என் மலர்
நீங்கள் தேடியது "tribute"
- பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
- முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
பெரம்பலூர்,
பெரம்பலூரில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் புதுபஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு கட்சி அமைப்பு செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான வரகூர் அருணாசலம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி.க்கள் மருதராஜா, சந்திரகாசி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழ்செல்வன், பூவைசெழியன், மாவட்ட அவை தலைவர் குணசீலன், மாவட்ட நிர்வாகிகள் ராஜாராம், ராணி, அந்தூர் ராஜேந்திரன், முத்தமிழ்செல்வன், நகர செயலாளர் ராஜபூபதி, ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், செல்வகுமார், சிவப்பிரகாசம், பேரூர் செயலாளர் செந்தில்குமார், வக்கீல்கள் கனகராஜ், ராமசாமி, துறைமங்கலம் சந்திரமோகன், கீழப்புலியூர் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- அனிதா நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார்.
- அனிதாவிற்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தாராபுரம்:
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவிற்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தாராபுரம் பெரியார் சிலை அருகே நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தாராபுரம் தி.மு.க. செயலாளர் முருகானந்தம் மற்றும் நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன்,ஒன்றிய குழு தலைவர் செந்தில் குமார் , மாவட்ட வக்கீல் அணி செயலாளர் செல்வராஜ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் குகன் , நகர அவைத்தலைவர் கதிரவன், கவுன்சிலர் கண்ணன், வின்னர் ஸ்ரீதர், முன்னாள் எம்.எல்.ஏ., பிரபாவதி பெரியசாமி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சிலம்பரசன் மற்றும் கிளை கழக நிர்வாகிகள், பேரூர் செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
- புதுக்கோட்டையில கருணாநிதியின் நினைவு ஊர்வலம் தி.மு.க. சார்பில் நடைபெற்றது
- ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டுமவுன ஊர்வலம் மற்றும் அவரின் உருவ படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.தமிழககம் முழுவதும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அறந்தாங்கியில் நகரச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.கலைஞர் மன்றத்திலிருந்து தொடங்கிய ஊர்வலம் பெரியகடைவீதி, கட்டுமாவடிச்சாலை முக்கம் வழியாக அண்ணா சிலையை அடைந்தது. அதனை தொடர்ந்து அங்கே அமைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதே போன்று நாகுடியில் தெற்கு ஒன்றியச் செயலாளர் பொன்கணேசன் தலைமையில் கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் நகர்மன்றத்தலைவர் ஆனந்த்,ஒன்றியச் செயலாளர்கள் பொன்கணேசன், சீனியார், நகர்மன்றத் துணைத் தலைவர் முத்து, நகர கழக நிர்வாகிகள் பழனிச்சாமி, ராமசாமி, பிஎம்ஆர் ராஜேந்திரன், ராவுத்தர்கனி, அனந்தராமன், அருளாந்து, பழமாரியப்பன், சத்தியசீலன், செல்லத்துரை, வின்சென்ட்ராஜேந்திரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மணிராஜன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் சக்திவேல், ஹரிவிமலாதி, நகர்மன்ற உறுப்பினர்கள் காசிநாதன், துளசிராமன், சரோஜா, பிச்சை முத்து, வட்ட கழக செயலாளர்கள் கைலாசம், தமிழ் மறைச் செல்வம், மதியழகன், ரமேஷ், காளிதாஸ், நசுருதீன், சுமங்கலி சாஜஹான், ரவி, மாவட்ட அணியின் துணை அமைப்பாளர்கள் அன்பழகன், சோம ஆறுமுகம், நாராயணன், ஆறுமுகம், வேணுகோபால், கருணாகரன், அடைக்கலராஜா, தமிழ் ராசு, நகர இளைஞர் அணி அமைப்பாளர் சேக் இஸ்மாயில், நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அய்யப்பன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- வளர்ப்பு நாயை குடும்பத்தில் ஒரு நபராக கருதி பராமரித்து வந்தனர்.
- நாயின் படத்திற்கு தினமும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகிறோம்.
கும்பகோணம்:
கும்பகோணம் காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 60). ஓவியர்.
இவரது மனைவி கலைச்செல்வி (58). இவர்களுக்கு ராகமாலிகா என்கிற மகளும், மனோ என்கிற மகனும் உள்ளனர்.
பன்னீர்செல்வத்தின் மகன் மனோவும் ஓவியராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினர் நாய் ஒன்றை ஜிஞ்சு என பெயரிட்டு செல்லமாக வளர்த்து வந்தனர்.
இந்த வளர்ப்பு நாயை குடும்பத்தில் ஒரு நபராக கருதி பராமரித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த மே மாதம் வளர்ப்பு நாய்க்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தது.
இதனால் வீட்டில் இருந்த நபர் ஒருவரை இழந்து தவிக்கும் உணர்வில் பன்னீர்செல்வம் குடும்பமே துயரத்தில் மூழ்கினர்.
பன்னீர்செல்வம் குடும்பத்தினர், வளர்ப்பு நாயின் உருவப்படத்தை வீட்டில் வைத்து தினமும் மாலை அணிவித்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இது குறித்து ஓவியர் பன்னீர்செல்வம் கூறுகையில், வளர்ப்பு நாயை, நாங்கள் வீட்டில் ஒரு நபராகவே வைத்து பராமரித்து வந்தோம். வேலை விஷயமாக வெளியூருக்கு செல்லும் போதொல்லாம் அந்த நாய் தான் வீட்டுக்கு பாதுகாப்பு.
எங்கு சென்றாலும் உடன் அழைத்துச் செல்வோம்.
ஒருமுறை வீட்டுக்குள் புகுந்த பெரிய பாம்பை ஜிஞ்சு மட்டும் தனியாக குறைத்து விரட்டியது. திடீரென உடல் நலக்குறைவால் வளர்ப்பு நாய் உயிரிழந்தது.
இதனால் அதன் உருவப்படத்தை வீட்டில் மாட்டி வைத்து தினமும் மாலை அணிவித்து விளக்கேற்றி பிடித்த உணவுகளை படைத்து அஞ்சலி செலுத்தி வருகிறோம் என்றார்.
- முன்னாள் முதல்வர் கருணாநிதி 5-வது ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
- மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர்பாட்சா முத்துராம–லிங்கம் எம்.எல்.ஏ. வழிகாட் டுதலின் படி மண்டபம் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் ஒன்றிய செயலாளர் பிரவீன் தலைமையில் பாரதி நகர் பேருந்து நிலை–யத்தில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் ஒன்றிய அவைத்தலைவர் பாலசுப்பி–ரமணி, ஒன்றிய பொருளா–ளர் கணேசன், மாவட்ட கவுன்சிலர் கவிதா கதிரே–சன், பொதுக்குழு உறுப்பி–னர் தண்டபானி, மாவட்ட தொண்டரணி அமைப்பா–ளர் ராஜா, முன்னாள் ஒன்றிய செயலாளர் கனகு, மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் பகத்சிங் சேதுபதி,
மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அசாரு–தீன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஜெகன், மாவட்ட பிரதிநிதி. கார்மேகம், முருகபூபதி, இளைஞரணி யூசுப், வினோத், பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி கெளதம், பிரசாத், அசாரு–தீன், கிளை செயலாளர்கள் பூசைத்துரை, செல்வம், ஆனந்த், சோமசுந்தரம், மோகன், விசுவநாதன், நாக–லிங்கம் மேலும் தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
- தீரன் சின்னமலை 219-ம் ஆண்டு நினைவு அஞ்சலி வீர வணக்க கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது
- பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது
புதுக்கோட்டை,
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை 219-ம் ஆண்டு நினைவஞ்சலி வீரவணக்க கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில், வீர சைவ பேரவை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மத்திய மண்டல செயலாளர் சரவண தேவா தலைமை வகித்தார். பார்க்கவ குல உடையார் சங்க மாநில செயலாளர் ஆனந்த் மாணிக்கம் மாலை அணிவித்தார். யாதவ எழுச்சி பேரவை எம் சி கே சின்னத்தம்பி, யாதவ் வீர சைவ பேரவை மாவட்ட தலைவர் நாராயணன், வீரசைவ பேரவை மாவட்ட செயலாளர் தலைமை ஆசிரியர் முத்துக்கருப்பன், நாயுடு சங்க மாவட்ட தலைவர் சுந்தர்ராஜன், வீர சைவ பேரவை செயல் தலைவர் ஜெயராஜ், மாவட்ட பொருளாளர் சதாசிவம், அனைத்து வெள்ளாளர் வேளாளர் சங்க பிரதிநிதிகள் சதாசிவம் பிள்ளை ,கீரனூர் சக்திவேல் ,தமிழ்நாடு முத்தரையர் சங்க மாவட்ட தலைவர் கே ஆர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது . முன்னாள் ராணுவ வீரர் பாலையன் அனைவரையும் வரவேற்றார். நமது மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் இராம சுரேஷ் வர்மன் நன்றி கூறினார். பார்க்கவ குல உடையார் சங்க மாவட்ட பொறுப்பாளர் ராமலிங்கம், நாயுடு சங்க மாவட்ட நிர்வாகிகள் தேவராஜ் நாயுடு ,ராகவன் நாயுடு ,வீரசைவ பேரவை தியாகராஜன், கொப்பனாப்பட்டி கண்ணன், தமிழ்நாடு முத்தரையர் சங்க நிர்வாகிகள் செல்ல விக்னேஷ், செல்வகுமார், பிரவீன், விமல், ஹரி ராமு ,புகழ், சபரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்
- பெருமாநல்லூரில் இருக்கும் நினைவு தூணில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
- மின் கட்டண குறைப்பு போராட்டத்தில் உயிர் நீத்தவர்களின் நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருப்பூர் :
விவசாயிகள் சங்கத்தின் மின் கட்டண குறைப்பு போராட்டத்தில் உயிர் நீத்தவர்களின் நினைவு தினத்தையொட்டி பெருமாநல்லூரில் இருக்கும் நினைவு தூணில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மாநில நிர்வாக குழு உறுப்பினரும், திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவருமான பி.என்.ஆர்.பாரிகணபதி தலைமையில் இன்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம் சாமி, செயற்குழு உறுப்பினர் கண்ணபிரான் ,மாவட்ட மாணவர் அணி செயலாளர் ராகுல், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் விஜய் மற்றும் பலர் பங்கேற்றனர்.
- இந்திய அரசு பாதுகாப்பு விதிமுறைகளை மேம்படுத்தி விபத்தில்லா பயணத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
- 40-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு மவுன அஞ்சலி செலுத்தினர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் டி.டி.பி. ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவ ர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழச்சிக்கு டி.டி.பி. ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் விஜயகுமார், செயலாளர் ராஜ் நாராயணன், இணை செயலாளர் மற்றும் ராய் டிரஸ்ட் இண்டர்நேஷனல் நிறுவன தலைவர் துரை ராயப்பன், மாடர்ன் நர்சரி பள்ளி தலைமையாசிரியை தீபா ராணி, டெல்டா ரோட்டரி சங்க தலைவர் ரமேஷ், அபி செல் ஷோரூம் உரிமையாளர் மாணிக்க வாசகம், பயிற்றுநர்கள் பிரபு, கிருபாகரன் மற்றும் அகாடமியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டு மவுன அஞ்சலி செலுத்தினர்.
அகாடமியின் நிறுவனர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.
மவுன அஞ்சலியை அகாடமி செயலாளர் ராஜ் நாராயணன் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து ராய் டிரஸ்ட் நிறுவனர் துரை ராயப்பன் பேசுகையில்:-
ரெயில்வே நிர்வாகமும், இந்திய அரசும் பாதுகாப்பு விதிமுறைகளை மேம்படுத்தி விபத்தில்லா பயணத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.
- உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
- 6 கிராம் தங்கம் மற்றும் 200 கிராம் வெள்ளிப் பொருட்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.
கடலூர்:
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர்கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், விருத்தகிரீ்ஸ்வரர் கோவில் செயல் அலுவலர் மாலா முன்னிலையில், கோவில் மேலாளர் பார்த்தசாரதி மேற்பார்வையில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
கோவிலில் உள்ள 9 நிரந்தர உண்டியல்கள் மற்றும் 1 திருப்பணி உண்டியல் என 10 உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டன. இதில் 9 லட்சத்து 18 ஆயிரத்து, 53 ரூபாய் ரொக்கம், 6 கிராம் தங்கம் மற்றும் 200 கிராம் வெள்ளிப் பொருட்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன. உண்டியல் எண்ணும் பணி முடிந்தபின் காணிக்கைகளை கோவில் ஊழியர்கள் கோவிலின் வங்கிக் கணக்கில் செலுத்தினர்.
- சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.1 கோடியே 25 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலானது
- 3 கிலோ 973 கிராம் தங்கமும் கிடைத்தது
மண்ணச்சநல்லூர்:
சக்தி வழிபாட்டு தலங்களில் முதன்மையாக விளங்கும் திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் மாதமிருமுறை எண்ணப்படுகின்றன. கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. திருக்கோவில் பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் உண்டியல் பணத்தை எண்ணி தங்கம், வெள்ளி நகைகள், அயல்நாட்டு கரன்சிகளை கணக்கெடுத்தனர். கணக்கெடுப்பின் முடிவில் உண்டியலில் ரொக்கமாக ரூ.1 கோடியே 25 லட்சத்து 50 ஆயிரத்து 687 பணம், 3 கிலோ 973 கிராம் தங்க நகைகள், 7 கிலோ 645 கிராம் வெள்ளி நகைகள் இருந்தன. இவை அனைத்தும் கோயில் கணக்கில் வரவு வைக்கப்பட்டன.