என் மலர்
நீங்கள் தேடியது "actor surya"
- அகரம் அறக்கட்டளையின் 15 ஆண்டு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சியான தருணம்.
- கல்வி என்ன சாதிக்க முடியும் என்பதற்கு அவர்கள் வாழும் சான்றுகள்.
நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் நற்பணிகளையும், சாதனைகளையும் பாராட்டி, எம்.பி. கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-
சூர்யா, ஜோதிகா, கார்த்தி, பிருந்தா, உங்கள் மதிப்பிற்குரிய தந்தை சிவகுமார் அண்ணா மற்றும் தாய் லட்சுமி அண்ணி ஆகியோர் எல்லா வகையிலும் எனது பெரிய குடும்பத்தின் ஒரு பகுதியினர்.
அகரம் அறக்கட்டளையின் 15 ஆண்டு விழாவில் பங்கேற்றது என்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்த மகிழ்ச்சியான தருணம்.
அகரமிலிருந்து வெளிவரும் மருத்துவர்கள், புதுமைப்பித்தர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் வெறும் தனிப்பட்ட வெற்றிகள் மட்டுமல்ல, இரக்கம் மற்றும் பொது சேவை உணர்வால் வளர்க்கப்படும் போது கல்வி என்ன சாதிக்க முடியும் என்பதற்கு அவர்கள் வாழும் சான்றுகள்.
நீங்களும் அகரமில் உள்ள குழுவும் ஒரு அமைதியான புரட்சியை ஏற்படுத்தி, ஒரு குழந்தையை, ஒரு கனவை, ஒரு நேரத்தில் வளர்த்து வருகிறீர்கள்.
உங்கள் அறக்கட்டளையின் பணி முணுமுணுப்புகளில் அளவிடப்படாது, ஆனால் அது தூண்டிய நீடித்த மாற்றங்களில் அளவிடப்படும்.
அகரம் மூலம் அதிகாரம் பெற்ற ஒவ்வொரு குழந்தையும் குணமடையவும், சமூகங்களை வழிநடத்தவும், எண்ணற்ற பிறரை உயர்த்தவும், வரவிருக்கும் தலைமுறைகளில் மாற்றத்தின் அலைகளை உருவாக்கவும் திறனைக் கொண்டுள்ளன.
உங்கள் முயற்சிகள் நீதியான மற்றும் முற்போக்கான இந்தியாவின் உணர்வை வெளிப்படுத்துகின்றன. கல்வியின் ஒளி, உறுதியான கைகளில் வைக்கப்படுவதால், பிறப்பு மற்றும் சூழ்நிலையின் வேரூன்றிய தடைகளை எவ்வாறு கலைக்க முடியும் என்பதை அவை நிரூபிக்கின்றன.
வெறும் உயிர்வாழ்வைத் தாண்டி கனவு காண பலத்தையும், கண்ணியம், நோக்கம் மற்றும் சிறப்பைத் தொடர தைரியத்தையும் நீங்கள் பலருக்கு வழங்கியுள்ளீர்கள்.
உங்கள் லட்சியத்திலும் உறுதியிலும் உங்கள் உறவினராக, மக்களின் பிரதிநிதியாக, இந்த குடியரசின் சக குடிமகனாக, இந்த உன்னத முயற்சியில் நான் எப்போதும் உங்கள் சேவையில் இருக்கிறேன். நம் அன்பான தமிழ்நாடு மாநிலம் உங்கள் மீது பொழிந்த அன்பை உங்கள் குடும்பம் கனத்த குரலில் திருப்பி அனுப்பியுள்ளது.
நிச்சயமாக, காலத்தின் முழுமையிலும், உங்கள் பெயர் திரைகளிலும் மேடைகளிலும் ஒளிரும் அதே வேளையில், நீங்கள் உயர்த்தியவர்களின் அமைதியான வெற்றிகளில், நீங்கள் ஏற்றி வைத்த ஒளியை முன்னோக்கிச் செல்லும் தலைமுறைகளில் அது இன்னும் நிலையாக பிரகாசித்தது என்று சொல்லப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அகரம் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது.
- இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எம்.பி. கமல் ஹாசன் பங்கேற்றார்.
நடிகர் சூர்யாவின் அகரம் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கடந்த 15 ஆண்டுகளாக அகரத்தில் படித்து பயன்பெற்ற அனைத்து மாணவர்கள், மாணவிகளும் கலந்து கொண்டனர்.
மேலும், நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா, சிவக்குமார், இயக்குனர் வெற்றி மாறான் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவையின் எம்.பி.,யுமான கமல் ஹாசன் பங்கேற்றார்.
இந்நிலையில் அகரம் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா முடிந்த கையோடு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூர்யா - ஜோதிகா தம்பதி சாமி தரிசனம் செய்துள்ளனர்.
- அகரம் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது.
- இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கமல் ஹாசன் எம்.பி. பங்கேற்றார்.
நடிகர் சூர்யாவின் அகரம் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கடந்த 15 ஆண்டுகளாக அகரத்தில் படித்து பயன்பெற்ற அனைத்து மாணவர்கள், மாணவிகளும் கலந்து கொண்டனர்.
மேலும், நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா, சிவக்குமார், இயக்குனர் வெற்றி மாறான் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவையின் எம்.பி.,யுமான கமல் ஹாசன் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் சூர்யாவின் அகரம் அறக்கட்டளைக்கு இயக்குநர் த.செ.ஞானவேல் ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கினார்.
- நடிகர் சூர்யாவை கட்டியணைத்து கமல்ஹாசன் வாழ்த்தினார்.
- நான் ஓரளவுக்கு நல்லா நடிப்பேன். என் நடிப்பு மேல எனக்கே சந்தேகம் வந்திருச்சு.
நடிகர் சூர்யாவின் அகரம் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், கடந்த 15 ஆண்டுகளாக அகரத்தில் படித்து பயன்பெற்ற அனைத்து மாணவர்கள், மாணவிகளும் கலந்து கொண்டனர்.
மேலும், நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா, சிவக்குமார், இயக்குனர் வெற்றி மாறான் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவையின் எம்.பி.,யுமான கமல் ஹாசன் பங்கேற்றார்.
அப்போது, சூர்யாவை கட்டியணைத்து கமல்ஹாசன் வாழ்த்தினார்.
பின்னர், நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியதாவது:-
டீஸர், ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா என எவ்வளவோ விழாக்கள் நடத்துகிறோம். அதிலெல்லாம் கிடைக்காத சந்தோசம் எனக்கு இதில் கிடைக்கிறது.
சனாதன சங்கிலிகளை, சர்வாதிகார சங்கிலிகளை எல்லாம் நொறுக்கித் தள்ளும் ஒரே ஆயுதம் கல்விதான். இதைத் தவிர வேறு எதையும் கையில் எடுக்காதீர்கள்.
நான் ஓரளவுக்கு நல்லா நடிப்பேன். என் நடிப்பு மேல எனக்கே சந்தேகம் வந்திருச்சு. அதனாலதான் இது(டிஷ்யூ பேப்பர்) கொண்டு வந்தேன். பரவால நான் நல்ல நடிகன்தான் அழாம பேசிட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு அறிவிக்கப்பட்டது.
- சிறந்த குணச்சித்திர நடிருக்கான விருது எம்.எஸ்.பாஸ்கருக்கும் அறிவிக்கப்பட்டது.
71வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
இதில், தமிழில் வெளியான பார்க்கிங் திரைப்படத்திற்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது.
வாத்தி திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு அறிவிக்கப்பட்டது.
சிறந்த குணச்சித்திர நடிருக்கான விருது எம்.எஸ்.பாஸ்கருக்கும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தேசிய விருதுகள் வென்றவர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
71வது தேசிய திரைப்பட விருதில் சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த துணை நடிகர் பிரிவுகளில் விருதுகளை வென்ற பார்க்கிங் குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் எம்.எஸ்.பாஸ்கர் ஐயா, இயக்குனர் ராம்குமார். வாத்தி படத்தின் சிறந்த பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான விருதை வென்றதற்காக ஷாருக்கான் மற்றும் விக்ராந்த் மாஸி ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். திருமதி சாட்டர்ஜியாக ராணி முகர்ஜியின் விருப்பமான நடிப்பைப் பாராட்டுகிறோம்.
உள்ளொழுக்குக்காக ஊர்வசி மேடமிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- டூரிஸ்ட் ஃபேமிலி 4 வாரங்கள் கடந்தும் தமிழ் நாட்டில் அதிக ஷோ எண்ணிக்கையுடன் ஓடிக்கொண்டு இருக்கிறது.
- டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் படக்குழுவை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் கடந்த மே 1ம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். இப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த திரைப்படத்தில் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து எடுக்கப்பட்டுள்ளது. திரைப்படம் 4 வாரங்கள் கடந்தும் தமிழ் நாட்டில் அதிக ஷோ எண்ணிக்கையுடன் ஓடிக்கொண்டு இருக்கிறது.
படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் படக்குழுவை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்த நடிகர் சூர்யா, இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்தை நேரில் பாராட்டியுள்ளார்.
இதுதொர்பாக இயக்குனர் அபிஷன் தனது எக்ஸ் தள பக்கத்தில் நடிகர் சூர்யாவுடனான சந்திப்பு மற்றும் அவரது வாழ்த்து குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் வெளியான அதே நாளில் டூரிஸ்ட் பேமிலி படமும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
- நாளை (மே 01) ஒரே நாளில் 4 புதிய திரைப்படங்கள் வெளியாகிறது.
- சசி குமார்- சிம்ரன் நடிப்பில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' வெளியாக உள்ளது.
2டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள புதிய படம், 'ரெட்ரோ'. சூர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கிறார். நாசர், ஜெயராம், கருணாகரன், பிரகாஷ்ராஜ், ஜோஜூ ஜார்ஜ், சுஜித் சங்கர், சுவாஷிகா, சிங்கம்புலி உள்பட பலர் நடித்துள்ளனர். நாளை முதல் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.
இப்படத்துடன் நாளை ஒரே நாளில், சசி குமார்- சிம்ரன் நடிப்பில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' வெளியாக உள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தை தொடர்ந்து நானி, 'ஹிட் தி தேர்ட் கேஸ்' படத்தில் நடித்துள்ளார். இந்த படமும் நாளை வெளியாகிறது.
மேலும், ரெய்ட்-2 படமும் நாளை வெளியாகிறது. நாளை (மே 01) ஒரே நாளில் 4 புதிய திரைப்படங்கள் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் சூர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
சசி மற்றும் சிம்ரன், நானி, அஜய் ஆகியோரின் டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3, ரெய்ட்-2 ஆகிய படங்களுக்கு வாழ்த்துகள். அனைவரின் படங்களும் வெற்றி பெற்று, பார்வையாளர்களை மகிழ்விக்கட்டும்.
'ரெட்ரோ'-விற்கு ஆதரவளிக்கும் அன்பான ரசிகர்கள் அனைவருக்கும் எனது அன்பும், மரியாதையும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ரெட்ரோ திரைப் படத்திற்கான ப்ரோமோஷன் நடைபெற்று வருகிறது.
- ரெட்ரோ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின்போது சூர்யா தனது 46வது படம் குறித்து அறிவித்தார்.
இயக்குனர் வெங்கி அட்லூரியின் வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைதொடர்ந்து, வெங்கி அட்லூரியிடம் அடுத்த படம் குறித்து அஜித் குமார் ஆலோசித்தாக தகவல் கசிந்துள்ளது. இதனால் இருவரும் அடுத்த படத்தில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, வெங்கி அட்லூரி சூர்யாவின் 46ஆவது படத்தை இயக்க உள்ளார் என்ற தகவலும் பரவியது. இந்த படத்திற்கான முந்தைய வேலைகளில் அவர் பிசியாக உள்ளார் என்றும் கூறப்பட்டது.
சூர்யாவின் 46வது படத்திற்கு பிறகு, அஜித் குமார் உடன் கைக்கோர்ப்பதற்கான திட்டத்தை தொடங்கலாம் எனவும் தெரிகிறது.
சூர்யா நடிப்பின் வரும் மே 1ம் தேதி திரைக்கு வரவுள்ள ரெட்ரோ திரைப் படத்திற்கான ப்ரோமோஷன் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தெலுங்கில் நடைபெற்ற மெட்ரோ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின்போது சூர்யா தனது 46வது படம் குறித்து அறிவித்தார்.
அப்போது, அவர் சித்தாரா என்டெர்டெய்ண்மென்ட் தயாரிப்பில் வெங்கி அட்லூர் இயக்கத்தில் தான் நடிக்க உள்ளதாக கூறினார்.
- பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- உலக நாடுகள் தங்களது கண்டனத்தையும், வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தாக்குதல் சம்பவத்திற்கு உலக நாடுகள் தங்களது கண்டனத்தையும், வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
பஹல்காம் தாக்குதலை அறிந்து அதிர்ச்சியில் மனமுடைந்து போனேன். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்காக பிரார்த்திக்கிறேன்.
இனி யாருக்கும் இப்படியான துயரம் நடக்கக்கடாது. இந்தியா எப்போதும் ஒற்றுமையாகவும், உறுதியாகவும் இருக்கும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
- ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.
நடிகர் சூர்யா நடிக்கும் 44-வது திரைப்படம் 'ரெட்ரோ.' இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.
ஏற்கனவே வெளியான இப்படத்தின் கண்ணாடி பூவே மற்றும் கனிமா பாடல்கள் மிகவும் வைரலான நிலையில், இப்படத்தின் அடுத்த பாடலான தி ஒன் பாடலையும் படக்குழு வெளியிட்டது.
மேலும், ரெட்ரோ படத்திற்கான டப்பிங் பணிகளை சூர்யா முழுவதுமாக முடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி சென்னையில் நடைப்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 'ரெட்ரோ' திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா வருகின்ற 18ம் தேதி நடைபெறும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், தமிழ் புத்தாண்டிற்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
- சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் இந்த அகாடெமி உருவாக்கப்பட்டுள்ளது.
- ஜெய்பீம் திரைப்படத்திற்குப் பிறகும் தொடர்ந்து சமூக அக்கறையோடு செயல்பட்டுவரும் தம்பி சூர்யா
முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகியோர் இணைந்து சத்யதேவ் சட்ட அகாடெமியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் இந்த அகாடெமி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சத்யதேவ் சட்ட அகாடெமியை உருவாக்கிய நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சமூகத்தில் கல்வியும் வேலைவாய்ப்பும் ஒரு சாராருக்கு மட்டுமே சொந்தமல்ல என்று போராடி சமூக நீதி அடிப்படையில் உரிமைகளைப் பெற்றோம். 1961ம் ஆண்டு வழக்கறிஞர் சட்டம் இயற்றப்பட்ட பிறகும், இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்ட பிறகுமே எளிய மக்களும் சட்டத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
எளிய பின்புலங்களில் இருந்து வரும் அவர்களது திறன்களை வளர்க்க, ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. சந்துரு அவர்களை இயக்குநராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்யதேவ் சட்ட அகாடெமியைத் தொடங்கி வைத்தேன்.
இதில், ஏழை - எளிய மக்களின் கல்விக்காக உள்ளார்ந்த அக்கறையோடு தொடர்ச்சியாகச் செயல்பட்டுவரும் அன்புக்குரிய தம்பி சூர்யாவின் பங்களிப்பைப் பாராட்டுகிறேன்.
சட்டத்தொழிலும், மருத்துவத் தொழிலும் மற்ற தொழில்கள் போல் அல்ல. மற்றவை பணி புரிவது; இவை பயிற்சி செய்வது!
எனவே, நான் முதல்வன் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு இந்த அகாடமியின் மூலம் பயிற்சி அளிக்கக் கேட்டுக் கொண்டுள்ளேன்.
நீதியரசர் திரு.சந்துரு அவர்களோடு, ஜெய்பீம் திரைப்படத்திற்குப் பிறகும் தொடர்ந்து சமூக அக்கறையோடு செயல்பட்டுவரும் தம்பி சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோருக்கு மீண்டுமொருமுறை வாழ்த்துகள்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- சூர்யா 6 வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு 2 வருடங்களாக நடந்தது.
- கங்குவா' திரைப்படம் உலகம் முழுவதும் விரைவில் திரையிடப்பட உள்ளது.
இயக்குனர் சிவா இயக்கத்தில் 'கங்குவா' என்ற புதிய படத்தில் நடிகர் சூர்யா நடித்து உள்ளார். இந்த படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த படத்தில் கதாநாயகியாக திஷா பதானி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி.
இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சூர்யா 6 வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு 2 வருடங்களாக நடந்தது. தற்போது படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் 'போஸ்ட் புரொடக்ஷன்' பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த படத்தின் டிஜிட்டல் பணிகளை நடிகர் சூர்யா நேரில் பார்வையிட்டார்.
அதை தொடர்ந்து படக்குழுவை பாராட்டி நன்றி தெரிவித்தார். கங்குவா' திரைப்படம் உலகம் முழுவதும் விரைவில் திரையிடப்பட உள்ளது.






