என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சி கலெக்டர் அலுவலகம்"

    • வெடிகுண்டு மிரட்டல் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • சோதனையால் அலுவலகப் பணிகளில் சிறிது தொய்வு ஏற்பட்டது.

    திருச்சி:

    திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை அணில் சுப்பிரமணியன் என்ற பெயரில் இருந்து மின்னஞ்சல் வந்தது. அதில் கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் மதியம் 2 மணிக்குள் அது வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனே வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் நான்கு தளங்களிலும் ஒவ்வொரு அலுவலக அறையாக சென்று சோதனை மேற்கொண்டனர்.

    சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்துள்ளது. திருச்சிக்கு நாளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தர உள்ள நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது காவல் துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே, வெடிகுண்டு மிரட்டல் திருச்சி கலெக்டர் அலுவலக மெயிலுக்கு வந்தாலும், அதில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆகவே மனநிலை பிரச்சனையில் பாதிக்கப்பட்டுள்ள நபர் மிரட்டல் விடுத்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    இந்த வெடிகுண்டு சோதனையால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. இந்த சோதனையால் அலுவலகப் பணிகளில் சிறிது தொய்வு ஏற்பட்டது.

    • அலுவலக அறைக்குள் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் இருந்தனர்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது . உதவி கலெக்டர் அருள் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர் . பின்னர் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சின்ன சூரியூரில் உள்ள 100 ஏக்கர் அரசு தரிசு நிலத்தினை போலி பட்டா மூலமாக பிளாட் போட்டு விற்பனை செய்ததை கண்டித்தும், திருச்சி உறையூர் சின்ன செட்டி தெருவில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் விசாலாட்சி அம்மன் கோவில் பின்புறம் உள்ள நந்தவனத்தில் அமைந்திருக்கும் காகபுஜண்டா சித்தா மகரிஷி கோவில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்யாமல் தடுக்க வலியுறுத்தியும் அலுவலக பூட்டை பூட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அலுவலக அறைக்குள் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் இருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டக்காரர்கள் வெளியில் நின்ற உதவி கலெக்டர் காரின் முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பிறகு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் மாநில துணைத்தலைவர் மேகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

    வீடுகள் வழங்கும் விவகாரம் தொடர்பாக திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    திருச்சி:

    திருச்சி காந்திமார்க்கெட் அருகே கல்மந்தை காலனி உள்ளது. இந்த காலனியில் கடந்த 50 வருடங்களுக்கு முன்பு தமிழ்நாடு  வீட்டுவசதி வாரியம் மூலம்  64 நிரந்தர வீடுகள் கட்டித்தரப்பட்டன. மேலும் அப்பகுதியில் 130 தற்காலிக குடியிருப்புகள் அமைத்து  194 குடும்பத்தினர் வசித்து  வருகின்றனர்.

    இந்நிலையில் குடிசை மாற்று வாரியம் இந்த வீடுகளை அகற்றிவிட்டு ரூ.34 கோடி மதிப்பில் 182 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள்  கட்ட உள்ளது. எனவே இப்பகுதியில் குடியிருப்பவர்களை வீடுகளை காலி செய்ய  6 மாத கால அவகாசம் கொடுத்தது. 

    அதன் பேரில் காலிசெய்த வீட்டு உரிமையாளர்களுக்கு, புது வீடுகளை வழங்குவதற்காக அவர்கள் வீட்டின் முன் நிற்க வைத்து புகைப்படம் எடுத்துக்  கொண்டனர். அதன் பிறகு  கடந்த 2 மாதங்களுக்கு பின்  வீடுகள் இடிக்கப்பட்டன.

    இதேபோல் செங்குளம்  காலனி மற்றும் ஜெயில் பேட்டை பகுதியில் வீட்டை காலி செய்த போது  அப்பகுதி மக்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.

    அதேபோல் இப்பகுதி மக்களுக்கும் தலா ரூ.15 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும்,இப்பகுதியில் வசித்த 194 குடும்பங்களுக்கும் வீடு வழங்குவதை உறுதி செய்யும் வகையில் டோக்கன் வழங்கவேண்டும், மேலும் போலியான முறையில் வீடு வழங்குவதற்கு பயனாளிகள் தேர்வு  நடைபெறுவதாக தகவல்கள் பரவுகிறது. 

    எனவே இதில் மாவட்ட கலெக்டர் தலையிட்டு முன்பு இப்பகுதியில் வசித்தவர்களுக்கு வீடு வழங்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று 12-ந் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு பகுதி செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர்  ராஜா, செயற்குழு ஜெயபால்,  ராமர் மற்றும் மணிமாறன் மற்றும் கல்மந்தை காலனி பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    ×