என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Punjab farmer"

    • மகிந்தர் ஜியின் குடும்பத்தில் என்னை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.
    • இந்தச் சர்ச்சையை என் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

    வேளாண் திருத்த மசோதாவை எதிர்த்து 2021-ம் ஆண்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குறித்து எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்த நடிகை கங்கனா ரனாவத், ஒரு வயதான பெண்ணின் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். "டைம் பத்திரிகையால் மிகவும் சக்திவாய்ந்த இந்தியர் என்று குறிப்பிடப்பட்ட அதே பாட்டி இவர். பாகிஸ்தானியப் பத்திரிகையாளர்கள், இந்தியாவின் சர்வதேச மக்கள் தொடர்பு முயற்சிகளைக் கேவலமான முறையில் கைப்பற்றிவிட்டனர். சர்வதேச அளவில் நமக்காகப் பேச நமது ஆட்களே தேவை" என குறிப்பிட்டிருந்தார்.

    ஆனால், அவர் பகிர்ந்திருந்த படம் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 73 வயதான மஹிந்தர் கவுர். இவர் வேளாண் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டக்களத்தில் கலந்துகொண்டவர்.எங்கள் போராட்ட முறையை இழிவு படுத்தியிருக்கிறார் என பதிண்டா மாவட்ட நீதிமன்றத்தில் கங்கனா ரனாவத் மீது அவதூறு வழக்குப் பதிவு செய்திருந்தார்.

    பிப்ரவரி 2022-ல் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'கங்கனா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்' என்று சம்மன் அனுப்பியது. இந்த உத்தரவால் கோபமடைந்த கங்கனா ரனாவத், ஜூலை 2022-ல் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தை அணுகி, அவதூறு புகாரையும் கீழ் நீதிமன்றத்தின் சம்மன் உத்தரவையும் ரத்து செய்யக் கோரினார்.

    ஆனால், இந்த மனுவை ரத்து செய்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறிய உயர் நீதிமன்றம் கங்கனா ரனாவத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து கங்கனா ரனாவத் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். உச்ச நீதிமன்றமும் கங்கனா ரனாவத்தின் மனுவை ஏற்க முடியாது எனக் கடந்த செப்டம்பர் 12-ம் தேதி தெரிவித்தது. இந்த நிலையில், கங்கனாவின் வழக்கறிஞர் இந்த விவகாரத்தில் சிறப்பு விடுப்பு மனுவை வாபஸ் பெற விரும்புவதாகத் தெரிவித்தார். அதற்காக கங்கனா ரனாவத் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா ரனாவத், "மகிந்தர் ஜியின் குடும்பத்தில் என்னை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. எப்படி அந்தப் பதிவு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது என்பது குறித்து மஹிந்தர் கவுரின் கணவருக்கு நான் ஒரு செய்தி அனுப்பியிருக்கிறேன்.இந்தச் சர்ச்சையை என் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. எந்த மாநிலத்தைச் சேர்ந்த தாதாவாக இருந்தாலும் எனக்கு மரியாதைக்குரியவர். மேலும் எந்த நபருக்கும் எதிராக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. நீதிமன்றத்தில் ஆஜரான உடனேயே, மஹிந்தர் கவுரின் கணவரிடம் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டிருக்கிறேன்" என்றார்.

    • மதுரையிலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் வந்தது.
    • போராட்டத்தால் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    திருச்சி:

    விவசாய விளைபொருளுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாபில் 120 நாளுக்கு மேலாக போராட்டம் நடத்தி வந்த விவசாயிகளை அந்த மாநில காவல்துறை துணை ராணுவப்படை உதவியோடு விவசாயிகள் மீது தடியடி நடத்தி கைது செய்துள்ளனர்.

    இதனைக் கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் விவசாய சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், திருச்சி சிந்தாமணி அருகேயுள்ள காவிரி பாலத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மதுரையிலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் வந்தது.

    அதனை நடுப்பாலத்தில் மறித்து விவசாயிகள் முழக்கமிட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு , மாநில துணைத் தலைவர் மேகராஜன்உள்ளிட்ட 20 விவசாயிகளை கைது செய்தனர். இப்போராட்டத்தால் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    • தாக்குதலில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுப்கரன்சிங் (வயது 21) என்ற விவசாயி உயிரிழந்தார்.
    • திருப்பூர் குமரன் நினைவிடத்தில் அஸ்தியை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

    திருப்பூர்:

    வேளாண் விளை பொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், கடன் தள்ளுபடி உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தை தொடங்கினார்கள்.

    பஞ்சாபில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் பஞ்சாப், அரியானா இடையே ஷம்பு பகுதியில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுப்கரன்சிங் (வயது 21) என்ற விவசாயி உயிரிழந்தார்.

    இதையடுத்து அவரின் அஸ்தி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு விவசாயிகள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அந்த விவசாயியின் அஸ்தி, திருப்பூர் கொண்டு வரப்பட்டது.

    பஞ்சாப்பை சேர்ந்த ரவீந்தர்சிங் தரப்பினர் கொண்டு வந்தனர். திருப்பூர் குமரன் நினைவிடத்தில் அஸ்தியை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் திருப்பூரை சேர்ந்த விவசாய அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • விரைவுச் சாலை அமையும் பகுதியில் விவசாயி சுக்விந்தர் சிங்கின் புதிய வீடு இருந்தது.
    • சாலையில் இருந்து 500 அடி தூரத்திற்கு வீட்டை நகர்த்தும் பணி நடைபெற்றது.

    பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி சுக்விந்தர் சிங் சுகி, தனது சொந்த கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் 2 அடுக்குமாடி வீடு கட்டி இருந்தார். இந்நிலையில் டெல்லி, அரியானா, பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களை இணைக்கும் வகையில் விரைவுச் சாலை திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.

    இதில் டெல்லி- பஞ்சாப் மாநிலம் வழியாக அமைக்கப்படும் விரைவுச் சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையின் கீழ் விவசாயி சுக்விந்தர் சிங் கட்டியிருந்த வீடு சிக்கியது. இதையடுத்து அவரது வீட்டை அகற்றுமாறு பஞ்சாப் அரசு உத்தரவிட்டதுடன் இதற்காக இழப்பீடும் வழங்கியது.

    ஆனால் தனது கனவு வீட்டை இடிக்காமல் அதை அங்கிருந்து நகர்த்த முடிவு செய்த விவசாயி சுக்விந்தர் சிங், தனியார் நிறுவனத்தை அணுகினார். இதையடுத்து அவரது வீட்டின் அஸ்திவார பகுதியில் சக்கரங்கள் பொருத்தப்பட்டு அந்த பகுதியில் இருந்து 500 அடி தூரத்திற்கு நகர்த்திச் செல்லும் பணியை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. 

    இது குறித்து சுக்விந்தர் சிங் தெரிவித்துள்ளதாவது: டெல்லி-அமிர்தசரஸ்-கத்ரா விரைவுச்சாலையின் வழியில் வருவதால் நான் வீட்டை மாற்றுகிறேன். எனக்கு இழப்பீடு வழங்கப்பட்டது, ஆனால் வேறு வீடு கட்ட விரும்பவில்லை. இந்த வீட்டை கட்ட சுமார் 1.5 கோடி ரூபாய் செலவழித்துள்ளேன். தற்போது 250 அடி வரை வீடு நகரத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×