என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Actor Sivakumar"

    • தந்தையின் வழியிலே மிகச்சிறந்த ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார்.
    • எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி இன்று மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார்.

    சென்னை:

    தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நடிகர் சிவகுமார், ஓவியர் குருசாமி சந்திரசேகரன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனைக்கான மதிப்புறு முனைவர் பட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதையடுத்து விழாவில் நடிகர் சிவகுமார் பேசியதாவது:-

    2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி முத்தமிழறிஞர் கலைஞர் நம்மை விட்டு மறைந்து விட்டார். அதே 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி கோவை இந்துஸ்தான் பல்கலைக்கழக வளாகத்தில் அவருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.

    திரைப்படத் துறையில் பல்வேறு கலைஞர்கள் கலந்து கொண்டார்கள். அந்த மேடையிலே பேசிய நான் நமது இன்றைய முதலமைச்சரை பார்த்து இன்று மஞ்சள் துண்டு போர்த்தப்பட்டு நாளை தமிழக முதலமைச்சராக போகின்ற அன்புச் சகோதரர் ஸ்டாலின் அவர்களே என்று குறிப்பிட்டு பேசினேன்.

    அந்த வாழ்த்து பொய்யாகவில்லை. அடுத்த 3 ஆண்டுக்குள் 2021 ஏப்ரல் 7-ந்தேதி இதோ இங்கு முதலமைச்சராக நம்மிடையே வந்து அமர்ந்துள்ளார்.

    தந்தையின் வழியிலே மிகச்சிறந்த ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார். அவருக்கு உங்கள் சார்பில் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த விருதை எனக்கு வழங்கிய இந்த பல்கலைக்கழகத்துக்கு இதய பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நான் சிறுவயதில் இருந்து அதிகமாக சினிமாக்கள் பார்த்ததில்லை. 14 வயது வரை நான் பார்த்த மொத்த படங்கள் வெறும் 14 தான். அதில் மறக்க முடியாத படங்கள் பராசக்தி, மனோ கரா, இல்லறம், இல்லற ஜோதி, ராஜாராணி போன்ற படங்கள். அந்த படங்களில் கலைஞர் வசனங்களை 15 வயதிலே மனப்பாடம் செய்து விட்டேன்.

    கலைஞர் என்னிடம் நான் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை எழுதவில்லை தம்பி. எழுதி பாஸ் செய்தால் ஐ.ஏ.எஸ். போகச் சொல்வார்கள். எனக்கு மேற்கொண்டு படிக்க விருப்பம் இல்லை. அதனால் பரீட்சை எழுதாமல் தவிர்த்தேன் என்று என்னிடம் சொன்னார்.

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெறாத ஒரு இளைஞன், சங்க இலக்கிய பாட்டுக்கு உரை எழுதி உள்ளார். அவரது வசனம் கற்பனையே பண்ண முடியாது. அந்த அளவுக்கு அமைந்துள்ளது.

    அந்த இலக்கிய தாத்தாவுக்கு மகனாக பிறந்து இதோ மேடையில் இருக்கிற அவரது வாரிசு, இன்றைக்கு திறம்பட ஆட்சி செய்து காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், வீடுதேடி மருத்துவம் என்று எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி இன்று மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார். இவர் மீண்டும் இந்த பதவியிலே நீடிக்க வேண்டும் என்று வாழ்த்தி விடை பெறுகிறேன்.

    இவ்வாறு சிவக்குமார் பேசினார்.

    • சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.
    • சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

    தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் சிவகுமார். இவர் 1965-ம் ஆண்டு வெளியான 'காக்கும் கரங்கள்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். 1967-ம் ஆண்டு வெளியான 'கந்தன் கருணை' திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை பெற்று தந்தது.

    இதனை தொடர்ந்து நடிகர் சிவகுமார் கடைசியாக 2001-ம் ஆண்டு வெளியான 'பூவெல்லாம் உன் வாசம்' படத்தில் நடித்திருந்தார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது நடிப்பை நிறுத்திவிட்டு சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

    இந்த நிலையில், தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக் கழகம் சார்பில் நடிகர் சிவகுமார், ஓவியர் சந்துரு ஆகியோருக்கு மதிப்புமிக்க டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

    சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் நடிகர் சிவகுமாருக்கு மதிப்புறு முனைவர் பட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

    • பெண்கள்தான் உண்மையான தெய்வங்கள்.
    • குழந்தையை பெற்று எடுப்பவர்கள்தான் பெண்கள்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வேதாத்திரிய வாழ்க்கை நெறி என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரைப்பட நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

    பெண்கள்தான் உண்மையான தெய்வங்கள். உயிர், உடல் கொடுத்து, தாய் தந்தையரின் ஞானத்தை குழந்தைக்குள் வைத்து, 10 மாதம் சிரமப்பட்டு, குழந்தையை பெற்று எடுப்பவர்கள்தான் பெண்கள்.

    இப்படிப்பட்ட பெண்கள் ஒவ்வொருவரும் தெய்வங்கள் தான். இந்த மண்ணில் பிறந்ததற்கும், என்னை பெற்ற தாய்க்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.

    எனது 17 வயதில் யோகா செய்ய துவங்கினேன். எனது நாக்கில் காபி, டீ பட்டு 68 ஆண்டுகள் ஆகிறது. கண் மூடினால் மனம் கெடக்கூடாது. இது நானாக உருவாக்கி கொண்ட வாழ்க்கை. அதுதான் தியானம்.

    உடம்பும் மனமும் நமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இல்லையெனில் வாழ்வது வீண். வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களைப்பட்ட வேதாத்திரி மகரிஷி மண்சோறு சாப்பிட்டு வாழ்ந்துள்ளார்.

    திருக்குறள் நமக்கு மட்டுமின்றி, எதிர்கால தலைமுறைகளாக உள்ள குழந்தைகளுக்கும் பயன்படும். காந்தி, காமராஜர் உள்ளிட்ட அனைவரது வாழ்க்கையிலும் நடந்த சம்பவங்களில் திருக்குறள் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    சாகும் வரை மது பழக்கத்திற்கும், சிகரெட், போதை பழக்கத்திற்கு அடிமையாக மாட்டேன் என சத்தியம் செய்து வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நடிகர் சிவகுமார் கூறினார்.
    சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழாவும் அகரம் அறக்கட்டளையின் சார்பில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது. இதில் ராசி பாளையம், பீடம்பள்ளி காங்கியம்பாளையம் , கலங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்ததற்கு தலைமை ஆசிரியர்களை பாராட்டப்பட்டனர். விழாவில் நடிகரும், அகரம் அறக்கட்டளையின் தலைவருமான சிவக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது-

    14 வயதிலிருந்து யோகாவை கற்றுக் கொண்டேன். சிறுவயதிலிருந்தே கஷ்டப்பட்டு வளர்ந்தவன். உடம்பை பேணிக் காக்க வேண்டும். அறிவு அப்படியேதான் இருக்கும். உடம்புக்குத்தான் வயது ஆகும். நமது உடம்பை கெட்ட காரியங்களுக்கு ஏற்படுத்தி நாசமாக்கி விடாதீர்கள். மிகவும் மோசமான காலத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

    சாகும் வரை மது பழக்கத்திற்கும், சிகரெட், போதை பழக்கத்திற்கு அடிமையாக மாட்டேன் என சத்தியம் செய்து வாழ்ந்து காட்டுங்கள். உங்களுக்காக நீங்கள் வாழுங்கள்.

    வாழ்க்கை பற்றி புரியும் பொழுது உடம்பு கட்டுப்படாது. உங்கள் உடம்புகளைப் பேணிக் காப்பது நல்லது. சாதனை செய்ய வயது முக்கியமில்லை. உடம்பு தான் முக்கியம். அதைப் பேணிக்காத்தால் எல்லா சாதனைகளை செய்யலாம். அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யுங்கள். தாய், தந்தை தான் தெய்வம். அவர்களை முதலில் வணங்குங்கள்.

    இவ்விழாவில் பள்ளியின் முன்னாள் மாணவர்களான முன்னாள் அமைச்சர்.செ.ம. வேலுச்சாமி, சப்-கலெக்டர் கார்மேகம்,சூ.ரா.தங்கவேலு, சூலூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் தங்கராஜ், மாவட்ட கல்வி அலுவலர் கீதா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். பள்ளி தலைமை ஆசிரியர் குமார் நன்றி கூறினார். இதில் மாணவ -மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். #Agaram #Sivakumar
    ×