என் மலர்
நீங்கள் தேடியது "அகரம் அறக்கட்டளை"
- அகரம் அறக்கட்டளையின் 15 ஆண்டு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சியான தருணம்.
- கல்வி என்ன சாதிக்க முடியும் என்பதற்கு அவர்கள் வாழும் சான்றுகள்.
நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் நற்பணிகளையும், சாதனைகளையும் பாராட்டி, எம்.பி. கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-
சூர்யா, ஜோதிகா, கார்த்தி, பிருந்தா, உங்கள் மதிப்பிற்குரிய தந்தை சிவகுமார் அண்ணா மற்றும் தாய் லட்சுமி அண்ணி ஆகியோர் எல்லா வகையிலும் எனது பெரிய குடும்பத்தின் ஒரு பகுதியினர்.
அகரம் அறக்கட்டளையின் 15 ஆண்டு விழாவில் பங்கேற்றது என்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்த மகிழ்ச்சியான தருணம்.
அகரமிலிருந்து வெளிவரும் மருத்துவர்கள், புதுமைப்பித்தர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் வெறும் தனிப்பட்ட வெற்றிகள் மட்டுமல்ல, இரக்கம் மற்றும் பொது சேவை உணர்வால் வளர்க்கப்படும் போது கல்வி என்ன சாதிக்க முடியும் என்பதற்கு அவர்கள் வாழும் சான்றுகள்.
நீங்களும் அகரமில் உள்ள குழுவும் ஒரு அமைதியான புரட்சியை ஏற்படுத்தி, ஒரு குழந்தையை, ஒரு கனவை, ஒரு நேரத்தில் வளர்த்து வருகிறீர்கள்.
உங்கள் அறக்கட்டளையின் பணி முணுமுணுப்புகளில் அளவிடப்படாது, ஆனால் அது தூண்டிய நீடித்த மாற்றங்களில் அளவிடப்படும்.
அகரம் மூலம் அதிகாரம் பெற்ற ஒவ்வொரு குழந்தையும் குணமடையவும், சமூகங்களை வழிநடத்தவும், எண்ணற்ற பிறரை உயர்த்தவும், வரவிருக்கும் தலைமுறைகளில் மாற்றத்தின் அலைகளை உருவாக்கவும் திறனைக் கொண்டுள்ளன.
உங்கள் முயற்சிகள் நீதியான மற்றும் முற்போக்கான இந்தியாவின் உணர்வை வெளிப்படுத்துகின்றன. கல்வியின் ஒளி, உறுதியான கைகளில் வைக்கப்படுவதால், பிறப்பு மற்றும் சூழ்நிலையின் வேரூன்றிய தடைகளை எவ்வாறு கலைக்க முடியும் என்பதை அவை நிரூபிக்கின்றன.
வெறும் உயிர்வாழ்வைத் தாண்டி கனவு காண பலத்தையும், கண்ணியம், நோக்கம் மற்றும் சிறப்பைத் தொடர தைரியத்தையும் நீங்கள் பலருக்கு வழங்கியுள்ளீர்கள்.
உங்கள் லட்சியத்திலும் உறுதியிலும் உங்கள் உறவினராக, மக்களின் பிரதிநிதியாக, இந்த குடியரசின் சக குடிமகனாக, இந்த உன்னத முயற்சியில் நான் எப்போதும் உங்கள் சேவையில் இருக்கிறேன். நம் அன்பான தமிழ்நாடு மாநிலம் உங்கள் மீது பொழிந்த அன்பை உங்கள் குடும்பம் கனத்த குரலில் திருப்பி அனுப்பியுள்ளது.
நிச்சயமாக, காலத்தின் முழுமையிலும், உங்கள் பெயர் திரைகளிலும் மேடைகளிலும் ஒளிரும் அதே வேளையில், நீங்கள் உயர்த்தியவர்களின் அமைதியான வெற்றிகளில், நீங்கள் ஏற்றி வைத்த ஒளியை முன்னோக்கிச் செல்லும் தலைமுறைகளில் அது இன்னும் நிலையாக பிரகாசித்தது என்று சொல்லப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ரெட்ரோ திரைப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- சூர்யா நடித்த திரைப்படங்களில் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்த திரைப்படமாக ரெட்ரோ உருமாறியுள்ளது.
நடிகர் சூர்யாவின் 44-வது படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். திரைப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
முதல் நாள் வசூலாக திரைப்படம் உலகளவில் 46 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. சூர்யா நடித்த திரைப்படங்களில் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்த திரைப்படமாக ரெட்ரோ உருமாறியுள்ளது.
இதுவரை ரெட்ரோ படம் உலக அளவில் ரூ.104 கோடி வசூலை கடந்துள்ளது. இதனை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் சூர்யா படத்தின் லாபத்தில் இருந்து 10 கோடி ரூபாயை அவரது அகரம் ஃபவுண்டேஷன் - க்கு தானம் செய்துள்ளார்.
- இது படிப்புக்காக கொடுக்கின்ற நன்கொடையில் பண்ண இடம் கிடையாது.
- நன்கொடையா வர ஒவ்வொரு காசும், படிப்புக்கும், படிப்பு சார்ந்த செலவுகளுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.
சென்னை தி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அகரம் அறக்கட்டளை அலுவலக திறப்பு விழாவில் நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கல்வியே ஆயுதம் , கல்வியே கேடயம். சொந்த வீடு கட்டியபோது இருந்த சந்தோஷத்தை விட , இந்த விழா ரொம்ப சந்தோஷத்தை தருகிறது.
எந்த குறையும் இல்லாமல் எல்லாவற்றையும் செய்துவிட வேண்டும் என்று ஆசை பட்டோம். 20 வருடங்களுக்கு பிறகு இப்போது இந்த இடம் கிடச்சிருக்கு.
இது படிப்புக்காக கொடுக்கின்ற நன்கொடையில் பண்ண இடம் கிடையாது. இது நீங்கள் எனக்கு கொடுத்த வாய்ப்பு. எனக்கு இருக்க வருமானத்தின் மூலமா பண்ண கட்டிடம்தான் இது.

நன்கொடையா வர ஒவ்வொரு காசும், படிப்புக்கும், படிப்பு சார்ந்த செலவுகளுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால்.. 10 ஆயிரத்திற்கும் மேல் விண்ணப்பங்கள் அரசுப் பள்ளிகளில் இருந்து வந்துக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கான தேவையும் அதிகமாக இருக்கிறது.
வருடத்திற்கு நாங்கள் 700 மாணர்களிடம் மட்டும் தான் அவர்களுடைய வாழ்க்கையை தொட முடிகிறது. மாற்ற முடிகிறது. இன்னும் நிறைய அன்பு தேவைப்படுகிறது. பணம் மட்டும் இல்லாமல் உங்கள் அனைவருடைய நேரம் தேவைப்படுகிறது.
அகரம் இத்தனை ஆண்டுகள் நடைபெற்று வருகிறது என்றால் அது தன்னார்வலர்களால் தான்.
இவ்வாறு கூறினார்.
14 வயதிலிருந்து யோகாவை கற்றுக் கொண்டேன். சிறுவயதிலிருந்தே கஷ்டப்பட்டு வளர்ந்தவன். உடம்பை பேணிக் காக்க வேண்டும். அறிவு அப்படியேதான் இருக்கும். உடம்புக்குத்தான் வயது ஆகும். நமது உடம்பை கெட்ட காரியங்களுக்கு ஏற்படுத்தி நாசமாக்கி விடாதீர்கள். மிகவும் மோசமான காலத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
சாகும் வரை மது பழக்கத்திற்கும், சிகரெட், போதை பழக்கத்திற்கு அடிமையாக மாட்டேன் என சத்தியம் செய்து வாழ்ந்து காட்டுங்கள். உங்களுக்காக நீங்கள் வாழுங்கள்.
வாழ்க்கை பற்றி புரியும் பொழுது உடம்பு கட்டுப்படாது. உங்கள் உடம்புகளைப் பேணிக் காப்பது நல்லது. சாதனை செய்ய வயது முக்கியமில்லை. உடம்பு தான் முக்கியம். அதைப் பேணிக்காத்தால் எல்லா சாதனைகளை செய்யலாம். அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யுங்கள். தாய், தந்தை தான் தெய்வம். அவர்களை முதலில் வணங்குங்கள்.
இவ்விழாவில் பள்ளியின் முன்னாள் மாணவர்களான முன்னாள் அமைச்சர்.செ.ம. வேலுச்சாமி, சப்-கலெக்டர் கார்மேகம்,சூ.ரா.தங்கவேலு, சூலூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் தங்கராஜ், மாவட்ட கல்வி அலுவலர் கீதா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். பள்ளி தலைமை ஆசிரியர் குமார் நன்றி கூறினார். இதில் மாணவ -மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். #Agaram #Sivakumar






