search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "martyrs"

    • ராமநாதபுரத்தில் 21 தியாகிகளுக்கு பா.ம.க.வினர் மரியாதை செலுத்தினர்.
    • மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இப்ராகிம் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    கடந்த 1987-ம் ஆண்டு செப்.17 அன்று மிகவும் பிற்படுத்தப் பட்டோர் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 21 தியாகிகளுக்கு ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி வீர வணக்கம் செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் தேனிசை அக்கீம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் முனைவர் ஷேக் மொகைதீன் கலந்து கொண்டார்.

    மாவட்ட தலைவர் சந்தன தாஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பு செயலாளர் சதாம் ராஜா, மாவட்டத் துணைச் செயலாளர் தொண்டி ராசிக், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் லட்சுமணன்,மாவட்ட இளைஞர் சங்கத் தலைவர் ஸ்டாலின், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், நகரச் செயலாளர் ராமநாதபுரம் பாலா, மண்டபம் ஒன்றிய செய லாளர் வெங்கடேசன்.

    ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பொறியாளர் சரிப், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தும் கான், மாணவர் சங்க செயலாளர் சந்தோஷ், நகர அமைப்பாளர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இப்ராகிம் நன்றி கூறினார்.

    • சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும், குடும்பத்தினருக்கும் கலெக்டர் மரியாதை செய்தார்.
    • 20 பேருக்கு ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்து 520 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    திருவாரூர்:

    சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    இதனைத் தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மாவட்ட கலெக்டர் மரியாதை செய்தார்.

    இதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில் ஒரு நபருக்கு ரூ 25 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாவட்ட ஆதிதிராவிட நலத்துறையின் சார்பில் 4 பேருக்கு ரூ12,552 மதிப்பிலான தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.

    பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 20 நபர்களுக்கு ரூ1,22,520 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    மாவட்ட சமூக நல துறையின் சார்பில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் முதிர்வு தொகையாக 5 பேருக்கு ரூ1,08,296 நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 பேருக்கு ரூ1,74,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், தாட்கோ மூலம் 3 நபருக்கு ரூ5,47,100 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என 36 பேருக்கு 9 லட்சத்து 89 ஆயிரத்து 968 ரூபாய் மதிப்புள்ளான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்கு மார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மேலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு துறைகளில் இருந்து சிறப்பாக பணிபுரிந்த அரசு ஊழியர்களை பாராட்டி சான்றிதழ்களை ஆட்சி தலைவர் சாருஸ்ரீ வழங்கினார்.

    இறுதியில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெற்றது.

    இதுபோல் மாவட்டம் முழுவதும் அரசு அலுவலகங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் சுதந்திர தின விழா நடைபெற்றது.

    • மொழிப்போர் தியாகிகளுக்கு அ.ம.மு.க. அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • மாநில இளைஞரணி இணைச் செயலாளர் முருகன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகே கண்ணங்குடி ஒன்றிய தலைவரும், மாவட்ட மாணவரணி செயலாள ருமான சித்தானூர் சரவணன், மெய்யப்பன் கார்த்திக் தலைமையில் அ.ம.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி மொழிப்போர் தியாகிகள் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மாநில இளைஞரணி இணைச் செயலாளர் முருகன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாநில பொறியாளர் அணி காரைக்குடி சரவணன், தேவகோட்டை நகர செயலாளர் கமலக்கண்ணன், காரைக்குடி நகர செயலாளர் அஸ்வின், தேவகோட்டை ஒன்றிய கவுன்சிலர் கணேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் சங்கர், தெற்கு ஒன்றிய செயலாளர் அம்சகண்ணன், நகர பேரவை செயலாளர் தில்லைராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜம்செல்வா, கண்ணங்குடி ஒன்றிய தகவல் நுட்ப செயலாளர் தாய்மடி செந்தில், அருண், வன்மீகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தியாகிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டத்தில் 22 மனுக்கள் பெறப்பட்டன.
    • தியாகிகளின் வாரிசுதாரர்கள் கோரிக்கைகள் மீது தீவிர கவனம் செலுத்தி தீர்வு காணப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தியாகிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தியாகிகள் மற்றும் தியாகிகளின் வாரிசுதாரர்களிடமிருந்து 22 கோரிக்கை மனுக்க ளை பெற்று அதனை தொடர்புடைய அலுவலர்களிடம் வழங்கி விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    இந்த கூட்டத்தில் தியாகிகள் மற்றும் தியாகிகளின் வாரிசுதாரர்கள் கோரிக்கைகள் மீது தீவிர கவனம் செலுத்தி தீர்வு காணப்பட்டது. மேலும் வீட்டுமனை பட்டா, ஓய்வூதியம், வாரிசு சான்று மற்றும் குடிநீர் இணைப்பு வேண்டுதல் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு இதற்குரிய தீர்வுகள் வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர் மற்றும் தியாகிகள், தியாகிகளின் வாரிசுதாரர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 21 பேர் பலியாகினர்.
    • இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகள் நினைவு தினமாக பா.ம.க.வினர், வன்னியர் சங்கத்தினர் கடைபிடித்து வருகின்றனர்.

    பல்லடம் :

    தமிழகத்தில், வன்னிய சமுதாயத்தினருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கக்கோரி வன்னியர் சங்கம் சார்பில் கடந்த 1987-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்ற மறியல் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 21 பேர் பலியாகினர். இவர்களின் நினைவாக ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 17-ந் தேதியை இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகள் நினைவு தினமாக பா.ம.க.வினர், வன்னியர் சங்கத்தினர் கடைபிடித்து வருகின்றனர்.

    அந்த வகையில் பல்லடம் பச்சாபாளையத்தில் நடைபெற்ற இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகள் தினம் அனுசரிப்பு நிகழ்ச்சியில் தியாகிகள் உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் பா.ம.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மற்றும் நிர்வாகிகள் காளியப்பன், மணிகண்ணன், எம்.ஏ. நகர் குமார், பிரகாஷ், முன்னவன், நந்தகோபால், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேவகோட்டையில் சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகள் கலந்துரையாடல் நடந்தது.
    • மாவட்ட துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், நகர் காவல் ஆய்வாளர் சரவணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 75-வது சுதந்திர தினநாளை முன்னிட்டு 1942 ஆகஸ்டு புரட்சியில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்ற சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுடன் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

    நகர மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமை தாங்கினார். தியாகி பாலபாரதி செல்லத்துரை பேரன் இருமதி துரைகருணாநிதி, தியாகி சின்ன அண்ணாமலை பேரன் மீனாட்சிசுந்தரம், தியாகி ராமநாதன் மகன் சத்யா, தியாகி இறகுசேரி முத்துச்சாமி மனைவி பஞ்சரத்தினம், 17 வயதில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட தியாகி ராமு வாரிசு கல்யாண சுந்தரி முன்னிலை வைத்தனர்.

    மாவட்ட துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், நகர் காவல் ஆய்வாளர் சரவணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். விழா அரங்கில் இந்த பகுதியில் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பேனர் அமைக்கப்பட்டு இருந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட தியாகிகளில் மற்றும் வாரிசுகள் இப்பகுதியில் நடந்த சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வாழ்க்கை மற்றும் நிகழ்வுகளை புத்தக வடிவில் கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்தனர்.

    அந்தமான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி வெள்ளையர் ஆட்சி காலத்தில் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த தியாகிகள் நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்தினார். #Moditribute #AndamanJail #CellularJail
    போர்ட் பிளைர்:

    வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் இந்தியா சிக்கி இருந்தபோது மகாத்மா காந்தி தலைமையிலான சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற முக்கிய தலைவர்களை அன்றைய ஆட்சியாளர்கள் அந்தமான் தீவுக்கு கப்பலில் அனுப்பி, அங்குள்ள தனிமை சிறையில் அடைத்துவைத்து சித்ரவதைப்படுத்தினர்.

    காலா பானி என்றழைக்கப்படும் இந்த சிறையில் சுதந்திர போராட்ட தியாகிகளில் சிலருக்கு முன்னர் தூக்கு தண்டனையும் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அந்தமான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று காலா பானி  சிறையை பார்வையிட்டார்.

    அங்குள்ள தியாகிகள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய மோடி, கடந்த 1911-ம் ஆண்டு இந்துத்துவா தலைவரான வினாயக் தாமோதர் சவர்க்கார் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறை அறைக்கு சென்றார்.

    சவர்க்கார் படத்தின் முன்னர் சிறிது நேரம் கண்களை மூடியவாறு மவுனமாக அமர்ந்து தியானம் செய்தார். பின்னர், அங்குள்ள தூக்கு மேடை மற்றும் சிறை அருங்காட்சியகம் ஆகியவற்றையும் மோடி பார்வையிட்டார். #Moditribute #AndamanJail #CellularJail
    வியட்நாம் வந்துள்ள இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் இருநாடுகளுக்கிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் இன்று கையொப்பமானது. #IndiaVietnam #IndiaVietnamties #KovindVietnamvisit
    ஹனோய்:

    இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்றுநாள் அரசுமுறை பயணமாக வியட்நாம் வந்துள்ளார். நேற்று முன்தினம் வியட்நாம் நாட்டில் உள்ள கடலோர நகரமான டா நாங் நகரில் அவரது விமானம் தரையிறங்கியது. அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    நேற்று தனது மனைவி சவிதா கோவிந்துடன் குவாங் நாம் நகருக்கு சென்ற ராம்நாத் கோவிந்த் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்கும் பதின்மூன்றான் நூற்றாண்டுக்கும் இடையில் சம்பா வம்சத்தை சேர்ந்த மன்னர்களால் உருவாக்கப்பட்ட ‘மை சன்’ கோவில்களையும், கோபுரங்களையும் பார்த்தார்.



    இந்நிலையில், தலைநகர் ஹனோயில் இன்று வியட்நாம் அதிபர் ப்ஹு டிராங்-கை அவர் சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    பாதுகாப்புத்துறை, ஆக்கப்பூர்வமான பயன்பாடுகளுக்காக அணுசக்தியை பயன்படுத்துவது, விண்வெளித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பெட்ரோலிய கச்சா எண்ணைய், எரிவாயு, உள்கட்டமைப்பு துறை மேம்பாடு, வேளாண்மை மற்றும் புத்தாக்கம் தொடர்பான துறைகளில் இருநாடுகளும் உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக இந்த பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டது.

    இருநாடுகளின் இறையாண்மையையும் மதிக்கும் வகையில் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு இந்தியாவும், வியட்நாமும் இனி தொடர்ந்து இணைந்திருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இரு நாடுகளின் தலைவர்களும் இந்த சந்திப்பின் மூலம் உறுதிப்படுத்தினர்.

    இன்றைய பேச்சுவார்த்தையின்போது தலையெடுத்து வரும் பயங்ரவாதத்தை அனைத்து வகையிலும் எதிர்ப்பது எனவும் அவர்கள் உறுதியேற்றனர். வியட்நாம் அதிபருடனான இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக பின்னர் ராம்நாத் கோவிந்த், குறிப்பிட்டார்.

    தொலைத்தொடர்பு, கல்வி, வர்த்தகம், முதலீடு ஆகிய துறைகளில் இருநாடுகளுக்கு இடையில் இன்று சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையொப்பமாகின.

    வியட்நாம் ராணுவத்துக்கு தேவையான ஒத்துழைப்பை நல்கவும், வியட்நாம் கடலோர எல்லைப் பகுதியில் கண்காணிப்பை மேம்படுத்தவும் அதிவிரைவு படகுகளை தயாரிக்க இந்தியா 10 கோடி டாலர்கள் கடன் உதவி அளிக்கும் எனவும் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டார்.

    இந்தியா-வியட்நாம் நாடுகளுக்கு இடையிலான கடந்த ஆண்டு வர்த்தகம் 128 கோடி அமெரிக்க டாலர்களாக ஏறுமுகம் பெற்றிருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்த அவர், வரும் 2020-ம் ஆண்டுக்குள் இந்த தொகை 150 கோடி டாலர்களாக உயரும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். #IndiaVietnam #IndiaVietnamties #KovindVietnamvisit 
    வியட்நாமில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஹனோய் நகரில் உள்ள போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தினார். #RamNathKovind #Vietnam #VietnamNationalAssembly
    ஹனோய்:

    இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வியட்நாம்  மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் ஆறு நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுளார். அவருடன் மத்திய அரசின் உயரதிகாரிகள் குழுவும் சென்றுள்ளது.

    நாளை வரை வியட்நாமில் தங்கும் ராம்நாத் கோவிந்த், அந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல்வேறு தலைவர்களை சந்தித்து இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.



    இந்நிலையில், தனது பயணத்தின் 3ஆம் நாளான இன்று ஹனோய் நகருக்கு சென்றார் ராம்நாத் கோவிந்த். அவரை  தேசிய சபை தலைவர் நிகுயென் தி கிம் நிகான் வரவேற்றார். இருவரும் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர்.

    இதையடுத்து ஹனோயில் உள்ள போர் வீரர்கள் மற்றும் தியாகிகள் நினைவுச் சின்னத்தில் ராம்நாத் கோவிந்த் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் தேசிய சபையில் ராம்நாத் கோவிந்த் உரையாற்ற உள்ளார். #RamNathKovind #Vietnam #VietnamNationalAssembly
    ×