போதை பழக்கத்திற்கு அடிமையாகாதீர்கள்- நடிகர் சிவகுமார் அறிவுரை

சாகும் வரை மது பழக்கத்திற்கும், சிகரெட், போதை பழக்கத்திற்கு அடிமையாக மாட்டேன் என சத்தியம் செய்து வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நடிகர் சிவகுமார் கூறினார்.
போதை பழக்கத்திற்கு அடிமையாகாதீர்கள்- நடிகர் சிவகுமார் அறிவுரை
Published on

சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழாவும் அகரம் அறக்கட்டளையின் சார்பில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது. இதில் ராசி பாளையம், பீடம்பள்ளி காங்கியம்பாளையம் , கலங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்ததற்கு தலைமை ஆசிரியர்களை பாராட்டப்பட்டனர். விழாவில் நடிகரும், அகரம் அறக்கட்டளையின் தலைவருமான சிவக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது-

14 வயதிலிருந்து யோகாவை கற்றுக் கொண்டேன். சிறுவயதிலிருந்தே கஷ்டப்பட்டு வளர்ந்தவன். உடம்பை பேணிக் காக்க வேண்டும். அறிவு அப்படியேதான் இருக்கும். உடம்புக்குத்தான் வயது ஆகும். நமது உடம்பை கெட்ட காரியங்களுக்கு ஏற்படுத்தி நாசமாக்கி விடாதீர்கள். மிகவும் மோசமான காலத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

சாகும் வரை மது பழக்கத்திற்கும், சிகரெட், போதை பழக்கத்திற்கு அடிமையாக மாட்டேன் என சத்தியம் செய்து வாழ்ந்து காட்டுங்கள். உங்களுக்காக நீங்கள் வாழுங்கள்.

வாழ்க்கை பற்றி புரியும் பொழுது உடம்பு கட்டுப்படாது. உங்கள் உடம்புகளைப் பேணிக் காப்பது நல்லது. சாதனை செய்ய வயது முக்கியமில்லை. உடம்பு தான் முக்கியம். அதைப் பேணிக்காத்தால் எல்லா சாதனைகளை செய்யலாம். அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யுங்கள். தாய், தந்தை தான் தெய்வம். அவர்களை முதலில் வணங்குங்கள்.

இவ்விழாவில் பள்ளியின் முன்னாள் மாணவர்களான முன்னாள் அமைச்சர்.செ.ம. வேலுச்சாமி, சப்-கலெக்டர் கார்மேகம்,சூ.ரா.தங்கவேலு, சூலூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் தங்கராஜ், மாவட்ட கல்வி அலுவலர் கீதா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். பள்ளி தலைமை ஆசிரியர் குமார் நன்றி கூறினார். இதில் மாணவ -மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். #Agaram #Sivakumar

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com