என் மலர்
நீங்கள் தேடியது "Rajesh"
- ரோபோ சங்கர் ஒரு படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்தார்.
- நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார்.
2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மறக்க முடியாத ஒரு வலி கலந்த ஆண்டு. திரையில் நம்மை சிரிக்க வைத்தவர்கள், கண்களில் கண்ணீர் வர வைத்தவர்கள், ஒரே ஒரு வசனத்தில் மனதில் இடம் பிடித்தவர்கள் இந்த ஆண்டு நம்மை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து சென்றனர். இவர்கள் சென்றாலும், அவர்களின் திரைப்பயணம், கதாபாத்திரங்கள், வசனங்கள் எப்போதும் நம்மோடு வாழ்ந்துகொண்டே இருக்கும்.
அவ்வகையில் இந்தாண்டு நம்மை விட்டு பிரிந்து சென்ற தமிழ் நடிகர்களின் சோக தொகுப்பை தான் இந்த பட்டியலில் பார்க்கவுள்ளோம்

1. ரோபோ சங்கர்
சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
இந்தநிலையில் ரோபோ சங்கர் ஒரு படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை படக்குழுவினர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு குறித்து அறிந்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர்.
ரோபோ சங்கர் சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறி மீண்டும் படங்களில் நடித்து வந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2. மதன் பாப்
பாலு மகேந்திர இயக்கத்தில் வெளிவந்த நீங்கள் கேட்டை படத்தின் மூலம் மதன் பாப் சினிமாவில் அறிமுகமானார். இவர் கடைசியாக நடித்த படம் எமன் கட்டளை.
மதன் பாப், ஃபிரண்ட்ஸ், காவலன், மழை, தெனாலி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், வில்லன், யூத் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தவர். ஏ.ஆர்.ரகுமானின் குரு, தூர்தர்ஷன் டிவின் முதல் இசை கலைஞர் என பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர். இசையமைப்பாளர், காமெடி ஷோ நடுவர், குணச்சித்திர நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர்.
புற்று நோய்க்காக ஏற்கனவே அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இந்தாண்டு தனது 71 ஆவது வயதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதன் பாப் மறைந்த தகவல் அறிந்து திரைத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

3. கோட்டா சீனிவாச ராவ்
கோட்டா சீனிவாச ராவ் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தமிழில் சாமி, திருப்பாச்சி, சகுனி உள்ளிட்ட படங்களில் கோட்டா சீனிவாசராவ் நடித்துள்ளார்.
2015 இல் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது உள்பட பல்வேறு விருதுகளை கோட்டா சீனிவாசராவ் வென்றுள்ளார்.
இந்தாண்டு நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார். இவரது உடலுக்கு பல தெலுங்கு நடிகர்களும் அரசியல் தலைவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
1999- 2004 வரை விஜயவாடா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக கோட்டா சீனிவாசராவ் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

4. சரோஜா தேவி
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) இந்தாண்டு காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள இல்லத்தில் இன்று காலமானார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார்.
சரோஜா தேவி மறைவால் திரையுலகினர் சோகத்தில் மூழ்கினர். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

5. ராஜேஷ்
1979- ஆண்டில் தமிழ் திரையுலகில் அறிமுகமான ராஜேஷ் 150-க்கு மேற்பட்ட படங்கள், சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார்.
பிரபல தமிழ்த் திரைப்படம் நடிகர் ராஜேஷ், அவள் ஒரு தொடர்கதை, அந்த 7 நாட்கள்,மெட்டி, என்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக விஜய் சேதுபதி நடித்த மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
மேலும் யூடியூபில் ஓம் சரவண பவ என்ற சேனலின் மூலம் பல ஆன்மிக செய்திகளும், ஆரோக்கிய செய்திகளை , பல மருத்துவர்களை நேர்காணல் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி வந்தார்.
நடிகர் ராஜேஷ் {76} உடல் நலக்குறைவு காரணமாக இந்தாண்டு காலமானார். ராஜேஷ் அவர்களது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

6. சூப்பர்குட் சுப்பிரமணி
தமிழ் சினிமாவில் குணசித்திர மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் சுப்பிரமணி. திரையுலகில் அவரை பலரும் சூப்பர் குட் சுப்பிரமணி என்றுதான் அழைப்பார்கள். பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியதால் இவரை அனைவரும் சூப்பர்குட் சுப்பிரமணி என அழைக்க தொடங்கினர்.
அவர் பரியேறும் பெருமாள், காலா, பிசாசு என ஏகப்பட்ட ஹிட் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக கையாளும் திறமை கொண்டவர். இவர், கடைசியாக நடித்த பரமன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
இந்தாண்டு புற்று நோயால் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி அரது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சூப்பர் குட் சுப்பிரமணி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்தனர்.

7. மனோஜ்
இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆவார். கடந்த 1999 ஆம் ஆண்டு தாஜ் மஹால் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈர நிலம் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான மார்கழி திங்கள் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.
ஈஸ்வரன், மாநாடு மற்றும் விருமன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படத்தில் நடித்துள்ளார் கடைசியாக ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் வெப் தொடரில் நடித்து இருந்தார்.
இந்தாண்டு மனோஜ் மாரடைப்பு காரணமாக அவரது வீட்டில் இன்று மாலை காலமானார். இச்செய்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியது.

8. ஹூசைனி
1986-ம் ஆண்டு வெளியான 'புன்னகை மன்னன்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஷிஹான் ஹுசைனி. மதுரையை சேர்ந்த இவர் கராத்தே மாஸ்டரும் ஆவார். பல படங்களில் நடித்துள்ள ஹுசைனிக்கு, விஜய்யின் 'பத்ரி' படம் திருப்புமுனையாக அமைந்தது.
கடந்த 2022-ம் ஆண்டில் வெளியான 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் இவரது நகைச்சுவை கலந்த நடிப்பு கவனம் ஈர்த்தது.சினிமா தாண்டி வில் வித்தை பயிற்சியாளராகவும் திகழ்ந்த ஹுசைனி, 400-க்கும் மேற்பட்டோருக்கு அதுதொடர்பான பயிற்சிகளை அளித்து வந்தார்.
புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்றுவந்த ஷிஹான் ஹுசைனி இந்தாண்டு காலமானார்.

9. பிந்து கோஷ்
1980-களில் ரஜினி, கமல்ஹாசன், சத்யராஜ், பிரபு என முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவையில் கலக்கியவர் நடிகை பிந்து கோஷ்.
இவர் நடித்த முதல் படம் களத்தூர் கண்ணம்மா. தொடர்ந்து, தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் சுமார் நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 76 வயதான நடிகை பிந்து கோஷ், இந்தாண்டு உடல்நல குறைவால் காலமானார்.
- 69வது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.
- பொதுக்குழுவில் விஷால், நாசர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
69வது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் விஷால், நாசர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பொதுக்குழு கூட்டத்தில் மறைந்த நடிகர்கள் ராஜேஷ், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட 70 நடிகர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த பொதுக்குழுவில் நடிகர் சங்க கட்டடம் உட்பட பல முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பிரபல தமிழ்த் திரைப்படம் நடிகர் ராஜேஷ் {76} உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 29 ஆம் தேதி காலமானார் .
- ராஜேஷ் அவர்களது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பிரபல தமிழ்த் திரைப்படம் நடிகர் ராஜேஷ் {76} உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 29 ஆம் தேதி காலமானார் . இவர் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.
இவர் 1949 ஆம் ஆண்டு மன்னார்குடியில் பிறந்தார்.1979- ஆண்டில் தமிழ் திரையுலகில் அறிமுகமான ராஜேஷ் 150-க்கு மேற்பட்ட படங்கள், சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார்.
அவள் ஒரு தொடர்கதை, அந்த 7 நாட்கள்,மெட்டி, என்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக விஜய் சேதுபதி நடித்த மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
மேலும் யூடியூபில் ஓம் சரவண பவ என்ற சேனலின் மூலம் பல ஆன்மிக செய்திகளும், ஆரோக்கிய செய்திகளை , பல மருத்துவர்களை நேர்காணல் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜேஷ் அவர்களது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இன்று ராஜேஷ் உடலிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளரை சந்தித்த ரஜினிகாந்த்
"என்னுடைய நெருங்கிய நண்பர், அவரு பெரிய ஹீரோவோ, நடிகரோ, தயாரிப்பாளரோ கிடையாது. ஆனா அவருடைய உடலுக்கு மாண்புமிகு முதலமைச்சரில் இருந்து பல திரைப்பிரபலங்கள் வரை நேரில் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். அது அவர் எப்படி வாழ்ந்தார் என்பதற்கான சான்று. அவருக்கு தெரியாத விஷயங்களே கிடையாது. அடிக்கடி நாங்கள் சந்திப்போம். என் உடல்நிலையில் அதிகம் அக்கறை காட்டுவார். அவருடைய இழப்பு பேரிழப்பு. அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்" என கூறியுள்ளார்
- கடந்த டிசம்பரில் கோவையில் அவருக்கு இதய அறுவைச் சிகிச்சைச நடந்தது.
- உடம்பு சரியில்லாமல் ராஜேஷ் காலமாகி விட்டார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நடிகா் ராஜேஷ் மறைவு பற்றி நடிகை வடிவுக்கரசி கூறியதாவது:-
என்ன பேசுவதென்றே தெரியவில்லை. எத்தனையோ நடிகர்களுடன் நடித்து வருகிறோம். ராஜேஷ் அவ்வளவு நல்ல மனிதர். தப்பு பண்ணுவதற்கே பயப்படுவார்.
என்னுடைய பிறந்த நாளை நான் மறந்துவிட்டால் கூட அவரோட வாழ்த்துதான் முதலில் வரும். கடைசி நிமிடம் வரை நடித்துக் கொண்டிருப்பீர்கள் என என்னைப் பார்த்து சொல்வார்.
கடந்த வாரம் என்னிடம் அவர் பட்டுக்கோட்டை போய் வந்தேன். மகனுக்கு பெண் பார்த்தாச்சு. ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் திருமணம் வைத்துக் கொள்ளலாம். அதைப் பற்றி விளக்கமாக உங்களிடம் சொல்கிறேன். என கூறினார்.
ரொம்ப சந்தோஷம் என நான் கூறியதும் மகன் திருமணத்திற்கு உங்களுக்கு நல்ல பட்டு புடவை வாங்கி தருகிறேன் என கூறினார். கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி சித்த மருத்துவமனை திறப்பு விழாவிற்காக நானும் அவரும் திருச்சி போயிருந்தோம்.
அப்போது அவரிடம் நான் கன்னிப் பருவத்திலே படம் திருச்சியில் நாம் இருவரும் தான் நடித்தோம். அதற்கு அவர் ஆமாம்... ஆமாம்.. நீங்கள் தான் என் முதல் கதாநாயகி என சொன்னார்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21 அன்று கன்னிப் பருவத்திலே படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆச்சு என்று வருடம் தவறாமல் பேசுவார். சாப்பாடு, ஆரோக்கியத்திலும் ரொம்ப சரியாக இருப்பார். அவர் உடம்பு சரியில்லாமல் காலமாகி விட்டார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.
இப்பவும் யாரையோ பற்றி பேசுகிறோம் என்று தான் உள்ளது. ராஜேஷ் சாரை பற்றி பேசுகிறோம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்பதானே பேசினோம் என்று தோன்றுகிறது.
கடந்த டிசம்பரில் கோவையில் அவருக்கு இதய அறுவைச் சிகிச்சைச நடந்தது. தற்போது அவர் மறைந்துவிட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.
இவ்வாறு கண்கலங்கிய படி அவர் கூறினார்.
- தேடல் உள்ள நடிப்புக் கலைஞர்களில் அதிகம் வாசிப்பதையும் வாசித்ததைச் சிந்திப்பதையும் வழக்கமாகக்கொண்டவர்.
- அவரை இழந்து வேதனைப்படும் குடும்பத்தாருக்கு என் ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நடிகர் ராஜேஷ் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தேடல் உள்ள நடிப்புக் கலைஞர்களில் அதிகம் வாசிப்பதையும் வாசித்ததைச் சிந்திப்பதையும் வழக்கமாகக்கொண்டவர் அன்பு நண்பர் ராஜேஷ்.
தன் வாழ்வின் இறுதிவரை உற்சாகமும் செயல்பாடும் குறையாமல் வாழ்ந்த அவரது மறைவு பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அவரை இழந்து வேதனைப்படும் குடும்பத்தாருக்கு என் ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ராஜேஷ் அவர்களின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது.
- சிறப்பான நடிப்பினால் சின்னத்திரை நெடுந்தொடர்கள் பல வெற்றித்தொடர்களாகப் பெரும்புகழ் பெற்றன.
நடிகர் ராஜேஷ் மறைவு தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
தமிழ்த்திரை மற்றும் சின்னத்திரை மூத்த நடிகர், பின்குரல் கலைஞர், எழுத்தாளர், மிகச்சிறந்த வாசிப்பாளர், வலையொளியாளர் என பன்முகத்திறன் பெற்ற படைப்பாளி, மனிதநேயமிக்க மாண்பாளர் அன்பிற்கினிய அண்ணன் இராஜேஷ் அவர்களின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது.
கன்னிப்பருவத்திலே, அந்த 7 நாட்கள், அச்சமில்லை அச்சமில்லை, பயணங்கள் முடிவதில்லை, மகாநதி, இருவர், விருமாண்டி உள்ளிட்ட பல திரைக்காவியங்களில் தன்னுடைய தனித்துவமிக்க குணச்சித்திர நடிப்பின் மூலம் தனிமுத்திரை பதித்த அண்ணன் இராஜேஷ் அவர்களின் மறைவு தமிழ்த்திரைத்துறைக்கு ஏற்பட்டுள்ள ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது சிறப்பான நடிப்பினால் சின்னத்திரை நெடுந்தொடர்கள் பல வெற்றித்தொடர்களாகப் பெரும்புகழ் பெற்றன.
ஓம் சரவணபவ வலையொளி மூலம் உடல்நலனைப் பாதுகாப்பது குறித்து பல அரிய தகவல்களை இறுதிநாள்வரை, தொடர்ச்சியாகப் பொதுமக்களுக்கு வழங்கி வழிகாட்டிய பெருமகன்.
தனிப்பட்ட முறையில் என்மீது பெரும் பாசமுடைய அண்ணன் ராஜேஷ் அவர்கள், அவரிடமிருந்த கிடைத்தற்கரிய சிறந்த புத்தகங்களை எனக்கனுப்பி தந்து படிக்க பரிந்துரைத்த பேரன்புக்காரர். நாங்கள் முன்வைக்கும் அரசியல் கருத்துகள் மிகச்சரியானது என்பதை பல தருணங்களில், பல மேடைகளில் தயக்கமின்றி வெளிப்படுத்திய பெருந்தகை!
அண்ணன் ராஜேஷ் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், வலையொளி பின்தொடர்பாளர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
தலைச்சிறந்த குணச்சித்திரத் திரைக்கலைஞர் அண்ணன் இராஜேஷ் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராஜேஷ் காலமானார்.
- ராஜேசுக்கு திவ்யா என்ற மகளும், தீபக் என்ற மகனும் உள்ளனர்.
'அவள் ஒரு தொடர்கதை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ராஜேஷ் (வயது 75). தொடர்ந்து கன்னிப் பருவத்திலே, அச்சமில்லை, சாமி, ரெட், ஆட்டோகிராப் என தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து இருக்கிறார். நடிகராக மட்டுமின்றி டப்பிங் கலைஞ ராகவும் பணியாற்றி வந்த ராஜேஷ் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார்.
45 ஆண்டு காலமாக சினிமாத்துறையில் பயணித்து வரும் ராஜேஷ் குடும்பத்துடன் ராமாபுரத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராஜேஷ் காலமானார்.
இதையடுத்து அவரது உடல் ராமாபுரம் கோத்தாரி நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது திடீர் மறைவு திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ராஜேஷ் மறைவு பற்றி தகவல் அறிந்ததும் அவரது உடலுக்கு ஏராளமான திரை உலகினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகர் ராஜேஷ் மனைவி ஜோன்சில்வியா கடந்த 2012-ம் ஆண்டு காலமானார். ராஜேசுக்கு திவ்யா என்ற மகளும், தீபக் என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் ராமாபுரத்திலுள்ள இல்லத்தில் நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் கே.என்.நேரு உள்ளிட்டோரும் ராஜேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
- பிரபல தமிழ்த் திரைப்படம் நடிகர் ராஜேஷ் {76} உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
- ராஜேஷ் 150-க்கு மேற்பட்ட படங்கள், சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார்.
பிரபல தமிழ்த் திரைப்படம் நடிகர் ராஜேஷ் {76} உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.
இவர் 1949 ஆம் ஆண்டு மன்னார்குடியில் பிறந்தார்.1979- ஆண்டில் தமிழ் திரையுலகில் அறிமுகமான ராஜேஷ் 150-க்கு மேற்பட்ட படங்கள், சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார்.
அவள் ஒரு தொடர்கதை, அந்த 7 நாட்கள்,மெட்டி, என்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக விஜய் சேதுபதி நடித்த மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
மேலும் யூடியூபில் ஓம் சரவண பவ என்ற சேனலின் மூலம் பல ஆன்மிக செய்திகளும், ஆரோக்கிய செய்திகளை , பல மருத்துவர்களை நேர்காணல் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ராஜேஷ் அவர்களது மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கள் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் "என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷ் அவர்களின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மன வேதனையைத் தருகிறது. அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்." என கூறியுள்ளார்.
- திரைப்படம் நடிகர் ராஜேஷ் {76} உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
- இவர் மூச்சு திணறல் ஏற்ப்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.
பிரபல தமிழ்த் திரைப்படம் நடிகர் ராஜேஷ் {76} உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் மூச்சு திணறல் ஏற்ப்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.
இவர் 1949 ஆம் ஆண்டு மன்னார்குடியில் பிறந்தார்.1979- ஆண்டில் தமிழ் திரையுலகில் அறிமுகமான ராஜேஷ் 150-க்கு மேற்பட்ட படங்கள், சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார்.
அவள் ஒரு தொடர்கதை, அந்த 7 நாட்கள்,மெட்டி, என்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக விஜய் சேதுபதி நடித்த மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
மேலும் யூடியூபில் ஓம் சரவண பவ என்ற சேனலின் மூலம் பல ஆன்மிக செய்திகளும், ஆரோக்கிய செய்திகளை , பல மருத்துவர்களை நேர்காணல் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய தயாரிப்பாளரான கோட்டபாடி ஜே ராஜேஷ் கடந்த 2016 ஆம் ஆண்டு நயன்தாரா நடித்த அறம் திரைப்படத்தை முதலில் தயாரித்தார்.
- தயாரிப்பாளராக இருந்த ராஜேஷ் தற்பொழுது நடிகர் அவதாரம் எடுத்துள்ளார்.
இந்திய தயாரிப்பாளரான கோட்டபாடி ஜே ராஜேஷ் கடந்த 2016 ஆம் ஆண்டு நயன்தாரா நடித்த அறம் திரைப்படத்தை முதலில் தயாரித்தார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அதை தொடர்ந்து பிரபு தேவாவின் குலேபகவாலி, ஐரா, டிக்கிலோனா, விஜய் சேதுபதியின் க.பே ரணசிங்கம் மற்றும் சிவகார்த்திகேயனின் ஹீரோ, டாக்டர் மற்றும் அயலான் திரைப்படத்தை தயாரித்தார்.
இந்நிலையில் தயாரிப்பாளராக இருந்த ராஜேஷ் தற்பொழுது நடிகர் அவதாரம் எடுத்துள்ளார். இதற்காக கடுமையான உடற் பயிற்சி செய்து உடலெடையை குறைத்துள்ளார். இப்படத்தை பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநராக இருந்த ஜேபி தென்பதியன் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு அங்கீகாரம் என தலைப்பிடப்பட்டுள்ளது. திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாக இருக்கிறது.
இப்படம் ஒரு ஸ்போர்ட்ஸ் கோர்ட் டிராமா கதைக்களத்தில் உருவாகி வருகிறது. படத்தை ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையை ஜிப்ரான் மேற்கொள்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தை பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
I waited when I had to,I stepped in because I wanted to,And I step up because I can.#ANGIKAARAM - #GURTIMPU A Statement by @jpthenpathiyan Second Look at 12.02 PM@swastik_visions @GangaEnts @GhibranVaibodha @viswafilmmaker @vijivenkatesh @SindhooriC @Sanlokesh… pic.twitter.com/TJrAl50UFM
— KJR (@KJRuniverse) May 23, 2025
- பிரதர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகிறது.
- ஸ்கிரீன் சீன் மீடியா இப்படத்தை தயாரித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக ஜெயம் ரவி நாயகனாக நடித்த எந்த திரைப்படமும் மக்களிடையே பெரிய வரவேற்பை பெறவில்லை. அவர் கடைசியாக சைரன் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
ஜெயம் ரவி அதற்கடுத்து பல சுவாரசியமான படங்களில் கமிட் ஆகியுள்ளார் இதனால் இவர் அடுத்து நடித்து கொண்டிருக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஜெயம் ரவி தற்பொழுது பிரதர், ஜீனி , மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரதர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகிறது.
பிரதர் திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையை மேற்கொண்டுள்ளார்.
சில வாரங்களுக்கு முன் படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் வாங்கியுள்ளது என்ற அப்டேட்டை ஒரு வீடியோ மூலம் யூ டியூபில் வெளியிட்டனர். ஸ்கிரீன் சீன் மீடியா இப்படத்தை தயாரித்துள்ளது.
இந்நிலையில் படத்தின் அடுத்த அப்டேட்டை நாளை காலை 11:11 மணிக்கு வெளியிடப்போவதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழுவினர் அறிவித்துள்ளனர். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரதர் திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார்.
- படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகிறது.
ஜெயம் ரவி சைரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பல சுவாரசியமான படங்களில் கமிட் ஆகியுள்ளார் இதனால் இவர் அடுத்து நடித்து கொண்டிருக்கும் படங்களின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஜெயம் ரவி தற்பொழுது பிரதர், ஜீனி , மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரதர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகிறது.
பிரதர் திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையை மேற்கொண்டுள்ளார்.
சில வாரங்களுக்கு முன் படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் வாங்கியுள்ளது என்ற அப்டேட்டை ஒரு வீடியோ மூலம் யூ டியூபில் வெளியிட்டனர். ஸ்கிரீன் சீன் மீடியா இப்படத்தை தயாரித்துள்ளது.
தற்பொழுது படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தின் முதல் பாடலான மக்காமிஷி பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. இது குறித்து படக்குழுவினர் வாட் இஸ் மக்காமிஷி? என்ற போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






