search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saroja devi"

    பழம்பெரும் நடிகை சரோஜா தேவியை நடிகர் விஷால் அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து நலம் விசாரித்து இருக்கிறார்.
    நடிகர் விஷால் நடிப்பில் தற்போது எனிமி திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனந்த் சங்கர் இயக்கிய இப்படத்தை வினோத் தயாரித்து இருந்தார். இப்படத்தை தொடர்ந்து குறும்பட இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் வீரமே வாகை சூடும் படத்தில் விஷால் நடித்துள்ளார்.

    விஷால்

    இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்து அறிமுக இயக்குனர் வினோத்தின் இயக்கத்தில் தற்போது விஷால் நடித்து வருகிறார். இந்நிலையில் பழம்பெரும் நடிகை சரோஜாதேவியை அவரது வீட்டிற்கு சென்று நடிகர் விஷால் சந்தித்துள்ளார். அவரின் உடல்நலம் குறித்து விசாரித்த பிறகு அவருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
    பழம்பெரும் நடிகை சரோஜா தேவி தனியார் சேனலில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பேசும்போது, கலைஞரின் வசனத்தை பேச பயந்தேன் என்று கூறியிருக்கிறார். #SarojaDevi
    பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மகளிர் தினத்தையொட்டி தனியார் சேனலில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிவாஜி கணேசனுடன் ’இருவர் உள்ளம்’ படத்தில் நடித்தேன். எழுத்தாளர் லட்சுமியின் கதை இது. எல்.வி.பிரசாத் இயக்கியிருந்தார். கலைஞர்தான் வசனம் எழுதியிருந்தார். கலைஞரின் வசனத்தை சரியாகப் பேசவேண்டுமே என்று எனக்கு உதறலாகவே இருந்தது.

    அந்தப் படத்தில் ஒரு காட்சி. சிவாஜி அவர்கள் என்னிடம், ‘என்னை ஏன் விரும்பமாட்டேங்கிறே? எனக்கு படிப்பு இல்லையா? அழகில்லையா?’ என்றெல்லாம் கேட்பார். அதற்கு நான், ‘நீ படிப்பில் மேதையாக இருக்கலாம். பணத்தில் குபேரனாக இருக்கலாம். அழகில் மன்மதனாக இருக்கலாம்.



    ஆனால் இந்த மூன்றையும் காக்கின்ற கண்ணியம் உன்னிடத்தில் இல்லை’ என்று சொல்லுவேன். கலைஞரின் வசனம். அவர் பிரமாதமாக எழுதிவிட்டார். சிவாஜி சாரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

    இந்த வசனத்தைப் பேசிவிட்டு, ‘எப்படி பேசினேன்? நல்லா இல்லியா?’ என்று பயந்துகொண்டே கேட்டேன். உடனே அவர், ‘பரவாயில்லியே... உன் ஸ்டைல்லயே, பிரமாதமா பேசிட்டியே...’ என்று சிவாஜி சார் சொன்னார். அப்பாடா... என்று நிம்மதியானேன்’. இவ்வாறு சரோஜாதேவி பேசினார்.
    என்.டி.ராமராவ் வாழ்க்கை கதையில் சரோஜாதேவி வேடத்தில் நடிக்க பிரபல நடிகையிடம் படக்குழுவினர் அணுகி உள்ளனர். #SarojaDevi
    மறைந்த ஆந்திர முதல் மந்திரியும் தெலுங்கு நடிகருமான என்.டி.ராமராவ் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தை 2 பாகங்களாக எடுக்கின்றனர். இதில் என்.டி.ஆர் வேடத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். கிருஷ் டைரக்டு செய்கிறார். என்.டி.ராமராவ் மனைவி பசவதாரம் கதாபாத்திரத்தில் வித்யாபாலன் வருகிறார். 

    சந்திரபாபு நாயுடுவாக ராணாவும் கிருஷ்ணாவாக மகேஷ்பாபுவும் நடிக்கிறார்கள். என்.டி.ராமராவுடன் பல படங்களில் ஜோடி சேர்ந்த சாவித்திரியாக நித்யாமேனனும் ஸ்ரீதேவியாக ரகுல்பிரீத் சிங்கும் நடிக்கின்றனர். இதுபோல் என்.டி.ராமராவ் ஜோடியாக நடித்துள்ள சரோஜாதேவி வேடத்துக்கும் நடிகை தேர்வு நடக்கிறது. 

    சரோஜாதேவி தமிழ், கன்னடம், தெலுங்கில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அன்றைய காலகட்டத்தில் இந்திய பட உலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். தமிழில் எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசன் ஜோடியாகவும் அதிக படங்களில் நடித்தார். அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என்றெல்லாம் பட்டங்கள் பெற்றார். 



    என்.டி.ராமராவ் வாழ்க்கை கதையில் சரோஜாதேவி வேடத்தில் நடிக்கும்படி அனுஷ்காவை படக்குழுவினர் அணுகி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அனுஷ்கா தற்போது உடல் எடை குறைப்பில் தீவிரமாக உள்ளார்.
    ×