என் மலர்
நீங்கள் தேடியது "Saroja Devi"
- கவிஞர் குவேம்பு-க்கு பாரத ரத்னா விருது வழங்கக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்.
- நடிகர் விஷ்ணுவர்தனுக்கும் கர்நாடகா ரத்னா விருது வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
கர்நாடக மாநில அமைச்சரவை மறைந்த நடிகர் விஷ்ணுவர்தன் மற்றும் நடிகை சரோஜா தேவிக்கு கர்நாடகா ரத்னா விருது வழங்க முடிவு செய்துள்ளது.
மேலும், கவிஞர் குவேம்பு-க்கு பாரத ரத்னா விருது வழங்கக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்ப தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என அம்மாநில சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே. பாட்டீல் தெரிவித்துள்ளார்.
உப்பேர் பத்ரா நீர்ப்பாசன திட்டத்திற்காக 75 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நாளை சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தார்.
- சரோஜாதேவி உடலுக்கு திரை உலக பிரமுகர்கள், பொதுமக்கள் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
- பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மல்லேசுவரத்தில் வசித்து வந்த பழம்பெரும் நடிகையான சரோஜாதேவி நேற்று காலமானார். அவரது மரணம் திரை உலகில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடலுக்கு இந்திய திரை பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பெங்களூரு மல்லேசுவரம் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த அவரது உடலுக்கு திரை உலக பிரமுகர்கள், அரசியல் பிரபலங்கள். ரசிகர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், அவரது சொந்த ஊரான சென்னபட்டணா தாலுகா தசவாரா கிராமத்தில் ஒக்கலிகர் சமூக முறைப்படி இறுதிச்சடங்கு நடந்தது. சரோஜாதேவி தனது தாயார் ருத்ரம்மாவின் கல்லறை அருகே தனக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட வேண்டும் என கூறி இருந்தார். அவரது விருப்பத்திற்கிணங்க தாயார் கல்லறை அருகில் அரசு மரியாதையுடன் சரோஜாதேவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நடிகை சரோஜாதேவி தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி போன்ற பல்வேறு மொழிப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி திரை உலகில் சுமார் 167-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
- முதல் படத்திலேயே அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டதோடு, தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.
இப்போ இருக்குற 2 கே கிட்ஸ்-க்கு லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அது நயன்தாராவை தான் கூறுவார்கள். ஆனால் 1960 காலக்கட்டங்களில் தி ஒரிஜினல் OG லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அது நடிகை சரோஜாதேவி தான். சுமார் 30 ஆண்டுகளாக தென்னிந்திய திரையுலகை ஆண்ட இந்த நடிகை சரோஜா தேவி யார்?
தமிழ் திரை உலகில் அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வந்தவர் சரோஜா தேவி (87). தன் நடிப்பாலும், உடல் அசைவுகளாலும், நலினத்தாலும் ஒட்டு மொத்த தென்னிந்திய திரை உலகத்தையே கட்டுப் போட்டு கால் நூற்றாண்டுக்கு மேலாக வெற்றிக்கரமாக பயணித்து வந்தார். அவரது நடை, உடை, முகபாவனைகள், சிகை அலங்காரங்கள், நடிப்பு ஆகிய அனைத்தும் திரை உலக ரசிகர்களை மிகவும் கவர்ந்து வந்தது.
தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி திரை உலகில் சுமார் 167-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1955-ம் ஆண்டு முதல் 1984-ம் ஆண்டு வரை 29 ஆண்டுகள் தொடர்ச்சியாக படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்த ஒரே இந்திய நடிகை சரோஜா தேவி.
சிறுவயதில் இருந்தே நடனம் கற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருந்த சரோஜாதேவியை நடிக்க ஊக்குவித்தவர் அவரது அப்பா பைரப்பாதான். 13 வயதிலேயே சரோஜாதேவிக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அப்போது அதனை மறுத்துவிட்ட அவர், 1955ம் ஆண்டு தனது 17 வயதில் 'மகாகவி காளிதாஸ்' என்ற கன்னடப் படத்தில் நாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டதோடு, தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.
தமிழ் திரையுலகில் பல கதாநாயகிகள் வந்து சென்றாலும், சரோஜா தேவியின் இடத்தை யாராலும் கைப்பற்ற முடியவில்லை. இவர் கொஞ்சி பேசும் வசனங்கள் இன்றும் ரசிகர்களின் மனதில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இக்காலக்கட்டத்தில் கதாநாயகிகள் வைரல் அல்லது புகழடைய வேண்டுமென்றால் ஒரு படத்தில் அல்லது ஒரு பாடலில் கவர்ச்சி உடையணிந்து பார்வையாளர்களை கவர்ந்து சினிமா மார்க்கெட்டில் அவர்களை தக்க வைத்துக் கொள்கின்றனர் ஆனால் எந்த வித நீச்சல் ஆடை அணியாமல் கவர்ச்சி உடை அணியாமல் முன்னணி அந்தஸ்துடைய கதாநாயகியாக சரோஜா தேவி திகழ்ந்தார்.

எம்.ஜி ஆர் உடன் 26 படங்களிலும். சிவாஜி கணேசனுடன் 22 படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். 50 ஆண்டு திரைப்பயணத்தில் 2000-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

1990-ம் ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்து வந்தார். 1997-ல் வெளிவந்த ஒன்ஸ்மோர் படத்தில் சிவாஜிகணேசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். சூர்யா நடித்த ஆதவன் படம் தான் இவர் கடைசியாக நடித்த தமிழ் படம். பல ஆண்டுகளாக பெங்களூர் மல்லேஸ்வரத்தில் உள்ள அவரது வீட்டில் வாழ்ந்து வந்தார்.
வயது முதிர்வு காரணமாக சில ஆண்டுகளாக சரோஜா தேவி உடல்நலக் குறைவினால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமாகி இன்று காலை காலமானார்.


தமிழ் திரை உலக ரசிகர்கள் மனதில் இன்றும் அபிநய சரஸ்வதியாக வாழ்ந்து வந்த சரோஜா தேவியின் மரணம் திரை உலகை மட்டுமின்றி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
- நாடோடி மன்னன் படத்துக்கு பல தனிச்சிறப்புகள் உண்டு.
- நாடோடி மன்னன் எம்.ஜி.ஆர். தயாரித்து இயக்கிய முதல் திரைப்படம் ஆகும்.
சரோஜாதேவி சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் அவரை சினிமா உலகில் உச்சத்துக்கு கொண்டு சென்ற படம் 'நாடோடி மன்னன்' தான். நாடோடி மன்னன் படத்துக்கு பல தனிச்சிறப்புகள் உண்டு.
நாடோடி மன்னன் எம்.ஜி.ஆர். தயாரித்து இயக்கிய முதல் திரைப்படம் ஆகும்.
இந்த படத்தில் முதல் கதாநாயகி பானுமதி. 2-வது கதாநாயகியாக சரோஜா தேவி. இந்த படத்தில் கதாநாயகியாக சரோஜா தேவியை நடிக்க வைக்க சில எதிர்ப்புகள் கிளம்பினாலும் எம்.ஜி.ஆர் அவரை கதாநாயகி ஆக்குவதில் உறுதியாக இருந்தார்.

தமிழ் சினிமாவில் முதல் வண்ண திரைப்படம் 'அலிபாபாவும் 40 திருடர்களும்'. அதே நேரத்தில் பகுதி நேர முதல் வண்ண திரைப்படம் நாடோடி மன்னன்.
நாடோடி மன்னன் படம் முதல் பாதிக்கும் மேல் கருப்பு வெள்ளை திரைப்படம், பாதிக்கு பிறகு வண்ண திரைப்படமாக வெளியானது.

இந்த படம் சரோஜா தேவியின் அறிமுக காட்சியுடன் வண்ணத்திரைப் படமாக ஆரம்பமாகும். 'கண்ணில் வந்த மின்னல் போல் காணுதே' என்ற பாடல் காட்சியுடன் சரோஜா தேவி அறிமுகமாவார். தண்ணீருக்கு அடியில் நின்ற படி எம்.ஜி.ஆர், சரோஜா தேவி பாடும் வகையில் இந்த பாடல் காட்சி அமைந்திருக்கும்.
சரோஜா தேவி அறிமுகமான இந்த பாடல் காட்சி பட்டி தொட்டி எங்கும் ரசிகர்களால் கை தட்டி விசில் அடித்து கொண்டாடப்பட்டது. அதன் பிறகு சரோஜா தேவி தமிழ் திரைப்பட உலகில் தவிர்க்க முடியாத கதாநாயகி ஆனார்.
ரசிகர்களுக்கு தெரியாத குடும்ப வாழ்க்கை
சரோஜாதேவியின் இயற்பெயர் ராதாதேவி கவுடா. இவர் பெங்களூரில் 1938-ம் ஆண்டு ஜனவரி 7-ந்தேதி பிறந்தார். அவரது தந்தை பைரப்பா காவல் துறையில் பணிபுரிந்தார். அவரது தாயார் ருத்ரம்மா. அவர்களின் 4-வது மகள்தான் சரோஜாதேவி.
சரோஜாதேவிக்கு சரஸ்வதிதேவி, பாமாதேவி, சீதாதேவி என்ற 3 அக்காவும் வசந்தா தேவி என்ற ஒரு தங்கையும் உள்ளனர். இளம் பருவத்தில் சரோஜாதேவி தனது தந்தையுடன் அடிக்கடி ஸ்டுடியோக்களுக்கு செல்வார்.

சினிமாவுக்காக நடனம் கற்றுக் கொண்டார். சினிமா படங்களில் நீச்சல் உடைகள் மற்றும் அறைகுறை ஆடைகள் அணிவதை தவிர்த்தார். தமிழ் திரையுலகில் 60 முதல் 70 வரையான கால கட்டங்களில் 17 வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்த சரோஜாதேவி எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் ஆகிய 3 பேருடனும் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர். ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர் என்ற பெருமைகளை பெற்றவர் நடிகை சரோஜாதேவி.
இவர் ராதாதேவி என்ற பெயரை திரை உலகிற்காக சரோஜாதேவி என்ற பெயரை மாற்றிக் கொண்டு ஹொன்னப்ப பாகவதர் தயாரித்த "மகாகவி காளிதாஸ்" என்ற கன்னடப் படத்தில் (1955) கதாநாயகியாக அறிமுகம் ஆனார். முதல் படமே அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. அந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது.
கன்னடப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிப் புகழ் பெற்ற சரோஜாதேவிக்கு தமிழ்நாட்டில் பெரிய புகழைத் தேடித்தந்த படம் எம்.ஜி.ஆரின் "நாடோடி மன்னன்" இதன் பின்னர் ஸ்ரீதரின் "கல்யாணப் பரிசு" (1959) படத்தில் நடித்து நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். சரோஜாதேவி 1967-ம் ஆண்டு மார்ச் 1-ந்தேதி அன்று எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயர் ஸ்ரீ ஹர்ஷாவை திருமணம் செய்து கொண்டார். அந்த நேரத்தில் அவர் நிதி நெருக்கடி மற்றும் வருமான வரி சிக்கல்களை எதிர் கொண்டார்.
இந்த சிக்கல்களை சமாளிக்க அவரது கணவர் உதவினார். மேலும் அவரது நிதிகளை எவ்வாறு நிர்வகிப்பது என்று அவருக்குக் கற்றுக் கொடுத்தார். சரோஜாதேவி கணவர் ஸ்ரீஹர்ஷா 1986-ல் ஆண்டு இறந்தார்.
- சரோஜா தேவி தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
- 50 ஆண்டு காலமாக திரைப்படத் துறையில் இவர், 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
சரோஜா தேவி தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். 50 ஆண்டு காலமாக திரைப்படத் துறையில் இவர், 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். திரைப்படத்துறையினரால் 'கன்னடத்துப் பைங்கிளி', 'அபிநய சரசுவதி' போன்ற அடைமொழிகளால் அழைக்கப்படுகிறார்.
'கன்னடத்துப் பைங்கிளி' - தமிழ்த் திரையில் 25 ஆண்டுகள் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்த பி. சரோஜா தேவி சினிமாவில் நுழைந்ததே ஒரு விபத்து என்றுதான் சொல்ல வேண்டும்.
ஹொன்னப்ப பாகவதர் கவி காளிதாஸாக நடித்து, தயாரித்த 'மகாகவி காளிதாஸா' என்ற கன்னடப் படத்தில் 1955-ம் ஆண்டு அறிமுகமானார் சரோஜா தேவி. படம் மிகப்பெரிய வெற்றி. அதற்குத் தேசிய விருதும் கிடைத்தது.
தமிழில் உடனடியாக நடிக்க முடியாதபடி கன்னடப் படங்கள் அவருக்குக் குவிந்தன. 'இல்லறமே நல்லறம்' என்ற படத்தில் சின்ன வேடத்தில் தமிழில் அறிமுகமானார் சரோஜாதேவி. அதன் பின்னர் 2-வது கதாநாயகி வேடங்கள் கிடைக்கத் தொடங்கின.
அதே ஆண்டில் எம்.ஜி.ஆர். சொந்தப்பட நிறுவனம் தொடங்கி இயக்கித் தயாரித்து நடித்த 'நாடோடி மன்னன்' படத்தில் 'ரத்னா'வாக வந்து அலங்கரித்த சரோஜாதேவி, தமிழ் ரசிகர்கள் மனதிலும் ஊடுருவினார்.
எம்.ஜி.ஆருடன் நாடோடி மன்னன் தொடங்கித் திருடாதே, தாய் சொல்லைத் தட்டாதே, படகோட்டி, எங்க வீட்டுப் பிள்ளை, பெற்றால்தான் பிள்ளையா, அன்பே வா உட்பட அவர் நடித்த அத்தனை படங்களும் வெற்றி பெற்றன.
சரோஜா தேவின் தமிழ்த் திரைப் பயணத்தில் மறக்க முடியாத பரிசென்றே கல்யாணப் பரிசு படத்தைக் கூறிவிடலாம். ஸ்ரீதர் இயக்குநராக அறிமுகமான இந்தப் படத்தில் நடித்ததன் மூலமாகவே பெரும் நட்சத்திர அந்தஸ்து பெற்றார் சரோஜாதேவி. சிவாஜி கணேசனுடன் பாகப்பிரிவினை, பாவமன்னிப்பு, பார்த்தால் பசி தீரும் என்று தொடங்கி 'புதிய பறவை'யாகக் காதலித்து அவரைக் கைது செய்ய வரும் ரகசிய ஏஜெண்டாகப் பிரமாதப்படுத்தினார்.
படப்பிடிப்பில் ஒழுங்கு, காலம் தவறாமை ஆகியவற்றுக்குப் புகழ்பெற்ற சரோஜா தேவி அன்றைய நாயகியரில் அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமையும் கொண்டவர். சரோஜா தேவி திருமணத்துக்குப் பிறகும் கணவர் பி.கே. ஸ்ரீ ஹர்ஷாவின் அனுமதியுடன் படங்களில் கதாநாயகியாக நடித்தார். திருமணம் செய்துகொண்டால் வாய்ப்புகள் குறைந்துவிடும் என்ற மாயையை முதலில் உடைத்தெறிந்தவர்.
நாடோடி மன்னனில் நடிக்க வைக்க சரோஜா தேவியை எம்.ஜி.ஆர். தேர்வு செய்தது எப்படி?
சரோஜா தேவி, நாடோடி மன்னன் படத்தில் நடிப்பதற்கு முன்பாக இயக்குநர் கே.சுப்பிரமணியம் தயாரித்த "கச்ச தேவயானி" என்ற கன்னடபடத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது இயக்குனர் கே.சுப்பிரமணியத்தை சந்திக்க வந்த எம்.ஜி.ஆர். அங்கே நடித்து வந்த புதுமுக நடிகையான சரோஜா தேவியை கண்டு, "யார் அந்த பெண்?" என்று இயக்குநர் கே.சுப்பிரமணியத்திடம் கேட்டுள்ளார்.
அவர் பெயர் சரோஜா தேவி, பெங்களூரைச் சேர்ந்தவர் என்ற பதில் அப்போது வந்துள்ளது.
அது முடிந்து எம்.ஜி.ஆர். அமைதியாக அங்கிருந்து சென்றாலும், அவரது மனதில் ஒரு திட்டம் பிறந்தது. அவர் நடிக்கஇருந்த 'திருடாதே' படத்திற்கு சரோஜா தேவியை கதாநாயகியாக தேர்வு செய்ய விரும்பினார். இதனால் சரோஜா தேவியை அழைத்து மேக்கப் டெஸ்ட் நடத்தப்பட்டது. பிறகு படக் குழுவினர் புதுமுகத்தை நாயகியாக கொண்டுவர குழப்பம் காட்டினாலும், எம்.ஜி.ஆர். தனது முடிவில் உறுதியாக இருந்தார். ஒரு கட்டத்தில் 'திருடாதே' படத்தின் படப்பிடிப்பு தாமதமானதால் எம்.ஜி.ஆர். தனது சொந்த தயாரிப்பான 'நாடோடி மன்னன்' படத்தில் சரோஜாதேவியை 2-வது கதாநாயகியாக அறிமுகம் செய்ய முடிவு செய்தார். ஆரம்பத்தில் பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு இணையாக சரோஜாதேவியின் நடிப்பும் இருந்ததால் பலராலும் அவர் பாராட்டப்பட்டார். இதற்கு பிறகு இந்த கூட்டணி நாடோடி மன்னன் தொடங்கி 26 படங்களில் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் கலை பொக்கிஷமாக மாறினார்கள்
- பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்.
- சரோஜா தேவி மறைவால் திரையுலகினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள இல்லத்தில் இன்று காலமானார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார்.
சரோஜா தேவி மறைவால் திரையுலகினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் அவரது இரங்கலை தெரிவித்து இருந்தார்.

அந்த வரிசையில் நடிகை குஷ்பு, பாக்கியராஜ், வைரமுத்து ஆகியோர் அவர்களது இரங்களை பதிவிட்டு வருகின்றனர்.
வைரமுத்து - நல்ல தோழியை இழந்துவிட்டேன் என கூறியுள்ளார்.

குஷ்பு - சரோஜா தேவி அம்மா எல்லா காலத்திலும் ஒரு சிறந்த நடிகை
என கூறியுள்ளார்.
- பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்.
- தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்.உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள இல்லத்தில் இன்று காலமானார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார்.
சரோஜா தேவி மறைவால் திரையுலகினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் அவரது இரங்கலை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் அதில் அவர் "பல கோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த மாபெரும் நடிகை சரோஜாதேவி இப்போது நம்முடன் இல்லை.
அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்." என கூறியுள்ளார்.
- "சரோஜா தேவி" எனும் பெயர் அப்படங்கள் வாயிலாக என்றென்றைக்கும் உச்சரிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.
- சரோஜா தேவியை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத் துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னை :
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
பழம்பெரும் திரைப்பட நடிகை, "அபிநய சரஸ்வதி" என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சரோஜா தேவி காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பன்மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது தனித்துவமிக்க நடிப்பாற்றலால் ரசிகர்களைக் கவர்ந்தவர் சரோஜா தேவி அவர்கள்.
மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுடன் சரோஜா தேவி அவர்கள் இணைந்து நடித்த திரைப்படங்கள் யாவும் காலத்தால் அழியாப் புகழ் பெற்றவை. "சரோஜா தேவி" எனும் பெயர் அப்படங்கள் வாயிலாக என்றென்றைக்கும் உச்சரிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.
மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பேரன்பைப் பெற்ற சரோஜா தேவியை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத் துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
- ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் பல மறக்க முடியாத வெற்றிப் படங்களை அளித்தவர் சரோஜாதேவி.
- பொலிவூட்டி தமிழ் மக்களின் நெஞ்சினில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் சரோஜா தேவி அம்மையார்.
சென்னை :
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
தென்னிந்தியத் திரையுலகின் பழம்பெரும் நடிகையான சரோஜாதேவி மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், ஜெமினி கணேசன் முதலிய உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து இரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் பல மறக்க முடியாத வெற்றிப் படங்களை அளித்தவர் சரோஜாதேவி.
தமது அழகிய முகபாவங்களாலும் நளினமான நடிப்பாலும் 'அபிநய சரஸ்வதி' எனப் புகழப்பட்டவர். நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும், கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா, உன்னை ஒன்று கேட்பேன், லவ் பேர்ட்ஸ், தொட்டால் பூ மலரும், ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என எத்தனையோ இனிய பாடல்களுக்குத் தமது நடிப்பால் பொலிவூட்டி தமிழ் மக்களின் நெஞ்சினில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் சரோஜாதேவி அம்மையார் அவர்கள்.
சுமார் 200 திரைப்படங்களில் நடித்து, இந்தியத் திரையுலகிற்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக பத்மஸ்ரீ, பத்மபூஷன், இந்திய அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது என எண்ணற்ற பெருமைகளைப் பெற்றவர். எப்போதும் இனிய முகத்துடனும், கனிவான பேச்சுடனும் காணப்படும் சரோஜாதேவி அவர்களின் மறைவு எளிதில் ஈடுசெய்ய முடியாதது.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும், அவரது இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.









