தும் அரசின் திட்டத்திற்கு எதிராக விவசாயிகளும் சமூக செயல்பாட்டாளர்களும் மூன்றரை ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் விவசாயிகளின் நீண்டகால போராட்டத்தைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை சித்தராமையா தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான இறுதி அறிவிப்பை ரத்து செய்ய அரசாங்கம் முடிவு செய்தது.

    இழப்பீடு வழங்கிய பிறகு, நிலம் கொடுக்க முன்வரும் விவசாயிகளிடமிருந்து மட்டுமே நிலங்களைக் கையகப்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்திற்குப் பிறகு, நிலம் கையகப்படுத்தும் செயல்முறை முற்றிலுமாக வாபஸ் பெறப்படுவதாக சித்தராமையா அறிவித்தார். நிலம் கையகப்படுத்தும் திட்டத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் வரலாற்று சிறப்புமிக்கது என்று அவர் பாராட்டினார்.

    விவசாயிகள், விவசாய சங்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசாங்கத்தின் முடிவுக்கு மகிழ்ச்சி தெரிவித்து முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். மக்கள் போராட்டத்தால் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. 

    • தினசரி மார்க்கெட் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது.
    • உழவர்சந்தை விவசாயிகளின் போராட்டத்தால் தாராபுரத்தில் இன்று காலை பரபரப்பு நிலவியது.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணாநகரில் உழவர் சந்தை அமைந்துள்ளது. இங்கு தாராபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை கொண்டு வந்து அதிகாலை 4 மணி முதல் விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் தரைக்கடை காய்கறி வியாபாரிகள் உழவர் சந்தை அருகே உள்ள பொள்ளாச்சி சாலையில் சாலையோரம் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும், விற்பனை ஆகாத காய்கறிகளை குப்பையில் கொட்டுவதாகவும் உழவர்சந்தையில் வியாபாரம் செய்யும் விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.

    இது தொடர்பாக ஏற்கனவே போராட்டம் நடத்தி உள்ளனர். அப்போது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதும், பின்னர் மீண்டும் தரைக்கடை வியாபாரிகள் வியாபாரம் செய்வதுமாக இருந்தனர்.

    இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி தாராபுரம் உழவர்சந்தை விவசாயிகள் இன்று காலை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். காய்கறிகளை விற்காமல் தரையில் கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். உழவர் சந்தையிலேயே சமையல் செய்து சாப்பிட்டு உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் தாராபுரம் தாசில்தார் திரவியம் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் , போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொள்ளாச்சி சாலையில் உள்ள வியாபாரிகளை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.


    இது குறித்து ரங்கபாளையத்தை சேர்ந்த விவசாயி கருப்புசாமி கூறுகையில், நாங்கள் விளைவிக்கும் காய்கறிகள் மற்றும் பழ வகைகள், ஊட்டி காய்கறிகள் என அனைத்தையும் உழவர்சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு மீதியை மொத்த மார்க்கெட்டுக்கு கொடுத்து வருகிறோம். தாராபுரத்தில் உள்ள தினசரி மார்க்கெட் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது.

    மார்க்கெட்டில் கடை அமைத்தவர்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் தற்போது உழவர்சந்தை அருகே உள்ள பொள்ளாச்சி சாலை மற்றும் உழவர் சந்தையை சுற்றியுள்ள பகுதிகளில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருவதால் எங்களுடைய வியாபாரம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பலமுறை நாங்கள் போராட்டம் நடத்திய போதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

    உழவர்சந்தை அருகிலேயே கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருவதால் பொது மக்கள் உழவர் சந்தைக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் நாங்கள் கொண்டுவரும் காய்கறிகளில் 30 சதவீதம் மற்றும் 40 சதவீதம் மட்டுமே விற்பனை செய்து பின்னர் குப்பையில் போட வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும். பொள்ளாச்சி சாலை மற்றும் உழவர் சந்தை பகுதிகளில் இருந்து 200 மீட்டர் தள்ளி தரைக்கடை வியாபாரிகள் கடைகளை அமைக்க வேண்டும் என்றனர். சாலையோர கடை வியாபாரிகள் கூறுகையில்,

    தாராபுரம் தினசரி மார்க்கெட் இடிக்கப்பட்டு வணிக வளாகம் கட்டி வருவதால் அரசின் விதிப்படி சாலை ஓரங்களில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகிறோம் என்றனர். உழவர்சந்தை விவசாயிகளின் போராட்டத்தால் தாராபுரத்தில் இன்று காலை பரபரப்பு நிலவியது.

    • அரசாங்கம் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துள்ளது
    • அரசாங்கத்தின் அட்டூழியங்களுக்கு எதிராகப் போராடுவதற்காக மகாபஞ்சாயத்துக்கள் நடத்தப்பட்டுள்ளன.

    பஞ்சாப் விவசாய தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் 131 நாட்களாக நடத்தி வந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முடித்துக் கொண்டார்.

    கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, குறிப்பாக பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக உத்தரவாதம் செய்ய வலியுறுத்தி அவர் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

    இருப்பினும் மத்திய அரசு கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால் அவரின் போராட்டம் தொடர்ந்து வந்தது. 70 வயதான அவர் ஏற்கனவே உடல்நலப்பிரச்னைகளுடன் இருந்த நிலையில் உண்ணாவிரதத்தால் அவரின் உடல்நிலை மோசமடைந்தது. மருத்துவனமயில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் இன்று பஞ்சாபின் பதேகர் சாஹிப் மாவட்டத்தில் உள்ள சிர்ஹிந்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கிசான் மகாபஞ்சாயத்தின் போது ஜக்ஜித் சிங் தல்லேவால் தனது உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்தார்.

    கூட்டத்தில் பேசிய அவர், பஞ்சாப் மற்றும் முழு நாட்டையும் சேர்ந்த விவசாயிகள் ஆதரவாளர்களின் வேண்டுகோளின் பேரில், இன்று எனது சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவர முழு மனதுடன் முடிவு செய்துள்ளேன். ஆனால் போராட்டம் தொடரும் என்று அவர் கூறினார். போராட்டதின் வடிவம் வேறுபட்டிருக்கலாம், ஆனால் அது முடிந்துவிடவில்லை என்று அவர் கூறினார்.

    மேலும் மத்திய மற்றும் மாநில அரசை விமர்சித்து பேசிய அவர், ஒருபுறம் அரசாங்கம் எங்களை ஒரு கூட்டத்திற்கு அழைக்கிறது என்றும் மறுபுறம் எங்கள் போராட்டம் இரவில் வலுக்கட்டாயமாக கலைக்கப்படுகிறது. அரசாங்கம் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துள்ளது. அரசாங்கத்தின் அட்டூழியங்களுக்கு எதிராகப் போராடுவதற்காக மகாபஞ்சாயத்துக்கள் நடத்தப்பட்டுள்ளன.

    முன்னதாக மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதவில், விவசாயிகள் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவாலை உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு வேண்டுகோள் விடுத்தார்.

    மேலும் முன்னரே திட்டமிடப்பட்ட தேதியின்படி மே 4 ஆம் தேதி காலை 11 மணிக்கு விவசாய அமைப்புகளுடன் மீண்டும் ஒரு சந்திப்பை நடத்துவதாக உறுதியளித்தார். தல்லேவால் தற்போது மருத்துவமனையில் இருந்து திரும்பிவிட்டதாகவும், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம் என்றும் தெரிவித்திருந்தார்.

    மேலும் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசின் பிரதிநிதிகளுக்கும் விவசாய அமைப்புகளுக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று உறுதியளித்தார்.

    கடைசியாக கடந்த மார்ச் 19 அன்று மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. 

    ×