search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    21 தியாகிகளுக்கு பா.ம.க.வினர் மரியாதை
    X

    21 தியாகிகளுக்கு பா.ம.க.வினர் மரியாதை

    • ராமநாதபுரத்தில் 21 தியாகிகளுக்கு பா.ம.க.வினர் மரியாதை செலுத்தினர்.
    • மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இப்ராகிம் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    கடந்த 1987-ம் ஆண்டு செப்.17 அன்று மிகவும் பிற்படுத்தப் பட்டோர் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 21 தியாகிகளுக்கு ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி வீர வணக்கம் செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் தேனிசை அக்கீம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் முனைவர் ஷேக் மொகைதீன் கலந்து கொண்டார்.

    மாவட்ட தலைவர் சந்தன தாஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பு செயலாளர் சதாம் ராஜா, மாவட்டத் துணைச் செயலாளர் தொண்டி ராசிக், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் லட்சுமணன்,மாவட்ட இளைஞர் சங்கத் தலைவர் ஸ்டாலின், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், நகரச் செயலாளர் ராமநாதபுரம் பாலா, மண்டபம் ஒன்றிய செய லாளர் வெங்கடேசன்.

    ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பொறியாளர் சரிப், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தும் கான், மாணவர் சங்க செயலாளர் சந்தோஷ், நகர அமைப்பாளர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இப்ராகிம் நன்றி கூறினார்.

    Next Story
    ×