search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மொழிப்போர் தியாகிகளுக்கு அ.ம.மு.க. அஞ்சலி
    X

    மொழிப்போர் தியாகிகளுக்கு அ.ம.மு.க. அஞ்சலி

    • மொழிப்போர் தியாகிகளுக்கு அ.ம.மு.க. அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • மாநில இளைஞரணி இணைச் செயலாளர் முருகன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகே கண்ணங்குடி ஒன்றிய தலைவரும், மாவட்ட மாணவரணி செயலாள ருமான சித்தானூர் சரவணன், மெய்யப்பன் கார்த்திக் தலைமையில் அ.ம.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி மொழிப்போர் தியாகிகள் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மாநில இளைஞரணி இணைச் செயலாளர் முருகன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாநில பொறியாளர் அணி காரைக்குடி சரவணன், தேவகோட்டை நகர செயலாளர் கமலக்கண்ணன், காரைக்குடி நகர செயலாளர் அஸ்வின், தேவகோட்டை ஒன்றிய கவுன்சிலர் கணேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் சங்கர், தெற்கு ஒன்றிய செயலாளர் அம்சகண்ணன், நகர பேரவை செயலாளர் தில்லைராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜம்செல்வா, கண்ணங்குடி ஒன்றிய தகவல் நுட்ப செயலாளர் தாய்மடி செந்தில், அருண், வன்மீகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×